search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்குவது பற்றி கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
    • தற்போது இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கும் திட்டத்தில் கூகுள் மாற்றங்களை செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் 5ஜி கனெக்டிவிட்டி இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது. 5ஜி வெளியீட்டை தொடர்ந்து கூகுள் நிறுவனம், பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் வழங்குவதற்காக இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அறிவித்தது. எனினும், எப்போது இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எவ்வித தகவலையும் வழங்கவில்லை. தற்போது இதற்கான பதிலை கூகுள் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது. "5ஜி சேவையை வழங்கும் விவகாரத்தில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 6a மாடல்களுக்கு 2023 முதல் காலாண்டு வாக்கில் அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளோம்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த முறையும் சரியான வெளியீட்டு விவரத்தை கூகுள் தெரிவிக்கவில்லை. எனினும், 2023 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்காத சில நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் இருக்கிறது. தற்போது சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கிவிட்டன.

    சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது. இதுதவிர சியோமி நிறுவனம் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது.

    • கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது.

    புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஒப்போ ஃபைண்ட் N போன்றே காட்சியளிக்கிறது.

    அளவீடுகளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் 158.7 x 139.7 x 5.7mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 8.3mm அளவில் கேமரா பம்ப் உள்ளது. திறக்கப்பட்ட நிலையில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.69 இன்ச் அளவில் உள்ளது. இதன் உள்புற டிஸ்ப்ளேவில் தடிமனான பெசல்கள், பன்ச் ஹோல் ரக கேமரா, 5.79 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 809 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டைலஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: OnLeaks @ HOWTOISOLVE

    • கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
    • கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

    கூகுள் நிறுவனத்தன் பிக்சல் ஃபோல்டு வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். கூகுள் ஃபெலிக்ஸ் (Felix) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதிய கூகுள் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. தற்போது இந்த மாடலின் டெஸ்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஃபெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பிக்சல் 7 ப்ரோ பெயரிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7 ப்ரோ என இரு மாடல்களிலும் டென்சார் G2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. கீக்பென்ச் புள்ளிகளின் படி புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல் தோற்றத்தில் பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் டூயல் கிளாஸ் பேனல்கள், ஸ்டீல் ஃபிரேம் உள்ளது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். பிக்சல் ஃபோல்டு மாடலில் 8 இன்ச் உள்புற டிஸ்ப்ளே, 6.19 இனஅச் கவர் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 9.5MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    • டுவிட்டர், மெட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்கள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
    • 2022-ல் இதுவரை 1,35,000 ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு 2023-ம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளது. 2023-ம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பற்றிய அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • அந்த வகையில் பிக்சல் 7a மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டது. அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7a மாடல் "லின்க்ஸ் (lynx)" எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    புதிய பிக்சல் 7a அதன் முந்தைய மாடல்- பிக்சல் 6a-வை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி பிக்சல் 7a மாடல் அதிக ரிப்ரெஷ் ரேட், புதிய டூயல் பிரைமரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. பிக்சல் 7a மாடலில் சாம்சங் பேனல், FHD மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் கூகுள் டென்சார் சிப், குவால்காம் வைபை ப்ளூடூத் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் பிக்சல் 6a மாடலில் அதிக மேம்பட்ட அம்சங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 6a மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சாம்சங் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தாலும், ரிப்ரெஷ் ரேட் அளவு 60Hz ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய பிக்சல் 7a மாடலில் இதுபோன்ற சமரசம் செய்யப்படாது என்றே தெரிகிறது.

    • கூகுள் நிறுவனம் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • பிக்சல் சீரிசில் “a” டேக் செய்யப்பட்ட மாடல்களை கூகுள் நிறுவனம் மிட் ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்து வருகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். முந்தைய பிக்சல் A சீரிஸ் மாடலை விட இதன் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும். முன்னதாக பிக்சல் 3a ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் A சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

    ஒவ்வொரு பிக்சல் A சீரிஸ் வெளியீட்டின் போதும் பிளாக்‌ஷிப் அம்சங்கள், தரம் மற்றும் அனுபவத்திற்கான இடைவெளியை குறைக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. இதே வழக்கம் பிக்சல் 4a 5ஜி மாடலிலும் தொடர்ந்தது. பிக்சல் 4a 5ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பிரீமியம் மெட்டல் பாடி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 5a மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

    பிக்சல் 6a மாடலில் மட்டும் கேமரா சென்சார்கள் முந்தைய பிக்சல் 5a மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஒபன் சோர்ஸ் கோட் விவரங்களில் கூகுள் நிறுவனம் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் "Lynx" எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாகவும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவல்களில் பிக்சல் ஸ்மார்ட்போன் சீனாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிலும் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் செராமிக் பாடி கொண்டிருக்கும் என தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் செராமிக் பாடி கொண்ட முதல் பிக்சல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பிக்சல் 7a பெறும்.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் டென்சார் பிராசஸர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • டென்சார் பிராசஸரின் பென்ச்மார்க் புள்ளிகள் பற்றி கூகுள் நிறுவன மூத்த அதிகாரி அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

    ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க், டிஎக்ஸ்ஒ மார்க் உள்ளிட்ட சோதனைகளில் எவ்வளவு புள்ளிகளை பெறுகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஸ்மார்ட்போன் வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக ஆர்வம் செலுத்துவது வாடிக்கையான விஷயமாகி விட்டது. பல முறை இதுபோன்ற சோதனை முடிவுகள் ஸ்மார்ட்போன் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய உதவும் அளவுக்கு பேசு பொருளாகி விடுன்றன.

    அந்த வகையில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ள டென்சார் சிப்செட்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல பிராசஸர் இல்லை என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது. பென்ச்மார்க் சோதனைகளின் படி புதிய டென்சார் சிப்களை விட ஸ்னாப்டிராகன் அல்லது ஏ சீரிஸ் பிராசஸர்கள் பின்னுக்குத் தள்ளி அதிக புள்ளிகளை பெற்றதே இதற்கு காரணம் ஆகும். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "மேட் பை கூகுள்" போட்காஸ்ட் அமைந்துள்ளது.

    "பாரம்பரியம் மிக்க் பென்ச்மார்க்குகள் ஒருகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சந்தை பல வழிகளில் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஸ்மார்ட்போனிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதுவே மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்."

    "பென்ச்மார்க்குகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் போன்கள் பழக்கத்தில் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. பென்ச்மார்க் டெஸ்டில் அதிக புள்ளிகளை பெறுவதை விட செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை வெற்றிகரமாக பிக்சல் போனகளில் வழங்குவதே முக்கியத்துவம் வாய்ந்தது," என கூகுள் சிலிகான் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு மூத்த இயக்குனர் மோனிகா குப்தா தெரிவித்து இருக்கிறார்.

    • பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூகுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்ததாக கூறப்பட்டது.
    • ஆன்ட்ராய்டு மொபைல்போனில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான மற்றொரு புகாரில், கடந்த 20-ந் தேதி கூகுளுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்து இருந்தது.

    புதுடெல்லி:

    கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

    அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூகுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்ததாக கூறப்பட்டது.

    இந்திய போட்டி ஆணையம் அந்த புகாரை விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936 கோடியே 44 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது. மேலும், நியாயமற்ற வர்த்தக செயல்பாடுகளை தவிர்க்குமாறு கூறியுள்ளது.

    ஆன்ட்ராய்டு மொபைல்போனில் துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான மற்றொரு புகாரில், கடந்த 20-ந் தேதி கூகுளுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.1,337 கோடி அபராதம் விதித்து இருந்தது. ஒரு வாரத்துக்குள் 2-வது முறையாக நேற்று அபராதம் விதித்துள்ளது.

    • யூடியூப் வீடியோ ஸ்டிரீமிங் செயலியில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தற்போது யூடியூப் செயலியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றத்தின் படி ஆம்பியண்ட் மோட் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    யூடியூப் செயலியில் புது டிசைன், அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யூடியூப் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியில் புது தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பின்ச்-டு-ஜூம், பிரிசைஸ் சீக்கிங், ஆம்பியண்ட் மோட், டார்க் மோட் மற்றும் பல்வேறு புது பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. யூடியூப் பின்ச்-டு-ஜூம் அம்சம் கொண்டு வீடியோவில் ஜூம் செய்து பார்க்க முடியும். முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த அம்சம் பிரீமியம் பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் தற்போது அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரிசைஸ் சீக்கிங் அம்சம் கொண்டு வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை எளிதில் கண்டறிய முடியும். இந்த அம்சம் ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு சீக் பார் அல்லது வீடியோ தம்ப்நெயில் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்ல முடியும். ஆம்பியண்ட் மோட் அம்சம் குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நிறத்தை அப்படியே ஆப் பேக்கிரவுண்டில் செயல்படுத்தி விடும்.

    டார்க் மோட் அம்சம் முன்பை விட அதிக இருளாக மாறி இருக்கிறது. இந்த அம்சம் மொபைல், வெப் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சாதனங்களில் AMOLED டிஸ்ப்ளே வைத்திருப்போருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.

    • கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன.
    • இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    புதுடெல்லி :

    ஆண்ட்ராய்டு செல்போன் சூழியல் அமைப்பின் பல சந்தைகளில் கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதாக நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வந்தன. குறிப்பாக தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன.

    இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் தற்போது விதிக்கப்பட்டு உள்ளது.இதைத்தவிர நியாயமற்ற வணிக நடைமுறைகளை நிறுத்துமாறும், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடத்தையை மாற்றியமைக்குமாறும் கூகுள் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் பட்ஸ் A இயர்போன் முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக இந்த இயர்போன் வைட் மற்றும் டார்க் ஆலிவ் என இரண்டு நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் பிக்சல் பட்ஸ் A மாடலை அறிமுகம் செய்து இருந்தது. ஏராளமான சுவாரஸல்ய அம்சங்களுடன் பிக்சல் பட்ஸ் A விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதன் விலையும் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக கூகுள் பிக்சல் பட்ஸ் A மாடல் க்ளியர்லி வைட் மற்றும் டார்க் ஆலிவ் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் A மாடலை சார்கோல் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் வாட்ச் சாதனங்களுடன் பிக்சல் பட்ஸ் A சார்கோல் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

    பிக்சல் பட்ஸ் A சார்கோல் நிற வேரியண்ட் விலையும் 99 டாலர்கள் என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. க்ளியர்லி வைட் மற்றும் டார்க் ஆலிவ் நிற வேரியண்ட்களும் இதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சார்கோல் நிற பிக்சல் பட்ஸ் A முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐயர்லாந்து, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

    2019 ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் பட்ஸ் மாடலின் குறைந்த விலை எடிஷனாக கடந்த ஆண்டு பிக்சல் பட்ஸ் A அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் பட்ஸ் A மாடலில் 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் அடாப்டிவ் சவுண்ட், IPX4 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது.

    • கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக விவரம் வெளியாகி இருக்கிறது.
    • சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

    கூகுள் பிக்சல் போல்டு அறிமுக விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த நிலையில், தற்போது பிக்சல் போல்டு அறிமுக விவரம் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் நிறுவனம் அக்டோபரில் நடத்தும் பிக்சல் 7 சீரிஸ் அறிமுக நிகழ்விலேயே பிக்சல் போல்டு மாடலையும் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டு இருந்தது. எனினும், இந்த தகவல்களை பொய்யாக்கும் வகையில் கூகுள் தனது பிக்சல் போல்டு மாடலை அறிமுகம் செய்யவில்லை.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒற்றி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் தலைமை செயல் அதிகாரி ராஸ் யங், கூகுள் நிறுவனத்தின் முதல் பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டிஸ்ப்ளே பாகங்களின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முந்தைய தகவல்களில் கூகுள் நிறுவனம் இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானது.

    ×