search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது.
    • மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார்.

    2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். கடந்த 15 மாத காலத்தில், இங்கு 1,110 குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆரோக்ய ஸ்ரீ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்னமய்யா மாவட்டம் சிட்டி வேல் மண்டலம் கே.எஸ்.ஆர். அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்போது உடல்நிலை தேறி இன்னும் ஒருவார காலத்தில் வீடு திரும்ப உள்ளார்.

    ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீ பத்மாவதி மல்டி சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இங்கு கட்டப்படுகிறது.

    இந்த மருத்துவமனையில் அவசர காலத்தில் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரவும், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருப்பதி மலைஅடிவாரத்தில் சிற்ப கலாசாலையை பார்வையிட்ட அவர் இங்கு செதுக்கப்படும் சிலைகளை விற்பனை செய்ய கவுன்டர் அமைக்கப்படும் என்றார்.

    மேல்நிலை தொட்டிக்கு வரும் குடிநீர் குழாயில் உள்ள மண் உள்ளிட்ட கழிவுகள் அடித்து வரப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நான்காவது குடிநீர் திட்டத்திற்காக 7.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

    மேல்நிலை தொட்டிக்கு வரும் குடிநீர் குழாயில் உள்ள மண் உள்ளிட்ட கழிவுகள் அடித்து வரப்பட்டன. குடிநீரை வினியோகிக்க முடியாததால் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் குடிநீர் அருகில் தாழ்வாக உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கி உள்ளது.

    • சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார். மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
    • மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

    இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதேபோல் நேற்று காலை சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன மூதாட்டி மற்றும் முதியவர் இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • நாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என தெரிந்ததும் டாக்டர்கள் கூட வேறு வகையில் எங்களிடம் அணுகினர்.
    • பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மருத்துவ வசதிகளை பெற முடியும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து லஹோரி கேட் பகுதி வரை செல்ல கூடியது ஜி.பி. சாலை அல்லது கார்ஸ்டின் பேஸ்டன் சாலை. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படும் இந்த பகுதியில் புது வருட தொடக்க நாளான இன்று முதன்முறையாக சேவா பாரதி என்ற என்.ஜி.ஓ. சார்பில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சுகாதார கிளினிக் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி பாலியல் தொழிலாளியான ஷாலினி (பெயர் மாற்றம்) என்பவர் கூறும்போது, நகரின் பிற பகுதிகளில் உள்ள கிளினிக்குகளுக்கு செல்லும்போது, எதிர்கொள்ளும் சமூக அவலத்தில் இருந்து எதிர்த்து போராட இந்த கிளினிக் உதவும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

    நாங்கள் பாலியல் தொழிலாளர்கள் என தெரிந்ததும் டாக்டர்கள் கூட வேறு வகையில் எங்களிடம் அணுகினர். எங்களை போன்றவர்களுக்கான இந்த கிளினிக் அந்நிலைமையை மாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த கிளினிக்கில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மருத்துவ வசதிகளை பெற முடியும். இதில் 7 மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். சமூகத்தில் தனித்து விடப்பட்ட மற்றும் சுரண்டலுக்கு ஆளான இவர்களின் நலனுக்காக புது வருடத்தின் முதல் நாளில் நாங்கள் இதனை தொடங்கி உள்ளோம் என சேவா பாரதி அமைப்பின் பொது செயலாளர் சுஷில் குப்தா கூறியுள்ளார்.

    • அதிகாலை 4.30 மணிக்கு கார் சூலூர் பகுதியில் வந்தபோது ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் மருதாசலம்.

    இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர் ஹரி(18). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு கோவைக்கு வந்துள்ளார்.

    நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக கார்த்திக் ஸ்ரீபதி தனது நண்பர் ஹரியுடன் காரில் செங்கம்பள்ளிக்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடி முடித்து விட்டு, இன்று அதிகாலையில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    காரை ஹரி ஓட்டினார். கார்த்திக் ஸ்ரீபதி அருகில் அமர்ந்து இருந்தார்.

    அதிகாலை 4.30 மணிக்கு கார் சூலூர் பகுதியில் வந்த போது ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் இருந்த கார்த்திக் ஸ்ரீபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இறந்த கார்த்திக் ஸ்ரீபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு மருத்துவமனையில் புறநோயளிகள் பிரிவு திறக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அறந்தாங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வருவதில் கர்ப்பிணி பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மிகவும் சிரமப்பட்டு வந்த சூழ்நிலையில், முதலமைச்சர் புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவு தொடங்கிட உத்தரவிட்டார். அதனடிப்படையில் டாக்டர; முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவரும் நேரமும் மிச்சமாகும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவின் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாக தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் தெரிவித்தன.
    • கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ராஜபாளையம்

    அரசு மகப்பேறு மருத்து வமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் இரு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மகப்பேறு சிகிச்சை யின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லக்சயா திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து நேஷனல் ஹெல்த் அத்தாரிட்டி சார்பில் தேசிய தர சான்றிதழ் வழங்கப்படு கிறது.

    இந்த ஆய்வு குறித்து தேசிய தர மதிப்பீட்டு குழு வினர்களான டாக்டர்கள் பரீத் உத்தின், ஜேயெஸ் பட்டேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமாக மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார கிரா மப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர்ரக சிகிச்சை பெறுகின்றனர்.

    ஆய்வு முடிவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறந்த மதிப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
    • மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரைகடக்க உள்ளதால், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரைகடக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவேணடும், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
    • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம் வரவேற்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.

    மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் வெற்றிக்குமரன், கோட்டைக்குமார், ஹீமா யூன் கபீர், சாட்டை துரை முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் செயசீலன், ராவணன் சுரேஷ், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மாநில மருத்துவ பாசறை ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராமசெயம் உள்பட மாநில, மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளஞ்சியமங்களம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சாரா ராமு நன்றி கூறினார்.

    • பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.
    • மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பரமக்குடி,

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி மகன் அஜித் குமார் (வயது24).

    இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.

    காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டிருந்தார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழா நடந்தது.
    • கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனை, கண் மருத்துவப்பிரிவு. இணைந்து உலக கண் பார்வை தின விழாவை நடத்தியது.

    செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை பொறுப்பு மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுரேஷ், சீனிவாசன், மேகலா, அருண், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர், தலைமை கண் மருத்துவர் பொன்னுசாமி, கண்களை பாதுகாப்பது, கண்ணில் ஏற்படும் கண்நோய்கள், அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயினால் ஏற்படும் பார்வை இழப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கண் மருத்துவர் நதியா குழந்தை பிறந்தவுடன் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, கண் புரை அறுவை சிகிச்சைக்குப்பின் கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் வெளிநோயாளிகள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கலந்துகொண்டனர். முதுநிலை கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ், கண் மருத்துவ உதவியாளர் பிரேமா ஆகியோர் நன்றி கூறினர்.

    • அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.79.70 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது
    • நிதி அனுமதி பெறுவதற்கான கருத்துரு அனுப்பி வைப்பு

    திருச்சி

    திருச்சி அரசு மருத்துவ மனையில் பொது மருத்துவம், இருதயவியல், குழந்தைகள் நலப்பிரிவு, மூளை நரம்பி யல், சிறுநீரகத்துறை, மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்ைட பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, மனநலப்பிரிவு, ஒட்டுறுப்பு பிரிவு, குடல்நோய் சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அதிநவீன சிகிச்சை பிரிவு, விபத்து அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 4,500 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள் நோயாளிகளாக 1,200 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நோயாளிகளின் வசதிக்காக சி.டி,ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்ேகன், அல்ட்ரா ஸ்கேன், வயிறு சம்பந்த ப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன ஸ்கேன் வசதிகள் உள்ளது.

    மேலும் இந்த மருத்துவமனையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக இருதயவியல், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, புற்று ேநாய் கட்டி அறுைவ சிகிச்சை, உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் வெற்றி கரமாக நடத்தப்படுகிறது.

    இதில் தினமும் ஆயிரக்கண க்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்வதால் நோயாளி களின் குடும்ப உறுப்பி னர்கள் மற்றும் உறவின ர்கள் தங்குவதற்கு இடமி ல்லாததால் தவித்து வருகி ன்றனர்.

    இதற்கிடையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு மற்றும் பகலில் தங்குவதற்கு இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்து வமனை டீன் நேருவிடம் இடவசதி குறித்து கேட்டறி ந்தார்.

    அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இடவசதி குறித்து டீன் நேரு கள ஆய்வு செய்து இது குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து வார்டு எண்.26-க்குட்பட்ட புத்தூர் ஈவெரா சாலை, அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி களின் உறவினர்கள் தங்குவதற்காக தங்கும் இடம் கட்டும் பணிக்காக ரூ.79.70 லட்சத்திற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

    இந்த திட்ட மதிப்பீட்டு தொகை குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் நகராட்சி நிர்வாக இய க்குநருக்கு உரிய நிதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து திருச்சி மாநகராட்சியல் கடந்த 29-ந்தேதி நடத்த சாதாரண கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான உரிய நிதி அனுமதி பெறுவதற்கான கருத்துரு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து டீன் நேரு கூறுகையில்:-

    தாய், சேய் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவி னர்கள் தங்குவதற்காக அதன் அருகில் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. அது போல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கி ன்றனர்.

    இதில் நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓய்வுக்காக பழைய கட்டிடம் அருகே தீவிர சிகிச்சை வார்டு இருந்த இடம் அருகே சுமார் 3,500 சதுர அடியில் புதிய ஓய்வறை கட்டப்பட உள்ளது என்றார். 

    ×