search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • அஜய் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர்கள் அலெக்சிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • மோதலில் அலெக்சின் மகன், அஜய், அவரது நண்பர்கள் உள்பட மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (45). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அலெக்சின் மகன்களிடம் அஜய் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனை அலெக்ஸ் கண்டித்து அஜய்யை தாக்கினார். இதுகுறித்து அஜய் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர்கள் அலெக்சிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அஜய்க்கு கத்தி வெட்டு விழுந்தது. அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த மோதலில் அலெக்சின் மகன், அஜய், அவரது நண்பர்கள் உள்பட மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    • குச்சியால் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 48), விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் மனைவி அல்லி (42) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ரவி தனக்கு சொந்தமான இடத்தில் தைலமரக்குச்சிகளை கொட்டி வைத்து இருந்தார். இதைப்பார்த்த அல்லி என்னுடைய இடத்தில் ஏன் குச்சிகளை கொட்டி வைத்துள்ளாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் குச்சியால் அடித்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அல்லி மற்றும் ரவி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர்.
    • பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே பஸ் மோதிய விபத்தில் சென்னை கார் கம்பெனி ஊழியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35). இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    இன்று காலை ஊருக்கு வந்திருந்த ஈஸ்வரன் அவரது மனைவி சங்கீதா ( 28) மற்றும் மகன் தஸ்வந்த் (2) ஆகியோருடன் பைக்கில் ஆற்காடு நோக்கி சென்றார். கலவை ரோட்டில் உள்ள கடப்பந்தாங்கல் என்ற இடத்தில் வந்த போது வந்தவாசியில் இருந்து வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஈஸ்வரன், சங்கீதா மற்றும் அவரது மகன் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆற்காடு தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். விபத்து ஏற்பத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடல்களை எடுத்து செல்ல விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தை தவித்து வருகிறது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வேன் மீது கார் மோதியதில் வாலிபர் காயமடைந்தார்.
    • இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, திம்மயம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 24). இவர் நேற்று காலை சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு காரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள தம்பை பகுதியில் அந்த கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வேன் மீது திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி வேனின் பின்புற சக்கரம் உள்ள பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேஷ்குமார் காயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
    • ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளனர். இங்கு நேற்று இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகத்துக்குள் சென்று வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பஸ் டிரைவர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
    • பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி:

    கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போல திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    இதில் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த பஸ் மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்தது. அப்போது பஸ் முன்பக்கத்தில் டிரைவர் சீட்டிற்கு கீழே இருந்த டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சின் டிரைவர் இதனை கவனித்தார். தாறுமாறாக வரும் பஸ் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்பதை கணித்து, பஸ்சை சாலையின் ஓரமாக இயக்கி மெதுவாக சென்றார்.

    இருந்தபோதும் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பஸ், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தின் போது, இடி இடித்தது போல் பலத்த சத்தம் எழுந்தது. இதில் 2 தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    விபத்தில் 2 பஸ்சின் முன்பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்கு இடையே பயணிகளும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    2 பஸ்களிலும் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. மேலும், பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவரை மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், கிரேன், பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

    இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.

    காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
    • இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.

    இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார்.

    ஆல்-ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு தனது அகில்லெஸ் தசைநார் சிதைந்ததால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.


    இந்நிலையில் பிரேஸ்வெல் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு நாளை செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் நீண்டநாள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பையை அவர் தவறவிடுவார்.

    ஐபிஎல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது40). இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நெல்லையில் வேலை பார்த்து வருகிறார்.

    ஆறுமுகநேரி கணேசபுரத்தில் வசிக்கும் தனது சித்தியின் வீட்டிற்கு இசக்கியப்பன் நேற்று சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் செல்போன் வேகமாக சூடாகியுள்ளது. இதனை உணர்ந்த இசக்கியப்பன் அதனை எடுக்க நினைத்துள்ளார்.

    ஆனால் மறு வினாடியே அந்த செல்போன் பட்டாசு வெடித்தது போன்ற ஓசையுடன் வெடித்து விட்டது. இதனால் சட்டையில் தீ பிடித்து எரிந்ததால் இசக்கியப்பன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே ரோட்டில் விழுந்து கவிழ்ந்தது.
    • விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிட்டா என்ற இடத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது.

    ஒரு வளைவில் அந்த பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே ரோட்டில் விழுந்து கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சுக்குள் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சுக்கு அடியில் சிலர் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்தது. விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து கணவன்-மனைவி காயமடைந்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை நேரு பஜார் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி செண்பகதேவி. இருவரும் மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் மாடு குறுக்கே வந்தது. அப்போது இருசக்கர வாகனம் மாடு மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இளையான்குடி தகியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சுகாசினி. இருவரும் காரில் கால் குளம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரோட்டோ ரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

    இதில் சுகாசினி படுகாய மடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பாக்யா திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
    • அல் ரசீது நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பாக்யா (வயது 31). இவர் திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் சாய்னாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, கும்பகோணம் சுவாமி மலையை சேர்ந்த அல் ரசீது (20) என்பவர், தனது நண்பர் முகமது இஷாத் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார். இதில் பாக்கியா, அவரது மகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த வர்கள் 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாக்யா வின் சகோதரர் பாக்கியராஜ் காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • பலத்த காயமடைந்த முகேஷ் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சோ்க்கப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம், பாப்பாகோவில் சமத்துவ புரத்தைச் சோ்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மகன் முகேஷ் (வயது 26).

    நாகையில் உள்ள ஸ்டூடி யோவில் போட்டோ கிராபராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 4-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

    பின்னா் அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் திருப்பூண்டி காரைநகா் அருகே வந்தபோது குறுக்கே வந்த மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த முகேஷ் நாகை அரசு மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

    இங்கு நேற்று முகேஷ் மூளைச்சாவு அடைந்ததாக அவரது பெற்றோரிடம் மருத்து வா்கள் தெரிவித்தனா்.

    மேலும், உடல் உறுப்பு தானம் பற்றியும் குடும்பத்தினரிடம் கலந்தாலோ சிக்கப்பட்டது.

    இதற்கு பெற்றோா் ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து முகேஷின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

    பின்னா் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய ஒதுக்கீட்டின்படி, சிறுநீரகங்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்தி ரிக்கும், கல்லீரல் பெரம்பலூரிலுள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டன.

    ×