search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    • டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1,207 ரன்கள் குவித்துள்ளார்.
    • 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    நேற்று இரவு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் அடித்தார்.

    இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக்கோப்பைகளும் அடங்கும்.

    டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடி 129.78 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 63.52 என்ற பிரமிக்க வைக்கும் சராசரியுடன் 1,207 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. இதில் 14 அரைசதங்களும் அடங்கும்.

    2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி 2-ம் இடத்தில் உள்ளார். 37 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1795 ரன்கள் அடித்துள்ளார்.

    2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

    • முதலில் ஆடிய இந்திய அணி 196 ரன்களைக் குவித்தது.
    • இந்திய அணியின் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

    குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், இன்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.

    வங்காளதேசம்:

    தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ், நஹ்முல் ஹொசைன் ஷான்டோ, தவுஹித் ஹ்ருடோய், ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா, ஜாகர் அலி, ரிஷத் ஹொசைன், மெஹிதி ஹசன், தன்ஜிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான்

    • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
    • தலைநகர் டெல்லி வந்த ஷேக் ஹசீனா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

    புதுடெல்லி:

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்த ஷேக் ஹசீனா இன்று ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

    அதன்பின், இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

    இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற வரும் வங்காளதேசத்தினர் எளிதில் விசா பெற இ-மருத்துவ விசா நடைமுறை அமல்படுத்தப்படும்.

    வங்காளதேசத்தில் இருந்து இந்திய வழியாக நேபாளத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவை இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவை எடுத்துக்காட்டுகிறது.

    வங்காளதேசத்தின் வடக்கு-மேற்கு பகுதி மக்கள் பலன் பெறும் வகையில் அந்நாட்டின் ரங்பூர் பகுதியில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும்.

    இந்தியாவின் பெரிய வளர்ச்சி கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் இரு தரப்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

    • இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
    • ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும்.

    டாக்கா:

    நமது அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

    டெல்லியில் இன்று மாலை அவரை இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். நாளை காலை ஷேக்ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

    பின்னர் ஷேக் ஹசீனா ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.

    இந்த மாதத்தில் ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ந்தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

    • ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார்.
    • வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதனிடையே 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் 53 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • கேப்டன் நஜ்முல் 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.

    • 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • நேபாளம் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த 37-வது லீக் போட்டியில் வங்காளதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்காளதேசம் சார்பில் யாரும் அதிகபட்சம் 20 ரன்களை கூட அடிக்காத நிலையில், அந்த அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் பௌடெல் மற்றும் சந்தீப் லமிசேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 107 ரன்களை துரத்திய நேபாளம் அணியும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    மிடில் ஆர்டரில் நேபாளம் அணியின் குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. இவர்களும் முறையே 27 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, நேபாளம் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது.

    19.2 ஓவர்களில் நேபாளம் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டன்சிம் ஹாசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 

    • தன்சித் ஹாசன் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் மற்றும் லிட்டன் தாஸ் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹாசன் 35 ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 64 ரன்களையும் குவித்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை அடிக்க வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் பிரிங்கில் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    160 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஒ தவுத் முறையே 18 மற்றும் 12 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் சைபிராண்ட் முறையே 26 மற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார்.

    போட்டி முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார்.
    • நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கினர். இதில் நஜ்முல் சாண்டோ ஒரு ரன்னிலும் அடுத்து வந்த லிட்டன் தாஸ்சும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இதனையடுத்து தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைக் குவித்தது.

    சிறப்பாக விளையாடிய தன்சித் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் 25 ரன்னில் வெளியேறினார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் 64 ரன்கள் எடுத்தார். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
    • இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் இப்போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

    ×