search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 176075"

    • மண் சாலையாக உள்ள கல்லூரி நுழைவுவாயிலை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக அமைக்க வேண்டும்.
    • சுதந்திர போராட்ட வீரர் தியாகி சீனிவாசராவ் பெயரை அரசு கலைக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருத்துறைப்பூண்டி கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம் கல்லூரி கிளைத் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணால் தலைமையில் நடைபெற்றது.

    மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஜேபி வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் புதிய புதிய தலைவராக பி.பரசுராமன் செயலாளர் எம்.மணிபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் நடந்து செல்லும் கல்லூரி நுழைவுவாயில் மண் சாலையாக உள்ளது.

    இதனை போர்க்கால அடிப்படையில் தார் சாலையாக அமைத்திட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரியில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்லூரி இயங்கி வருகிறது இதில் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவுகளை உடனடியாக தொடங்க வேண்டும்,சுதந்திர போராட்ட வீரர் தியாகி பி. சீனிவாசராவ் பெயரினை அரசு கலைக்கல்லூரி சூட்ட வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

    மியான்மர் நாட்டில் இன்று 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு நிருபர்களை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அரசை மனித உரிமைகளுக்கான ஐ.நா.மன்றம் வலியுறுத்தியுள்ளது. #Reutersreporters #unhrc
    ஜெனிவா:

    மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

    உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையில், மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரய்ட்டர்ஸ் என்னும் பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

    ரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன்டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய  ரகசியத்தை திருடியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டார்.

    தங்களது நிருபர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை தொடர்பாக கருத்து தெரிவித்த ரய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லர் ‘இன்று மியான்மருக்கும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சோகமான நாள்’ என தெரிவித்துள்ளார்.

    இந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல் வலுத்துவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


    இந்நிலையில்,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு நிருபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு மியான்மர் அரசை  மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உயர் கமிஷனர் மிச்சேல் பச்செலெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விசாரணை முறைகளுக்கான சர்வதேச அளவீடுகளை மீறிய வகையில் இவர்கள் (நிருபர்கள்) தண்டிக்கப்பட்டுள்ளனர். 

    இதன் மூலமாக மியான்மரில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியாது. ஒன்று தங்களை மிதப்படுத்தி கொள்ள வேண்டும். அல்லது, வழக்கை சந்திக்கும் சவாலை ஏற்க வேண்டும் என்னும் தவறான செய்தியை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.  #Reutersreporters #unhrc
    சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். #DonaldTrump #SaudiArabia
    வாஷிங்டன்:

    ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது.

    மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

    இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது, அவர் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.  #DonaldTrump #SaudiArabia #Tamilnews
    மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மூன்று தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    ஆகவே, மத்திய அரசு லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் வழக்கம்போல் நமக்கென்ன என்று இருந்துவிடாமல், அவர்களை அழைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ.645 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழக கால்நடைத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.441 கோடியே 31 லட்சம், கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.41 கோடியே 73 லட்சம், தேசிய கால்நடை இயக்க திட்டங்களில் மத்திய அரசின் பங்காக ரூ.162 கோடியே 42 லட்சம் என மொத்தம் ரூ.645 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்’ என்றார். 
    ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவைக்காக அவசர கதியில் மேட்டூர் அணையை திறக்கக்கூடாது. ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கடந்த 7 ஆண்டுகளாக பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்படுவது, அப்படி திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேருவதில் தடங்கல் ஏற்படுவது, நடவு செய்த பின்னர் போதுமான தண்ணீர் கிடைக்காமல் இருப்பது என காவிரி பாசன பகுதி விவசாயிகள் பல்வேறு நிலைகளில் சோதனைகளை தாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடும். இந்த ஆண்டு தடையின்றி விவசாயம் செய்யலாம் என்று விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் கர்நாடக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் ஆணையம் அமைக்கப்பட்டும் சிக்கல் தான் நீடிக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. கர்நாடக அணையில் இருந்து அதிகஅளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பினால் தடையின்றி நெல் சாகுபடி செய்ய இயலும் என காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் தண்ணீர் வருகிறதே என்ற காரணத்தை வைத்து கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சையை அடுத்த கரையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி: மேட்டூர் அணையில் தண்ணீ்ர் முழு கொள்ளளவை எட்டிய பிறகு திறந்தால் மட்டுமே விவசாயிகள் கவலையின்றி ஒரு போக நெல்சாகுபடி மேற்கொள்ள இயலும். அதை விடுத்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை காரணம் காட்டி அவசர கோலத்தில் திறக்கப்பட்டால் விவசாயிகள் நிலை திண்டாட்டம் தான். எனவே ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

    நாச்சியார்பட்டியை சேர்ந்த விவசாயி திருமாறன்: மேட்டூர் அணையில் குறைந்த பட்சம் 90 அடி அளவுக்கு தண்ணீர் வரட்டும். அதன் பின்னர் விவசாயிகளுக்கு உரிய முறையில் முன்னறிவிப்பு செய்து முதல் மடை முதல் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர வழிவகை செய்து ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்து கொண்டு தண்ணீரை திறந்தால் விவசாயிகளை திரிசங்கு சொர்க்க நிலைக்கு தள்ளிவிடும்.

    மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது. மழை நின்று விட்டால் தண்ணீர் வரத்து குறைந்துவிடும். மதுரைக்கு வந்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே வேலை இல்லை என்று கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர் பெயரை அறிவிக்காத கர்நாடக முதல்-மந்திரி இப்படி சொல்வது எந்த நோக்கத்துக்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டதோ அதை அவமதிப்பது போன்று உள்ளது.

    இன்றைய நிலையில் காவிரியில் கர்நாடகம் உபரிநீரைதான் திறந்து விட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய உரிமை தண்ணீரை பெற்று தமிழக விவசாயிகள் நிம்மதியாக சாகுபடி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எண்ணமாக உள்ளது
    பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.#PMModi #Threat #Congress
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே போலீசார் பீமா கோரேகான் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை சமீபத்தில் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போன்று கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி பவன் கேரா கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பில் எந்தவொரு அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பு என்பது தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றின் வலியை காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை இழந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை நக்சலைட்டுகள் என போலீசார் கூறுகின்றனர்.  மத்திய மந்திரி அத்வாலே அவர்களை தலித்துகள் என கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறுகையில், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் என செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம் என்றார். #PMModi #Threat #Congress
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க. அனுமதி கேட்டது. ஆனால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி. அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் என்பது கண்துடைப்பு வேலை. அந்த கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷனால எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம்.

    அவை தொடங்குவதற்கு முன்பே இது தொடர்பாக பேரவைத் தலைவரிடம் இதனை தெரிவித்தோம். ஆனால் முதல்வர் ஒப்புதல் அளிக்காததால் இதுபற்றி பேச வேண்டாம் என பேரவைத் தலைவர் கூறினார். துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் பேசக்கூடாது என்றால் நாங்கள் ஏன் அவைக்கு வரவேண்டும்? எனவே, வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothuKudiFiring #DMKWalkout
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார். #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident
    தூத்துக்குடி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று தூத்துக்குடி வந்தார். அவர், அங்கு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கி சூடு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களை சுட்டோம் என்று போலீசார் கூறுவதை நம்ப முடியவில்லை.



    அதுபோன்று வன்முறை நடந்து இருந்தால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை படிப்படியாக பின்பற்றி இருப்பார்கள். ஆனால் இங்கு நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி குண்டு பெரும்பாலும் வயிற்றிலும், அதற்கு மேலேயும் பட்டு உள்ளது. இது கலவரத்தை கட்டுப்படுத்தும் முறை அல்ல. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கும் போது, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அங்கு இல்லாதது வினோதமானது. இதனால் கீழ்நிலை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு உள்ளார்கள். இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அல்லது ஐகோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    தூத்துக்குடியில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது. ஆகையால் உடனடியாக போலீசை குறைக்க வேண்டும். பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயம், நிலத்தடி நீர், மக்களுக்கான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டரீதியாக நிலைத்து நிற்காது. அதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

    மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  #SitaramYechury #sitaramyechury #thoothukudiincident 
    டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைய வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரிடம் முதல் மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #Bengaluru #USConsulate #CMKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னர் ஜஸ்டரை குமாரசாமி இன்று சந்தித்தார்.

    தலைநகர் பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் நிச்சயம் அமைய வேண்டும் என குமாரசாமி ஜஸ்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    அப்போது, கர்நாடக அரசு அமெரிக்காவுடன் நல்ல உறவை பேணி வருகிறது. தூதரகம் அமைப்பதற்கு தேவையான இடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட அனைத்து தேவைகளையும் தமது அரசு நிறைவேற்றி தரும்.

    அமெரிக்காவில் ஏராளமான எண்ணிக்கையில் கன்னடர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பதையும், கர்நாடகாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெங்களூருவில் 370க்கு மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் செயல்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

    பெங்களுருவில் அமெரிக்க தூதரகம் உள்பட அனைத்து நாட்டு தூதரகங்களும் அமைக்கப்பட வேண்டும் என குமாரசாமி தனது விருப்பத்தை தெரிவித்தார். #Bengaluru, #USConsulate, #CMKumaraswamy
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று தி.மு.க. மாதிரி சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். #DMKSampleAssembly #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. சார்பில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டது.

    இதற்கு தி.மு.க. சட்ட மன்ற கொறடா சக்கரபாணி தலைமை தாங்கினார். அவருக்கு சட்டமன்ற சபாநாயகர் இருக்கை போன்று மேடையில் தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச்சேர்ந்த எம்.எல். ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சட்டசபையில் வாசிப்பது போல் சக்கரபாணி திருக்குறள் வாசித்தார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் ஒரு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், மக்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யாமல் அலட்சியப்படுத்தியதால்தான் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று சட்டமன்றத்தில் இதுபற்றி முறையாக பேச அனுமதிக்கவில்லை.

    எனவே இன்று மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது என்றார். இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பிறகு மு.க.ஸ்டாலின் மாதிரி சட்டமன்றம் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் பல்வேறு விதத்தில் ரூ.100 கோடி வைப்பு தொகை உள்ளது. அதில் இருந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.

    இந்த தீர்மானத்தை ராமசாமி (காங்கிரஸ்), அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் வழிமொழிந்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கீதாஜீவன்:- 1993-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1995-ல் உற்பத்தி தொடங்கியது.



    நச்சுக்காற்று, சுகாதாரக் கேடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த 22-ந்தேதி சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இப்போராட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.

    ஆனால் திடீரென்று அந்த மக்கள் மீது தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தி 13 உயிரை பறித்து இருக்கிறார்கள். இதற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும்.

    அனிதா ராதாகிருஷ்ணன்:- ஊர்வலம் அமைதியாக நடந்தது. யாரிடமும் ஆயுதம் இல்லை. வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் திட்டமிட்டு அந்த படுகொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய முதல்-அமைச்சர் டி.வி.யில்தான் இதை பார்த்தேன் என்கிறார். சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

    துரைமுருகன், தங்கம் தென்னரசு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்பட பல்வேறு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

    வசந்தகுமார் (காங்):- ஸ்டெர்லைட் ஆலை எங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை என்று மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் புறக்கணித்தன. ஆனால் இதற்கு அனுமதி வழங்கியது இன்றைய அ.தி.மு.க. அரசு. இவ்வளவு பெரிய போராட்டத்தில் பலர் உயிரிழந்த பிறகும் அதுபற்றி தனக்கு தெரியாது என முதல்-அமைச்சர் சொன்னது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.

    கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது. #DMKSampleAssembly #MKStalin
    ×