search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம்கள்"

    கோவையில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம்களை திட்டமிட்டு அலைக்கழிப்பதை கண்டித்து என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேற முயன்ற பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கட்டில், பாய், தலையணை, குடம் உள்ளிட்ட பொருட்களுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திரண்டனர்.

    அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்திற்கு மாநில செயலாளர் முகம்மது பயாஸ் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் பாஷா, மாவட்ட தலைவர் அன்வர் உசேன், செயலாளர் அப்பாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் முகம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் கட்டில், பாய், தலையணையுடன் என்.ஐ.ஏ. அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ரேஸ்கோர்ஸ் நுழைவு வாயிலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    அப்போது போலீசாருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு உருவானது. பின்னர் ஊர்வலமாக சென்ற 100 பெண்கள் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டம் குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகம்மது பயாஸ் கூறும் போது, இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் முஸ்லிம்களை திட்டமிட்டு அலைக்கழிக்கிறார்கள். இதனால் வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கைவிட வேண்டும் என்றார்.
    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் தான் பக்ரீத் திருநாள் ஆகும்.

    இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

    இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இன்று பக்ரீத் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகைகளில் ஈடுப்பட்டனர்.

    பக்ரீத்தையொட்டி ஆட்டை பலியிட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இரண்டாவது பங்கை உறவினர்களுக்கு கொடுத்தனர். மூன்றாவது பங்கை தங்களுக்கு வைத்து கொண்டனர்.

    ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈரோடு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஈரோடு மாநகரில் உள்ள ஜானகியம்மாள் லே-அவுட் பள்ளிவாசல்,புது மஜித் வீதியில் உள்ள சுல்தான் பேட்டை பள்ளிவாசல், அசோகபுரம் , திருநகர் காலனி, கே.எஸ்.நகர், சம்பத்நகர், டவுண் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளிவாசல், மரப்பாலம், ரெயில்வே காலனி, முத்தம்பாளையம், திண்டல் புதுகாலனி, பெரிய அக்ரஹாரத்தில் உள்ள ஈத்கா மைதானம் என மாநரில் உள்ள 43 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று சத்தியமங்கலத்தில் உள்ள போட்டு வீராம்பாளையத்தில் 1,500 இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையும் நடந்தது. புளியம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 250 பள்ளிவாசல்களிலும் , 42 ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    கொடுமுடியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதனையொட்டி ஈரோடு- கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் இருந்து ஹஸ்ரத் முகமது யாசின், ஹஸ்ரத் சாதிக் பாட்சா தலைமையில் முத்தவல்லி அபுபக்கர் முன்னிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் கொடுமுடி பழைய பஸ் நிலையம் வழியாக சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுல்தான் மாகல்லா பள்ளிவாசலுக்கு வந்தனர். பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி கோபியில் முஸ்லிம்கள் பங்கேற்ற ஊர்வலம் இன்று நடந்தது. ஈரோடு- சத்தி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளி வாசல் முன்பு இந்த ஊர்வலம் தொடங்கியது.

    கடை வீதி, மார்க்கெட் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஈத்கா பள்ளி வாசலில் முடிவடைந்தது. அங்கு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.

    பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் உள்ள மஜித் வீதியில் உள்ள மசூதியிலும். இதேபோல் புதிய மசூதியிலும் இன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலோனோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

    இவர்களும் இன்று பக்ரீத்தையொட்டி சிறப்பு தொழுகை நடத்த திரண்டனர். ஆனால் மசூதியில் போதிய இடம் இல்லாததால் இந்த 2 மசூதியிலும் ஷிப்டு முறையில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர்.

    ஒரு ஷிப்டுக்கு 1000 பேர் என அவர்கள் சிறப்பு பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.  #tamilnews
    நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் என பா.ஜ.க எம்.பி ஹரி ஓம் பாண்டே தெரிவித்துள்ளார். #BJP #HariOmPandey
    லக்னோ:

    மதம் சார்ந்த அரசியலை பா.ஜ.க முன்னெடுத்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து வரும் புகார்களை அவ்வப்போது அக்கட்சியைச் சேர்ந்த சிலர் உறுதி செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள், தலித் போன்ற சிறுபான்மையினர்கள் மீதான அவர்களின் கருத்து சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹரி ஓம் பாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், விரைவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

    மேலும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள், கொலை போன்றவை அதிகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க எம்பியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #HariOmPandey
    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் பெருமக்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத், நூர் பள்ளிவாசல் ஹஜரத் முஸ்தபா ரம்ஜான் நோன்பின் மாண்புகள், இஸ்லாம் ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெருமகனார் நபி(ஸல்) ஆற்றிய பணிகள், ஈகையின் அவசியம் அன்பு சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.



    இதில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், முதன்மை நாட்டாண்மை முனவர் ஷெரீப், உலமாசபை மாவட்டத்தலைவர் முகம்மது முனீர், இப்ராகிம், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மருத்துவ அதிகாரி டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார், சாகுல்அமீது, வக்கீல் முகமது இல்யாஸ், அப்துல்லா உள்பட திரளாக முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவர்-சிறுமியர்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு (தூ-ஆ) நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளி வாசல், ஆகியவற்றில் ஈத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஜே.கே.மகால் வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில், லெப்பைக்குடிக்காடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். மேலும் ஊர்வலமும் நடந்தது.
    புதுக்கோட்டை:

    உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்ய காலை முதல் முஸ்லிம்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காலையில் சுமார் 7.30 மணியளவில் பள்ளிவாசல் முன்பு உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருவள்ளுவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.



    இதேபோல சிறுவர், சிறுமிகள் கைக்குலுக்கி கொண்டும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதியில் உள்ள பெரியபள்ளிவாசல், தெற்கு 2-ம் வீதியில் உள்ள பள்ளிவாசல், அண்டக்குளம், கலீப்நகர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், சின்னப்பாநகர், கைக்குறிச்சி, பாலன்நகர், அடப்பன்வயல், திருவப்பூர், மீன்மார்க்கெட் அருகே, பூங்காநகர் உள்பட புதுக்கோட்டை நகரில் உள்ள பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதேபோல பொன்னமராவதி இந்திராநகர் மற்றும் கேசராபட்டி பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பொன்.இந்திராநகர் முஆத் இப்னு ஜபல் ஜீம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதேபோல கொன்னையூர், வேந்தன்பட்டி, புதுவளவு, அம்மன் கோவில் வீதி, திருக்களம்பூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அறந்தாங்கி அலிஜைனம் ஓரியண்டல் அரபிக்பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல அரசர்குளம், காரணியானேந்தல், வெட்டிவயல், மேற்பனைக் காடு, ரெத்தினகோட்டை, மீமிசல், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை பெரிய பள்ளிவாசல், கல்லாக்கோட்டை பள்ளிவாசல், பெருங்களூர் பள்ளிவாசல், அண்டனூர் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள குத்பா பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைதொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளிவாசல்களில் உள்ள அடக்கஸ்தளத்திற்கு சென்று முன்னோர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல திருவரங்குளம், கைகாட்டி, வல்லத்திராக்கோட்டை, ஆலங்குடி உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
    தலாக் முறையை ஒழித்ததற்கு பிரதமர் மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளதாக மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Modi
    மதுரை:

    மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது. இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    பிரதமராக மோடி பதவியேற்ற போது இந்தியாவின் கடைக்கோடி சாமானிய மக்களின் வளர்ச்சி, பெண் கல்வியை மேம்படுத்துவேன் என உறுதி கூறினார்.

    4 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

    மோடி அரசின் சாதனை குறித்து பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து விளக்கி வருகிறார்கள். அதன்படி இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாட்டில் ஏழைகள் அனைவருக்கும் இலவச கியாஸ் இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டில் ஒரு கோடியே 25 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். நானும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளேன்.

    தூய்மை திட்டத்தின் கீழ் இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.


    பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பு 22 வாரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தலாக் முறையை ஒழித்ததற்கு மோடிக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    தினமும் 30 கி.மீ. தூரம் என்ற நோக்கத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 56 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 93 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ரூ. 28 ஆயிரம் கோடி மதிப்பில் இணையம் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #Modi
    ×