search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • வரும் நாட்களில் இஸ்ரோ பல திட்டங்களை செயல்படுத்த போகிறது
    • மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டப்படி நிலவிற்கு ஏவப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை தொடர்ந்து இஸ்ரோ வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் இந்தியர்கள் மேலும் பெருமைப்படும் வகையில் உள்ளது.

    அவற்றில் சில திட்டங்களின் விவரங்கள்:

    1) ஆதித்யா எல் 1 (2023) - உத்தேச திட்ட செலவு - ரூ.378 கோடி

    சூரிய மண்டலத்தை நோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு நிகராக இந்த விண்கலம் அமையும். கிரகணங்களின் பாதிப்புகள் இல்லாத வகையில் சூரியனை இது தொடர்ந்து ஆய்வு செய்யும். சூரியனின் வெளிப்புறம் உள்ள மண்டலம் குறித்தும் சூரிய புயலின் வேகம் உட்பட பல நுட்பமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தான் இதன் நோக்கம்.

    2) நாசா-இஸ்ரோ சார் (நிஸார்) (2024) - உத்தேச திட்ட செலவு - ரூ.12 ஆயிரம் கோடி

    இது இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து உருவாக்கும் ஒரு குறைவான உயரத்தில் அமைய போகும் ஆராய்ச்சி மையம். பூமியின் நுட்பமான இயக்கங்களை 12 நாட்களிலேயே இதனால் பதிவு செய்ய முடியும். இது இந்தியாவின் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட இருக்கிறது.

    3) ஸ்பேடக்ஸ் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.124 கோடி

    இது ஒரு இரட்டை விண்கல திட்டம். சேசர் மற்றும் டார்கெட் என இரண்டு விண்கலங்கள் இரண்டு வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும். இவ்விரண்டும் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக இயக்கப்படும்.

    4) மங்கள்யான்-2 (2024) - உத்தேச திட்ட செலவு - அறிவிக்கப்படவில்லை

    அதி உயர் தொழில்நுட்ப கேமரா பதிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம் செவ்வாய் கிரகத்தை குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும்.

    5) ககன்யான் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.9023 கோடி

    இது மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் பெருமைமிகு திட்டம்.

    6) சுக்ரயான் 1 (2031) - உத்தேச திட்ட செலவு - ரூ.1000 கோடி

    பூமியில் இருந்து சுக்ரனுக்கு விண்கலம் அனுப்ப தேவைப்படும் சாதகமான அறிவியல்பூர்வமான சூழ்நிலை 19 மாதங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். எனவே 2031ம் வருடம்தான் இதற்கு சரியான காலகட்டம் என விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

    • நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால்பதித்து வரலாற்று சாதனை படைத்தது.
    • நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து இந்தியாவுக்கு உலக முழுவதிலும் இருந்து வாழ்த்து.

    விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. 60-களில் விண்வெளி துறையில், இந்தியாவை பார்த்து உலக நாடுகள் சிரித்த நிலையில், இன்று இஸ்ரோவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. விண்வெளியில் பல்வேறு அசாத்திய திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்து இஸ்ரோ, உலக நாடுகளை தன் பக்கம் திரும்ப பார்க்க செய்திருக்கிறது.

    அந்த வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை செய்துகாட்டி இருக்கிறது. இந்த திட்டங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

     

    சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை

    சந்திராயன் 2 - வனிதா முத்தையா

    சந்திராயன் 3 - வீரமுத்துவேல்

    மங்கள்யான் - சுப்பையா அருணன்

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு திட்டங்களும், இஸ்ரோ வரலாற்றில் சிறப்புவாய்ந்தவை ஆகும். இவை அனைத்திலும் இயக்குனர்களாக இருந்த அனைவரும் தமிழர்கள் ஆவர். இதைவிட முதன்மையானது, இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை உலகில் எந்த நாடும் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை தொட்டதில்லை
    • இந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மிக அதிகமான உயர்வை கண்டிருக்கின்றன

    கடந்த ஜூலை 14 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான்-3 விண்கலம்.

    இஸ்ரோ திட்டமிட்டபடி, இதன் லேண்டர் இன்று நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக தரையிறங்கியது.

    இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியிருந்தாலும் இதுவரை உலகில் எந்த நாடும் செய்து காட்டாத முயற்சியாக நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

    விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 விண்கல உருவாக்கத்தில் பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

    அவற்றில் சில முக்கிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள்:

    1) எல் அண்ட் டி - விண்கலத்தின் முக்கியமான பூஸ்டர் பகுதிகளில் தலைப்பகுதி, இடைப்பகுதி மற்றும் முனையிலுள்ள பக்கெட் ஃப்லாஞ்ச் ஆகியவற்றை இந்நிறுவனம் உருவாக்க உதவியது.

    2) மிஸ்ர தாது நிகம் - அரசுடைமையான இந்நிறுவனம் முக்கியமான உலோகங்களையும், பிரத்யேக எக்கு பாகங்களையும் வழங்கியது.

    3) பாரத் கனரக மின்பொருள் நிறுவனம் (BHEL) - விண்கலத்திற்கான பேட்டரியை இந்நிறுவனம் தயாரித்து வழங்கியது. இதன் துணை நிறுவனமான வெல்டிங் ரிஸர்ச் மையம் அடாப்டர் கருவிகளை வழங்கியது.

    4) எம்டார் டெக்னாலஜிஸ் - விண்கலத்தின் இஞ்சின் மற்றும் பூஸ்டர் பம்ப்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

    5) கோட்ரெஜ் ஏரோ ஸ்பேஸ் - கோட்ரெஜ் குழுமத்தின் துணை நிறுவனமான இந்நிறுவனம், த்ரஸ்டர்கள் எனப்படும் முக்கிய பாகங்களை உருவாக்கி வழங்கியது.

    6) அன்கிட் ஏரோ ஸ்பேஸ் - கலவை எக்குகள், எக்கு உதிரி பாகங்கள் மற்றும் டைட்டேனியம் போல்ட்களை இந்நிறவனம் உருவாக்கி தந்தது.

    7) வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ் - ஏவுகணையில் உபயோகப்படுத்தப்பட்ட S200 எனும் முக்கிய பூஸ்டர் மற்றும் ஃப்ளெக்ஸ் நாஸில் கட்டுப்பாட்டு சாதனங்கள் உட்பட முக்கிய பாகங்களை இந்நிறுவனம் வழங்கியது.

    கடந்த 3 வருடங்களில் சந்திரயான்-3 திட்டத்தில் இணைந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

    அவற்றில் சில நிறுவனங்களின் பங்கு உயர்வு குறித்த விவரங்கள்:

    1) எல் அண்ட் டி - 170 சதவீதம்

    2) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் - 200 சதவீதம்

    3) பாரத் கனரக மின்பொருள் நிறுவனம் - 172 சதவீதம்

    4) மிஸ்ர தாது நிகம் - 83 சதவீதம்

    5) வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ் - 66 சதவீதம்

    6) ஸெண்டம் எலக்ட்ரானிக்ஸ் - 300 சதவீதம்

    7) லிண்டே இந்தியா - 1000 சதவீதம்

    8) எம்டார் டெக்னாலஜிஸ் - 41 சதவீதம்

    9) கோட்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் - 15 சதவீதம்

    மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக, மிக பெரும் பொருட்செலவில் வல்லரசு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா, மிக குறைந்த செலவிலேயே இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ளது.

    சந்திரயான்-3 திட்டத்திற்கான மொத்த செலவு:

    1) ஏவுகணை - ரூ.365 கோடி

    2) லேண்டர் மற்றும் ரோவர் - ரூ.250 கோடி

    மொத்த செலவு - ரூ.615 கோடி

    2008ல் நடத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கல முயற்சிக்கு ரூ.365 கோடி என்பதும், 2019ல் நடத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கல முயற்சிக்கு ரூ.978 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வல்லரசு நாடுகளால் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியும் என நம்பப்பட்டு வந்த நிலையில், உலகமே வியக்கும்படி இந்தியா இந்த சாதனையை புரிந்துள்ளது.

    • இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
    • விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல் எட்டி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.

    இதனை கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சந்திரயான் 3 வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் மற்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்திரயான் 3 வெற்றிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம்.
    • இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம்.

    இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

    நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதை அடுத்து, இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை பாராட்டி இந்திய பிரதமர் மோடி, "வரலாற்று சிறப்புமிக்க மகத்தான தருணம் இது. இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    • இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
    • இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

    இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.


    இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியது.
    • சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது.

    2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்தியாவின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்கலங்களை அனுப்பி, நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான் எனும் பெயரில் ஒரு திட்டம் குறித்து அறிவித்தார்.

    இத்திட்டத்தை தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மொடியும் தொடர்ந்து ஊக்குவித்ததை தொடர்ந்து இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

     

    சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது. இன்று மாலை 06:04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

    இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். முன்னதாக லேண்டரை தரையிறக்குவதற்கான சிஸ்டம்களை அடிக்கடி சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சரியாக 5.44 மணிக்கு, விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி தொடங்கியது.

    அப்போது விக்ரம் லேண்டர் மணிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. லேண்டரை தரையிறக்கும் போது, நிலவின் ஈர்ப்புவிசை மிக முக்கிய பங்கு வகித்ததால், அதற்கு ஏற்ற வகையில், லேண்டரின் வேகத்தை கட்டுத்தப்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

    இதுவரை நிலவில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இது வரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

    • கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
    • சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது.

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது. இன்று மாலை 06:04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அதன்படி விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகள் துவங்கின.

    • 'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
    • நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.

    'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.

    இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது.
    • விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும்.

    சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று மதியம் இஸ்ரோ வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

    தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும்.

    இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

    விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். இதை "7 மினிட்ஸ் ஆப் டெரர்" என்று அழைக்கிறார்கள். ஏன் என்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். அந்த சமயத்தில் லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும். அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தொடர்ந்து தமிழர்கள் இருந்து வருகின்றனர்.
    • சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரா எனப்படும் பி.வீரமுத்துவேல்.

    உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி உலக நாடுகளை வியக்க வைத்து வருகிறது இஸ்ரோ. சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தொடர்ந்து தமிழர்கள் இருந்து வருகின்றனர்.

    உலக அரங்கில் நம் நாட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும், தனி மரியாதையையும் ஏற்படுத்த இருக்கும் சந்திரயான் -3 திட்டத்தின் இயக்குனராக தமிழர் வீரா என்ற வீரமுத்துவேல் உள்ளார்.

    சந்திரயான்-3 திட்டத்தின் பின்னணியில் முக்கிய விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்கள் குறித்த விவரம் வருமாறு:-

    எஸ். சோம்நாத் (இஸ்ரோ தலைவர்)

    சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு பயணத்திற்கு முதன்மையாக செயல்பட்டவர் விஞ்ஞானி எஸ்.சோம்நாத். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஏற்கனவே இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குனராக பணியாற்றினார். சந்திரயான்-3 மட்டுமின்றி ஆதித்யா-எல்1 முதல் சூரியன் மற்றும் ககன்யான் (இந்தியாவின் முதல் ஆளில்லாப் பயணம்) போன்ற திட்டங்களுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பி. வீரமுத்துவேல் (சந்திரயான்-3 திட்ட இயக்குனர்)

    சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரா எனப்படும் பி.வீரமுத்துவேல். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரெயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரின் மகனான இவர் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் ஆவார். முன்பு இவர் இஸ்ரோவின் விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தின் துணை இயக்குனராக பணியாற்றினார். தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்து, பின்னர் உயர் படிப்பிற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் (விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர்)

    கேரளாவின் திருவனந்தபுரத்தில் தும்பாவிற்கு அருகில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர். இவர் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ஜி.எஸ்.எல்.வி.) மார்க்-III ஐ உருவாக்கியதில் பங்காற்றி உள்ளார். பின்னர் ஏவு வாகனம் மார்க்-III என மறுபெயரிடப்பட்டது. சந்திரயான் -3 விண்வெளி பயணத்துக்கு இவரும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    எம். சங்கரன் (யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர்)

    யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர் எம்.சங்கரன் தற்போது தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், தொலைநிலை உணர்தல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் கிரக ஆய்வு ஆகியவற்றில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கைக்கோள்களை உருவாக்கும் குழுவின் தலைவராக உள்ளார். இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் இஸ்ரோவுக்காக இந்த மையத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

    ஏ. ராஜராஜன் (வெளியீட்டு அங்கீகார வாரிய தலைவர்)

    ஏ.ராஜராஜன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அவர் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கிய விண்வெளி துறைமுகமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். அவர் லேப் இன் தலைவராகவும் உள்ளார். ககன்யான் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி உள்ளிட்ட இஸ்ரோவின் விரிவடையும் ஏவுகணை தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பு தயாராக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களைத் தவிர, சந்திரயான்-3 குழுவில் இயக்குநர் மோகன் குமார் மற்றும் வாகன இயக்குநர் பிஜு சி தாமஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களுடன் சுமார் 54 பெண் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் நேரடியாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் 'லேண்டர்' செல்லும்.
    • நிலவை நெருங்கும் 'லேண்டரின்' கடைசிக்கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன.

    ஸ்ரீஹரிகோட்டா:

    உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன.

    அந்த வரிசையில், கடந்த 2008-ம் ஆண்டு 'சந்திரயான்-1' விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு 'சந்திரயான்-2' விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் 'லேண்டர்' கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது.

    ஆனால் 'சந்திரயான்-2'-ல் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி 'சந்திரயான்-3' விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

    ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது. இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இறுதிக்கட்ட செயல்பாடுகள் சவால் நிறைந்தவை என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 'சந்திரயான்-3' குழுவினர், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    ஏற்கனவே 'சந்திரயான்-2' விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி, தற்போதைய 'லேண்டர்' கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது. இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. இதனால், 'லேண்டர்' நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த 'கிளைமாக்ஸ்' நிகழ்வுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது. மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

    தற்போதுவரை, திட்டமிட்டபடி 'லேண்டரின்' செயல்பாடு சரியாக உள்ளது. வழக்கமான பரிசோதனைகளை சீரான இடைவெளியில் விஞ்ஞானிகள் செய்துவருகின்றனர்.

    நிலவு நோக்கிய 'லேண்டரின்' நகர்வு சுமுகமாக இருக்கிறது. கடந்த 19-ந்தேதி நிலவுக்கு மேலே 70 கி.மீ. உயரத்தில் இருந்த 'லேண்டர்', நிலவின் தரைப்பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ளது.

    கடைசிக் கட்டத்தில் 'லேண்டரின்' செயல்பாடு இயல்புநிலையில் இருந்து வேறுபட்டால், நிலவில் தரையிறங்கும் திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இன்று (புதன்கிழமை) நிலவுக்கு மேலே 30 கி.மீ. உயரத்தில் 'லேண்டர்' இருக்கும்போது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் தொடங்கும்.

    அப்போது, நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் 'லேண்டர்' செல்லும். இந்த சமயத்தில் நிலவின் ஈர்ப்புவிசையும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், 'லேண்டரின்' வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த இருக்கின்றனர். இதில் ஏதும் தவறு ஏற்படும்பட்சத்தில், நிலவின் தரையில் 'லேண்டர்' மோதி சேதமடைய வாய்ப்பு இருக்கிறது.

    இதனால், நிலவை நெருங்கும் 'லேண்டரின்' கடைசிக்கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன. நிலவின் தரையில் பத்திரமாக 'லேண்டர்' தரையிறங்கும் அந்த தருணத்தை இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விண்வெளியில் புதிய வரலாறு படைக்க தயாராகி உள்ளது 'சந்திரயான்-3'.

    'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தை பெறும். நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும். 

    ×