search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    விண்வெளித் துறையில் தொழில்நுட்பப் பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் (இஸ்ரோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன் அடிப்படையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதன் மூலம் விண்வெளித்துறைக்கு தேவையான புதுமையான நடைமுறை திறன்களை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெங்களூரு, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

    5 நாட்களில் 20 பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தேசிய திறன் பயிற்சி மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரோ தொழில்நுட்பப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நான்கு பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது.
    • மேல்முறையீட்டு மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவு

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது.

    நீதிபதிகள் கூறும்போது, மேல் முறையீடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என்றனர்.

    • பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை கடந்த 26-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
    • வெப்பநிலை மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்களும் பெறலாம்.

    சென்னை :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை கடந்த 26-ந் தேதி பகல் 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில், இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக 1,117 கிலோ எடைகொண்ட 'ஓசோன் சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாக அனுப்பப்பட்டது.

    அத்துடன், இந்தியாவை சேர்ந்த ஐ.என்.எஸ். 2-பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள் உடன் தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்கள், பூட்டான் நாட்டுக்கான செயற்கைகோள்கள் உள்பட 9 செயற்கைகோள்களும் 2 வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது.

    இதில் இந்தியாவுக்கான 'ஓசோன்சாட்-03' செயற்கைகோள் மூலம் கடலின் நிறம், கடல் மேல்பரப்பின் வெப்பநிலை, காற்று வீசும் திசை, மீன்வளம் தொடர்பான தகவல்கள், கடல் அலை குறித்த கூடுதல் தரவுத் தொகுப்புகளை பெற முடியும். இதுதவிர, வெப்பநிலை மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்களும் பெறலாம்.

    இந்தநிலையில், செயற்கைகோள் தரவுகளைப் பெறுவதற்காக தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தரை நிலையமான தேசிய தொலைநிலை உணர்தல் மையத்துக்கு (என்.ஆர்.எஸ்.சி.) ஓசோன்சாட்-03 செயற்கைகோள் எடுத்த முதல் புகைப்படத்தை அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தில், இமயமலை பகுதி, குஜராத் கட்ச் பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதிகள் இடம் பெற்று உள்ளன.

    செயற்கைகோள்கள் கடல் வண்ண மானிட்டர் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மானிட்டர் சென்சார்களால் படம் பிடிக்கப்படுகின்றன. இது விஞ்ஞானிகளுக்கு பெருமிதமாக உள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை தொடங்கி உள்ளனர். இந்த செயற்கைகோள் மூலம் புகைப்படங்களை பெறும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    • ராக்கெட் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
    • சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.

    இந்தியா-பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

    செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: 


    இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இணைந்து இந்திய விண்வெளித்துறை செயல்பட்டு வருகிறது.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


    தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ராக்கெட் தளம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
    • ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ தயாரித்த

    பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இ.ஓ.எஸ்-06 செயற்கைக்கோள் நமது கடல் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • இதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
    • 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டா :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று (சனிக்கிழமை) பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

    இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன.

    ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும்.
    • குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன.

    இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக்கோள் போன்றவைகள் செலுத்தப்பட இருக்கின்றன.

    நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு பல்வேறு கட்ட சோதனை ராக்கெட்டுகள் செலுத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே அந்த சோதனைகள் நடைபெறும்.

    ககன்யான் விண்கலம் செலுத்துவதற்கு முன்பு 2 முக்கிய காரணங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ககன்யான் ராக்கெட்டில் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவனிக்க வேண்டும். அதற்கு தகுந்த வகையில் ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதாவது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண்டும்.

    இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அவர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதைத் தொடர்ந்து ரோபோவை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றிகரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும்.

    பின்னர் ககன்யானில் மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இது விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது சூரியனை ஆய்வு செய்யும்.

    குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கட்டுமான பணிகள் அங்கு தொடங்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும்போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது.
    • பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது.

    இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது.

    ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.

    இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • இந்த ராக்கெட் 545 கிலோ எடை கொண்டது.
    • 7 டன் உந்து சக்தியை கொண்டது.

    சென்னை :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.

    83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

    ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.

    இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
    • இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

    3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
    • இத்திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்ய தகவல்கள் கண்டறியப்படலாம் என இஸ்ரோ தெரிவித்தது.

    டேராடூன்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூனில் ஆகாஷ் தத்வா மாநாடு நடந்தது. இதில் அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வக இயக்குனர் அனில் பரத்வாஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    சூரிய வெளிச்சமே இல்லாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும்.

    இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்படலாம் என தெரிவித்தார்.

    • ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
    • தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் வேலா. இவர் கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ நரேந்திர மோடி உரையாற்றினார். இதற்கு 26 மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவர்கள் தேர்வு செய்து அவர்கள் மூலம் அகஸ்தியர் சுற்று‌ச்சூழல் செயற்கைகோள் ஒன்றினை விண்ணில் ஏவ உள்ளனர்.

    இதில் ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5000 மாணவர் விண்ணப்பித்த நிலையில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டார். இதில் பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கு செயற்கைக்கோள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் இணைய வழி மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டது. இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் வேலா பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மற்றும் டி ஆர்டிஓ நிலையங்களில் மாணவர்களும் ஆசிரியர்களிடம் சேர்ந்து பயிற்சியில் பங்கேற்க நாளை (2ஆம் தேதி) செல்ல உள்ளார்.

    தற்பொழுது ஆண்டிமடம் பகுதியில் உள்ள பலரும் அரசு பள்ளி மாணவரை பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து அரசு பள்ளி மாணவன் சஞ்சய் வேலா கூறுகையில், தனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்துகொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன். மேலும் இஸ்ரோவிலும் நான் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும். மேலும் இஸ்ரோ விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பது தனது லட்சியமாக கூறினார். போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தனக்கு யாரேனும் உதவிகள் செய்தால் நிச்சயமாக நான் அதை செய்து காண்பிப்பேன் என்று கூறினார்.

    இதுகுறித்து செய்தி அறிந்த அழகாபுரம் தலைவர் கலியபெருமாள், ரீடு தொண்டு நிறுவனர் ரீடுசெல்வம் மற்றும் விளந்தை தலைவர் வக்கீல் நடராஜன், ஓசை சண்முகம், சக்தி உள்ளிட்டோர் மாணவனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தியதுடன் அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி நிதி உதவியும் வழங்கினர்.

    ×