search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

    கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது மைக்ரோ எஸ்யுவி ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி-க்கு போட்டியை ஏற்படுத்தும் புது காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் கார்களான கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேச்பேக் மற்றும் ஆரா காம்பேக்ட் செடான் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மை பயன்படுத்தும் மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை பெறும். இந்த கார் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் காம்பேக்ட் யுடிலிட்டி வாகனமாக நிலை நிறுத்தப்படும். இது எஸ்யுவி பிரிவில் குறைந்த விலை மாடலாக இருக்கும். பட்ச் ஸ்டைலிங் மற்றும் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். தோற்றத்தில் இந்தகார் கேஸ்பர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கேஸ்பர் மாடலை ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி மாடலாக புதிய மைக்ரோ எஸ்யுவி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • கியா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
    • கியா நிறுவனத்தின் EV6 எலெக்ட்ரிக் மாடலின் வினியோகம் கடந்த மாதம் துவங்கியது.

    கியா இந்தியா நிறுவனம் 2022 அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 323 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 2022 நிதியாண்டில் கியா கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2021 நிதியாண்டில் கியா நிறுவனம் 18 ஆயிரத்து 583 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கியா நிறுவனம் அறிமுகம் செய்த EV6 எலெக்ட்ரிக் காரின் வினியோகத்தை ஜூன் மாத வாக்கில் துவங்கியது. கியா இந்தியா நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 43 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார்களில் செல்டோஸ் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    மூன்று கார்களும் முறையே 9 ஆயிரத்து 777, 7 ஆயிரத்து 614 மற்றும் 5 ஆயிரத்து 479 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு கியா இந்தியா நிறுவனத்தின் கார்னிவல் மாடல் 301 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. சமீபத்திய புதுவரவு எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடல் இதுவரை 152 பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    • டொயோட்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இன்னோவா கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • புது இன்னோவா மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புது இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதனை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்த (நவம்பர்) மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    இந்திய வெளியீட்டுக்கு முன் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய பாடி ஆன் லேடர் ஆர்கிடெக்ச்சருக்கு மாற்றாக புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மோனோக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதில் முன்புற டிரைவ் வசதி கொண்ட ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே இன்னோவா டீசல் என்ஜின் கொண்ட வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த வகையில், டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் ஹெக்சகோனல் முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் பானரோமிக் சன்ரூப் இந்த எம்பிவி மாடலில் முதல் முறையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஹைகிராஸ் மாடலின் இண்டீரியர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் பேட், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள் வழங்கப்படலாம்.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது XL6 காரில் S-CNG கிட் வழங்கி இருக்கிறது.
    • புதிய மாருதி சுசுகி XL6 S-CNG ஒற்றை வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 S-CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் ஸீட்டா MT எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே காருடன் பேலனோ CNG மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய XL6 S-CNG மாடல் லிட்டருக்கு 26.32 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், எல்இடி டிஆர்எல்கள், நான்கு ஏர்பேக், ESP மற்றும் ஹில் ஹோல்டு அம்சம், எல்இடி பாக் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மாதாந்திர சந்தா முறையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • முதல் முறையாக நெக்சா பிராண்டிங் காரிலும் CNG கிட் வசதியை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பலேனோ மாடலில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பலேனோ CNG மாடலை மாதாந்திர சந்தா முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பலேனோ மாடலுடன் XL6 CNG காரும் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பலேனோ CNG மாடலில் 1197சிசி, NA, நான்கு சிலண்டர்கள் கொண்ட டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மாருதி சுசுகி பலனோ CNG மாடல் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. புதிய பலேனோ CNG செயல்திறனும் ஸ்விப்ட் CNG மாடலின் செயல்திறனும் ஒரே அளவில் உள்ளன. பலேனோ CNG மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ, எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6 ஏர்பேக், ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஎப்டி டிஸ்ப்ளே, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், ரியர் டி-ஃபாகர், யுஎஸ்பி டைப் ஏ மற்றும் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
    • புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு சீட்களை கொண்டிருக்கிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கி உள்ளது. புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகளை கொண்டுள்ளது.

    புதிய ஸ்பெக்டர் மாடல் பாரம்பரியம் மிக்க பேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய அலுமினியம் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலின் பேட்டரிகள், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் மாடலை விட 30 சதவீதம் உறுதியானதாக மாற்றி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் வழக்கப்படி ஸ்பெக்டர் மாடல் 700 கிலோ சவுண்ட் டெடனிங் பயன்படுத்துகிறது. இது காரின் தேவையற்ற சத்தத்தை காரினுள் கேட்க விடாமல் தடுக்கும்.

    இந்த எலெக்ட்ரிக் காரின் முழுமையான அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் 430 கிலோவாட் திறன் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 520 கிலோமீட்டர் வரை செல்லும். அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விற்பனை சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்திய விற்பனை துவங்கும்.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது CNG மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
    • மாருதி சுசுகி செலரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன்ஆர், செலரியோ, இக்னிஸ் கார்களின் 9 ஆயிரத்து 925 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 3, 2022 முதல் செப்டம்பர் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

    ரிகால் செய்யப்படும் கார்களின் ரியர் பிரேக் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசெம்ப்லி பின் உடைந்து, வித்தியாசமான சத்தம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். வேகன்ஆர் மற்றும் செலரியோ மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இக்னிஸ் மாடல் மட்டும் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    "ரியர் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அசெம்ப்லி பின் உடைந்து வித்தியாசமான சத்தம் எழ வாய்ப்புகள் உண்டு. நாளடைவில் காரின் பிரேக்கிங் திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். வாடிக்கையாளர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட யூனிட்களை ரிகால் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பாதிக்கப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்பட்டு இலவசமாக சரி செய்யப்படும்," என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ரிகால் செய்யப்படும் கார்களில் புதிதாக வழங்க மாற்று பாகங்கள் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். அதன் பின் கார் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பிரச்சினைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்யப்படும்.

    • ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் டீசல் என்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • முற்றிலும் புது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய சிட்டி மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இது 5th Gen சிட்டி மாடலின் பேஸ்லிபிட் வெர்ஷன் ஆகும். புதிய ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் முதற்கட்டமாக தாய்லாந்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.

    புதிய பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. எனினும், பவர்டிரெயின் ஆப்ஷன்கள் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஸ்பை படங்களின் படி ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய பாக் லேம்ப் ஹவுசிங், ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பை படங்களில் காரின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இதில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மாற்றப்பட்டு அதிக உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா சிட்டி மாடலில் டீசல் என்ஜின் நீக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விற்பனை செய்யப்படும் டீசல் என்ஜின் கார்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.

    இவைதவிர ஹோண்டா ஜாஸ், WR-V மற்றும் 4th Gen சிட்டி மாடல்களின் விற்பனை விரைவில் நிறுத்தப்படும் என ஹோண்டா ஏற்கனவே அறிவித்து விட்டது. அமேஸ் மற்றும் சிட்டி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எஸ்யுவி மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களில் CNG கிட் வசதியை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • மாருதி கார்களை தொடர்ந்து நெக்சா பிராண்டு மாடல்களிலும் தற்போது CNG கிட் வழங்கப்பட உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மற்றும் XL6 கார்களில் CNG கிட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நெக்சா பிராண்டு மாடல்களில் CNG வசதி பெறும் முதல் கார் மாடல்களாக இவை இருக்கும். பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மற்றும் XL6 எம்பிவி மாடல்கள் ஒரே மாதிரியான பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

    மேலும் அதிக கார்களில் CNG வசதியை வழங்கும் நோக்கில், மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் பலேனோ மற்றும் XL6 CNG மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் அதிக மைலேஜ் வழங்கும் திறன் இருப்பதே அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுவரை மாருதி சுசுகி நிறுவனம் ஒன்பது கார்களில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது.

    இந்த வரிசையில் தற்போது பலேனோ மற்றும் 6-சீட்டர் எம்பிவி மாடலான XL6 இணைய இருக்கிறது. CNG பிரிவில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் CNG கிட் வசதியை வழங்கி வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாக CNG விளங்குகிறது.

    இவை மட்டுமின்றி CNG கிட் பொருத்தப்பட்ட கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் மாடல்களை விட அதிக மைலேஜ் வழங்கி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கார்களில் CNG கிட் வழங்கி வருவதை அடுத்து பலேனோ மற்றும் XL6 மாடல்களில் CNG கிட் வழங்குவது ஆச்சரியமாக பார்க்கப்படவில்லை.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபன். கார் டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 50), ரூபி (58) இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். மீண்டும் நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்தவுடன் விழுப்புரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி கார் வந்தார்.அப்போது சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலை வளையமாதேவி அம்மன் குப்பம் பகுதி அருகே கார் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.

    அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கலைச்செல்வன் சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விபத்தில் காயமடைந்த சரஸ்வதி ரூபி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி முதியவர் பலியானார்.
    • பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×