search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாளம்"

    • மழையால் தடைபட்ட ஆட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
    • இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

    அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்நிலையில், இந்திய அணி 2.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அசத்தலாக விளையாடினர். அவ்வபோது 6, 4-களை அள்ளி வீசினர்.

    இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

    இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளம் அணிக்கு துவக்க வீரரான ஆசிப் ஷேக் 58 ரன்களை குவித்தார்.
    • இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

     

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார்.
    • வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.

    இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்காத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் வெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.
    • நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர்.

    மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

    அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார்.

    இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் கவுஷல் பூர்டல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி சேர்ந்தனர்.

    இதில், கவுஷல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிம் ஷார்க்கி ஆசிப்புடன் ஜோடி சேர்ந்தார். பிம் ஷார்க்கி இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஆசிப்- ரோகித் பவுதல் விளையாடினர். இதில், ஆசிப் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து விளையாடிய வீரர்களில், ரோகித் 30 ரன்களும், கவுஷல் மல்லா 2 ரன்களும், தீப்பேந்திர சிங் 23 ரன்களும், குல்சன் ஜா 42 ரன்களும், சந்தீப் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    ஆரிப் ஷேக் அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், கரண் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கடைசியாக களத்தில் இருந்த லலித் ராஜ்பான்ஷி பூஜ்ஜியம் ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
    • நேபாளம் அணி 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார். இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

    நேபாளம் அணி முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

    • 17 திரையரங்கங்களின் வாசலில் போலீசார் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
    • ஜானகி இந்தியாவின் மகள் எனும் வசனம் நீக்கப்படும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் புராணங்கள், "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்". இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும். இந்தியாவெங்கும் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில், பல திரைப்படங்கள் வந்து அவை பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன.

    கடந்த வாரம், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்த "ஆதிபுருஷ்" எனும் திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது.

    ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது.

    நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலும், சுற்றுலா தலமான பொகாராவிலும், இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை காரணமாக எல்லா இந்தி திரைப்படங்களுமே தடை செய்யப்பட்டுவிட்டன. 17 திரையரங்கங்களின் வாசலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.

    "ஜானகி இந்தியாவின் மகள்" எனும் வசனம் இந்தியாவிலும், நேபாளத்திலும் இப்படத்திலிருந்து நீக்கப்படும் வரையில் எந்த இந்தி திரைப்படமும் காத்மாண்டு பெருநகரத்தில் திரையிட அனுமதி இல்லை", என மேயர் பாலேந்திர ஷா தெரிவித்தார். இது குறித்த ஷாவின் முகநூல் பதிவிற்கு பரவலான ஆதரவும், ஒரு சிலரின் எதிர்ப்பும் காணப்படுகிறது. மேயரின் உத்தரவை நிறைவேற்றுவதாக கூறிய காத்மாண்டு பெருநகர காவல்துறை தலைவர் ராஜு பாண்டே, இதனை உறுதி செய்வதற்காக திரையரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அதே போன்று "இன்று முதல் அத்திரைப்படம் திரையிட அனுமதியில்லை" என பொகாரா நபர மேயர் தனராஜ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

    சர்ச்சைகள் வலுவடைந்திருக்கும் நிலையில், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா கூறுகையில், "திரைப்படத்தை உருவாக்கியவர்கள், பல வசனங்களில் மாற்றம் செய்வதாக தெரிவித்திருக்கிறார்கள். இவை ஒரு வார காலத்திற்குள் நடைபெற்று திரையரங்கங்களில் திரையிடப்படும்" என்றும் தெரிவித்தார்.

    பிரபலமான டி-சீரிஸ் நிறுவனம், ரெட்ரோஃபைல்ஸ் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள "ஆதிபுருஷ்" திரைப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக இந்தி நடிகர் சாய்ஃப் அலிகானும், இலக்குவனாக சன்னி சிங்கும், மற்றும் அனுமனாக தேவதத்தா நாகேயும் நடித்துள்ளனர். 

    • நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர்.
    • போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடி கண்டு களித்தனர்.

    நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசித்தனர்.


    மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.


    இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.



    • விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
    • நான்கு பேர் பொக்காராவுக்கு சென்று பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் இன்று 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இன்று இரவு வரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்தில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது தெரியவந்துள்ளது.

    விமான விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது" என பிரதமர் மோடி கூறி உள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா (வயது 25), பிஷால் சர்மா (வயது 22), அனில் குமார் ராஜ்பர் (வயது 27), சோனு ஜெய்ஸ்வால் (வயது 35), சஞ்சயா ஜெய்ஸ்வால் என எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த ஐந்து பேரில் நான்கு பேர் இந்தியாவில் இருந்து வெள்ளிக்கிழமை காத்மாண்டு வந்துள்ளனர். பிரபல சுற்றுலா தலமான பொக்காராவுக்கு சென்று பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்ததாக, நேபாளத்தின் சார்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார் ஷா என்பவர் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 'நாங்கள் இந்தியாவில் இருந்து ஒரே வாகனத்தில் வந்தோம். அவர்கள் பசுபதிநாதர் கோவில் அருகில் உள்ள கோசாலையில் தங்கினர். பொகாராவுக்கு புறப்படுவதற்கு முன்பாக தாமெலில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். பொக்காராவில் இருந்து கோரக்பூர் வழியாக இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர்' என்றார்.

    விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் 4 பேர் உத்தர பிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். தூதரகத்தில் இருந்து வரும் தகவலுக்காக இந்திய அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். 

    • விமான விபத்தைத் தொடர்ந்து நாளை ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர்.

    புதுடெல்லி:

    நேபாளத்தில் இன்று 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. நேபாளத்தை உலுக்கி உள்ள இந்த விபத்தைத் தொடர்ந்து நாளை ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

    விமான விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது" என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

    விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    காத்மாண்டு:

    நேபாளத்தில் பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேபாள விமானம், கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையை நோக்கி பாய்ந்து வரும்போது பதிவு செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளனர்

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பற்றி கரும்புகை எழுந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. இன்று மாலை நிலவரப்படி 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

    விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்மா ஒலி தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்
    • இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, சர்மா ஒலி தலைமையிலான அரசு வரைபடம் வெளியிட்டது.

    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், காலாபானி, லிபுலெக், லிம்புயதுரா (இந்திய பகுதிகள்) உள்பட ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு கொண்டு வருவோம். எங்களது கட்சி, தேசத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா - நேபாள உறவுகள் நீண்ட காலமாக சுமூகமாகவே உள்ளது. ஆனால் நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.கே.பி.சர்மா ஒலி பிரதமராக இருந்தபோது அவரது அரசாங்கம் இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது.

    அப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார் சர்மா ஒலி. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் கே.பி.சர்மா ஒலி இவ்விவகாரத்தை மீண்டும் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதே போல் நேபாள காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான ஷேர் பகதூர் தியூபா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறும்போது, ராஜதநதிர முயற்சிகள், பரஸ்பர உறவுகளின் அடிப்படையில் நேபாளத்தின் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

    நேபாளத்துக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் நேபாள பொது தேர்தலின்போது போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுக்காக 200 வாகனங்களை இந்தியா அன்பளிப்பாக நேபாளத்துக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×