search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்காரம்"

    • செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.
    • செந்தில்குமார் தனது பிறந்தநாளுக்கு காதலியை கோவைக்கு வருமாறு கூறினார்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவருக்கும், மும்பையை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசினார்கள்.

    இதனால் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போன் மூலம் தினமும் பேசிக்கொண்டனர். அத்துடன் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்தனர். இதற்கிடையே செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.

    அதற்கு அந்த பெண், முக்கியமான நிகழ்ச்சி என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில்குமாரின் பிறந்தநாள் வந்தது. இதற்காக அவர் தனது காதலியை கோவைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அந்த பெண் விமானம் மூலம் கோவை வந்தார்.

    பின்னர் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றி பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். இரவில் அந்த பெண்ணை செந்தில்குமார், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.70 ஆயிரத்தையும் பெற்றார். பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு செல்போன் எண்ணில் இருந்து செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு பேசினாலும் அவர் பேசவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை மாநகர் மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர்

    புதுக்கோட்டைஇலுப்பூரை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜானகிராமன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தார். பின்னர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜானகிராமனிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்ய அந்த இளம்பெண் ஜானகிராமனிடம் மீண்டும் கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர். ஆயுள் தண்டனை இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ஜானகிராமனுக்கு தகாத வார்த்தைகளால் திட்டிய பிரிவில் 3 மாதம் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருமணம் செய்யாமல் மோசடி செய்ததற்கு ஓராண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஜானகிராமனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    • தம்பியுடன் நடந்து சென்ற சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் பக்கத்தில் உள்ள ஆவாரங்காடுஅருகே தனது தம்பியுடன் நடந்து வந்த 9 வயது சிறுமியை காட்டனாண்டிகுப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனுஷ் சிறுமியின் தம்பியிடம் ரூ. 10 கொடுத்து வீட்டிற்கு போக கூறினார். அதன்பின்னர் அந்த சிறுமியை தூக்கி சென்றுஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

    சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார். இது பற்றிசிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பண்ருட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இதுகுறித்து போக்சோசட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.

    • பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடத்தி சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் சத்திரப்பட்டி தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக மதுரை அரண்மணலியாங்காடு பகுதிக்கு வந்தார். அப்போது அவரை ஒரு காரில் வந்த 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். அந்த கார் அங்குள்ள ஒரு தோப்புக்குள் சென்றது. அங்கு கடத்தி சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த மர்ம நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரவுத்திரப் பாண்டி மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
    • சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, அக்.28-

    பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பல்லவ ராயநத்தம் முருக ன்கோயி ல்தெருவைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), கூலி தொழிலாளி திருமணமா காதவர். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார். இதனையடுத்து இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி உடல் பாதிக்கப்பட்டார்.

    இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியை சேர்ந்த வாலிபருடன் வழக்கம் ஏற்பட்டது.
    • அப்போது சிறுமியை பஸ்சில் வைத்து தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 17வது சிறுமி, பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற வாலிபருடன் வழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் மாணவியை, தினேஷ்குமார் நேரில் சந்தித்து அடிக்கடி பேசி வந்தார். அப்போது சிறுமியிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.அவரது பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி தினேஷ்குமார் என்பவர் கடத்தி சென்று விட்டார் என கூறியிருந்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விசாரணை நடத்தி கடத்தல் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமியையும், தினேஷ் குமாரையும் போலீசார் தேடி வந்தனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர். விசா ரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக காதலன் தினேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

    வண்டலூரில் உள்ள நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்த போது சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை அறிந்து அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து மீண்டும் ஆத்தூருக்கு சென்னை, சேலம் தனியார் சொகுசு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    ஸ்லீப்பர் கோச் பஸ்சில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் அவர்கள் படுத்திருந்தனர். உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே நீண்ட நேரம் பஸ் அங்கே நின்றது. அப்போது சிறுமியை பஸ்சில் வைத்து தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு தப்பிச் சென்றார் என்பது தெரியவந்தது.

    இதை அடுத்து தினேஷ்கு மார் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று வளையமாதேவி பஸ் ஸ்டாப் பகுதியில் தினேஷ்குமார் நிற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையான போலீசார் குறைந்து சென்று தினேஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்த னர்.இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார்.
    • கடந்த 3- ந்தேதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.

     கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 19-வயது என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார். உடனே மாணவி அருகில் வந்ததும் அவரை மாணவர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மாணவி சோர்வுடன் இருந்து வந்தார். கடந்த 3- ந்தேதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி கர்ப்ப மாக இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து என்ஜினியரிங் படித்துவரும் மாணவரை வலைவீசி தேடி வருகி ன்றனர்.

    • திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்த மாரீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி புதுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மாரீஸ்வரன் (வயது20). இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார். இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மாரீஸ்வரன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்த மாரீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.

    • தாயின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளையர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
    • நகைகளையும் பறித்துச் சென்ற கொள்ளையன்

    திருச்சி:

    திருச்சி கே.கே. நகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் அம்சா பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 17 வயது மகளுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு தாயும் மகளும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அம்சா பேகம் தனி அறையிலும் அதன் அருகாமையில் உள்ள இன்னொரு அறையில் மகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அம்சா பேகத்தின் வீட்டு கேட் கதவு பூட்டினை உடைத்தார். பின்னர் அவர் வீட்டின் முன்பக்க கதவு தாழ்ப் பாளை இரும்பு ராடால் நெம்பி உள்ளே புகுந்தான்.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு அம்சா பேகம் திடுக்கிட்டு எழுந்தார். உடனே கொள்ளையன் அந்தப் பெண்மணியின் வாயில் துணியை நுழைத்து அமுக்கிக் கொண்டு கை கால்களை கட்டி போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் நகைகளை பறித்துக் கொண்டான்.

    அதன் பின்னர் அருகில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது 17 வயது மகளின் கை, கால்களையும் கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அந்த சிறுமி கதறி அழுதார். உடனே சத்தம் போட்டால் உன் தாயை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளான். கை கால்களை கட்டி போட்டு நகையை கொள்ளை அடித்து அவரது மகளை பலாத்காரம் செய்த மர்ம நபர் குறித்த விபரம் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் கொள்ளையன் முகத்தை கர்சிப்பால் மறைத்து கட்டி இருந்ததாக அம்சா பேகம் தெரிவித்தார்.

    இது பற்றி அம்சா பேகம் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • வாழப்பாடி பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதிக்கையில் சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்படி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமியை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதில் ஒருவர் சிக்சினார். அவர் வாழப்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளியங்கிரி (வயது 21) ஆவார்.

    இதனை தொடர்ந்து போலீசார், போக்சோ சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்து,ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவான வாழப்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
    • 40 வயது பெண்ணை கடத்தி ஒரு கும்பல் ஆவார்.

    விருதுநகர்

    கடந்த 2 நாட்களுக்குமுன்பு அருப்புக்கோட்டை பகுதியில் 40 வயது பெண்ணை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

    இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம் பேரையூர் வெங்கடாஜலபுரத்தை சேர்ந்த போராளி என்ற பிரபாகரன், விஜயன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் இன்று காலை விருதுநகர் ேஜ.எம்.-2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்பு சரண் அடைந்தனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில இருந்ததாக கூறப்படுகிறது.
    • அருணா சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேர்த்து இன்ஸ்பெக்டர் மீனா சப் இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்கு பதிந்து அரவிந்தை கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரியை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவரது மகள் அருணா வயது 22 இவர் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடலூர் மாவட்டம் முட்டம் அருகே உள்ள அழிஞ்சி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் அவரது மகன் அரவிந்த் வயது 2019-ல் பிஎஸ்சி அக்ரி படிக்கும்போது இவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில இருந்ததாகவும் பிறகு சில நாட்களாக தொலைபேசி துண்டித்து விட்டார் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என அருணா சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேர்த்து இன்ஸ்பெக்டர் மீனா சப் இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்கு பதிந்து அரவிந்தை கைது செய்தனர். 

    ×