search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
    • திருச்சி அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை விட்டபோதும் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 3 விக்கெட் கைப்பற்றிய ரஹில் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    சேலம் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    • சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
    • திருச்சி அணி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த சேலம் அணி, அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கோபிநாத் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார். அவர் 5 பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

    திருச்சி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதீக் ரஹ்மான் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்கிறது. 

    • 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன.
    • இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 23-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 53 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தியது.

    இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் 12 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் தலா 8 புள்ளிகளும், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் தலா 6 புள்ளிகளும், திண்டுக்கல் டிராகன்ஸ் 4 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளியும் பெற்றுள்ளன. சேலம் அணி புள்ளி எதுவும் பெறாமல் உள்ளது.

    இன்று நடைபெறும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதுகின்றன. இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    சேலம் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றுள்ளது. இதனால் இன்றாவது முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர் பார்க்கப்படு கிறது. திருச்சி அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார்.
    • மதுரை அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார். மதுரை அணி தரப்பில் கிரண் ஆகாஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, பின்னர் நிதானமாக ஆடியது.

    • திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி , 3 தோல்வி அடைந்துள்ளது.
    • மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

    இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -மதுரை அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி , 3 தோல்வி அடைந்துள்ளது. மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது.

    • எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இது போன்ற வெற்றி சாத்தியமானது.
    • எனது பந்து வீச்சின் தன்மையை மாற்றி வீசினேன்.

    சேலம்:

    டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றியை பெற்றது.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்னே எடுக்க முடிந்தது.

    கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தார். மணிமாறன் சித்தார்த் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். சோனு யாதவ், அலெக்சாண்டர் , அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் கவுசிக் காந்தி 45 பந்தில் 46 ரன்னும் ( 3 பவுண்டரி , 2 சிக்சர் ), ஜெகதீசன் 33 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி ) , சோனு யாதவ் 7 பந்தில் 26 ரன்னும் ( 1 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர். முருகன் அஸ்வின் , பெராரியோ , ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெல்லை, மதுரை ) தோற்று இருந்தது. அதன் பின்னர் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்சை அடுத்தடுத்து வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மதுரை பாந்தர்ஸ் இதே நிலையில் இருந்தாலும் நிகர ரன்ரேட்டில் முன்னிலையில் உள்ளது.

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறும்போது, "வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி (அவுட் பீல்டு) சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் திரண்டு உற்சாகப் படுத்தினர்" என்றார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் கூறியதாவது:-

    நேர்த்தியாக சரியான திசையை நோக்கி வீச வேண்டும் என்று விரும்பினேன். அதை சரியாக செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதிய ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று வேகமான பந்து வீச்சை எதிர்பார்த்தனர்.

    எனது பந்து வீச்சின் தன்மையை மாற்றி வீசினேன். அது விக்கெட் கைப்பற்ற உதவியாக இருந்தது.

    எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இது போன்ற வெற்றி சாத்தியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை தழுவி 'பிளேஆப்' சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் முருகன் கூறும்போது, "நாங்கள் கடுமையாக முயற்சி செய்தாலும் வெற்றிக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு என்ன செய்வது என்பது பற்றி அணியினரிடமும், நிர்வாகத்திடமும் விவாதிக்க முயற்சிப்பேன்" என்றார்.

    இன்று நடைபெறும் 23-வது 'லீக்' ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை அணி 5-வது வெற்றி ஆர்வத்திலும், திருப்பூர் அணி 3-வது வெற்றி ஆர்வத்திலும் உள்ளன.

    • முதலில் விளையாடிய சேலம் அணி 113 ரன்கள் எடுத்தது.
    • சேப்பாக் வீரர் சித்தார்த் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் இன்று தொடங்கின.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.

    அபிஷேக் 23 ரன்களும், முருகன் அஸ்வின் 14 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    இதையடுத்து 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி களம் இறங்கியது. அந்த அணி கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய காந்தி 46 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    சசிதேவ் ஒரு ரன்னுடன் வெளியேற, அதிரடியாக விளையாடிய சோனு யாதவ் 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சேப்பாக் அணி 14.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் அடித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.

    • சேலம் அணியின் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார்.
    • சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் இன்று தொடங்கின.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய சேலம் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார். ஜமால் 6 ரன்னுடன் வெளியேற, அக்சய் சீனிவாசன், டேரில் பெராரியோ ஆகியோர் அடுத்து டக் அவுட்டாகினர்.

    ரவி கார்த்திகேயன் 12 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 23 ரன்களும், முருகன் அஸ்வின் 14 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர். சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. சேப்பாக் வீரர் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    இதையடுத்து 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடி வருகிறது. 

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும் பெற்று உள்ளன.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகளும் , கோவையில் 8 ஆட்டங்களும் நடை பெற்றன.

    இதுவரை 21 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. நெல்லை ராயல் கிங்ஸ் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    மதுரை பாந்தர்ஸ் 4 வெற்றி , ஒரு தோல்வியுடன் 8 புள்ளியும், கோவை கிங்ஸ் 3 வெற்றி, 3 தோல்வி யுடன் 6 புள்ளியும் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும் பெற்று உள்ளன.

    திண்டுக்கல் டிராகன்ஸ் (2 வெற்றி, 4 தோல்வி), திருப்பூர் தமிழன்ஸ் (2 வெற்றி, 3 தோல்வி) அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளி (1 வெற்றி, 4 தோல்வி) பெற்றுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    2 நாள் இடைவெளிக்கு பிறகு சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை ( 19-ந் தேதி ) தொடங்குகிறது. கோவையை போல சேலத்திலும் முதல் முறையாக டி .என். பி எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    சேலத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-முருகன் அஸ்வின் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணி சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், சசிதேவ், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், அலெக்சாண்டர், ஹரிஷ் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    4 ஆட்டத்தில் தோல்வி அடைந்த சேலம் ஸ்பார்டன்ஸ் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலத்தை தரும் என்று அந்த அணி நம்பிக்கையில் இருக்கிறது.

    • திண்டுக்கல் அணி வீரர் விவேக் 61 ரன்கள் குவித்தார்.
    • சேப்பாக் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 44 ரன்கள் அடித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடின.

    டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. அந்த அணி கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார்.

    மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான கவுசிக் காந்தி 44 ரன்கள் குவித்தார். ஜெகதீசன் 31 ரன்கள் அடித்தார். பின்னர் சசிதேவ்-சோனுயாதவ் ஜோடி சேர்ந்தனர். சோனு 26 ரன்கள் அடித்தார். சசிதேவ் 15 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ராஜகோபால் சதீஷ் 8 ரன்னுடன் வெளியேறினார். 9.2 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 138 ரன்கள் அடித்தது.
    • திண்டுக்கல் அணி வீரர் விவேக் 61 ரன்கள் குவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்று வரும்  21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வைத்தியா 2 ரன்னுக்கும், நிஷாந்த் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார். ஹரிகரன் 6 ரன்னுக்கும் மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி களம் இறங்கி விளையாட உள்ளது. 

    • முதலில் விளையாடிய திருப்பூர் அணி 157 ரன்கள் எடுத்திருந்தது.
    • கோவை வீரர் சுரேஷ்குமார் 44 பந்துகளில் 83 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய 20 வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் அரவிந்த் 27 ரன்னுக்கும், ஸ்ரீகாந்த் அனிருத்தா 39 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், ராகேஜா 20 ரன்கள், ராஜ்குமார் 14 ரன்கள் எடுத்து நிலையில் வெளியேறினர். மான் 20 ரன்னும், அஸ்வின் 10 ரன் உடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கோவை அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னுடன் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த சுரேஷ்குமாரும், சாய்சுதர்சனும், அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    44 பந்துகளை எதிர்கொண்ட சுரேஷ்குமார் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 83 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். சாய் சுதர்சன் 41 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை அணி 15.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து கோவை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ×