search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணம்"

    • கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • நிவாரண தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு தரப்பிடம் இருந்து வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆதித்யா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3½ ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிற்கு நிவாரணத் தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு திரைப்படம் இருந்து வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    • சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் நிவாரணம் வழங்க உத்தரவிடபட்டுள்ளது
    • செல்போன் பழுதினை நீக்கவேண்டுமானால் ரூ. 7 ஆயிரத்து 200 தந்தால் தான் பழுதினை நீக்கி தரமுடியும் எனசர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் கூறியுள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் பாண்டியன். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 2ம்ததி சாம்சங் செல்போன் ரூ.15 ஆயிரம் செலுத்தி அமேசான் விற்பனை நிறுவனம் மூலம் வாங்கினார். இந்த செல்போன் பழுது ஏற்பட்டதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம்தேதி பெரம்பலூரில் உள்ள சாம்சாங் செல்போன் கிளை சர்வீஸ் சென்டர் சென்று செல்போனை பழுது நீக்க கோரிக்கை விடுத்தார். அப்போது சர்வீஸ் சென்டர் மேலாளர் செல்போனை பழுதுநீக்க ரூ. 236 ஆகும் என கூறி போனை வாங்கிவைத்துக்கொண்டு பழுதினை சரி செய்து மறுநாளான 13ம்தேதி கொடுத்தார். ஆனால் செல்போனை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு மணிநேரத்தில் மீண்டும் செல்போன் பழுது ஏற்பட்டது.

    இதனால் சர்வீஸ் சென்டர் கிளை மேலாளரிடம் சென்று வக்கீல் பாண்டியன் ஏன் செல்போன் மீண்டும் பழுதாகிவிட்டது. இதனை சரி செய்து தரவேண்டும் என கூறியுள்ளார். அந்த செல்போனை பெற்று பரிசோதனை செய்த கிளை மேலாளர் செல்போனை சரி செய்ய ரூ. 7 ஆயிரத்து 200 தரவேண்டும் என கூறினார். அதற்கு செல்போனுக்கு வாரண்டி உள்ளது, ஆகையால் நீங்கள் இலவசமாக செல்போனை சரி செய்து தரவேண்டும் என வக்கீல் பாண்டியன் கூறியுள்ளார். ஆனால் இலவசமாக சரி செய்யமுடியாது எனவும், வேண்டுமென்றால் எங்களது ஹரியானாவில் உள்ள சாம்சங் இண்டியா எலக்ட்ரானிக்ஸ் மேலாளரிடம் கேட்டு பார்க்கிறேன் என கூறியுள்ளார்

    . பின்னர் செல்போன் பழுதினை நீக்கவேண்டுமானால் ரூ. 7 ஆயிரத்து 200 தந்தால் தான் பழுதினை நீக்கி தரமுடியும் எனசர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் கூறியுள்ளார். இதனால் சர்வீஸ் சென்டரில் செல்போனை சரியாக பழுதுநீக்கி தரவில்லை. மேலும் கூடுதல் பணம் கேட்கின்றனர். எனவே இலவசமாக செல்போனை பழுதுநீக்கி தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வக்கீல் பாண்டியன் ஹரியானாவில் உள்ள சாம்சங் இண்டியா எலக்ட்ரானிக்ஸ் மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் பாதிக்கப்பட்ட பாண்டியனுக்கு எந்தவித பதில் மனு அளிக்காமலும், அலைக்கலைப்பு செய்ததோடு, செல்போனை பழுதுநீக்கி தரவில்லை. செல்போனையும் தரவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த வக்கீல் பாண்டியன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் சேவை குறைபாடு புரிந்த செல்போன் நிறுவனம் மற்றும் சர்வீஸ் சென்டர் கிளை மேலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மனுதாரர் வக்கீல் பாண்டியனுக்கு நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    • கார்த்திகேசன் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

    புதுச்சேரி: 

    காரைக்கால் அருகே நெடுங்காடு கூழ் குடித்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேசன். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகிலுள்ள குடும்பத்தார்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இருந்தும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

    விவரம் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கார்த்திகேசன் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், இரண்டொரு நாளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50,000 வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள கொள்ளிடம், திருமயிலாடி, ஆச்சாள்புரம், வேட்டங்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பானை, சட்டி உள்ளிட்ட மண் பாண்டங்கள் செய்து அதை சுடும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நெடுஞ்சாலைதுறையில் பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவரின் மகன் ஏரோநாட்டிகல் பட்டதாரியான துளசேந்திரன் கூறும்போது,

    மண்பாண்டங்களை பயன்படுத்தி அதில் சமைத்து உண்பதன் மூலம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத் தன்மை உருவாகிறது. நமது பாரம்பரிய தொழிலாக இருந்து வந்த இந்த மண்பாண்ட தொழில் கடந்த 15 ஆணடுகளில் நசிந்து வருகிறது.

    சில்வர் மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் எளிதில் கிடைப்பதாக நினைத்து அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    மண்பானை செய்து, அதனை சூலையில் வைத்து சுடுவதற்கு மூல மூலப் பொருட்களான வைக்கோல், வராட்டி, தென்னை மட்டை போன்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    மழைக்கால நிவாரனமாக ரூ.5000 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இந்த நிவாரணம் போதாத நிலையில் அதை உயர்த்தி 10 ஆயிரமாக வழங்கவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே மண்பாண்ட தொழிலாளர்களிடம் மண்பானை, அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து அதனை அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும்.

    தற்போது தமிழகத்திலேயே எங்களைப் போன்ற மண்பாண்ட தொழிலாளர்கள் 12000 பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள அனைவரையும் கணக்கெ டுப்பு செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.
    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா வேதாரண்யத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் வீரசுந்தரம் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சாமிநாதன் கந்தசாமி, அமைப்பு செயலாளர் வைரக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இணை செயலாளர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் மணவழகன், வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி நுகர்வோர் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    கூட்டத்தில் வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.

    மானங்கொண்டான் ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் 14.11.2022 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • 48,593 விவசாயிகளுக்கு ரூ.50.88 கோடி நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50.88 கோடி நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .

    இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன.

    குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் 14.11.2022 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    மேலும், நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களின் அடிப்படையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533.4630 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40.031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43,92,01,750,50/- வழங்கிடவும், மேலும், கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222.192 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 8562 இடுபொருள் நிவாரணமாக ரூ.6,96,82,473.50/- வழங்கிடவும், என மொத்தம் ரூ.50,88,84,224/-னை 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
    • உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது ;-

    நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி. குறைகளை கேட்டு வந்த கட்சி அல்ல தீர்க்க வந்த கட்சி. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று எல்லோருடைய கனவாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது தான் நாம் தமிழர் கட்சியின் எண்ணம்.

    இன்று நிவாரணம் கேட்டு விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் அரசு உடனடியாக வழங்க வேண்டும். உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும். விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரண வழங்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதில் நிர்வாகிகள் காளிதாசன், காளியம்மாள், காசிராமன், ஜவஹர், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளரும் இளையான்குடி பேரூராட்சி தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைப்பது, தி.மு.க.வின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது, இளையான்குடி யூனியனில் பருவமழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாணவரணி சந்திரசேகர் தொண்டரணி புலிக்குட்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் சாரதி என்ற சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும்.

    சீர்காழி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சீர்காழி அடுத்த பச்சை பெருமா நல்லூரில் பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

    தொடர் மழையால் வேலை வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

    தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடை பெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
    • பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

    முத்தூட் குழும சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் நலத்திட்டம் குறித்து பேசும்போது:-

    முத்தூட் குழுமம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, டயாலிசிஸ், கல்வி உதவி, விதவைகளின் பெண்கள் திருமண உதவி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உதவி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலி, சோலைக்குளம், நெய் குன்னம், நல்ல நாயகிபுரம் கிராமங்களில் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2.13 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தர், மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி, முத்தூட் தஞ்சாவூர் கிளை மேலாளர் வினோத் ரமேஷ், கிளை மேலாளர் அகல்யா, கவுன்சிலர் வசந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாலம் திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.

    • சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவ ட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலு மாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

    கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்க ப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பா டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசே கரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஓஎஸ் மணியன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாமல்லன், திருமாறன், மனோகரன், ஏவி.மணி பார்த்தசாரதி, பேராசிரியர்ஜெயராமன், அஞ்சம்மாள், ரமாமணி, வழக்கறிஞர்கள் தியாகரா ஜன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருவாலி, நாராயணபுரம்,மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில்பா ர்வையிட்டு பாதிப்பு குறித்து விசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    எடமணல், வேட்டங்குடி, அகர வட்டாரம், புதுப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பாதிப்பை பார்வையிட்டு புதுப்பட்டினத்தில் 300 குடும்பங்களுக்கு, அரிசி , சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சீர்காழி பகுதியில் பெய்த44 சென்டிமீ ட்டர் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    தொடர் மழையால் வீடுகள், மீனவர்கள், இரால் குட்டைகள் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.

    நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு பருப்பு,சர்க்கரை,கோதுமை இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும்.

    பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படைகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கியு ள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர் சங்கர்,மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×