என் மலர்
நீங்கள் தேடியது "ஜாமீன்"
- மதுரையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- வீட்டில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.
மதுரை
மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து காசி மணி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இந்த நிலையில் காசிமணி மதுரை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காசிமணி ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர்.
- ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா (21) லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரன், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் 1 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.
மேலும் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில் தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.8 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மதுரை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர்.
இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் மதுரை ஐகோர்்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்கையில், இவர் தமிழ்நாடு பழங்கால கலைப் பொக்கி ஷங்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி மதிப்பிலான நடராஜர் உலோகச் சிலையை தனது வீட்டில் விற்பதற்காக முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுதாரர் சரவணன் 2-வது குற்றவாளி. சிலையை விற்பது தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர் வீட்டில் இருந்ததால் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்பு டையவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் சரவணன் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
- கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கொத்தனார், இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த அதே சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.
- தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
- கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.
இதில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. நீதிபதி தினேஷ்குமார் வர்மா கூறும்போது, மணீஷ் சிசோடியா ஒரு செல்வாக்கு மிக்க மனிதர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் பாதிக்கப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். தற்போது டெல்லி ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கியது.
- உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
திருவனந்தபுரம்:
பெங்களூருவில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் தனது உடல்நலம் பாதித்த தந்தையை பார்ப்பதற்காகவும், கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கி, அவர் கேரளாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கேரளாவுக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது.
- சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் அவ ரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் கள் இருவரும் பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்து இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கைதான போலீசார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப் போது சி.பி.ஐ. வக்கீல் மற்றும் இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் தான் நீதிபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விடும்.
சி.சி.டி.வி. காட்சிகளுக்காக ஒரு சாட்சியை சேர்த்து உள்ளார். எனவே இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தீர்ப்புக்காக இந்த வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
- திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
- திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.
ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
- போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவனந்தபுரம்:
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.
- அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
- 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜாராகவில்லை.
- ராகுல் காந்தி நேரில் ஆஜராக சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
சுல்தான்பூர்:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கர்நாடகா தேர்தலின் போது 2018-ம் ஆண்டு பெங்களூரில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சித்ததாக பா.ஜனதாவை சேர்ந்த விஜய் மிஸ்ரா 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.
பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியதை புகாராக அவர் மனுவில் குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த கருத்தை தெரிவித்தபோது அமித்ஷா பா.ஜனதா தலைவராக இருந்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜாராகவில்லை.
ராகுல் காந்தி இன்று காலை நேரில் ஆஜராக உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தி சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் கோர்ட்டில் இருந்து வெளியேறினார்.
முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த பா.ஜனதா பிரமுகர் விஜய் மிஸ்ரா கூறும்போது, 'பா.ஜனதா நாட்டின் மிகப்பெரிய கட்சி. அதன் அப்போதைய தலைவரை கொலைகாரன் என்று அழைப்பது நியாய மற்றது' என்றார்.
- ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரூசோ உட்பட பல கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென்றும், அப்படி அவர் சரணடைய வில்லையென்றால் அவரை கைது செய்யவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.