search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி"

    • நாற்காலியில் உட்கார வைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்
    • வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அலுவல கத்தில் வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் பொது மக்களை நேரடி யாக சந்தித்து மனுக்களை பெற்றார்.

    ஏராளமானோர் தங்க ளின் புகார் மனுக்களை கொடுக்க வந்த னர். மாற்றுத் திறனாளி ஓருவரும் இன்று மனு கொடுக்க வந்தார். அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுபடை போலீசார் நாற்காலியில் அமரவைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளியான அவர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் மனு கொடுத்துச் சென்றார்.

    • கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
    • பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சுகாசினி தொடங்கி வைத்தார்.

    இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.

    இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிசம்பர் 3ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பள்ளிக்கல்வி குழு நிர்வாகி மார்க்கெட் தங்கவேல், மற்றும் ஜெகதீஷ்,குட்டி பழனிசாமி, நடராஜன்,துணை தலைமை ஆசிரியர் சசிகலா, மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
    • போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பொட்டேட்டோ கேதரிங், கலெக்டிங் தி பால்ஸ், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார்.


    • ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
    • வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).

    இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த சூழலில் உடல் முழுவதும் ஊனமுற்ற மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி மகன் 30 வயது நிரம்பிய பாலசுப்பி ரமணியனுடன் தனியாக ஒரு குடிசை வீட்டில் வருமானம் இன்றி தவித்து வருகிறார்.

    இவர்கள் படும் கஷ்டம் குறித்த வீடியோ நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு கிடைத்தது .

    உடனடியாக தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சிஅலுவலர் தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் துணை இயக்கு னர் சுகாதார பணிகள் தொடர்பு கொண்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவமனைக்கு அரசு செலவில் அழைத்து சென்று மருத்துவ உதவியும்மாற்று திறனாளிகள் நல அலுவலரிடமும் வேண்டிய பொருட்களை உடன் வழங்கவும் 5 மாதமாக நின்று போனமாத உதவித்தொகை வீட்டிற்கே ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளை யும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    திடீரென்று மாவட்ட கலெக்டர்வீட்டிற்கு நேரில் வந்து வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் தகவல் கிடைத்தவுடன் 30 நிமிடத்தில் அனைத்து உதவிகளையும் செய்த கலெக்டர் அருண்தம்பராஜ் நேரில் சென்று அனைத்து உதவிகளையும் செய்தது ஆறுதல் கூறியது அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்ரனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின், மாவட்ட மாற்றுதி றனாளி மாவட்டஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் செய்வகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவல ர்கனகசுந்தரம், சமூக ஆர்வலர் சிவகுமார் மற்றும் சுகதார துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்தி றனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும்.
    • அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி திருக்கோ யிலுக்கு செலுத்தவேண்டிய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் மாற்றுத்தி றனாளி திருமணம் நேற்று நடைபெற்றது.

    தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன்படி நேற்று கும்பகோணம் தாலுக்கா, அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணப்பெண் தேவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த பிரபு என்பவருக்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

    அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோயில் துணை ஆணையர் உமாதேவி மணமக்களுக்கு பட்டுப் புத்தாடைகள், கோயில் பிரசாதங்கள் வழங்கினார்.

    நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை மாற்றுத்திற னாளிகள் தவிர்க்கும் வகையில் கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்க லத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

    நவம்பர் மாதத்தில் 1-ந் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2-ந் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு கண் பார்வை பாதித்த மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியாமல் பள்ளி மாணவி அவதியடைந்தார்.
    • 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று முடநீக்க வல்லுநர் கூறினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. விவசாயி. இவரது மகள் காயத்ரி (வயது 14).

    இவர் நீராவி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலேயே இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. தனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் காயத்ரிக்கும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருவதாக மாணவியின் தந்தை பாரதிராஜா வேதனை தெரிவித்தார்.

    மகளின் எதிர்காலம் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், தலையிட்டு மாற்றுதிறனாளி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்க வல்லுநர் ஜெய்சங்கர் கூறுகையில், காயத்ரிக்கு ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. இதை 30 சதவீத குறைபாடாக கருத முடியும்.

    மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற ஒருவருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அரசு விதிகளை பின்பற்றி சான்றிதழ் வழங்கப்படும். எனவே அரசு விதிகளை மீறி காயத்ரிக்க மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்க இயலாது என்றார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர் சங்க கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

    இதில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை அர்ச்சனாதேவி பங்கேற்று ''விடாமுயற்சி-வெற்றியின் திறவுகோல்'' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் தமக்குள்ள திறமைகளைப் பயனுள்ள வகையில் வெளிகொணருவதற்கான வழிமுறைகளைத் எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் 40 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற அமைப்பாளர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளி மாணவர் சங்க அமைப்பாளர் மதுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் அருண் பாண்டியன் வரவேற்றார். 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஜெயக்குமார் நன்றியு கூறினார்.

    சிறப்பு ெசாற்பொழிவு

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது. இதில் விருந்தினராக விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உதவிப்பேராசிரியர் கயல்விழி பங்கேற்று ''நிகழ்நிலை நெறி முறைகளுக்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் நிகழ்நிலை தளங்களை பயனள்ள முறையில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை செயல்பாடுகளின் மூலம் எடுத்துரைத்தார். முன்னதாக உதவிப்பேராசிரியர் அர்ச்சனாதேவி, வரவேற்றார்.

    துறைத் தலைவர் பெமினா தொடக்கவுரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் அமைந்து ள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஐ.ஓ.சி.எல். & அலிம்கோ மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து ரூ.1 கோடி மதிப்பில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் வழங்குவதற்கு ஏதுவாக அவர்களின் தேவையை மதிப்பீடு செய்ய மருத்துவர்கள், அலிம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தகுதியுடைய, தேவையுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5, மாத வருமானம் ரூ.22 ஆயிரத்து 500-க்குள் உள்ள வருமான சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி 3 சக்கர வாகனம், நடைக்குச்சி, காதொலி கருவி, கண் கண்ணாடிகள், செயற்கை கை, கால்கள் போன்ற எண்ணற்ற உபகரணங்களும் உதவிகளும் பெற்று பயன்பெறலாம்.

    மேலும் இந்த முகாமில் புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID மாற்றுத்திறனாளி அட்டை பதிவு செய்யும் முகாமும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பில் பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளின் குறைகளை களைவதற்காக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவின் பால்உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்காக ரூ.1லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டிலான நிதியுதவியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.99 ஆயிரத்து 999 மதிப்பீட்டிலான பேட்டாரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    அதேபோன்று 2 மாற்றுத்தி றனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 792 மதிப்பீட்டிலான மோட்டர் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் ரூ.19 ஆயிரத்து 584 மதிப்பீட்டிலும், ஒரு மாற்றத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 633 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×