search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
    • கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.

    பெரம்பலூர்

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


    • நள்ளிரவில் போலீசார் கடும் கட்டுப்பாடு
    • நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.

    கன்னியாகுமரி:

    ஆங்கில வருடமான 2022-ம் ஆண்டு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்து 2023-ம் ஆண்டு மலர்ந்தது. புத்தாண்டு பிறந்ததை யொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கன்னியா குமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன. நட்சத்திர ஓட்டல்களில் இரவு 7 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் - பாடல், குத்தாட்டம், பரத நாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வாண வேடிக்கை, குழந்தை களுக்கானவிளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்க விடப்பட்டு கேக் வெட்டி புத்தாண்டு கொண் டாடப்பட்டது. கன்னியா குமரியில் நடந்த இந்த புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்றுமுன்தினம் முதலே வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண் டனர்.

    புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.

    கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண் டாட தடை விதிக்கப் பட்டது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண் டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துகிறார்களா? என்றும் போலீசார் தீவிர மாக சோதனை நடத்தி னார்கள். அதேபோல குடி போதையில் யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.

    • இந்தியா கேட், கேட்வே ஆப் இந்தியா, பாந்த்ரா பகுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மக்கள்.
    • நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.

    2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தலைநகர் டெல்லி உள்பட முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு களைகட்டியிருந்தது. டெல்லியின் கன்னாட் பிளேஸ் மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்தாண்டைக் கொண்டாட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நூற்றுக்கணக்கானோர் ராஜபாதையான கர்த்வயா பாத் பகுதியில் திரண்டதால் அந்த பகுதி சுற்றுலாத்தளம் போல் காட்சி அளித்தது. புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி பாதுகாப்பை உறுதி செய்ய தலைநகர் முழுவதும் 18,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


    .இதேபோல் தெற்கு மும்பையில் கேட்வே ஆப் இந்தியா, மரைன் டிரைவ் மற்றும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மேலும் மும்பை புறநகர் பகுதிகளில், பாந்த்ரா, மார்வ் கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர்.

    மும்பை மாநகராட்சி, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், கேட்வே ஆப் இந்தியா போன்ற முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஹோட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. 


    இதேபோல் கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் களைகட்டியிருந்தன. பனாஜி நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஏராளமான மக்கள் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.


    இதேபோல் கேரளா மாநிலம் கொச்சி, இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

    • சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் உற்சாக கொண்டாட்டம்
    • சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆங்கில புத்தாண்டு 2023 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை மூடப்பட்டது. இதனால் சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை.


    இந்நிலையில் நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. 


    2023 புத்தாண்டு பிறந்ததையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • போலீசார் கடும் கட்டுப்பாடு
    • குத்தாட்டம், ஆடல் பாடலுடன் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டுவருகிறது. இரவு 7 மணிமுதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல்- பாடல், குத்தாட்டம், பரதநாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்கவிடப் பட்டு கேக்வெட்டிபுத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக் கும் இந்தபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சுற்றுலாபயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

    ஒரு தம்பதிக்கு ரூ.6ஆயிரம் வீதமும் தனிநபர் ஒருவருக்கு ரூ.3ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டி கன்னி யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை யில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடைவித்து உள்ளனர். நட்சத்திரஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
    • மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

    இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுதல் கூடாது. மேலும் மது அருந்திவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகவேகமாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் புத்தாண்டிற்கு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது மக்கள், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் பரமத்தி

    வேலூர் டி.எஸ்பி கலை யரசன் தெரிவித்துள்ளார்.

    • கட்சியின் 138-வது தொடக்க நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி, ஓசூர் எம். ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் 138-வது தொடக்க நாள் விழா நேற்று ஓசூரில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் எம். ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்,கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி
    • இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை

    நாகர்கோவில் :

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடத் தப்படுகின்ற கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டை யொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி யது.

    முதல் இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் பேரின்ப பெருவிழாவாக நடைபெற்றது. இதில் தேவ ஊழியர் கள் அனிசன், சாமுவேல், எலியாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி (பெங்களூரு) ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளித்தனர்.ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால் தினகரன் செய்தி அளித்தார்.

    நேற்று மாலையில் மூன்றாம் நாள் விழா நடந்தது. இதனையொட்டி அரு மனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகு ழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இயேசு நாத ரின் உருவம் தாங்கிய ரதம், வண்ண உடைகளுடன் கண்ணை கவரும் வகை யில் கலைஞர்கள் வலம் வந்தனர். பேண்ட் வாத்தியம் உட்பட இசை கருவிகள் இசைக்கப்பட்டன.அதனை தனி மேடையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், விஜய்வசந்த் எம்பி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியதுணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்களூரு ராபர்ட் கிறிஸ்டோபர், ஐ.ஜே.கே. கட்சி மாநில தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் டென்னிஸ், பொருளாளர் கிளாரிஸ் பிரபு, செய்தி தொடர்பாளர் பாவலன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் திலிப் சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் அல்காலித், குமரி மேற்கு மாவட்ட செயலாளர்ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-

    நாம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும், மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மதத்தில் 3 வகை உண்டு. இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை. கடவுளின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களால் எந்த மோதலும், வன்முறையும் நடப்பது இல்லை.

    ஆனால் இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். சாதாரண இந்து மக்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. மடாதிபதிகளுக்கும் பொறுப்பு இல்லை. பாரதிய ஜனதா போன்றவை தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை புகுத்துகிறார்கள்.

    சாதாரண இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தவில்லை. சமூகத்தில் இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆதலால் எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் தான் இருக்கி றார்கள். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் சங் பரிவார அமைப்புகளை தான் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது சகோதரத்தை, சமத்து வத்தை, சமூக நீதியை பேசினால் வரவேற்கலாம். ஆனால் இதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையே தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. சங் பரிவார அமைப்புகளை பற்றி பேசும்போது இந்து களை விமர்சிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. தற்போது நடந்த மாநாட்டில் அனைத்து மதத்தினரையும் மேடையில் ஏற்றி இருக்கிறோம்.அனை வருக்கும் நேர்மறை சிந்தனை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் நேர்மறை சிந்தனை வரும். ஏசு 3 ஆண்டு போதித்த போதனைகள் தான் உலகை ஆழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கி னால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு வழங்கினால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படி இருக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாரதிய ஜனதாவினர் விளம்பரத்துக்காக அதுபற்றி பேசி வருகிறார்கள். பா.ஜனதாவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். பாரதிய ஜனதாவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை. நல்லவர்களால் பாராட்டக்கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது" என்றார்.

    • தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
    • பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.

    திருப்பூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகை கிறிஸ்துமஸ்.அவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள். அன்பு, பகிர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை போதிக்கும் இவ்விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே தேவாலயங்கள் சார்பில் வீடுகள்தோறும் சென்று கிறிஸ்துமஸ் பூபாளம் பாடி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வை காட்சிப்படுத்தும் வகையில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்டார்களும் தொங்கவிடப்பட்டு அவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும் புத்தாடை எடுத்தும் பண்டிகையை கொண்டாட தயாராகி உள்ளனர் . தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு திருப்பலியும், சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நாளை 25-ந் தேதி அதிகாலை 5மணிக்கு ஆராதனையும் நடக்கிறது.

    இதில் உறவினர்கள், நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, பரஸ்பரம் கேக் உள்ளிட்ட இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். மேலும் நாளை தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்க உள்ளனர்.

    இது குறித்து பேராயர்கள் கூறுகையில், உலகில், தீயவை ஒழிந்து நன்மை பெருக வேண்டும் என்பதற்காகவே ஏசு கிறிஸ்து மண்ணில் அவதரித்தார். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். அதை அடிப்படையாக வைத்தே கிறிஸ்து பிறப்பின் போது பிறருக்கு உதவும் செயல் அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் சமயத்தில் மெழுவர்த்தி ஏந்தி கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி ஆராதனை செய்வது வழக்கம். இது நாம் பிறருக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றனர். 

    திருப்பூரில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதனால் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் ,அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடித்தன. கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகளும் விற்பனை ஆகின. பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.மேலும் பேக்கரி கடைகளில் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதனால் பேக்கரி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது. திருப்பூர் காங்கயம் சாலையில் ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. கிறிஸ்துமஸ்சையொட்டி இங்குள்ள கடைகளில் அதிக அளவு பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையால் திருப்பூர் மாவட்டம் களை கட்டி காணப்படுகிறது.     

    • கேக், நட்சத்திரம் விற்பனை அமோகம்.
    • கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது.

    கோவை :

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்து மசை வருகிற 25-ந் தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    அன்பை வெளிப்படுத் தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப் பண்டிகையின் நோக்க மாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது.

    டிசம்பர் முதல் வாரத்தி லேயே வீடுகளில் நட்சத்தி ரங்கள், குடில்கள், கிறிஸ்து மஸ் மரம் ைவக்க தொடங்கி னார்கள். கிறிஸ்துவ ஆல யங்களிலும் நட்சத்தி ரங்கள், குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கிறிஸ்துமஸ் தாத்தா வுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு கள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்னர். ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாைடகள் வழங்கப் படுகின்றன.

    பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது. ஆலயங் களை அழுகுபடுத்த வித விதமான அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    கோவை ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திரங்கள், வண்ண மின் விளக்குள், குடில்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    கிறிஸ்தவ தேவால யங்கள், திருச்சபைகளில் இப்போதே அலங்காரப் பணிகள் தொடங்கி விட்டன. ஆலயங்கள் முழுவதும் நட்சத்திரங்கள், மின் விளக்குகள் மூலம் அழகுப் படுத்தப்பட்டுள்ளன. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் மாட்டுத் தொழுவம் அடங்கிய குடில்கள் கிறிஸ்தவ ஆலய ங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் பார்த்து வணங்கி செல்கின்றனர்.

    மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் கேக் விற்பனையும் அதிகரித்து உள்ளது. பிரபல கேக் நிறுவனங்களில் பிளம் கேக் உள்ளிட்ட விதவிதமாக கேக்குகளை ஆர்டர் செய்துள்ளனர்.

    ஆலயங்களில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை யன்று கேக் வழங்குவதற்காக மொத்தமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கேக் கடைகளில் கூட்டம் நிரம்பி உள்ளது.

    புத்தாடைகள் வாங்கு வதற்கு ஜவுளி கடைகளுக்கும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் நட்சத்திர ஓட்டல் கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிலும் கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆதரவற்ற மையங்களில் உள்ள முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு கிறிஸ்துமஸ் அமைப்புகள் புத்தாடைகள், கேக் வழங்கி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    கோவையில் உள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் அடைந்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
    • வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.

    1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் : 

    தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை புதிய அமைச்சராக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.உதயநிதிஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

    இதையடுத்து மங்கலம் ஊராட்சி சார்பில் சின்னப்புத்தூர் பகுதியில் தி.மு.க. கட்சியின் கொடியேற்றப்பட்டது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து மங்கலம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்டதுடன் பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுல்தான்பேட்டை தம்பணன், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன் , மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான எம்.ஏ.முகமது இத்ரீஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜுனைத், தெற்கு ஒன்றிய கூடுதல் துணைச்செயலாளர் இடுவாய் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், சீராணம்பாளையம் செயலாளர் முத்துவேல், இடுவாய் சுரேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், தெற்கு ஒன்றிய முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×