என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 182235"

    • பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் நகரசபை தலைவர் வழங்கினார்.
    • 286 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 286 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். இதில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், நகரசபை துணைத் தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.
    • போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 15 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆவின் பாலகம் முதல் அணைமேடு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது.

    மாணவிகளுக்கு 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி ஸ்டீல் பிளாண்ட் வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 10 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு ஆவின் பாலகம் முதல் கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரூ.250-ம் பரிசு வழங்கப்படும். இந்த பரிசுகள் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

    • கரூரில் 490 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
    • அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று வழங்கினார்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் உள்ள 67 அரசு, நகராட்சி, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 4,019 மாணவர்கள், 4,458 மாணவிகள் என மொத்தம் 8,477 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. நேற்று கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 213 மாணவர்களுக்கும், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 131 மாணவர்களுக்கும், பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 146 மாணவிகளுக்கும் என மொத்தம் 490 மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சத்து 9 ஆயிரத்து 32 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:- கடந்த ஆண்டு நமது பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை விட அடுத்த ஆண்டு அதிகமான தேர்ச்சி பெற்றோம் என்ற நிலையை மாணவர்கள் உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் சிறப்போடு வழிநடத்தி கொண்டிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுத்து மாணவர்களுக்கான கல்வி நலனில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி ஒரு அற்புதமான திட்டம், நாட்டுக்கு வழிகாட்டக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டம். ரூ.36 ஆயிரத்து 895 கோடி பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம், இந்த 2 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை பெற்று இருக்கிறது. கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கரூருக்கு ஒரு அரசு வேளாண்மை கல்லூரி அறிவித்து, தற்போது வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் அரவக்குறிச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என இதுபோன்ற தொடர்ச்சியான திட்டங்களோடு சேர்த்து தடுப்பணைகள், கதவணைகள் இன்னும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் வழங்கி கொண்டிருக்கிறார், என்றார்.

    • விருதுநகர் அருகே மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.என்.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி னார். இதில் ராதாகிருஷ்ணன்பள்ளிச் செயலர் டி.ஏ.எஸ். கிருஷ்ணன், உறுப்பினர்கள் ஸ்ரீதரன், வெங்கட்ராமன், திருமலை, மணி, வரதராஜன், தலைமை ஆசிரியர் கண்ணன், தலைமை ஆசிரியை கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன்,திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை வகித்து 208 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

    விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் 74 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ரவி,பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சிற்பி செல்வராஜ், மாணவிகள்,பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கரடிவாவியில் எஸ்.என்.எம்.எல். மேல்நிலை பள்ளியில் 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி வரவேற்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு,ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன், மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி, மற்றும் என்.எஸ்.எஸ்.மாவட்ட அலுவலர் முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிற்பி செல்வராஜ், செம்மிபாளையம் திருமூர்த்தி, கீர்த்தி சுப்பிரமணியம், இளைஞரணி ராஜேஸ்வரன், மற்றும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாமல் மிதி வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும்

    பல்லடம் :

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:- சைக்கிள் என்பது பயணத்திற்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத வாகனம் ஆகும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாமல் மிதி வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மிதி வண்டி பயணம் செய்து கல்வி கற்றேன். அதனால் தான் பொதுவாழ்வில் இன்று உடல் வலுவோடு நான் இருக்கிறேன். அதற்கு மிதி வண்டி ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம். இதன் மூலம் பெட்ரோல், டீசல் செலவை குறைக்கலாம்.தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைய சமுதாயம் சீர்கெடுகிறது. அதனை ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    போதை பொருட்களை விற்றால் அல்லது பயன்படுத்தினால் 1098 என்ற எண்ணிற்கு போன் செய்தால் போதும் அவர்களின் விபரம் வெளியே வராது. அச்சப்பட வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். காரைக்குடி நகர்மன்றத்தலைவர் முத்துதுரை தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழக முதல்வர், அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.விலையில்லா மடிக்கணினி, சீருடைகள், புத்தகங்கள், காலையில் சிற்றுண்டி உள்பட பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் கல்வி கற்பதை மட்டுமே சிந்தித்து வாழ்வில் உயர்நிலைக்கு வர வேண்டும் என்றார்.

    பின்னர் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 14 பள்ளிகளில் படிக்கும் 1700 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கி ள்களை நகர்மன்றத்தலைவர் முத்துதுரை மற்றும் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினர். இதில் சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாதனசேகர் வரவேற்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

    இந்த விழாவில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கனியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 54).

    இவர் ஒற்றைக் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். பெயிண்டராக வேலைபார்க்கும்இவர் இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி இவரது சைக்கிள் பயணத்தின் தொடக்க விழா கன்னியா குமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வக்கீல் ஆர். மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் டென்னிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பய ணம் புறப்பட்ட இவர் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடுத்த மாதம் (செப்டம்பர்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான 15-ந்தேதி சென்றடைகிறார். நாளொன்றுக்கு நூறு கிலோமீட்டர் வீதம் மொத்தம்1500 கிலோமீட்டர் தூரம் இவர் சைக்கிள் பணம் மேற்கொள்ள உள்ளார்.

    • பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியையொட்டி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    எட்டயபுரம்:

    எட்டயபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு ஒட்டுமொத்த தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

    எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமானது எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டினர். பேரூராட்சியை தூய்மையான நகரமாக முன்னெடுப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் 11-ம் வகுப்பு தொடங்கியவுடன் இதனை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகள் தொடங்கி 15 நாட்களே ஆவதால் ஜூலை மாதத்தில் இலவச சைக்கிள் வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எவ்வித குறைபாடுமின்றி தரமான முறையில் சைக்கிள்களை வழங்கவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தபின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×