search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள்"

    • போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க இளம் தலைமுறையினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • புதிய பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அதனை தொடர்ந்து போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை முன்னி லையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்ற னர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன், துணை போலீஸ் சூப்பி ரண்டு ராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 100 போதைமாத்திரைகள், 14 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போதைப்பொருள் கிடைத்தது எப்படி? பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

    கோவை, 

    கோவையில் போதை மாத்திரை, கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், செட்டிபா ளையம் பகுதியில் சிலர் போதை மாத்திரை, போதைப்பொருள் ஆகியவற்றை பதுக்கி கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போத்தனூர் போலீசார் நேற்று செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள், போதை மாத்திரை இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரித்த போது, அவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக இதனை வைத்திருந்ததும், அதற்காக அங்கு காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் போதை பொருட்க ளை விற்பனை செய்த போத்தனூர் ரோடு சங்கம் நகரை சேர்ந்த ஷாஜகான்(33), அவரது மனைவி மரியா(29), உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த யாசிக் இலாகி(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 100 போதைமாத்திரைகள், 14 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது எப்படி? பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • நெமிலி அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது
    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன், நெமிலி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெமிலி மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.இதில் பள்ளி மாணவர்கள் கஞ்சா, குட்கா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தகூடாது என்று அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக மறைந்த முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருபாவதி, வழக்கறிஞர் ராஜேஷ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் நடந்தது.
    • மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சுகாதார மேற்பார்வையாளர் பேசினார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 26-ந்தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. விழாவில் விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக விழாவுக்கு தலைமை தாங்கினார். முதல்வர் நந்தகுமார் கலந்து கொண்டார்.

    சுகாதார மேற்பார்வை யாளர் வீரபத்திரன் பேசுகையில், மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் மூளையை பாதித்து உங்களது நினைவை மாற்றுகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

    சுகாதாரம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் பேசுகையில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு தானே பேசிக்கொள்வது. எதைக்கண்டாலும் பயப்படுவது போன்றவை ஏற்படுகிறது. சிறுநீரகம். கல்லீரல் பாதிப்பு போன்ற வையும், இதயம் சார்ந்த பாதிப்பும் ஏற்படுகிறது. முன்னதாக மாணவர்கள் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வடமலாபுரம் சுகாதார ஆய்வாளர் விக்ணேஷ் மற்றும் எம்.புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஷேக் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கவுகாத்தி:

    அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, 50 சோப்பு பெட்டிகள் இருந்தது.

    அதில் 700 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் போதைப்பொருளை குவஹாத்தியில் இருந்து துப்ரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி 2.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரைக்குடி, தேவகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.



    புதுவயல் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடந்த பேரணி. 

    காரைக்குடி

    காரைக்குடியில் உட்கோட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் கண்ணதாசன் மணி மண்ட பம் வந்தடைந்தது.

    காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விடுதலை எனும் பெயரில் குழு ஒன்றை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    புதுவயல் கல்லூரி

    புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது. கல்லூரி பொருளாளர் முகமது மீரா, சாக்கோட்டை சப் -இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் தாளாளர் மற்றும் மற்றும் முதல்வர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். புதுவயல், சாக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து மேட்டுக்கடை பஸ் நிலையம் வரை பேரணி நடந்தது.



    தேவகோட்டையில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பிரசாரம்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆலோசனை யின் பேரில் ேதவ கோட்டையில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அழகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, அன்சாரி உசேன், போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். யூனியன் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்நிலையம் வழியாக தியாகிகள் பூங்கா வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    • போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடருகிறது.
    • போதைப்பொருட்களில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.

    புதுடெல்லி :

    சர்வதேச போதைப்பழக்க எதிர்ப்பு தினத்தையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    போதைப்பொருட்களை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை மத்திய உள்துறை அமைச்சகம் பின்பற்றி வருகிறது. அதன் பலன்கள் வரத்தொடங்கி உள்ளன.

    இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை மோடி அரசு ஒழித்துக்கட்டும். இந்தியா வழியாக போதைப்பொருட்களை கடத்திச்செல்லவும் அனுமதிக்க மாட்டோம்.

    ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களை ஒழிப்பதில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். 'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற இலக்கை எட்டுவோம். இந்த போரில் வெற்றி பெறும்வரை ஓய மாட்டோம்.

    போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடருகிறது. இதன் பலனாக, 2014-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுவரை ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை கைப்பற்றப்பட்ட ரூ.768 கோடி போதைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில், இது 30 மடங்கு அதிகம்

    போதைப்பொருள் வியாபாரிகள் மீது 8 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய 8 ஆண்டுகளில் பதிவானதை விட 181 சதவீதம் அதிகம். இதுதவிர, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 6 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

    இவையெல்லாம் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசின் உறுதிப்பாட்டை காட்டுகின்றன. அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மோடி அரசு நடவடிக்கை எடுப்பதால்தான் இது சாத்தியமானது.

    போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், மக்களின் பங்களிப்பு இல்லாமல் இப்போரில் வெற்றிபெற முடியாது. எனவே, ஒவ்வொருவரும் இப்போரில் பங்கேற்க வேண்டும். எங்கே போதைப்பொருள் வர்த்தகம் நடந்தாலும் அதுபற்றி பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    போதைப்பழக்கம், இளைய தலைமுறையை சீரழிப்பதுடன், அதன் வருவாய், தேச பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போதைப்பொருள் விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தெரிவிக்க வேண்டும்.
    • இந்த நிகழ்ச்சியில் ஏட்டு காதர் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இரு சக்கர வாகன பேரணி நடந்தது. அவனி யாபுரம் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். பேர ணியை போலீஸ் உதவி கமிஷனர் செல்வ குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அவனியாபுரம் பெரியார் சிலையில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், செம்பூரணி ரோடு, காமராஜர் நகர், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி வழியாக விமான நிலையம் வரை சென்றனர். மேலும் ஆங்காங்கே பொதுமக்க ளுக்கு போதை பொருட் களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீஸ் நிலையம் முன்புள்ள பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ- மாணவிகளுடன் போலீசார் இணைந்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்.

    பின்னர் போலீஸ் உதவி கமிஷனர் செல்வகுமார் பேசுகையில், போதைப்பொருள் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியது. இதில் மாண வர்கள் விழிப்பு ணர்வு டன் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே யாரேனும் போதைப் பொருள்களை விற்பது தெரிந்தால் உடனடியாக போலீசிடம் தொலை பேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் நபர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.

    மேலும் வீட்டில் நமது பெற்றோர்களிடம் போதை பொருள்களால் ஏற்படும் விளைவுகளை எடுத்து ரைக்க வேண்டும். போதைப் பொருட்களால் குடும்ப முன்னேற்றம் தடைப்படும். மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய போதைப்பொருள். பெற்றோர்களுக்கு மாண வர்கள் இதுகுறித்து எடுத்து ரைக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏட்டு காதர் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், உத்தரவின்பேரில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆலோசனைப் படி அ.முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். அ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோ சனைகளை வழங்கினார்.

    கூட்டத்ததில் சைபர் குற்றங்கள் குறித்தும், 1930 புகார் எண் குறித்தும் விளக்கப்பட்டது.

    பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப் பட்டது. பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.

    • கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
    • கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

    போதைப்பழக்கத்தால், மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கு பயப்படாத மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இதுசம்பந்தமான உளவியல் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளால் கெத்து காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஒரு சில மாணவர்கள் அந்தந்த பகுதி ரவுடிகள் என அறியப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக நினைத்து பழகி வருகின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் தனது செலவுக்கான பணத்தேவைக்கு திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. மாணவப்பருவம் என்பதால் ஒரு சில போலீசார், பெற்றோரை வரவழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்து அனுப்புகின்றனர்.

    இது தவிர, டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

    இங்கு, அங்கு என்றில்லாமல் மதுரை மாநகர பகுதிகளில் வாலிபர்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பழக்கமும் பரவலாக உள்ளது. போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டிய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம்தான் கடுமை காட்டுகிறார்களே தவிர, இதுபோன்ற போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முழுமூச்சாக களம் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    இதனால், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற போதைப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த போதைப்பொருள்கள் தாராளமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மிட்டாய் போன்ற ஒருவகையான போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாய்க்குள், ஒரு ஓரத்தில் வைத்து மெதுவாக சுவைக்கும்போது அதிலிருந்து பற்பசை போன்ற சாறு போதையை ஏற்படுத்துகிறது.

    விவரம் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க சிகிச்சை பெறுகின்றனர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அல்லாடும் ஒரு சில மாணவர்கள், இதுபோன்ற போதைப்பழக்கத்தால் மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாக வருத்தப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு கல்லூரியாக ஏறி, இறங்கி தான் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெற அலைவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் முன்பே மாணவர்களை கண்டறிந்து, அதில் இருந்து அவர்களை விடுபட வைக்க தேவையான முயற்சிகளை பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். இதில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் கையை மீறிப்போகும் ஆபத்து அதிகம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கின்றனர்.

    மாணவர்களை அவர்களது போக்கில் செயல்பட தொடர்ந்து அனுமதித்தால், போதைப்பழக்கம் அவர்களது உயர்கல்வி வாய்ப்பை பறித்துவிடும். எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடு்ம் எனவும் எச்சரிக்கைகள் மருத்துவ துறை மூலம் வந்து கொண்டிருக்கின்றன.

    எனவே, மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிறுவர்களை பாதை மாற்றும் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

    • பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை.
    • பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையின் எதிர் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    பஞ்சாபை சேர்ந்த மல்கித் சிங், தர்மேந்திர சிங் மற்றும் ஹர்பால் சிங் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தப்படும் போதைப்பொருட்களை பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. செல்போனை ஆய்வு செய்ததில், பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து தொடர்புக் கொண்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    போதைப் பொருளை கையாளுபவர்கள் இந்த எண்களை பயன்படுத்தி பாகிஸ்தானால் கடத்தப்பட்ட போதைப்பொருள் சரக்குகளை எங்கு சேகரிக்க வேண்டும் என்றும், அது பின்னர் பஞ்சாபில் உள்ள சப்ளை செய்வது தொடர்பாகவும் தகவல் பகிரப்பட்டு வந்துள்ளது. மேலும், பஞ்சாப் போலீசார் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×