search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுமியை மீட்ட வாலிபருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பது மகன் விஜயகுமார் (வயது24).

    இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜயகுமார் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு பழைய குற்றாலத்திற்கு சென்றார்.

    அங்கு காரை நிறுத்திவிட்டு விஜயகுமார் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹரிணி என்ற 4 வயது சிறுமி திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 50 அடி பள்ளத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தார்.

    அதைப் பார்த்த விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், கருங்கல் பாறை வழியாக 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார்.

    குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

    தன்னுடைய உயிரை பொருட்படுத்தாத 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் விஜயகுமாருக்கு பொது மக்களின் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

    தனது உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய அசாத்திய இளைஞர் விஜயகுமாரின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    • டுவிட்டரில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் பயனாளர்கள் புகார் அளித்தனர்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கணக்குகள் இயங்கவில்லை.

    வாஷிங்டன்:

    உலகின் முன்னணி தகவல் தொடர்பு வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தினார்.

    எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்பு நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முதல் கட்டமாக ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அடுத்து டுவிட்டர் அலுவலகத்தில் இருக்கைகள் மற்றும் ஓய்வு அறைகள் மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் டுவிட்டர் செயல்பாடு திடீரென முடங்கியது. இதற்கு எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    அதன்பின்பு இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது என எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை டுவிட்டரின் தகவல் பரிமாற்றம் தடைபட்டது. இப்போது 3-வது முறையாக நேற்று மீண்டும் டுவிட்டர் செயல்பாடு முடங்கியது.

    அமெரிக்காவில் நேற்று இரவு முதல் இந்த நிலை ஏற்பட்டது. பல பயன்பாட்டாளர்களின் கணக்குகள் செயல்படவில்லை.

    இது தொடர்பாக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் புகார் அளித்தனர். அதில் தங்கள் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றும், டுவிட்டர் தளம் இயங்கவில்லை எனவும் கூறினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் டுவிட்டர் மீண்டும் இயங்க தொடங்கியது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரம் சிலர் டுவிட்டரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டனர்.

    • டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என பயனர்களிடம் எலான் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தினார்.
    • கருத்துக் கணிப்பில் 57.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பதில் அளித்தனர்.

    டுவிட்டர் நிறுத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை ஏற்க தகுதியான நபரை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். மேலும் இந்த பொறுப்பிற்குரிய நபர் தேர்வானதும், தான் பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்க முட்டாள்தனமான நபரை தேடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக டுவிட்டர் தலைவர் பொறுப்பில் தான், தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார். சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்தனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்தனர். மீதமுள்ளவர்கள் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பதில் அளித்து இருந்தனர்.

    கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் டுவிட்டர் சிஇஒ பதவியை ராஜினாமா செய்வது பற்றி எலான் மஸ்க் கருத்து தெரிவித்தார். அதில், "இந்த பணியில் சேர, முட்டாள்தனமான நபரை நான் தேடி முடித்ததும் சிஇஒ பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து விடுகிறேன். அதன் பின் மென்பொருள் மற்றும் சர்வெர் குழுக்களை மட்டும் நிர்வகிக்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    "கேள்வி சிஇஒ-வை கண்டுபிடிப்பது இல்லை, மாறாக டுவிட்டர் தளத்தை லைவாக வைத்துக் கொள்ளும் சிஇஒ-வை கண்டுபிடிப்பது தான்," என எலான மஸ்க் மேலும் தெரிவித்தார். முன்னதாக எலான் மஸ்க் வெளியிட்ட மற்றொரு பதிவில், "நீங்கள் விரும்புவதில் மிகவும் கவனமாக இருங்கள், ஏனெனில் உங்களுக்கு அது கிடைக்கவும் செய்யும்," என குறிப்பிட்டு இருந்தார். 

    • டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார்.
    • 1.7 கோடி பேர் பங்கேற்ற கருத்து கணிப்பில் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்ற அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

    மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதற்கிடையே டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் தான் தொடர வேண்டுமா என்று டுவிட்டரில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு நடத்தினார். 1.7 கோடி பேர் பங்கேற்ற இந்த கருத்து கணிப்பில் அவர் பதவி விலக வேண்டும் என்று 57.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 42.5 சதவீதம் பேர் எலான் மஸ்க், பதவியில் தொடர விருப்பம் தெரிவித்தனர்.

    பெரும்பாலானோர், பதவி விலக வேண்டும் என்று தெரிவித்ததால் அதை ஏற்று எலான் மஸ்க், பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விரைவில் ராஜினாமா செய்வேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாள்தனமான நபரை தேடிப்பிடித்து விட்டு ராஜினாமா செய்வேன். அதன் பிறகு மென்பொருள், சர்வர் பணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன் என்று கூறி உள்ளார்.

    இதுகுறித்து எலான் மஸ்க்கை பின் தொடர்பவர்கள் கூறும்போது, 'தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்துவிட்டு எலான் மஸ்க் இந்த கருத்து கணிப்பை நடத்தியது போல தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

    • டுவிட்டர் பயனர்களிடம், தான் அந்நிறுவன தலைவர் பதவியில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார்.
    • 12 மணி நேரங்கள் நீடித்த கருத்துக் கணிப்பு இந்திய நேரப்படி நேற்று மாலை 4.50 மணிக்கு நிறைவு பெற்றது.

    டுவிட்டர் பயன்படுத்தி வருவோரிடம், தான் டுவிட்டர் தலைவராக பொறுப்பில் தொடர வேண்டுமா எனும் கேள்வியை எலான் மஸ்க் கருத்துக் கணிப்பாக கேட்டிருந்தார். சுமார் 1.7 கோடி பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். மீதமுள்ள 42 சதவீதம் பேர் எலான் மஸ்க் டுவிட்டர் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் என பதில் அளித்துள்ளனர்.

    திங்கள் கிழமை அன்று கருத்துக் கணிப்பை துவங்கிய எலான் மஸ்க், 12 மணி நேரங்கள் லைவில் வைத்திருந்தார். இதில் 57.5 சதவீத டுவிட்டர் பயனர்கள், எலான் மஸ்க் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என பதில் அளித்துள்ளனர். அக்டோபர் மாதத்தில் டுவிட்டர் நிறுவன தலைவராக எலான் மஸ்க் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதில் இருந்து, டுவிட்டர் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

    இதோடு டுவிட்டர் நிறுவன விதிகளில் பெருமளவு மாற்றங்களை செய்தார். டுவிட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் குறித்து பயனர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை தொடர்ந்து இது போன்ற வழிமுறையை இதுவரை அமலுக்கு கொண்டு வராதததற்கு மன்னிப்பு கோரி இருந்தார். டுவிட்டர் தலைவர் பதவியில் நீடிப்பது குறித்த கருத்துக் கணிப்பு அடங்கிய பதிவில், எலான் மஸ்க் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

    தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    • டுவிட்டர் சி.இ.ஓ.வாக வேறு ஒருவரை நியமிப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
    • கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் இத்தகைய செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளெமிங் தெரிவித்திருந்தார்.

    எலான் மஸ்க் தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் 2 கோடியே 20 லட்சம் பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.29,743 கோடி) கடந்த 3 நாட்களாக விற்றது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவரும் எலான் மஸ்க், தொடர்ச்சியாக டுவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்தார். டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 'டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?' என ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தக் கேள்விக்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் 'ஆம்' என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் 'இல்லை' என்பதையும் கிளிக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தளத்தில் ஏராள மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்.
    • முதற்கட்டமாக டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் தற்போது முக்கிய முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    எலான் மஸ்க் தனது டுவிட்டர் தளத்தில் பயனர்களிடம், தான் டுவிட்டர் நிறுவன தலைவராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியை கருத்துக்கணிப்பாக பதிவிட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி பயனர் விருப்பத்திற்கு செவி சாய்ப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியுடன் நிறைவு பெற இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து கடந்த சில மாதங்களில் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.

    ஆயிரக்கணக்கான டுவிட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததில் துவங்கி, டுவிட்டர் புளூ சந்தாவில் ஏராள மாற்றங்கள், நீண்ட காலமாக முடக்கப்பட்டு இருந்த, சர்ச்சைக்குரிய அக்கவுண்ட்களை மீண்டும் டுவிட்டரில் அனுமதித்தது என தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுப்பதில் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஏற்கனவே டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றுவதில் விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    தற்போது டெஸ்லா இன்க், ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி, நியூராலின்க், மஸ்க் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பதவி வகித்து வருகிறார். விளம்பரதாரர்கள் தளத்தை விட்டு விலகுவது, வருவாயில் தொடர்ந்து சரிவு நிலை போன்ற காரணங்களால் எலான் மஸ்க் தொடர்ந்து வருவாயை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். எனினும், நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    முன்னதாக மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கண்க்குகளை அந்நிறுவனம் முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதன் பேரில் முடக்கப்பட்ட அக்கவுண்ட்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டது. 

    • அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.
    • இது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது என்றார் ஐ.நாவின் தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அதேசமயம், எலான் மஸ்க்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல. சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் ஆகும். மேலும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும் என தெரிவித்தார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா, டுவிட்டர் நிறுவனம் ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    • 'புளூ டிக்' வசதியை பெற மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார்.
    • டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின.

    சான்பிரான்சிஸ்கோ :

    டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் 'புளூ டிக்' வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.659) கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் எலான் மஸ்க் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதற்கிடையில் 'புளூ டிக்' வசதியை பெறுவதற்கு எலான் மஸ்க் கட்டணத்தை அறிவித்ததும் டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின. இதன் காரணமாக டுவிட்டரில் 'புளூ டிக்' வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் டுவிட்டரில் மீண்டும் 'புளூ டிக்' வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வணிக கணக்குகளுக்கான சரிபார்ப்பு தொடங்கும் எனவும், அதன் பின்னர் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்ப்பு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
    • நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை எலான் மஸ்க் படுக்கைகளாக மாற்றி உள்ளார்.

    நியூயார்க்:

    டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய தொழில் அதிபர் எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

    குறிப்பாக நிறுவன ஊழியர்கள் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து டுவிட்டரில் புளு டிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

    நிறுவனத்தில் அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். இதில் நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை அவர் படுக்கைகளாக மாற்றி உள்ளார்.

    இரட்டை சோபாக்கள் ஒற்றை படுக்கையாக மாறி உள்ளது. அவையும் நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாற்றங்கள் மற்றும் இருக்கைகள் படுக்கையான படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடும் பணி செய்யும் ஊழியர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த படங்கள் வைரலானதை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகர அதிகாரிகள் வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் ஓய்வறைகள் கட்டியது ஏன்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
    • டொனால்டு டிரம்பை டுவிட்டரில் சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

    தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர்.

    டொனால்டு டிரம்பை சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 48.2 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

    • டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
    • ‘டுவிட்டர்’ அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும்

    நியூயார்க் :

    உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

    டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார். டுவிட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கையில் மாறுதல்களை செய்தார். ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது.

    இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக்கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை 'கெடு' விதித்தார்.

    'கெடு' முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கொத்து கொத்தாக விலகி வருகிறார்கள். டுவிட்டரிலேயே 'குட் பை' எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்குக்கு ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க், ''சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் நான் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்'' என்று பதில் அளித்துள்ளார்.

    டுவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்தார்.

    'கெடு' முடிந்தபோது, முக்கியமான ஊழியர்களாக கருதப்பட்ட சிலருடன் எலான் மஸ்க் அவசர ஆலோசனை நடத்தினார். சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் சிலர் நேரடியாகவும், வேறு சிலர் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர். அவர்களை தக்கவைக்க முயற்சி நடந்தது.

    ''எப்படி வெற்றி பெறுவது என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புகிறவர்கள் மட்டும் என்னுடன் சேருங்கள்'' என்றும் எலான் மஸ்க் கூறினார்.

    இதற்கிடையே, உலகம் முழுவதும் 'டுவிட்டர்' அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ×