search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 169964"

    • அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.

    விநாயகர் திருவிழா

    48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

    இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    நெல்லை:

    மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று நேரில் சென்று மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி, மூலைக்கரைப்பட்டி காங்கிரஸ் நகர தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் நளன், ராமஜெயம், மூலைக்கரைப்பட்டி தி.மு.க. நகர தலைவர் முருகையா பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வாரிசு தாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா, பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கி திறப்பு விழா நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணி மனையில் இன்று நடைபெற்றது.

    அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., மேயர் சரவணன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனை யாக்கியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அந்த வகையில் 297 பேருக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணப்பலன்களை வழங்கினார். ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்ப லன்கள் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    14-வது ஊதிய உயர்வு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிந்திருக்க வேண்டும். அதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலைமைகளை முதல்-அமைச்சர் சரி செய்து கொண்டிருக்கிறார்.

    கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு பேசும்போது, அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சென்றால் பஸ்சில் கட்டணம் வாங்க கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாடு சென்று முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளார். சாமானியர்களுக்கு வேலை கிடைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது சாமானியர்களுக்கான ஆட்சி என்றார்.

    விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பஸ்சில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்படுகிறது. எனவே இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.

    48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் இருக்கும் நிலையில் ரூ.111 கோடியே 95 லட்சம் போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை நிதி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.

    • கண்ணம்மாள் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
    • வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ப வரது மனைவி கண்ணம்மாள் (வயது 43). இவர் அதே பகுதியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 10 குழாய்களை தோட்டத்தில் வைத்து இருந்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆலன் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
    • உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி அருகே மேலபாலாடை பகுதியை சேர்ந்தவர் ஆலன் (வயது 23).

    இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீவலப்பேரி போலீசார், ஆலன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பணியிடத்தில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஆலன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என சீவலப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.

    பா.ஜனதா மனு

    பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவில், பாளை மண்ட லத்துக்குட்பட்ட 33-வது வார்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே சுகாதாரத் துறையை சேர்ந்த ஊழியர்கள் பாளை மாண்டல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கட்டிடக்கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பாளை மகாராஜா நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், நெல்லை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே வணிக ரீதியான மற்றும் பொதுமக்கள் குடிபுகாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதை கோடை காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கல்லணை பள்ளி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை தாலுகா குழு செயலாளர் துரை நாராயணன் அளித்த மனுவில், கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். பழைய கல்லணை கட்டிடத்திலும் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். மாநகர மக்களின் பெண் குழந்தைகள் படிப்பதற்கு இங்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக காலை, மாலை என சுழற்சி முறையில் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பழைய கல்லணை பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 4 வருடங்களாக புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பழைய கல்லணை பள்ளியில் 56 ஆசிரியர்களுக்கு 2 கழிப்பிடம் தான் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும். தினசரி பயன்படுத்தும் பகுதியான குடிநீர் குழாய், கைகள் கழுவும் பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பழைய பேட்டை வாணியர் தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் அளித்த மனுவில், சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ஓரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தேன். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அதிகாரிகள் அகற்றி விட்டனர். எனவே எனக்கு இட்லி கடை நடத்துவதற்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.
    • இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    நெல்லை:

    இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் மத்திய அரசு வக்கீல்கள் குற்றாலநாதன், பாலாஜி கிருஷ்ணசுவாமி, மாவட்ட தலைவர் சிவா மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பாளை தாலுகா நொச்சி குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு 800 வருடங்களுக்கு முன்னர் பாண்டிய மன்னர்க ளால் கட்டப்பட்ட பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் திருச் செந்தூர் செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் தங்கி செல்வதற்கு கல் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் யாரால் அமைக்கப்பட்டது என்ற பெயருடன் கூடிய பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் சுவர்களில் இருந்து வருகிறது.

    இந்த சத்திரம் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.

    அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக சிலர் பட்டா பெற்றுள்ளனர். இதனை மீட்க போராடிய நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு போடப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. அந்த இடம் தற்போது கோடிக்கணக்கில் இருக்கும் என்பதால் அதனை தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்ய முயலும் தனி நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தையும் மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது அவர்களுடன் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகி கள் விமல், தாஸ், ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
    • மின் நுகர்வோர்கள் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், பிற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    முகாமில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசுகையில், கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள், நெல்லை , தென்காசி மாவட்டங்களில் கடும் இடி, மின்னலுடன் மழை பொழிவு, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது. இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் தலைமையில் டவுன் தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-க்கு விண்ணப்பித்து காலதாமதத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில், புஷ்பா, சுப்பையா, சண்முகத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்த்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூர்யாவை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது பணியில் இருந்த 15 போலீசார் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • உமைய பார்வதி மீது நவஜோதி இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார்.
    • மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் -உமைய பார்வதி தம்பதிக்கும், பன்னீர் - பாப்பம் மாள் தம்பதிக்கும் சுமார் 6 மாத காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களான இவர்க ளுக்குள் அவ்வப்போது சிறு, சிறு தகராறு நடந்து வந்துள்ளது.

    பெண் மீது தாக்குதல்

    இந்நிலையில் கடந்த 20-ந்தேதி மாலை தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த உமைய பார்வதி மீது பன்னீர் என்பவரது மகன் நவஜோதி (வயது27) இருசக்கர வாகனத்தை கொண்டு மோதி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதில் ஆத்திர மடைந்த நவஜோதி, உமைய பார்வதியை தாக்கி உள்ளார். தொடர்ந்து நவஜோதியுடன் அவரது தந்தை பன்னீர், தாய் பாப்பம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து, வீட்டுக்குள் சென்ற உமைய பார்வதியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு செங்கல்லை கொண்டு அடித்துள்ளனர்.

    இதில் காயங்களுடன் மயங்கி விழுந்த உமைய பார்வதியை அப்பகுதியினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடையம் போலீசார் விசாரணை நடத்தி பன்னீர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தலைமறைவான நவஜோதிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது.  

    • திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.
    • மழையையும் பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதியம் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் சுமார் அரைமணி நேரம் மட்டுமே பெய்த திடீர் மழையின் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை ஏராளமான இடங்களில் முறிந்து விழுந்தன. இதனால் ஒரு சில இடங்களில் கடுமை யான சேதங்கள் ஏற்பட்டது.

    குறிப்பாக புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள பூங்காவில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்குள் திரும்பும் சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.

    மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்ப டுத்தாமல் மின் ஊழியர்கள் விரைந்து சென்று மரக்கிளை களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒருசில இடங்களில் மாலையில் இருந்து இரவு வரையிலும் மின்சாரம் தடைபட்டது. பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்சாரம் போவதும், வருவதுமாக இருந்தது. பலத்த காற்று காரணமாக உயரமான கட்டி டங்கள் சிலவற்றில் மேற்கூரை கள் காற்றில் பறந்தன.

    வ.உ.சி. மைதானத்தில் கேலரி மேற்கூரை சேதம்

    பாளையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தில் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக பின்புறமாக முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் யாரும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள அங்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்ப டும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மேற்கூரை சரிந்து விழுந்த மைதா னத்திற்குள் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொ ள்வோர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட யாரும் செல்ல வேண்டாம் என்று கமிஷனர் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தார்.

    இதனால் இன்று காலை அங்கு வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்டத்தில் பாளையில் அதிகபட்சமாக 8 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    ×