search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி"

    • ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீகாந்த் நள்ளிரவு 1 மணி முதல் 1-30 மணி வரை போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    பின்னர் அவுட் போஸ்டில் உள்ள ஓய்வு அறைக்கு சென்றார். ஸ்ரீகாந்த் ஓய்வு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட சக போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஸ்ரீகாந்த் இருந்த ஓய்வு அறைக்கு சென்ற போது நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மீட்ட சக போலீஸ்காரர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சையத் ஜஹாங்கீர் கூறுகையில்:-

    ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது. அப்போது ஸ்ரீகாந்த் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின
    • கோபத்தில் ரஜாவத் ஓடிச்சென்று தனது துப்பாக்கியை எடுத்து வந்தார்

    மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம்.

    இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து வந்த ரஜாவத்தின் அண்டை வீட்டுக்காரர் விமல் அசலா (35). அசலா, அந்நகரின் நிபானியா பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆளுக்கொரு நாய் வளர்த்து வந்தனர். இருவரும் அவரவர் நாய்களுடன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    இவர்கள் வழக்கம் போல நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கிருஷ்னா பாக் காலனியில் நடந்து சென்ற போது அவர்களது இரு நாய்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட தொடங்கின. இதனை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர்களான இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

    இதில் கோபமடைந்த ரஜாவத், வேகமாக தான் வசிக்கும் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பால்கனிக்கு வந்தார். வந்ததும் முதலில் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்ட ரஜாவத், அசாலா நின்றிருந்த இடத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் அசலா மற்றும் அங்கிருந்த 27 வயதான ராகுல் வர்மா என்பவரின் மீது குண்டு பாய்ந்தது. அங்கு சண்டையின் போது அருகில் நின்றிருந்தவர்களில் 6 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் மிக தீவிரமாக காயமடைந்துள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் தகவல் அளித்ததை அடுத்து கஜ்ரானா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அசலாவும், ராகுல் வர்மாவும் உயிரிழந்ததாக அறிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து ரஜாவத், அவருக்கு உதவியதாக அவர் மகன் சுதிர் மற்றும் உறவினர் சுபம் ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி இருக்கிறது.

    எந்தவித முன்பகையும் இல்லாதவர்களுக்கிடையே நாய்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக மோதல் ஏற்பட்டதும், மோதல் கொலையில் முடிந்து இருப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்
    • துப்பாக்கியின் பின்புறத்தாலும் சுமைலாவின் முகத்தில் ஸோனு பலமாக தாக்கினார்

    புது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி.

    இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார்.

    துப்பாக்கியின் ரவை சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர். சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.
    • துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் முகத்தை துணியால் மூடி இருந்தார். அதை பார்த்ததும் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.

    துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார். இதனால் கோவிலுக்குள் பயங்கரவாதி புகுந்து விட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர் ஒருவர், துப்பாக்கியுடன் இருந்த நபரை நோக்கி சென்றார். அவர், முகமுடி அணிந்திருந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

    அப்போது, தான் பயங்கரவாதி அல்ல போலீஸ்காரர் என்றும், இது பயங்கரவாத தடுப்பு தொடர்பாக போலீசாரின் ஒத்திகை என்றும் துப்பாக்கியுடன் இருந்த நபர் தெரிவித்தார். பிணைக் கைதியாக இருந்த வரும் போலீஸ்காரர் ஆவார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்திகைக்காக போலீஸ்காரர் துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் மாறு வேடத்தில் கோவிலுக்குள் நுழைந்தது தெரிய வந்தது.

    மேலும் போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்தவர் பிரசாந்த் குல்கர்னி என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலர் அதிருப்தி தெரிவித்தனர். பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற ஒத்திகைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    • குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
    • புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது.

    இந்த நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்கான உத்தரவுகளை அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா பிறப்பித்துள்ளார்.

    அதன்படி பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருக்கக் கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகள் 200-ல் இருந்து 50 ஆக குறைகிறது. மேலும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள், 9 மி.மீ. பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிபர் லுலாடா சில்வா கூறும் போது, குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை அவர்கள் வைத்திருக்கட்டும். ஆனால் துப்பாக்கிகள் மக்களின் கைகளில் அதிகமாக இருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

    ஆயுதமற்ற நாட்டிற்காக தொடர்ந்து போராடுவோம். பிரேசில் காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகள்தான் துப்பாக்கிகளை கையாள்வதில் நன்கு பொருந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.

    புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது. முன்பு இது ராணுவம் வசம் இருந்தது. கடந்த மே மாதம் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் துறையில் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    துப்பாக்கி பயிற்சி மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் இருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    கோவை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.

    அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே ஒடப்பன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது40). இவர் கள்ளத்தனமாகவும் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தனிப்பிரிவு காவலர்தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    • சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
    • மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் உக்கடை உள்ளது. நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் டீ குடிக்க வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் காரில் மர்ம கும்பல் வந்தனர். அவர்களை கண்டதும் டீக்கடைக்குள் புகுந்து பின்பக்கம் வழியாக 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மர்ம கும்பல் துரத்தியபோது ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார்.

    அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து டீக்கடை உரிமையாளர் பார்த்தபோது அங்கு 3 துப்பாக்கி குண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்தட வந்து 3 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தோட்ட நிரப்பும் ஹண்டில் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் போலியானது என்பது விசாரணையில் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய 2 வாலிபர்களும் யார்? அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிரவி சாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சோமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் அடிக்கடி ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ரவுடி கும்பல் பழிவாங்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் வந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கரை ரவுடி கும்பல் வெடி குண்டை வீசி ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. ரவுடி கும்பல் துப்பாக்கியுடன் வலம் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரவடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் வனச்சரகம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    நேற்று இரவு ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் சென்று உள்ளதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்த 3 மர்ம நபர்கள் வனத்துறையினரை கண்டதும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் சாரணா குப்பத்தை சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் (வயது 22) என்பதும் , தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வனத்துறையினர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பிய ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
    • துப்பாக்கியை காட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்து காரில் சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்த வர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளி நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்போது இங்கேயே வசித்து வருகிறார்.

    இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின், மகள் மற்றும் மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் இருந் தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் சென்றனர்.

    இதுகுறித்து முகமது உமர்சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். ெகாள்ளை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியைச் சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த கவுரி, இருளப்புரத்தைச் சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன்புகாரி, மேல சரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது.

    கொள்ளைக்கு பயன்ப டுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனி படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலைமறை வாகி இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரண டைந்தனர். இவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோட்டார் போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்தனர். அவர் களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாகி இருந்த முக்கிய குற்றவாளி சார்லசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவில்பட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சார்லஸை போலீ சார் சுற்றி வளைத்து பிடித்த னர். பிடிபட்ட சார்லஸை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து விசாரித்து வரு கிறார்கள். கைது செய் யப்பட்ட சார்லசுக்கு குமரி மாவட்டத்தில் வேறு திருட்டு வழக்கு களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    • பெண் உள்பட 3 கொள்ளையர்கள் சிக்கினர்
    • தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் உமர் பாபு (வயது 53). வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். தற்பொழுது இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று இரவு உமர் பாபுவின் மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் உமர் பாபு மட்டும் தனியாக இருந்தார்.

    ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு ஜாஸ்மினும், மாமியார் மற்றும் மகளும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டினுடைய மின் விளக்கு கள் அணைக்கப்பட்டு இருந்தது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஜாஸ்மின் கணவரை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து பர்தா அணிந்த 2 நபர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் ஜாஸ்மின் யார் என்று கேட்டார். அப்போது அவர்கள் நாங்கள் உங்களது உறவுக்காரர்கள் என்று கூறினார்கள். உமர் பாபு குறித்து கேட்டபோது சரிவர பதில் கூறவில்லை. உள்ளே சென்று பார்த்த போது உமர் பாபுவின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே ஜாஸ்மின் கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடினார்கள். ஜாஸ்மினின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் கொள்ளை யர்களை பிடிக்க முயன்ற னர். அப்போது ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். மேலும் கொள்ளையர்கள் வந்த காரையும் பொதுமக்கள் பிடித்தனர். கொள்ளையன் பிடிபட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த காரையும் சோதனை செய்தனர். அப்போது போலி பதிவு எண் கொண்ட கார் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஜாஸ்மினிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் குறித்து அடையாளங்களை அவர் தெரிவித்தார்.

    தங்களது வீட்டிற்கு பர்தா அணிந்து 2 பேர் வந்ததில் ஒருவர் பெண் என்றும், மற்றொருவர் ஆண் என்று கூறினார். எனவே கொள்ளை சம்பவத்தில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை யர்கள் 2 பேர் நேற்று மதியம் பர்தா அணிந்து உமர் பாபு வீட்டிற்குள் வருவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. எனவே கொள்ளையர்கள் காலை யிலிருந்து நோட்டமிட்டு இந்த கைவரிசை யில் ஈடுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற துப்பாக்கியையும், அரிவாளையும் போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பிளாஸ்டிக் துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசா ரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கொள்ளை வழக்கில் தப்பி ஓடிய பெண்ணையும், வாலி பர் ஒருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    • ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

    அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாணவரிடம் துப்பாக்கியும், அவரது பை மற்றும் டிஃபன் பாக்சில் தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக பள்ளியில் இருந்து மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பள்ளி வளாகம் முழுக்க ஊரடங்கு நிலை உருவாக்கப்பட்டது.

    பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு வந்தது, 15 வயதான மாணவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட மாணவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

    பின் ஆயுதங்களை வைத்திருந்தது, பள்ளியில் இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவரிடம் இருந்து AR-15 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    ×