search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐந்து பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்
    • ஜெயிலில் இருக்கும்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியவர்கள்

    கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் குண்டு வைக்க திட்டமிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் 5 பேரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தபோது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    அவர்களிடம் இருந்து நான்கு வால்கி-டால்கி, 7 நாட்டு துப்பாக்கி, 42 தோட்டாக்கள், 2 கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், 2 சேட்டிலைட் போன்கள், 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    • கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம்
    • இன்று காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    ஜம்மு-காஷ்மீரில் சமீப காலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இதுபோன்ற நடத்திய தாக்குதலில் 3 பீகார் மாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் அனந்த்நாக்கில் வெளிமாநிலத்தைச் சேர்நத தொழிலாளர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இரண்ட பேர் காயம் அடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.


    காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சிறப்பு போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஜமால்தீன், குல்கர் அகமது, சபீர் அகமது, குலாபி ஆகிய 4 பயங்கரவாதிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டனர்.

    • ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்து மிடம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று இரவு வெளிமாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று வந்தது. அதில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4-க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் வந்து இறங்கியதாகவும், அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போலீசாரின் வருகை குறித்து அறிந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். ஆனால் அவர்கள் வந்த கார் கோவில் வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ளது. இந்த காரில் என்னென்ன பொருட்கள் என்பது தெரியவில்லை.

    ராமேசுவரத்தில் பணியாற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி. பிரிவு போலீசார் உள்ளூர் போலீசார் தப்பிச்சென்ற மர்மநபர்கள் எங்கு பதுங்கியுள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? அல்லது கஞ்சா, தங்கம் போன்ற கடத்தல் பொருட்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
    • போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜம்மு- காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மரூப் நாசீர், சகீத் சவுகத் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர்கள் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து வந்தனர். இந்த இருவரையும் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பிடித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பாரமுல்லா போலீஸ் காவலில் இருந்து 2 பயங்கரவாதிகளும் தப்பியுள்ளனர். போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஆலப்புழா - கண்ணூர் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவத்திற்கு பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கேரள போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது.

    எலத்தூர் அருகே ரெயில் சென்ற போது டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் மற்றும் பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அலறியடித்தப்படி ரெயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதனை கண்டதும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில் கண்ணூர் வந்து சேர்ந்த பின்னர் பெட்டியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணும், குழந்தையையும் காணவில்லை.

    போலீசார் எரிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடிய போது, அவை தண்டவாளத்தில் கருகிய நிலையில் கிடந்தன. உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர்கள் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே குதித்த போது அடிப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதுபோல இன்னொருவரின் உடலும் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பயணிகள் மீது தீ வைத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சிவப்பு தொப்பி அணிந்த நபர் ஒருவர் ரெயிலில் இருந்து இறங்கி மெயின் ரோட்டிற்கு செல்வது தெரியவந்தது. அந்த நபர் சிறிது நேரம் சாலையில் காத்திருந்தார்.

    அப்போது இன்னொரு நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வருகிறார். அந்த நபருடன், ரெயிலில் இருந்து குதித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்கிறார். அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க ரெயிலில் இருந்த பயணிகளிடம் கேட்டு போலீசார் படம் வரைந்தனர். அந்த படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மர்மநபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கண்ணூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு சென்றார். அவரை உள்நோயாளியாக தங்கி சிகிச்சை அளிக்கும்படி டாக்டர் அறிவுறுத்தினார். ஆனால் அவர் உள்நோயாளியாக தங்க மறுத்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார். இதுபற்றி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து விசாரித்த போது அந்த நபர் நொய்டாவை சேர்ந்த ஷெகரூக் ஷபி என தெரியவந்தது. அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில் அந்த நபருக்கு ரெயிலில் பெட்ரோல் ஊற்றிய விவகாரத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இருப்பினும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த ரெயில் பெட்டியில் இருந்து போலீசார் ஒரு டைரி, செல்போன், நோட்டு புத்தகம் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். அந்த பொருட்கள் ரெயிலில் தீவைத்த நபருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் அந்த நோட்டு புத்தகத்தில் இந்தி மொழியில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.

    மேலும் கன்னியாகுமரி, குளச்சல், கழக்கூட்டம், சிறையின்கீழ் என்ற ஊர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. சில எழுத்துக்கள் தண்ணீர் பட்டு அழிந்திருந்தது. எனவே அந்த டைரியில் எழுதப்பட்ட தகவல்கள் என்ன? என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம்கார்டு எதுவும் இல்லை. இதனால் மர்மநபர் சிம்கார்டை கழற்றி விட்டு செல்போனை தூக்கி வீசி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கண்டு பிடித்து அதில் இருக்கும் தகவல்களை மீட்டெடுக்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

    இதில் மர்ம நபர் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ஆலப்புழா - கண்ணூர் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவத்திற்கு பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக கேரள போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி மத்திய உள்துறையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோழிக்கோட்டில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் ரெயிலில் கிடைத்த பொருள்களையும் பார்வையிட்டனர். இந்த வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பது தெரியவந்தால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கை ஏற்று விசாரிக்க தொடங்குவார்கள் என தெரிகிறது.

    கேரளாவில் ஏற்கனவே மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் சம்வத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் அவர்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த சம்பவமும் நடந்ததா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அல்-சுடானி சோமாலியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • பயங்கரவாதிகள் மீது அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    வாஷிங்டன்

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல்-சூடானி. இவர் ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்.

    மேலும் ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்து வந்தார்.

    இதையடுத்து அல்-சுடானியை கண்டுபிடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அல்-சுடானியை தேடும் பணி தொடங்கியது.

    இந்த நிலையில் அல்-சுடானி சோமாலியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வடக்கு சோமாலியாவின் மலைப் பகுதியில் நுழைந்தனர்.

    அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சண்டையில் சுடானி உள்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    அமெரிக்க வீரர்கள் தரப்பில் உயிரிழப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்-சூடானி ஐ.எஸ். அமைப்பில் சேருவதற்கு முன்பு சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளித்துள்ளார். இது அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய இலக்காக ஆனது.

    சுடானி பதுங்கி இருந்த இடத்தின் மாதிரியை வடிவமைத்து அமெரிக்க வீரர்களுக்கு பல மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இதன் காரணமாக வீரர்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி சுடானியை சுட்டுக் கொன்றனர். இதில் அமெரிக்க வீரர் ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது என்றார்.

    • பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு இல்லாததால் காட்டுக்குள் பழங்களை தேடி சென்றபோது பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ளனர்.
    • கடத்தப்பட்ட பெண்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டு உள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சவும் மாகாணத்தில் 50 பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இப்பெண்கள் காட்டுப்பகுதியில் பழங்களை பறிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றுள்ளனர்.

    இப்பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு இல்லாததால் காட்டுக்குள் பழங்களை தேடி சென்றபோது பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ளனர். கடத்தப்பட்ட பெண்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டு உள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

    இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

    மேலும் அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் யாரும் இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    • ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர்.
    • ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது.

    ஜம்மு:

    ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை மறுத்தது. பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது.

    பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து, இந்த பகுதியில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது. இங்குள்ள அதன் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயன்றனர். இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டது.

    குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்? பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது?

    இப்போது நடக்கும் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் ஆள் தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பால் அது விசாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சி விஜில் 2022 ஆப்ரேஷன் ஒத்திகை இன்று காலை தொடங்கியது.

    அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    முன்னதாக முத்துப்பேட்டை கடலை ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் கடல் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, அதேபோல் காட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் பகுதியில் பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த 'சி விஜில் 2022 ஆப்ரேஷன்' ஒத்திகையில் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார், கடலோர காவல்படை போலீசார் மற்றும் சிறப்பு போலீசார், மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் இந்த ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரு பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன்.
    • பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏகே74 , ஏகே 56 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

    ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக

    காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. தெரிவித்தார். முக்தியார் பட் என்ற அந்த பயங்கரவாதி, சிஆர்பிஎஸ் மற்றும் ஆர்.பி.எப் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என அவர் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே74 ரகம் , ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    ×