search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகர்கோவில் :

    மதுரையில் நாளை (20-ந்தேதி) அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடக்கிறது. இதை யொட்டி எம்.ஜி.ஆரை போற்றும் வித மாக நாகர்கோ வில் கவுன்சிலர் அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது. இதற்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி 51-வது ஆண்டை கொ ண்டாடும் விதமாக 51 கிலோ கேக் வெட்டி மாநாடு வெற்றி பெற 101 தேங்காய் உடைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டன.

    மாநாட்டிற்கு பொது மக்களை அழைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகே ஸ்வரன், ஜெவின் விசு, ஆர ல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், ஒன்றிய செயலா ளர் மகாராஜா பிள்ளை, வீராசாமி, பொன் சுந்தர்நாத், பொன்சேகர் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், அசோக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய பிரதிநிதி ஆரல்கிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலாடி, சாயல்குடி பகுதிகளில் சுதந்திர தின கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் ஆத்தி, கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், பிச்சை, முருகவள்ளி மலைராஜ், குஞ்சரம் முருகன் பங்கேற்றனர்.

    சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சேகர் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தேசிய கொடியை ஏற்றினார்.

    கடலாடி இதம்பாடல் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மங்களசாமி, கடுகு சந்தை ஊராட்சி காளி முத்து, செஞ்சடைநாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ். வாகைக் குளம் ஊராட்சி தலைவர் ஜெய லட்சுமி வடமலை, எஸ். தரைக்குடி ஊராட்சித் தலைவர் முனியசாமி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

    பிள்ளையார் குளத்தில் ஊராட்சி தலைவர் வீரபாண்டியன், காணிக்கூரில் ஊராட்சி தலைவர் தென்னரசி செல்லபாண்டியன், கண்டிலான் ஊராட்சித் தலைவர் மணிமேகலை முத்துராமலிங்கம், ஏ.புனவாசலில் ராஜேந்திரன் ஆகியோர் கொடியேற்றினர்.

    பெரியகுளம் ஊராட்சி முத்துமாரி, பொதிகுளம் கிராமத்தில் லட்சுமி திரு வாப்பு, கொத்தங்குளம் ஊராட்சி கணேசன், மாரியூர் ஊராட்சி கன்னி யம்மாள் சண்முகவேல், நரிப்பையூர் ஊராட்சி நாராயணன், கன்னிராஜபுரம் ஊராட்சி சுப்பிரமணியன், செவல்பட்டி ஊராட்சி சொரிமுத்து ஆகியோர் கொடியேற்றினர்.

    கொக்கரசன் கோட்டை ஊராட்சி அப்பணசாமி, எஸ்.கீரந்தை ஊராட்சி பாலகிருஷ்ணன், பீ.கீரந்தை ஊராட்சி ஆனந்தம்மாள் அற்புதராஜ், கடலாடி ஊராட்சி ராஜமாணிக்கம் லிங்கம், மூக்கையூர் ஊராட்சி தொம்மை, டி.வேப்பங்குளம் ஊராட்சியில் முருகன், மேலச்செல்வனூர் ஊராட்சி மகரஜோதி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியேற்றினர்.

    வாலிநோக்கம் ஊராட்சி பீர்முகம்மது, சிக்கல் ஊராட்சி பரக்கத் ஆயிஷா சைபுதீன், கருங் குளம் ஊராட்சி காளிதாஸ், ஓரி வயல் ஊராட்சி மலர்மதி திருப்பதி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    • சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

    மதுரை

    மதுரையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் சுந்தரமகாலிங்கம், பாக்கியம் செல்லதுரை, ஜோதி, ராஜலெட்சுமி, நச்சம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரியில் கூடுதல் வளாகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    மனோகரா நடுநிலைப்பள்ளி

    மதுரை மனோகரா நடுநிலைப்பள்ளியில் குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மதுரை அறம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் பால் ஜெயக்குமார் வரவேற்றார். அறம் அரிமா சங்க தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். கவுன்சிலர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். இதில் தலைவர் காளிதாஸ், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மகேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முத்தமிழ் மன்றம்

    மதுரை ஹார்விபட்டி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. தேசிய கொடியை மன்றத்தின் நிறுவன தலைவர் முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன் ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகிகள் மாரியப்பன், நாகேந்திரன், கணபதி, மோகன், சங்கர், ஸ்டெல்லா, சுடலை முத்து, குமார், செல்வராஜ், ராஜேஷ், ஹரிகிருஷ்ணன், நாகராஜ், அஞ்சு, நாகராஜ், பாண்டியராஜன், மணிகண்டன், குணசேகரன், தங்கவேலு, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனை வருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

    • பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.

    வட்டாட்சியர் அலுவ லகத்தில் ரவி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி முத்தரசன், நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கொடி ஏற்றினார். நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா, போகலூர் ஒன்றிய தலைவர் சத்யாகுண சேக ரன், பரமக்குடி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    • ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
    • அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ராகுல்காந்திக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் எம்.பி.யாக ராகுல்காந்தி பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இதை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் மகாராஜா, செல்லப்பா, ஜெயபால், ஞானசெல்வன், சாலமோன்டேவிட், யேசுவடியான், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் தங்கரத்தினம் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    மாநில இலக்கிய அணி தலைவர் ஆலடி சங்கரய்யா, மாவட்ட துணைத்தலைவர் ச.செல்வன், மாநில இலக்கிய அணி செயலாளர் பொன் கணேசன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, வடக்கு வட்டார பொறுப்பாளர் தாயார்தோப்பு ராமர், ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி.வைகுண்டராஜா, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ராதா குமாரி, மாரிமுத்து, வட்டார செயலாளர் மாரியப்பன், சொல்லின்செல்வன், ரத்தினவேல்சாமி, சிவகுமார், ரத்தினசாமி, வேல்பாண்டி, மாரிச்செல்வம், சீவலப்பேரியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
    • காங்கிரசார் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர்,

    அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை, உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஓசூரில் காங்கிரசார் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகிலும், பஸ் நிலையத்திலும் நடந்த நிகழ்ச்சிகளுக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    மாவட்ட பொருளாளர் மாதேஷ், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவப்ப ரெட்டி, கீர்த்தி கணேஷ் மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ெகாண்டாடினர்.
    • ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என தீர்ப்பு வெளியானது.

    திருப்பத்தூர்

    ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்துநிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் பொருளாளர் பழனிவேல் ராஜன், மூத்த உறுப்பினர் பழனியப்பன், அழகப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிர்ஸ் தலைவர் சேதுமெய்யப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவ, மாணவிகள் சமூகத்தில் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ- மாணவிகள் சமூகத்தில் மருத்துவர், நீதிபதிகள் போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் தன் குடும்பத்திலும், சமூகத்திலும் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் ஆசிரியைகள் நந்தினி, பிரீத்தி மற்றும் சுபாஷினி சமூகப் பொறுப்புணர்வை உணர்த்தக்கூடிய பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் வைத்தனர். மேலும் பள்ளி தாளாளர், முதல்வர் மாணவ, மாணவிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் சமூகத்தில் முக்கிய பங்காற்றக் கூடிய பணியில் இருக்கும் போலீசார், மருத்துவர் மற்றும் நீதிபதிகள் போன்று உடை அணிந்து கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷனா செய்திருந்தார்.

    • ஜெயங்கொண்டத்தில் மாவட்ட செயலாளர் அறிவிப்பு விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

    ஜெயங்கொண்டம்,

    விடுதலை சிறுத்தை கட்சியில் சில மாதங்களாக மாவட்ட செயலாளர் தேர்வு செய்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காட்டாகரம். கிராமத்தைச் சேர்ந்த கதிர் வளவன் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக விசிக கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பலூர் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகி கள் ராமச்சந்திரன், பால சுந்தரம், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். இந்த விழாவில் புலவர் குருசாமி, மேலாண்மை குழு தலைவர் வாசுகி உறுப்பி னர்கள் சசிகுமார், அங்காள ஈஸ்வரி, பரமேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பொறியா ளர் தனபாலன், முன்னாள் மாண வர் பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவல ர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது.

    • வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர்.
    • மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் காமராஜர் போல் வேடமணிந்து அவரின் வாழ்க்கை வரலாற்றினையும், கல்விக்காக அவர் ஆற்றிய அருந்தொண்டுகள் குறித்தும் பேசினர். பின்னர் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேல்பார்வையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்

    • நாடார் உறவின்முறை மகளிர் பள்ளியில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை மேலதோப்புத்தெருவில் அமைந்துள்ள மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா நாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைபெறுகிறது.

    பள்ளியின் செல்வி விளையாட்டு மைதானத்தில் நடை பெறும் விழாவில் மதுரை பட்டிமன்ற தென்றல் மதுரை ஜோதிகாராஜன் கலந்துகொண்டு மக்கள் மனம் கவர்ந்த நாயகன் என்ற தலைப்பில் சிறப்புரை–யாற்றுகிறார்.

    மேலும் விழாவை–யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடு–களை தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன், துணைத் தலைவர்கள் ஜெ.ஜெயசிங், ஏ.ராஜா ராம், செயலாளர் வி.என்.சிவக் குமார், பொருளாளர் ஜெ.தாமரை செல்வன், தலைமை யாசிரியை டி.சரஸ் வதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    ×