search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் மாயமாகி உள்ளனர்.

    புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகின்றன.

    இதில் குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.

    இதுகுறித்து ரியோ கிராண்டே டோ சுலி மாநிலத்தின் ஆளுநர் எட்வார்டோ லைட் கூறுகையில், " காரா நகரின் நிலைமை எங்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளை விரைவாக வரைபடமாக்கி, ஆதரவு தேவைப்படும் மக்களை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

    கடந்த இரண்டு நாட்களில் அதிகாரிகள் 2,400 பேரை மீட்டுள்ளனர்.

    இந்த தருணத்தில் முதலில் மனித உயிர்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாகும். சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்.

    மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணித்தாய் உயிரிழந்தார்
    • இரட்டை குழந்தை பிறந்தது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆனது முதல் இருவரும் விழுப்புரத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பிரசவத்திற்காக அவருக்கு, அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சையில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

    ஆனால் தாய் ஐஸ்வர்யாவிற்கு, திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐஸ்வர்யாவிற்கு சத்துக்குறை பாடு இருந்ததாலே, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சையில் 2 பெண்குழந்தைகள் பிறந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால சிறப்பு முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
    • ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள, பொரசபாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால சிறப்பு முகாம் தொடக்க விழா நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முகாமை தொடங்கி வைத்து, குழந்தை களுக்கு மருந்து, மாத்தி ரைகளை வழங்கிப் பேசியதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப் படுத்துதல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து இரு வார விழிப்புணர்வு முகாம் 12.6.2023 முதல் 25.6.2023 வரை மாவட்ட முழுவதும் நடத்தப்படுகிறது.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர். இந்த நோயால், ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளும் 2 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளும் மிகவும் பாதிப்புக்குள் ளாகின்றனர்.

    வயிற்றுப்போக்கு நோய் சுலபமாக தடுக்கக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதாகும்.

    சுத்தமான குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மற்றும் 2 வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்பது, சரியான ஊட்டச்சத்து கொடுப்பது, கைகளை முறையாக சோப்பு கொண்டு கழுவுவது போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம் என்பதை அனைத்து தாய்மார்களும் தெரிந்துகொண்டு அவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு வழங்குவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுப்பதுடன் உயிரிழப்புகளை சுலபமாக தவிர்க்கலாம்.

    இது அனைத்து அங்கன் வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவ சமாக வழங்கப்படுகிறது என கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) கீதா, டாக்டர்கள் ராஜேந் திரன், புவேனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் பாம்பு கடியால் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 2022-ம் ஆண்டுகளில் 1,945 பேர் பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பாம்பு கடியால் பாதிக்கப்ப டுவோரின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. குறிப் பிட்ட நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாததால் பாம்பு கடிக்கு ஆளான வர்கள் இறக்கும் சூழலும் உள்ளது.

    இந்த நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வரின் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்டது. அதற்கான விவ ரங்கள் வழங்கப்பட் டுள்ளன.அதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் 1,945 பேர் பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை மூலம் சுமார் 1,909 பேரை காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் பாம்பு கடியால் கடந்த 2 ஆண்டுகளில் 36 பேர் உயிர் இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
    • அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன.

    இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.

    மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.

    மேலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

    சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்தனர். அவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

    அணை உடைந்துள்ளதால் ரஷிய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 42 ஆயிரம் பேர் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறும்போது, 'உக்ரைன் அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும், என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'இந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அமெரிக்காவில் உறுதியாக கூற முடியாது. ஆனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்கா இறுதி முடிவுக்கு இன்னும் வரவில்லை. நாங்கள் தகவல்களை சேகரித்து உக்ரைனியர்களுடன் பேச முயற்சிக்கிறோம்' என்றார்.

    இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
    • டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    திருவண்ணாமலை:

    சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர், நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

    செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது சக பக்தர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் 171 மலை கிராமங்களும் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி சேலம் தர்மபுரி திருவண்ணா மலை கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணை க்கும் ஒரு அடர்ந்த வனப்பகு தியாக உள்ளது. மலையில் உள்ள நீர்ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்ட ங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கியது.

    இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அதன் எதிரொ லியாக கல்வராய ன்மலையில் சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரம் பகுதி வழியாக கள்ளச்ச ராயம் கடத்தி வருவது தடுக்கும் விதமாக கல்வராயன்மலையில் உள்ள 4 புறங்களிலும் குறிப்பாக மூலக்காடு லக்கிநாயக்கன்பட்டி மாயம்பாடி துருர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடிகளை சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்து கள்ளச்சா ராயத்தை கடத்தி வருவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
    • மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

    நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.

    உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.

    இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.

    இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.

    முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

    இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.

    புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.

    ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

    ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

    "சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.

    மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
    • தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நாய் தொல்லை அடிக்கடி அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நாய்களைக் கண்டாலே பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

    சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் அவழியாக நடந்து செல்வோரையும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரையும் துரத்தி துரத்தி கடிப்பதால் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த மாதம் தந்தையுடன் பொருட்களை வாங்க ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது 6 வயது சிறுவனை சாலையில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தெலுங்கானா கூடுதல் கலெக்டர் ஒருவரையும் தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது. சித்திபேட்டை உதவி கலெக்டர் சீனிவாச ரெட்டி இவர் அலுவலகத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து சென்ற போது அங்கிருந்த தெருநாய்கள் சீனிவாச ரெட்டியை துரத்தி துரத்தி காலில் கடித்தது.

    இதனைக் கண்ட கலெக்டரின் உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெருநாய்களை விரட்டி அடித்தனர்.தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சித்திபேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் ஊழியர்கள் 2 பேரை கடித்தது.

    தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர்.
    • உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பாங்குய்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பாம்பாரி நகரில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். கண்இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    அதே சமயம் இந்த நாச வேலையின் பின்னணியில் ரஷியாவை சேர்ந்த கூலிப்படை உள்ளதாக பாம்பாரி நகர போலீசார் குற்றம் சாட்டினர்.

    இதனிடையே தங்க சுரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 சீனர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென தனது குடிமக்களை சீன அறிவுறுத்தியுள்ளது.

    • குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின.
    • சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவத்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    தாக்குதலுக்கு உள்ளானபோது பிரதீப் என்ற குழந்தை தனது தந்தையுடன் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோவில், குழந்தை தனியாக நடந்து செல்வது போல் உள்ளது. சிறிது நேரத்தில், மூன்று நாய்கள் குழந்தையை நோக்கி வந்து சூழ்ந்து கடிக்க தொடங்கின. பயந்துபோன சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நாய்கள் சிறுவனை நெருங்கி தரையில் தள்ளுகின்றன.

    குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின. ஒவ்வொரு முறையும் சிறுவன் எழுந்திருக்க முயலும்போதும் நாய்கள் தாக்கி கீழே தள்ளி விடுகின்றன.

    பின்னர், சிறுவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. பெரிய நாய்கள் குழந்தையை கடித்து ஒரு புறம் இழுத்துச் செல்லும்போது மூன்று சிறிய நாய்கள் பின்தொடர்கின்றன. குழந்தை, சம்பவ இடத்திலேயே இறந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது.

    சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×