search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் அப்பாதுரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் கூடுதலாக்கும் வேலை நேர சட்ட திருத்தத்தை நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழு சார்பில் நாளை ( வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த அழைப்பை ஏற்று நாளை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், மனோகரன், இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், சாந்திசுந்தரராஜ், குணசேகரன், சோமசுந்தரம், சிவகுமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத் தலைவர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

    • தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    சமஸ்கிருத பாரதி சார்பில் தென் தமிழகத்தில் சாதிமத பேதமின்றி அனைவருக்கும் இலவச அஞ்சல் வழியில் சமஸ்கிருத மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு செங்கோட்டை அம்மன் சன்னதி தெரு குருகுல பள்ளியில் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரிங்கேரி பாடசாலை அமைப்பாளர் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். முன்னதாக லெட்சுமிராமசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நெல்லை மாவட்ட சமஸ்கிருத மொழி ஆசிரியர்கள் லதா மாதா, நாகராஜன் மற்றும் செங்கோட்டை, தென்காசி பொறுப்பாளர்கள் தங்கம்மாள், உமா, உஷா, ஜெயா, வள்ளி, சீதாலெட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது.
    • உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணைய தளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் தமிழ் நாயுடு (Tamil Naidu) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.

    தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

    www.mygov.in இணைய தளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
    • வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள், திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பொங்கல் திருநாளை யொட்டி 30-வது வட்ட தி.மு.க. மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20-ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10-வது தெருவில் நடைபெற்றது.

    அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அதிஷ்டமணி, நிர்வாகிகள் ராஜ்மோகன், கார்த்திகேயன், அந்தோணிராஜ், அன்பழகன், நாராயணராஜ், சுப்பிரமணியன், கணேசன், சபேசன், சந்திரசேகர், தங்ககுமார், சீனிவாசன், செல்வராஜ், சின்ராஜ், அன்னராஜன், டேனியல், ஜெயராமன், ரவிக்குமார், சத்யநாராயணன், ராஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேக் உமர் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பின்னர் அமைச்சர் கீதாஜிவன் பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரிய மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சி என பல முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதை ஒன்றிய அரசே கூறியுள்ளது.

    அ.தி.மு.க.வில் 2 பேரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக உள்ளனர். தமிழ்மொழி, கலாசாரம் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்துள்ள காரணத்தால் ஒன்றிய நமது அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை குறைத்து கொண்டே வருகிறது.

    நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக திறமையால் அதையும் சமாளித்து பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் லட்சிய வழியில் முதல்-அமைச்சர் பணியாற்றி கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு என்ற பிரச்சனையை சிலர் கிளப்பினார்கள். தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்க நாடார் தியாகத்தை நாம் போற்றுவோம்.

    வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன், வட்டச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலு மற்றும் கருணா, அல்பட், கிளிப்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான்.
    • கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

    நெல்லை :

    நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான். தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும், சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஷ்டரியம் என்றாலும் நாடு என்றுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டிரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.

    மகாராஷ்டிரம் என்று சொல்லக்கூடாது, பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா?. கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

    பண்டிகைகள் ஆட்டம், பாட்டம், கூத்து கொண்டாட்டம் என இழுத்துச்செல்லும். சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்கவிடாமல் மயக்கும் மாயையை உருவாக்கும்.

    கல்வி, சுகாதாரத்தை, மருத்துவத்தை தந்தது கிறிஸ்தவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும், குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ, பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேச வேண்டும், வரலாற்றை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன்.

    அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பப்புவா நியூகினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், கொக்கரையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    • சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.
    • ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேட்டி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று நாகர்கோவில் வந்தார். ஒழுகினசேரி 4 வழிச்சாலையில் வைகோவிற்கு குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தேவராஜ், பொருளாளர் பிச்சைமணி, மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி செல்வின், ஆபத்து உதவியாளர் அணி மாநில இணை செயலாளர் சுமேஷ், ஒன்றிய செயலாளர் நீலகண்டன், மாணவரணி அமைப்பாளர் சோனிராஜு, தொண்டரணி துணை அமைப்பாளர் அஸ்வின், மர்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.

    அப்படி சூட்டப்பட்ட இந்த பெயரை மாற்றுகிற விதத்தில் தமிழகம் என்று அழைக்கலாம் என்று எங்கோ இருந்து வந்து அகந்தையின் உச்சக்கட்டத்தில் இந்த மாநிலத்தின் கவர்னர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார்.

    தமிழ்நாடு என்ற பெயரை மாற்றலாம் என்ற யோசனையைச் சொல்வதற்கு இவர் யார்? தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி திமிர்வாதம் பேசுகின்ற இந்த கவர்னர் அகற்றப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும். சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தவறாகக் சொல்லிவிட்டேன் என்று அவர் செல்ல வேண்டும். நான் கவர்னருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவர்னரை பின்னால் இருந்து இயக்குவது சங்பரிவார் சக்திகள், இந்துத்வா சக்திகள் மதவாத சக்திகளுக்கு அந்த அளவு தைரியம் இல்லை. இவரை ஊதுகுழலாக வைத்துக் கொண்டு இந்த கருத்தைக் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.
    • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் ‌‌. அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 3552 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த எழுத்து தேர்வு நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்வுக்காக 12 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.மாவட்டத்தில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்காக காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்வு மையங்களில் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

    எழுத்துத் தேர்வு, உடல் தகுதி எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் இந்த 100 மதிப்பெண்களுக்கு பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வழங்கப்பட உள்ளது.

    • காவல்துறையில் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.
    • இத்தேர்வானது ஓ.எம்.ஆர். சீட் கொண்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் தேர்வு போன்று முழுபாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரித்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை )மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இத்தேர்வானது ஓ.எம்.ஆர். சீட் கொண்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் தேர்வு போன்று முழுபாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது.

    இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் https://forms.gie/bcVCeHCVVwfVtafe9 என்ற Google Form Link -இல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் அல்லது நுழைவுசீட்டு மற்றும் இரண்டு பாஸ்போர்ட்அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள்தேர்வு எழுத அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.

    மாதிரித்தேர்வுகள் தொடர்பான விபரங்களை 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    • சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
    • நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கன்னியாகுமரியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    சி.ஐ.டி.யூ. மாநாடு நடைபெறுவதையொட்டி நாகர்கோவிலில் இன்று மாலை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி நாகர்கோவில் நாகராஜா திடலை சென்றடைகிறது. பின்னர் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ.வின் 15-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நமது சமூகத்தில்அமைதியையும்பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

    குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறி கள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று மத்தியஅரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடி யாக மாற்றம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்.

    நவீன தொழிற்சாலை களில் செயற்கை மூளை, ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய் சொல்கி றார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவதுபோல ஏராளமாக கூறுகிறார்கள்.

    மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வில்லை. கல்வியில், சுகா தாரத்தில் என எல்லா வற்றிலும் தலையிடுகிறார் கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம், மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட் டில் இந்தி திணிப்பு, அதை யொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்ற வை விவாதத்துக்கு வரக்கூ டாது என்று நினைக்கி றார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கி றார்கள். கேரளத்திலும் இதை தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக் கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தி ருந்தார்கள்.

    அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்க விலலை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்கு வரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள் அதை கொடுக்கவில்லை.

    பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்து விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணி யாற்றி இருந்தால் நிரந்தப்ப டுத்துவதாக சொன் னார்கள் செய்யவில்லை. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்துக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்ய வில்லை.

    தொழிற்சங்கம் அமைக் கும் உரிமையே கேள்விக் குள்ளாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் அர சாங்கம் தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளி கள் அவர்க ளது உரி மையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முத லாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலை யிட வேண்டும் என்பது எங்களது ஒரு கோரிக்கை.

    மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்து மதிப்புகள் அவர் கள் போட்டிருக்கும் வரி மிகவும் மோசமானது. சென்னை போன்ற நகரங் களில் தண்ணீர் கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைபப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

    மின்சார சட்டம் 2003-இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன்தர மாட்டேன் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விசயங் கில் அப்படி கட்டாயப்ப டுத்துவார்கள் அது மக்க ளை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசிய மற்றது செய்திருக்க கூடாது.

    அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிட மிருந்து வசூலிக்க கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக இப்போது ரூ.27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அர சாங்கம் சற்று கனிவொடு பரிசீலிக்க வேண்டும். ஏழை மக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    • இவ்விழா வருகிற 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.


    தெய்வத் திருமகள் - கும்கி

    இதில், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.


    வாகை சூடவா

    சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

    • தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நியமனத்தை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி வலியுறுத்தல்

    திருச்சி:

    தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சியின் தலைவர் பூரா.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகள், என்.எல்.சி., ெரயில்வே துறை மற்றும் மருத்துவத் துறைகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாக நியமிக்கப்படுகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இல்லை எனில் தமிழகத்தில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    இங்கு படித்த இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை தமிழகத்தில் ெரயில்வே துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலையில் அமர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஆர்.எஸ். பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். இதில் தமிழக தலைவர்கள் விழித்துக் கொண்டு எதிர்க்கவும் போராடவும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×