search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 172230"

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    • மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.
    • படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன்.

    இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷீலா (வயது 52) மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.

    இதில் படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது. கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 30-தேதி வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.

    இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது.இந்த நிலையில் வசுமதியிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள

    பெற்றோர் வீட்டில் கடந்த

    30-தேதி வீட்டில்தூ க்குப்போட்டு தற்கொ லைக்கு முயன்றார்.

    சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாப மாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத் ,மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை , தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர்.

    உடலை வாங்க மறுப்பு

    இதனிடையே அவர்கள் 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே வசுமதியின் உடலை வாங்குவோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உடலை வாங்க மறுத்து கடந்த 9-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார் நேற்று மல்ல சமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வசுமதியின் கணவர் வினோத்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இருப்பி

    னும் இன்று 4-வது நாளாக

    உடலை வாங்க மறுத்து வசுமதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

    னர். மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோ தரி காவியா ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.இதனால் 4-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது . 

    • நாளை தொடங்குகிறதுஇருதய நோய் நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்.
    • முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக பார்வதிபுரத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் களியங்காடு- இறச்சகுளம் சாலையில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது.

    இங்கு இலவச இதய நோய் மருத்துவ முகாம் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (27-ந் தேதி) முகாம் தொடங்குகிறது. தொடர்ந்து 28,29-ந் தேதிகளிலும் முகாம் நடக்கிறது.

    முகாமில் இ.சி.ஜி, எக்கோ, சர்க்கரை நோய் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 75 சதவீத சலுகை கட்டணத்தில் ஆஞ்சியோகிராம் செய்வ தற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் கலந்து கொள்ப வர்கள் தற்போது முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் அனை வருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இருதய நோய் நிபுணர்கள் வெங்கடேஷ், ஸ்ரீதர சுதன், மகாதேவன் மற்றும் சிறந்த மருத்துவ குழுவினர் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    முகாமில் கலந்து கொள்ள வருப வர்களுக்கு வசதியாக பார்வதிபுரத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
    • குமரி மாவட்டத்தில் தொடரும் சம்பவம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள், 55 பேரூராட்சி கள் 4 நகராட்சிகள், ஒரு மாந கராட்சி உள்ளது. இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ளது தெருநாய்கள். இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த மட்டில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் தெரு வீதிகளிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேசன்கள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நாய்களின் தொல்லை குறைந்த பாடில்லை. கிராமப்புறங்க ளிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இந்த நாய்கள் தெருக்க ளில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாய் கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர மும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாய் கடிக்கு செலுத்தப்படும் தடுப்பூசி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட எல்லை பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 7 நாட்கள் கழித்த பிறகு 2-வது தடுப்பூசி, 21 நாட்கள் கழித்த பிறகு 3-வது தடுப்பூசி என 7 தடுப்பூசிகள் நாய்க்கடிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    ஆனால் இங்கு போதுமான தடுப்பூசி இல்லாத தால் பொதுமக்கள் தற்பொழுது பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்க்கடி தடுப்பூசியை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
    • சிகிச்சைக்கான உயர்தர கருவிகள் இல்லாத நிலையில் உள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மருத்துவ சிகிச்சைக்கான உயர்தர கருவிகள் இல்லாத நிலையில் உள்ளது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக அரசு ஆஸ்பத்திரிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ராமநாதபுரம் வந்தார். கீழக்கரை நகர தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கத்திடம் கீழக்கரையில் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் கோரிக்கை குறித்து விளக்கினார். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அமைச்சர் மா.சுப்பிரமணி யத்தை கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து ஆய்வு செய்தார். அங்குள்ள எக்ஸ்ரே அறைக்குச் சென்று அதனுடைய செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன் ஆகியோரிடம் மருத்துவமனை வசதிகள் குறித்து விசாரித்தார்.

    இதையடுத்து மத்திய அரசின் சிறுபான்மை நிதி, மாநில அரசு நிதி, எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை கொண்டு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    நவாஸ் கனி எம்.பி., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை 2 இடங்களில் செயல்ப டுகிறது. அது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதார இயக்குநர் செல்வநாயகம், ராமநாதபுரம் இணை இயக்குநர் நலப்பணிகள் ஸ்டீபன் ராஜ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், முன்னாள் சேர்மன் பசீர் அஹமது, கீழக்கரை தி.மு.க மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர்கள் சுகைபு, முகம்மது காசிம், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்டோவில் கைதி தப்பிய காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மேசுவரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

    இதற்காக அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பத்மேசுவரன் போலீஸ் பாதுகாப்புடன், மதுரை அரசு ஆஸ்பத்திரி புதிய மருத்துவமனைக்கு வந்தார்.

    அப்போது பத்மேசுவரன் கழிவ றைக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போதுதான் பத்மேசுவரன் போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பத்மேசுவரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் பச்சை கலர் சட்டை, கட்டம் போட்ட லுங்கி அணிந்து வெளியே வருகிறார். அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, சர்வ சாதாரணமாக தப்பி செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மதுரை கோரிப்பா ளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேசுவரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரிய வந்துள்ளது.

    மதுரையில் கீரைத்துறை, தெப்பக்குளம் பகுதிகளில் பத்மேசுவரனுக்கு நெருங்கிய உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டில் பத்மேசுவரன் பதுங்கி உள்ளாரா? என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    பத்மேசுவரன் தப்பியது தொடர்பாக ராமநாதபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமுதி போலீ சார் பத்மேசுவரன் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடியிருப்பு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து பத்மேசுவரன் உள்பட 5 கைதிகளை, 4 பேர் அடங்கிய போலீஸ் படையினர் அழைத்து வந்துள்ளனர். அவர்களை கண்காணிக்கும் வகையில், போதிய போலீஸ்காரர்கள் அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக பத்மேசுவரன் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று உள்ளார்.

    மதுரை மாநகர ஆயுதப்படையில் கைதிகளின் பாதுகாப்புக்காக எத்தனை போலீசார் அனுப்பப்பட்டனர்? அவர்களில் எத்தனை பேர் பணிக்கு வரவில்லை? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    • அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    • மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்கள் நல்வா–ழ்வுத்துறை அமைச்சர் இன்று மதுரை வந்துள்ளார். அவர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.த்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் எப்போது தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    தென் மாவட்ட மக்களுக்கு இந்த பணி எப்போது தொடங்கும் என இனிப்பான செய்தியை வழங்க அமைச்சர் முன் வர வேண்டும். அதேபோல் மருத்துவமனையை ஆய்வு செய்யும்போது தேவையான உபகரணங்களை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து செவிலியர்கள் சேவையாற்றினர். அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அவர்களுக்கு என்ன திட்டம் உள்ளது? என்று அரசு விளக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் குறித்த அரசு நடவடிக்கையை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

    திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை, பேரையூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், பேரையூர் மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது டெங்கு ஒழிப்பு குறித்த முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு கூறி வருகிறது. அது குறித்து முழுமையான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.சாமானிய மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் கொண்டுவர அரசு முன்வருமா? என்று அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன
    • சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர்

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் ஆன் லைன் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலால் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். பணத்தை இழந்த சிலர் தங்கள் உயிரை விட்டுள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது சில மோசடி கும்பலை கைது செய்தாலும், மோசடிகள் நின்ற பாடில்லை. இதில் ஆன் லைன் மூலம் வேலை தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் மலேசியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

    இவர் மும்பை, மலேசியா, நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பலை வைத்து ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இதில் ஈடுபட்ட ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் சாரோன் (வயது 30) என்பதும் தெரியவந்தது.

    அவர் தற்போது சொந்த ஊரில் இருப்பதை அறிந்த மும்பை சைபர் கிரைம் சி.ஐ.டி. ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீ சார் கொண்ட குழுவினர், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசாரின் துணையுடன் திட்டுவிளை குருசடி வந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த பிரின்ஸ் சாரோனிடம் விசாரணை நடத்தியதில் மோசடியில் அவருக்கு பங்கு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து சுமார் 100 சிம் கார்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட பிரின்ஸ் சாரோனை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு பிறகு அவரை விசாரணைக்காக போலீசார் மும்பை அழைத்துச் செல்ல உள்ளனர்.

    100 சிம் கார்டுகள் வைத்திருந்தது ஏன் என்பது பற்றி பிரின்ஸ் சாரோனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ஆன்லைன் வேலை என்ற பெயரில் பெயரளவில் நேர்முகத் தேர்வு நடத்தி வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறுவது வழக்கம். பின்னர் சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர். மேலும் வேலைக்கு டெபாசிட் தொகை என்ற பெயரிலும் பணம் பெற்றுள்ளனர். அதன் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது.அதன் பின்னர்தங்களது சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பயன்படுத்தி மற்றொரு மோசடியில் ஈடுபடுவது உண்டு. இதனால் தான் 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் அவனிடம் இருந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 40-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பாதிப்பினால் 280-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோட்டில் தினமும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

    தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தற்போது மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது.

    இதற்காக பெற்றோர்கள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கு முறையான சிகிச்சை எடுத்து கொண்டாலே போதும். மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
    • தீ விபத்து நடந்த பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு வார்டு செயல்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பரபரப்பாக செயல்படும் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு டீக்கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    நேற்று நள்ளிரவு சாலையோர கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அந்தப்பகுதியினர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு பகுதியில் உள்ள மரத்தில் பரவி எரிந்தது.

    இதனிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு வார்டு செயல்பட்டு வருகிறது. தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தீ விபத்து தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு மருத்துவமனை நடைபாதையில் சாலையோர கடைகள் அதிகம் உள்ளன. இதனால் பொதுமக்கள், மெயின் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    எனவே மதுரை மாநகராட்சி மற்றும் போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலையோர நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×