search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • படிப்படியாக மாணவனின் நிலைமை மோசமாகி 4ம் நிலை சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுத்தது.
    • அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 15-வயதான ரோமன் மெக்கோர்மிக் என்ற மாணவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் (branchiootorenal syndrome) எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் அவன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் காது, சிறுநீரகம் போன்ற உடலுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. அவனால் பிற சிறுவர்களை போன்று உண்ணவோ, விளையாடவோ முடியாமல் இருந்து வந்தது. படிப்படியாக அவனது நிலைமை மோசமாகி  சிறுநீரகம் செயலிழந்தது.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளி கிடைக்கும் வரை அவனுக்கு டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்ந்து செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு வருடங்களாக கொடையாளியை அவன் குடும்பத்தினர் தேடி வந்தும் அவனுக்கு பொருத்தமான சிறுநீரக கொடையாளி கிடைக்கவில்லை.

    இந்நிலையில் டொலேடோ நகரத்திலுள்ள அச்சிறுவன் படிக்கும் விட்மர் உயர்நிலை பள்ளியின் கணித ஆசிரியர் எட்டி மெக்கார்த்தி அவனுக்கு சிறுநீரகம் வழங்க முன்வந்துள்ளார். அவரது சிறுநீரகம் அந்த சிறுவனுக்கு பொருந்துமா என்பதை அறிந்து கொள்ள அவர் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளார். பிறகு அவர் தகுதியானவர் என்பதை தெரிந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டவுடன் அந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் அவர் செய்தியை தெரிவித்தார்.

    "என் வகுப்பில் படிக்கும் நல்ல மாணவன் அவன். அவனுக்கு உதவலாம் என முயற்சி செய்தேன்" என மெக்கார்த்தி கூறினார்.

    இதனையறிந்த மாணவனும் அவன் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    டொலேடோவிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் உள்ள ஆன் ஆர்பர் பகுதியின் மிசிகன் பல்கலைகழக மருத்துவமனையில் அந்த மாணவனுக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

    • வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
    • பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும், அவரை தலைமை ஆசிரியர் கண்டிக்கவில்லை என தெரிகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் வாடி அருகே உள்ள பாலிநாயக் தாண்டாவில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகேந்திரகுமார். இவர் வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

    இந்த பள்ளியில் 25 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உள்ளனர். அங்கு தலைமை ஆசிரியராக அய்யப்ப குண்டகுர்த்தியும், ஆசிரியராக மகேந்திரகுமார் மட்டுமே வேலை செய்து வந்துள்ளனர்.

    மகேந்திரகுமார் சரிவர பள்ளிக்கு வராததோடு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க தனது சார்பாக பெண் ஒருவரை நியமித்துள்ளார். இதற்காக அந்த பெண்ணுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கி உள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும், அவரை தலைமை ஆசிரியர் கண்டிக்கவில்லை என தெரிகிறது.

    இதுகுறித்து கல்வித்துறை துணை இயக்குநரின் கவனத்துக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர்.

    இது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து மகேந்திரகுமாருக்கு பொதுக்கல்வித்துறை துணை இயக்குநரகம் பணிக்கு திரும்ப வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிள்ளது. மாவட்ட அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

    இதை குறித்து கல்வி அதிகாரி சக்ரப்பகவுடா பிரதார் கூறும்போது, ஒரு ஆசிரியராக ஆள்மாறாட்டம் செய்வது ஒரு குற்றமாகும். எனவே அந்த ஆசிரியர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சாலையில் உடல் கிடந்ததால் பரபரப்பு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 52). இவர் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரித்து வருகிறார். இவரது மனைவி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் பாலாசிங் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ெதாடர்ந்து உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத் துள்ள னர்.

    இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரின் உடல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 13 இடங்களில் காவல் துறை சார்பில் மெகா குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலு வலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமுக்கு வந்திருந்த பெண்கள் தங்களது குறைகளை கடுமையான கோபத்துடன் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.

    புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் இளம் ஆசிரியை ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்து அதிர வைத்தார். நான் வேப்பேரியில் வசித்து வந்தபோது எனது கணவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். தனது நண்பர்களை அழைத்து வந்து அவர்களோடும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல செக்சில் ஈடுபட அழைத்த அவர் நண்பர்களுடனும் அது போன்று இருக்க அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் புகார் அளித்தும் கூட அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இன்றைய குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்துள்ளேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆவேசப்பட்டார். அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்.

    இருப்பினும் அவர் ஆதங்கம் குறையவில்லை. தனது கணவர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தரையில் புரண்டு அழுதார். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதை தொடர்ந்து ஆசிரியையின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உறுதி அளித்தனர்.

    இவரைப் போன்று ஏராளமான பெண்கள் தங்களது குறைகளுக்காக துணை கமிஷனர் அலுவலகத்தில் கோஷம் போட்டு தரையில் விழுந்து புரண்டனர்.

    அவர்கள் அனைவரையும் பெண் போலீசார் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    • மதுரையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை நடந்தது.
    • மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளம் கொண்டிதொழு தெருவை சேர்ந்தவர் பீமல் ராய் (32), பள்ளி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.

    நேற்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி யடைந்த பீமல் ராய் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம், ஒரு கைக்கடி காரம் ஆகியவை திருடப் பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து தெப்பக்கு ளம் போலீசில் பீமல்ராய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை தெற்கு வாசல் தெற்கு கிருஷ்ணன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் ரத்தினகிரி (54). சம்பவத் தன்று அதிகாலை இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்து தெற்கு வாசல் போலீசில் ரத்தினகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.
    • முருகேசன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர் களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் லிங்கதுரை முன்னிலை வகித்தார். பொருளாளர் கனகராஜ் வரவேற்றார். அமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சட்ட ஆலோசகர் நவின் அ.மாரி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலையச் செயலாளர் வழிவிட்ட அய்யனார், மகளிரணி செயலாளர் செல்வராணி ஆகியோர் பொறுப்பாளர் களுக்கு பயிற்சி அளித்தனர்.

    மாவட்ட துணைத்தலைவர்கள் அந்தோணி சவரிமுத்து பூமிநாதன், பைலட், ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வினோத் கண்ணா, மணிகண்டன், ஹரிகர கிருஷ்ணன், மகளிர் அணி துணை செயலாளர்கள் மனோகரி, சுபா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜூடு லாசரஸ், மோகன், ஸ்டீபன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், கார்த்திக், சசிக்குமார், வட்டார பொறுப்பாளர்கள் அருட்செல்வன், மோகன், ஹிலால் அகமது, மாதவன், மாணிக்கம், அருமைநாதன், முனியசாமி, இபுராஹிம்சா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

    குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.

    பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.

    பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.

    இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

    • ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள திருவேங்கடபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது50). இவரது 17 வயது மகன் 12ம் வகுப்பு செல்கிறார். அதற்காக சிறப்பு வகுப்பு களுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    சில நாட்களாக வகுப்புக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து வகுப்புக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் சீனிவாசனும், அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகன் வீட்டில் இல்லை. நண்பர்க ளிடம் விசாரித்தபோது வேறு நபருடன் ராஜ பாளையத்திற்கு சென்றதாக கூறினர். ஆனால் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகேயுள்ள தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது மகள் பிளஸ்-2 படிக்கிறார். அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி கண்டித்தார். இந்த நிலையில் இரவு தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தறுமாறு ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகேயுள்ள சிப்பிபாறையை சேர்ந்தவர் வெங்கடசாமி(63). இவர் அங்குள்ள தோட்டத்து பங்களா ஒன்றில் தங்கி யிருந்தார். இந்தநிலையில் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி முத்துலட்சுமி(38), நர்சிங் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

    இந்தநிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மரிய லியோஜன். இவரது மனைவி ரமணி(27). இவர் கணவருக்கு தெரியா மல் பெண் ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதாக ெதரிகிறது. இது தெரியவந்ததும் கணவர் கண்டித்தார்.

    இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
    • தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்...அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

    மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-

    கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.

    இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.

    தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா நடக்கிறது.
    • ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாள ருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 2004-ல் தொகுப்பூதியத்தில் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து ஆசிரியர் பேரவை என்ற சங்கம் உருவாக்கப்பட்டது.அன்றைய தமிழக அரசு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த மறுத்தது.

    இதனால் ஆசிரியர் பேரவை தலைவர் தியாகராஜன் தலைமையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியை சந்தித்தனர். அவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என உறுதியளித்தார்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்- அமைச்சரானார்.ஆசிரியர் பேரவைக்கு உறுதியளித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் 53 ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.பணி நிரந்தரம் பெற்ற ஆசிரி யர்கள் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர்.அந்த விழாவில் கலந்து கொண்ட அன்றைய முதல்-அமைச்சர் ஆசிரியர் பேரவை என்று இருந்த சங்கத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்று பெயரிட்டார்.

    நாளை (29-ந் ேததி) சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட உள்ள ரங்கத்தில் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் மாநிலச்செயலாளர் ரமேஷ் படத்திறப்பு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பள்ளிகளில் படித்து சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் பணியையும், இயக்கப்பணியையும் செய்யும் இயக்க பொறுப்பா ளர்களுக்கு விருது வழங்கும் விழா என்ற அடிப்படையில் இந்த விழா நடக்கிறது.சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இதில் கலந்து கொண்டு 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ஆசிரியர்க ளுக்கும், இயக்க நிர்வாகி களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.விழாவில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, அன்பரசன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, கணேசன், தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பாடநூல் கழத் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியரின் முயற்சியால் பழங்குடியின குழந்தைகள் பலர் ஆரம்ப கல்வி பெற்றனர்.
    • ஆசிரியர் கிராம மக்களின் குடும்பத்தில் ஒருவர் ஆனார்.

    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகா காஸ்பாடா பழங்குடியின கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அஜித் கோனத் (வயது35). புனேயில் பிறந்து வளர்ந்த இவர் 14 ஆண்டுகளுக்கு முன் காஸ்பாடா ஜில்லா பரிஷத் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நகர் பகுதியில் வளர்ந்த அவருக்கு கிராம வாழ்க்கை புதிதாக இருந்தது.

    குறிப்பாக அங்குள்ள மக்கள் கல்வியில் பின்தங்கி இருந்ததை பார்த்து மிகவும் வருத்தப்பட்டார். எனவே அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த வரை சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி செய்தார். ஆசிரியரின் முயற்சியால் பழங்குடியின குழந்தைகள் பலர் ஆரம்ப கல்வி பெற்றனர். கல்வியோடு இல்லாமல் ஆசிரியர் அஜித் கோனத் மாணவர்களை கலை, விளையாட்டிலும் ஊக்கப்படுத்தினார். அவர் மாணவர்களை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி மக்களின் மனதிலும் ஆசிரியர் இடம் பிடித்தார். மேலும் ஆசிரியர் கிராம மக்களின் குடும்பத்தில் ஒருவர் ஆனார்.

    இந்தநிலையில் சமீபத்தில் ஆசிரியர் அஜித் கோனத் கிராமத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் காஸ்பாடா கிராமத்தில் இருந்து பிரியா விடை பெற்றார். அப்போது 14 ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு கல்வி செல்வம் அளித்த ஆசிரியரை ஊரே திரண்டு வழி அனுப்பி வைத்தனர். ஆசிரியரை பாராட்டி 'எங்கள் ஆதர்ஷ ஆசிரியர், எங்களின் பெருமை' என பேனர் வைத்தனர். மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர் தூவியும் நன்றி தெரிவித்தனர்.

    ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைவாத்தியமும் இசைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கிராம மக்களின் அன்பை நினைத்து ஆசிரியர் கண்ணீர் விட்டு அழுதார்.

    பணியிட மாற்றலாகி செல்லும் ஆசிரியருக்கு ஒட்டு மொத்த கிராமமே திரண்டு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தாலும் முதலில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் உள்பட 3 மகள்களையும் அங்குள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வந்தனர்.

    இந்நிலையில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி இவர்கள் இருவரும் தொப்பூர் அருகே உள்ள தொ.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் இருவரும் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. ஒரே நாளில் பிறந்த இருவருக்கும் நேற்றைய தேர்வு முடிவுகளில் இதில் அதிசயதக்கும் விதமாக ஒரே நாள் பிறந்த இரட்டையர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். பொதுமக்களும் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

    ×