search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    • சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்களுடன் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர்.
    • விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.

    மும்பை:

    நாட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வெங்காய சந்தைகளில் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள லசல்காவ் சந்தை இந்திய அளவில் பெரிய வெங்காய சந்தையாகும்.

    மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இதுவரை தங்களது கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து நாசிக் மாவட்ட சந்தைகளில் வெங்காய ஏலம் நேற்று முன்தினம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.

    வியாபாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கப்பட்டு சில்லறை கடைகளில் விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாசிக் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து விவசாய விளைபொருள் சந்தை குழுக்களுக்கு (ஏ.பி.எம்.சி) உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    இதுபற்றி நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரி அப்துல் சத்தார் கூறுகையில், "20-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் மற்றும் தரகர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதன் காரணமாக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    • 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
    • மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன் பிடிக்க சென்றபோது 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர்களை சிங்கள கடற்படையிர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதேபோல் புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் சென்ற 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 பேரையும் வருகிற 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். வாழ்வாதாரம் இழந்த ஏராளமானோர் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று வேலைக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.இதில், 50-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படாததாலும், இயற்கை சீற்றங்களினாலும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று துவங்கி உள்ளனர்.

    இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அத்துடன் பல கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடலில் சூறைக்காற்று வீசியதால் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு தடை, ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு உரிய விலை தராததை கண்டித்து வேலை நிறுத்தம் உள்ளிட்டவைகளால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    12 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
    • கணினி உதவியாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி, கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற விதிகளை உடனே வெளியிட வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், அனைத்து நிலை பதிவு உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்,

    ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ள ப்படும் ஒழுங்கு நடவடிக்கை களை கைவிட வேண்டும், அரசாணை எண் 54 திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வ தாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வராததால் அன்றாட ஊராட்சி ஒன்றிய பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலும் அலுவல ர்கள்,ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • அரியலூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது
    • அலுவலகங்கள் காலியாக கிடந்ததால், பணிகள் பெரும்பாலும் முடங்கின

    அரியலூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிப்புரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் கணினி உதவியாளர் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரியகாலத்தில் வழங்க வேண்டும்ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் அரியலூர், திருமானூர், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் 80 சதவீத பணியாளர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் காலியாக கிடந்தது. பணிகள் பெரும்பாலும் முடங்கின.

    • ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
    • அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழி யர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் என 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:-

    16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து வட்டாரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. 19-ம் தேதி மறியல் போராட்டம், 22-ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சிதுறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்படும். ஊரக வளர்ச்சிதுறை போராட்டம் காரணமாக ஊராட்சி பகுதிகளில் குடிநீர், 100 நாள் திட்டப் பணிகள், அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினசரி ரூ .440 சம்பளம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
    • ஒப்பந்த அடிப்படையில் 181 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    பல்லடம்:'

    பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36, ஒப்பந்த அடிப்படையில் 181 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.இதற்கிடையே கடந்த மாதம் சம்பளம் சரியாக வழங்காததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் அடிப்படையில் தினசரி ரூ .440 சம்பளம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தநிலையில் இந்த மாதம் ரூ.420 மட்டுமே வழங்கப்பட்டதாகவும்,, 20 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதாகவும், உடனடியாக ஒப்பந்த சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களுடன் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.போராட்டத்தையொட்டி பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தரவில்லை என கூறப்படுகிறது.
    • கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்று வரும்போது விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரக மீன்கள் கிடைக்கும். டன் கணக்கில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடலுக்கு சென்று வந்த செலவுக்குகூட போதவில்லை. எனவே விலையை உயர்த்தி தரக்கோரி மீனவர்கள் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் நஷ்டம் ஏற்படுவதாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (2-ந் தேதி) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் அங்கு குறைந்த அளவில் மீன்களை கொள்முதல் செய்கிறது. ராமேசுவரத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ காரல் மீன் ரூ.40-க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது அதனை ரூ.20-க்கு கேட்கின்றனர். சூடை மீனும் ரூ.20 ஆக குறைந்துள்ளது.

    சங்காயம் வகை மீன்கள் ரூ.23-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.17-க்கு கேட்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ரக மீன்கள் குறைந்த விலைக்கு கேட்கப்படுவதால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடலுக்கு சென்றும் போதிய வருமானம் இல்லை. இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    விசைப்படகு மீனவர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டு படகு மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.

    • மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை.
    • தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36, ஒப்பந்த அடிப்படையில் 181 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பல கட்டங்களாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி, பல்லடம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அனைவரும் ஒன்றாக கூடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

    இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

    மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் கொடுக்கும் சம்பளத்தையும் சரியாக தருவதில்லை. எனவே இதனை கண்டித்து வேலைநிறுத்தம் செய்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கின.

    தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 145 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினசரி கூலியாக ரூ.440 வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.540, கோயம்புத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ. 570 வழங்கப்படுகிறது. அதுபோல் கூலி வழங்க வேண்டும். கூலியை சரியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை தாராபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள நகராட்சிகள் கூடுதல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக வாகனங்களில் சென்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. 

    • அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    • போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி துப்புரவுப் பணியாளா்கள் 4-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதன் ஒரு பகுதியாக ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா். ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனா். அவர்களின் போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது.
    • என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு சமைத்து சாப்பிட்டனர்.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனைத்தொடர்ந்து இன்று 8-வது நாளாக ஜீவா ஒப்பத தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 7-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×