search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ்"

    • காசநோயால் பாதிக்கப்பட்ட 23 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர்.

    மும்பை

    மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குருஷ்னர் கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹேமல்காசா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சமீபத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நகர்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள கிராமத்துக்கு வாலிபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குடும்பத்தினர் வாலிபரின் உடலை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர். பின்னர் அவர்கள் அதை மோட்டார் சைக்கிளின் பின்புறம் வைத்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடல் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட அவல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்தநிலையில் உடலை எடுத்து செல்ல வாலிபரின் குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளவில்லை என கட்சிரோலி மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து செல்லப்படுவதை ரோந்து பணியில் இருந்த போலீசார் கவனித்து உள்ளனர். போலீசார் இதுதொடர்பாக உடனடியாக தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஆம்புலன்ஸ் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் வாலிபரின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கமான நடைமுறைகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு உடல் சுமார் 17 கி.மீ. தொலைவில் இருந்த வாலிபரின் சொந்த ஊருக்கு இறுதி சடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினாா்.

    • ஆம்புலன்ஸ் மீது மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதியது.
    • இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது கொட்டாரக்கரை புலமண் சந்திப்பில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்தனர். சிக்னலில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வேனைக் கடந்து செல்லுமாறு சைகை செய்தனர்.

    இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த கேரள கல்வி மந்திரி சிவன்குட்டியின் பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த ஆம்புலன்ஸ் வேன் மீது வேகமாக மோதியது.

    நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உருண்டதில் ஆம்புலன்சில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியினர் மற்றும் போலீசார் காயமடைந்தோரை மீட்டு கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் மாராயபுரம் சாலையில் சென்றார்.
    • தனியார் நிறுவன ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகீன். இவர் பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மாராயபுரத்தை சேர்ந்த சுதீர் (வயது 42) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாராயபுரம் சாலையில் சென்றார்.

    அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் நிறுவன ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகீன் மற்றும் சுதீர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதீர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முப்பெரும் விழா
    • ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள்

    பல்லடம்: 

    பல்லடம் ஈகை அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. ஈகை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தங்கலட்சுமி நடராஜன், வாழும் கலை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணன் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவையை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தொடங்கி வைத்தார். பல்லடம் வடுகபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள் வழங்கப்பட்டது. பொங்கலூர் பிரபஞ்ச அமைதி ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு 2 லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ ,மெத்தை ,மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களான பிஸ்கட், ரொட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஈகை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
    • மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.

    அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

    குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.

    மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கரடையூர் அடுத்த நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் குடிபோதையில் நடுவூரிலிருந்து கொளகூர் செல்லும் மலைப்பாதையில் வளைவில் உள்ள ஒரு திட்டில் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென மணி பின்னால் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மிகுந்த சிரமத்துக்கு இடையில் பள்ளத்தில் இருந்து மணியை மீட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சுரேஷ், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை பொது மக்கள் மற்றும் மணியின் உறவினர்கள் பாராட்டினார்கள். இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்குமார் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை மரணம்.
    • மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து கேள்வி.

    மேற்கு வங்காளத்தில், ஆஷிம் தேப் சர்மா என்பவர் தனது மகனின் சடலத்தை ஆன்புலன்சில் எடுத்து செல்ல பணம் இல்லாததால் பையில் வைத்து 200 கி.மீ., தூரம் பேருந்தில் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம், டார்ஜிலிங் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஷிம் தேப் சர்மாவின் 5 மாத ஆண் குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    குழந்தையின் சடலத்தை கலியகஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல பணம் இல்லாததால், ஆஷிம் தனது குழந்தையின் சடலத்தை பையில் வைத்து பேருந்தில் 200 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளார்.

    இதுகுறித்து தந்தை ஆஷிம் கூறுகையில், " சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு எனது ஐந்து மாத மகன் நேற்றிரவு இறந்தார். சிகிச்சையின்போது ரூ. 16,000 செலவழித்தேன். எனது குழந்தையை கலியாகஞ்சிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு ரூ.8000 கேட்டார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை.

    அதனால், பையில் வைத்து பேருந்தில் எடுத்து சென்றேன். சக பயணிகளுக்குத் தெரிந்தால் இறக்கிவிடப்படுவோம் என்று பயந்து, யாருக்கும் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்திற்கு பயணித்தேன்.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், 102 திட்டத்தின் கீழ் உள்ள வசதி நோயாளிகளுக்கு மட்டுமே இலவசம் என்றும் சடலங்களைக் கொண்டு செல்வதற்கு அல்ல என்றும் கூறிவிட்டனர்" என்று உருக்கமாக கூறினார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி," திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதே நேரத்தில், ஒரு குழந்தையின் துரதிர்ஷ்டவசமான மரணத்தை வைத்து இழிந்த அரசியலில் விளையாட பாஜக முயற்சிப்பதாக டிஎம்சி மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டினார்.

    • தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது.

    விழுப்புரம்:

    வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சிதறி ஓடினார்கள். ஆனாலும் 26 பேரை தேனீக்கள் கொட்டியது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மேல்ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

    • சோபனாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வருபவர் தில்லையேஸ்வரன். இவரது மனைவி சோபனா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஆம்புலன்சில் சோபனாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும் குழந்தையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • செந்துறையில் மருத்துவமனைக்கு செல்ல வழி இல்லாததால் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தும் அவலம் ஏற்பட்டது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செந்துறை காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். அதே போன்று இந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலை பகுதியிலேயே நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் இந்த மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பணியில் இருக்கும் செவிலியர்களால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கின்றன. இருப்பினும் சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாததால் ஓட்டுனர் வேலு ஆம்புலன்ஸை சாலையிலேயே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுப்பதோடு 108 ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
    • சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து, தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவ்ராம் மீனா கூறியதாவது:-

    ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் இதுதொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேவைப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு பயங்கரமான விஷயம். ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் இன்று காலை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×