search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாக்கெட்"

    கோவையில் 5 வருடமாக பிக்பாக்கெட் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதாதேவி (வயது 33).

    இவர் கோவை உக்கடத்தில் இருந்து வடகோவை சென்ற பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது தனிப்படை போலீசார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    இவர் கடந்த 5 ஆண்டுகளாக பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை பிக்பாக்கெட் அடித்தது தெரிய வந்தது.

    பயணிகளுக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், அடிக்கடி அழகு நிலையத்துக்கு சென்று முடிஅழகை மாற்றி, சிகை அலங்காரம் செய்துள்ளார். திருடிய பணத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

    சுய உதவி குழு தலைவியாகவும் செயல்பட்ட இவர் வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

    சுய உதவி குழு மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் திருடினார்? திருட்டு பணத்தை வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருச்சியில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர்  குமுதம் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). இவர் திருச்சி மத்திய பேருந்து  நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு பேருந்தில் சென்றார். பஸ் காஜாமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவரின் அருகில் இருந்த 2 பெண்கள், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை எடுத்துள்ளனர். 

    இதனை கவனித்த அவர் சக பயணிகள் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில்  ஒப்படைத்தார். 

    விசாரணையில் அவர்கள் இருவரும்  மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜீவா (50), முத்து மனைவி சுபிதா ( 37) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா மனைவி பாத்திமா (25). இவர் நேற்று வெளியூர் செல்வதற்காக சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மைக்கேல் மனைவி கனி (27), பால்துரை மனைவி வேளாங்கண்ணி (27) ஆகிய இருவரும் பாத்திமாவின் பையில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடி உள்ளனர். 

    பின்னர் நைசாக நழுவி செல்ல முயன்றுள்ளனர். தற்செயலாக தனது பையை பார்த்த பாத்திமா அதில் பணம் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் தப்பி செல்ல முயன்ற இருவரையும் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்துள்ளார். 

    தொடர்ந்து அவர்களை சங்கரன்கோவில் டவுண் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
    முசிறி நகர பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த நான்கு பேரை முசிறி போலீசார் கைது செய்தனர்.

    முசிறி:

    முசிறி அடுத்த மாங்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45). நேற்று முசிறியிலிருந்து மாங்கரைப்பேட்டை செல்வதற்காக முசிறி நகர பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ரமேஷ் காத்திருந்தார்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட 4 பேர் ரமேஷிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டார். உடனே 4 பேரும் தப்பி ஓடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓடிய நான்கு பேரையும் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை மேற்கொண்டதில் பிக்பாக்கெட் அடித்தவர்கள் தொட்டியத்தை சேர்ந்த உஷா (32), முசிறியை சேர்ந்த ராஜா (45), செல்வராஜ்(52), பெரியசாமி (37) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிக்பாக்கெட் அடித்த ரூ ஆயிரம் மீட்கப்பட்டது. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண் உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர்.

    விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியில் பஸ் பயணியிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.

    இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×