search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்கள்"

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

    அதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தயாராக இருக்கிறார்கள். பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.


    திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

    ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #MaruthuPandiyar
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 217-ம் ஆண்டு நினைவுதினம் திருப்பத்தூரில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராசு, ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மணிகண்டன் ஆகிய 7 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி., சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் தலைவர் கே.ஆர்.அசோகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    முன்னதாக திருப்பத்தூர் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.நாகராஜன், கரு.சிதம்பரம், புதுத்தெரு முருகேசன், வக்கீல் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஜெயலலிதா பேரவை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், நெடுஞ்செழியன், நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புராம், ராம.அருணகிரி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், பாபா அமீர்பாதுஷா, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், நகர தலைவர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், பாண்டியன், கோட்டையிருப்பு கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், மாணவ-மாணவிகள், சமுதாய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என்று வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    சென்னை:

    செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. குட்கா ஊழல், மின்வாரிய ஊழல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா ஊழல்கள் நடைபெறுகிறது.

    இதை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக் காட்டினாலும், ஆளும் தரப்பினர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள்.

    ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் மீதே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் உள்ளது. என்னை மாட்டி விட்டால் உன்னை மாட்டி விடுவேன் என்று அமைச்சர்கள் மிரட்டுவதால் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தொழில் அதிபர் ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், ஒன்றிய செயலாளர் எம்.கே. தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
    நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். #SivajiGanesan
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதன்படி சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    ராம்குமார், நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, விஜயகுமார், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன் ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

    சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தது அ.தி.மு.க. அரசு தான். கோர்ட்டு உத்தரவுப்படி மெரினாவில் இருந்த சிவாஜி கணேசனின் சிலை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்ததாலேயே கோர்ட்டு அதை அகற்ற உத்தரவிட்டது.

    கோப்புப்படம்

    மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு வேறு சிலை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அது பற்றி அரசு பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் பிரபு கூறியதாவது:-

    சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தரப்பில் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், சிவராஜசேகர், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #NadigarThilagam #SivajiGanesan
    அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சர், முதல்- அமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் ஆமை வேகத்தில் கூட நகர முடியாமல் தேங்கிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மீது வருமான வரித்துறை அளித்த குட்கா டைரி தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதால் இறுதியில் அந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி, அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிலும், அவரது அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை பற்றிய அறிக்கை தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அதுவும் தற்போது லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் முடங்கிக்கிடக்கிறது.

    தி.மு.க. சார்பில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கொடுக்கப்பட்ட, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைதி காத்தது.

    பிறகு தி.மு.க. சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அந்த விசாரணையை மேற்கொள்ள, செப்டம்பரில் ஓய்வுபெற இருக்கும் திருநாவுக்கரசு என்ற கூடுதல் டி.எஸ்.பி.யை போலீஸ் அகாடமியிலிருந்து அவசர அவசரமாக லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு மாற்றி, அவர் மூலம் அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெறுகின்றன என்று செய்திகள் வருகின்றன.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள் குறித்து விசாரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சார்பில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

    அ.தி.மு.க. அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோர் மீது உள்ள ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இணை இயக்குனரான ஐ.ஜி. மீது, இப்போது ஒரு பெண் எஸ்.பி.யே பாலியல் புகார் அளித்து, அந்த புகாரை, விசாகா கமிட்டி அடிப்படையில் தற்போது அவசரம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி. தலைமையிலான துறை சார்ந்த விசாரணை கமிட்டி விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது.

    அதற்கு முன்பாகவே, பாலியல் தொல்லைக்கு உள்ளான எஸ்.பி. லஞ்ச ஊழல் தடுப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஆனால், புகாருக்கு ஆளாகியிருக்கும் அதே துறையின் இணை இயக்குனர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யின் கீழ்தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் முதல் முதல்-அமைச்சர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில் இருப்பதை இந்த நேரத்தில் மறந்து விட முடியாது.

    சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். ஆனால் இப்படியொரு கடுமையான குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு அதிகாரியை வைத்து லஞ்சப்புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? எப்படி ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    ஆகவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டு, அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான ஊழல் வழக்கினை ஓய்வுபெறப்போகும் அதிகாரியை வைத்து விசாரிப்பதற்கு பதிலாக, லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியையே விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கவும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனர், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர், தலைமைச்செயலாளர் ஆகியோர் நேர்மை, நியாயம், நீதியைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐ.ஜி.யை இணை இயக்குனராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும், முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீரானது வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து குமாரபாளையம், மற்றும் பரமத்திவேலூர் வட்டத்தைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் அக்ரஹாரம், மணிமேகலை வீதியில் வசித்து வந்த 58 குடும்பங்களை சேர்ந்த 176 பொதுமக்கள் குமாரபாளையம் டவுன் பகுதியில் உள்ள நடனவிநாயகர் திருமணமண்டபத்திலும், குமாரபாளையம் அக்ரஹாரம், அண்ணாநகரில் வசித்து வந்த 62 குடும்பங்களை சேர்ந்த 183 பொதுமக்கள் குமாரபாளையம், புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், குமாரபாளையம் அமானிகிராமம், கலைமகள் வீதியில் வசித்து வந்த 63 குடும்பங்களை சேர்ந்த 141 பொதுமக்கள் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திலும், குமாரபாளையம் அமானி கிராமம், கலைமகள் வீதியில் வசித்து வந்த 59 குடும்பங்களை சேர்ந்த 130 பொதுமக்கள் குமாராபளையம் சி.எஸ்.ஐ பள்ளியிலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம், நாட்டாகவுண்டன் புதூரில் வசித்து வந்த 36 குடும்பங்களை சேர்ந்த 140 பொதுமக்கள் நாட்டான்கவுண்டர் புதூர், நடுநிலைப்பள்ளியிலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் வசித்து வந்த 90 குடும்பங்களை சேர்ந்த 302 பொதுமக்கள் பாவடித் தெரு, செங்குந்தர் திருமண மண்டபத்திலும், பள்ளிபாளையம் நகரப்பகுதியில் வசித்து வந்த 77 குடும்பங்களை 229 பொதுமக்கள் ஆவாரங்காடு, நகராட்சி திருமண மண்டபத்திலும், பள்ளிபாளையம் நகரப்பகுதியில் வசித்து வந்த 108 குடும்பங்களை சேர்ந்த 345 பொதுமக்கள் சத்யாநகரில் உள்ள சவுண்டேஸ்வரி திருமண மண்டபத்திலும், சோழசிராமணிகிராமம், மீனவர்தெருவில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 68 பொதுமக்கள் சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசித்து வந்த 668 குடும்பங்களை சேர்ந்த 806 ஆண்கள், 898 பெண்கள் மற்றும் 384 குழந்தைகள் என 2088 பொதுமக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் அருளரசு, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மாலதி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 110-ன் கீழ் நொய்யல் ஆற்றை மாசு படாமல் சீரமைக்கும் திட்டத்தினை அறிவித்தார்கள். அதில் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமா நதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று மேற்கு கிழக்காக கோவை, திருப்பூர் , ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

    மேலும், திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசு அடைவதை தவிர்க்கும் பொருட்டு ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் அமைத்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச்சுவரின் வெளியப்புறத்தில் கழிவு நீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல்,

    நடைபாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்தல் ஆகிய பணிகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் பிற திட்டங்கள் குறித்து திருப்பூர் பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள், திருப்பூர் தொழில் துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்பத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு இப்பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், சுற்றுச்சூழல் இணை தலைமைபொறியாளர் கோகுலதாஸ், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர்கள் திரு. செந்தில் விநாயகம் (திருப்பூர் வடக்கு),

    சண்முகம் (திருப்பூர் தெற்கு ), மதிவாணன் (பறக்கும் படை), உதவி பொறியாளர்கள், திருப்பூர் மாநகராட்சி செயற் பொறியாளர் திருமுருகன், பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள், திருப்பூர் தொழில் துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கூடிய விரைவில் ஜெயக்குமாரும் அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #Kamarajarbirthday #EVKSElangovan
    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.

    யார் காமராஜர்? என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.

    நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.

    கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள்.

    காங்கிரசுக்கு சமாதி கட்டுவதாக பேசுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அவர்களுக்கு தெரிந்தது உண்மைகளை புதைப்பது தான். அதனால் தான் காங்கிரசுக்கு சமாதி கட்டுவோம் என்கிறார்கள். அது முடியுமா உங்களால்?

    தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியதாவது:-

    காமராஜரை போன்ற எளிமையான தலைவர்களை காங்கிரசில் மட்டுமே பார்க்க முடியும். தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ்.

    தமிழகத்தில் தொண்டர்களின் தலைவராக இளங்கோவன் இருக்கிறார். அவரிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பையும், தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் தகுதி படைத்த தலைவர் இளங்கோவன் தான்.

    மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். ஆனால் வங்கிகளில் இருக்கும் பணத்தை தான் பிடுங்குகிறார்கள். பா.ஜனதா ஆட்சியின் சாதனை என்பது மக்கள் படும் வேதனைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வீ.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், நாசே.ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலமுருகன், கடல் தமிழ்வாணன், எம்.பி.குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். #Kamarajarbirthday #EVKSElangovan
    மக்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு தீர்வு காண்பதில்லை, சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tngovernment #sterliteprotest

    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு அரசாங்கத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் எல்லோருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்வார் என்று அவர் கூறி தனது பொறுப்பை தட்டிக் கழித்து இருக்கிறார்.

    இந்த அரசு என்ன நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதே கிடையாது. இதுவரை நடந்த போராட்டங்களுக்கு எந்த தீர்வும் கண்டதில்லை.


    போக்குவரத்துகழக ஊழியர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை எதற்கும் சரியான தீர்வு கண்டதில்லை. இந்த அரசின் செயல் கேலி கூத்தாக இருக்கிறது. இந்த அரசு நல்லது செய்யும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு.

    எத்தனை நாளைக்கு டெல்லிக்கு காவடி தூக்கி இந்த அரசாங்கத்தை தொடர முடியும். மக்களை சுரண்டி பணம், சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இந்த அரசுக்கு அக்கறை கிடையாது.

    முதல்வர் உள்பட அரசில் உள்ள அனைவர் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கூறினார். #kanimozhi #tngovernment #sterliteprotest

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவரை அமைச்சர்கள் பார்த்தார்களா? என்பது தொடர்பாக அதிகாரி அளித்த முரண்பட்ட சாட்சியம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. #Jayalalithaa
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அரசு மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.

    இவர்களில் சிலர் தங்கள் சாட்சியங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் என்பவர் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி சாட்சியம் அளித்த போது, ஜெயலலிதாவை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் இருந்து வீல்சேரில் கீழே கொண்டு வந்ததை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்றார்.


    அப்போது நீதிபதி அவரிடம் அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தார்களா என்று திரும்ப கேட்ட போது, ‘‘ஆம் அமைச்சர்கள் பார்த்தார்கள். அவர்கள் ஜெயலலிதாவை கண் கொண்டு பார்த்ததை நான் கவனித்தேன்’’ என்றார்.

    பின்னர் மே 26-ந்தேதி சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவரை குறுக்கு விசாரணை செய்தார். அப்போதும் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்பதை வீரபெருமாள் உறுதிபடுத்தினார்.

    ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் வீரபெருமாள் தனது நிலைப்பாட்டில் இருந்து திடீர் மாற்றிக்கொண்டார். ஜெயலலிதாவை அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள் என்று தான் சொன்னேன். ஆஸ்பத்திரியில் சந்தித்ததாக சொல்லவில்லை என்றார். அவரது முரண்பட்ட சாட்சியமும் கமி‌ஷனில் பதிவு செய்யப்பட்டது.

    டாக்டர் பாலாஜி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அளித்த சாட்சியத்தில் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ததாக தெரிவித்து இருந்தார்.

    அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளரிடம் போனில் தெரிவித்ததாக முதலில் கூறினார். பின்னர் அவர் சுகாதாரத்துறை அமைச்சரை தனியாக சந்தித்து தகவல் தெரிவித்ததாக மாற்றிக் கூறினார். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission 
    சமயபுரம் கோவிலில் யானை தாக்கி பலியான பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் கோவிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திடீர் ஆத்திரத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. யானை மசினி கோவிலை விட்டு வெளியே ஏற்றப்பட்டு அங்குள்ள கொட்டகையில் கட்டி போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிந்ததும் இறந்த பாகன் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன்படி இன்று பாகன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு சமயபுரம் கோவில் அன்னதானம் சமுதாய கூடத்தில் நடந்தது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பாகன் கஜேந்திரனின் மனைவி தேவிபாலா, மகன் அச்சுதன் ஆகியோரிடம் வழங்கினர்.

    பின்னர் இதுகுறித்து கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், யானை தாக்கி பாகன் கஜேந்திரன் இறந்த சம்பவம் அறிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கவலையடைந்ததாகவும் குடும்ப தலைவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் இறந்த கஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதன்படி இன்று ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கஜேந்திரனின் குடும்ப வாரிசுக்கு வேலை கொடுப்பது பற்றி அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவில் யானை தொடர்பாக கோவில் நிர்வாகமும் வனத்துறையும் ஆலோசித்து தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் காட்டில் விடுவதா? அல்லது கோவிலிலேயே வளர்ப்பதா? என்பது பற்றி அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    புதுவை கவர்னர் கிரண்பேடி அளித்த விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. #governorkiranbedi #narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

    மோதல் அவ்வப்போது விஸ்வரூபம் எடுப்பதும், பின்னர் சுமூகமாவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நாராயணசாமி அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியுடன் சமாதான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.



    கிரண்பேடி புதுவை கவர்னராக பொறுப்பேற்று இன்றோடு (செவ்வாய்க்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று மாலை விருந்து அளித்தார்.

    இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தவிர்த்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் ஆவேசமான முதல்-அமைச்சர் நாராயணசாமி, “தன்மானம் இல்லாதவர்கள் மட்டுமே கவர்னரின் விருந்தில் பங்கேற்பார்கள்” என்று கூறினார்.

    இதனையடுத்து நேற்று மாலை நடந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், திருமுருகன், செல்வம், சுகுமாரன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர், தலைமை செயலாளர் அஸ்வின் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். #governorkiranbedi #narayanasamy

    ×