search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைப்பு"

    • தமிழ்நாடு அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சேர்நதவர்களுக்கு புதிய நலத் திட்டங்களை நடை முறைப்படுத்த வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்குதல் போன்ற புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நடத்திய திடீர் சோதனையில் 46 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1998-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து உள்ளாட்சிகளில் ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த 2000-ம் ஆண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரியில் பிளாஸ்டிக் பைகளில் பச்சை தேயிலை நிரப்புவதை குறைக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தென்னை நாறில் இருந்து சாக்குப்பைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதை முழுமையாக மகளிர் சுய உதவிக்குழுவால் செயல்படுத்த முடியவில்லை.

    மேலும் தேயிலைத்தூள் நிரப்பும் பைகளின் உள்பகுதியில் பிளாஸ்டிக் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு, தற்போது துணிப்பைகளில் தேயிலைத்தூள் பேக்கிங் செய்யப்படுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடுகாணி, எருமாடு, கக்கனல்லா, பாட்டவயல், குஞ்சப்பனை, பர்லியார், முள்ளி ஆகிய சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பெற்று, அவர்களிடம் துணிப்பைகள் வழங்கப்பட்டது. நாளடைவில் துணிப்பை வழங்குவது குறைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள் மாவட்ட அரசிதழில் கடந்த மே மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் புகாரின் பேரில், ஊட்டி நகரில் 2 ஓட்டல்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.55 ஆயிரம் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவிலான சிறப்பு கண்காணிப்புக்குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் கலால்துறை தாசில்தார், ஊட்டி தாசில்தார், நகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை அதிகாரி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அடங்கி உள்ளனர். இந்த சிறப்பு கண்காணிப்புக்குழு அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். மார்க்கெட்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் 51 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என்பது குறித்து பிளாஸ்டிக் தடிமானம் கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோட்டிங் போடப்பட்ட பேப்பர்கள் உள்ளிட்டவை 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுபோல் கீழ்குந்தா பேருராட்சிக்குட்பட்ட மஞ்சூர் பஜாரில் அமைந்துள்ள அனைத்து வணிக வளாகங் களில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் குந்தா வட்ட வழங்கல் அலுவலர் ஷிராஜ் நிஷா முன்னிலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் 2 கிலோ பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3700 அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடைக் காரர்களிடம் எச்சரித்த செயல் அலுவலர் ரவிக்குமார், இனியும் பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்வது, அடுத்த முறை சோதனையில் தெரிய வந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.

    குன்னூர் பெட் போர்டு பகுதியில் உள்ள 5 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்தப்படுகிறதா? என்று நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ரகுநந்தன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மொத்த விற்பனை கடை மற்றும் 4 கடைகளில் சுமார் 34 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த 5 கடை களுக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மொத்த விற்பனை துணி கடைக்குமட்டும் 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதை வரவேற்கிறோம். இதன் மூலம் வனவிலங்குகள், கால்நடைகள், பறவைகள் பாதுகாக்கப்படும். அதிக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தற்போது பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறியும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கண்டறிய பல்வேறு அரசு துறைகள் அடங்கிய ஒரு குழு மாவட்ட அளவில் அமைக்க வேண்டும். அப்போது தான் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முழுமையாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகு அதனை கட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இளைஞர்களின் முயற்சியால் மூங்கில் கழிகளை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், இளைஞர்களை பாராட்டினர்.

    சிதம்பரம் அருகே ஜெயங்கொண்ட பட்டிணம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் ஜெயங்கொண்ட பட்டிணத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஜெயங்கொண்ட பட்டிணத்திற்கும் அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது.

    அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம், கீழக்குண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத்தான் ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கு செல்ல முடியும். மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். அதுமட்டுமின்றி அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாது.

    எனவே ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும், அக்கரை ஜெயங்கொண்ட பட்டிணத்துக்கும் இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.

    அந்த தரைப்பாலத்தை கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 3 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தினர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த தரைப்பாலத்தை வெள்ளம் அடித்துச்சென்றது. அதன்பிறகு அங்கு பாலம் கட்டப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆற்றில் இறங்கிதான் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் சென்று வருகிறார்கள்.

    இது ஒருபுறமிருக்க ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அந்த முதலைகளும் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையும் மீறி அவர்கள் வேறு வழியின்றி தினமும் ஆபத்தான நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி செல்கிறார்கள்.

    பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நாட்கள் உருண்டோடி செல்கிறதே தவிர, அதில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கு ஒரு முடிவு கட்டவும், தற்காலிகமாக 3 கிராம மக்கள் அச்சமின்றி கொள்ளிடம் ஆறு வழியாக செல்லவும் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆலோசித்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மூங்கில் கழிகளை கொண்டு தற்காலிக பாலம் கட்ட முடிவு செய்தனர். அதற்காக இளைஞர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் வசூலானது.

    இந்த பணத்தை வைத்துக்கொண்டு இளைஞர்கள், கொள்ளிடம் ஆற்றில் பழைய தரைப்பாலம் இருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பினர். அதன்மேல் மூங்கில் கழிகளால் பாலம் கட்டும் பணி 2 நாட்களாக நடைபெற்றது. இந்த பணியை தொழிலாளர்கள் செய்தனர். பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. 3 கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலத்தின் வழியாக சென்று வருகிறார்கள். இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மூங்கில் பாலம் அமைத்ததால் மகிழ்ச்சி அடைந்த 3 கிராம மக்கள், அவர்களை வெகுவாக பாராட்டினர். 
    வேலூர் விமான நிலையத்தில் கட்டிடங்கள் அமைப் பது தொடர்பாக டெல்லி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    வேலூர்:

    மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவ தும் பயனற்ற நிலையில் உள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 100 விமான நிலையங்களை மத்திய விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் குழுவினர் ஆய்வு செய்த னர். தமிழகத்தில் வேலூர் மற்றும் ஓசூர், நெய்வேலியில் இருந்து புதிதாக சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப் பட்டது.

    அதன்படி வேலூரில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு, திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக் கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து வேலூர் விமான நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை தொடங்க தமிழக அரசும் தடையில்லா அனுமதி வழங்கியது.

    அதைத்தொடர்ந்து தென் மண்டல விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் வேலூர் அப்துல்லா புரத்தில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். விமான ஓடுதள பாதைக்கு கூடுதலாக நிலங்கள் தேவைப்படும் என்று அவர்கள், மாவட்ட நிர்வாகத் திடம் தெரிவித் தனர்.

    இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செங்கோட்டையன் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள புறம்போக்கு நிலங் களை கையகப்படுத் துவது குறித்து ஆய்வு மேற்கொண் டனர். தொடர்ந்து கலெக்டர் ராமன் 55 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

    அதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து டெல்லி மத்திய விமான போக்குவரத்து ஆணையரகத்தின் நிலம் அளவீடு மற்றும் தொழில் நுட்பக்குழுவை சேர்ந்த 3 பேர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் சிக்னல் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறைகள், ஓட்டல்கள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை குறித்தும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், மலைப்பகுதிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்றவை விமானங்கள் தரையிறங்கும் போது தடையாக இருக்குமா? என்றும், மேலும் விமான நிலையம் மற்றும் தரையிறங்கும் விமானத்துக்கும் இடையே உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் குறித்து அதிநவீன எந்திரங்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    தற்போது விமான நிலையம் சீரமைப்பதற்கான ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிவில் என்ஜினீயரிங் குழுவை சேர்ந்த 3 பேர் நேற்று ஆய்வுப்பணிக்காக வேலூர் விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் விமான நிலையத்தின் நிலப்பரப்பு, ஓடுதளம் அமையும் பகுதி, கட்டிடங்கள் அமையும் பகுதி, விமானம் இறங்கி ஏறும் வகை யிலான ஓடுதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    ஒருவார காலம் இந்த ஆய்வு கள் நடைபெறும் என்றும், ஆய்வுக்கு பின்னர் 6 அடி உயரம், 850 மீட்டர் அளவுக்கு மொரம்பு மண் கொட்டி ஓடுதள பாதைகள் அமைக் கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    ×