search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    • ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும்

    மதுரை

    மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற 17-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இரு சக்கர வாகனத்துக்கு ரூ.2000, ஆட்டோ மற்றும் காருக்கு தலா ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

    அதற்கு முன்பாக இன்று (15-ம் தேதில் மற்றும் 16, 17ந் தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். வருகிற 19-ம் தேதி நடக்கும் ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பண்டிகை காலங்கள் நெருங்குவதையடுத்து நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள முதியோர் கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண் 14567 தொடர்பான விழிப்பு ணர்வு ஸ்டிக்கரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளி யிட்டார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகிறது.குறிப்பாக ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை யர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் புத்தாண்டு பொங்கல் பண்டிகைகளும் வர உள்ளது. அந்த காலங் களில் மாவட்டம் முழுவ தும் பாதுகாப்பை அதிக ரிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பஸ் நிலை யங்கள் கடை வீதிகள் மார்க்கெட் பகுதிகளில் மாறு வேடங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதுடன் வாகன சோதனையை தீவிர படுத்த வேண்டும்.

    வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்ப வர்கள் நகைகளை வாங்கி செல்பவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். போஸ்கோ வழக்குகள் மற்றும் பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பழைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்பட வேண்டும்.குமரி மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் பட்டியலை தயாரித்து அவர்கள் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கஞ்சா குட்கா புகையிலை விற்பனை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ஈடுபடுபவர்கள் மற்றும் குற்ற செயல் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பீச் ரோடு, செட்டிகுளம் கலெக்டர் அலுவலகம் வழியாக பார்வதிபுரம் சென்றடைந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார்.

    ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத் தில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவ தும் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • மக்கள் கூடும் இடங்களில் டிரோன்கள் பறக்க விட்டு கண்காணிப்பு
    • பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடையில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்கும், பண்டிகைக்கு தேவையான பொருட் களை வாங்குவதற்கும் கடை வீதிகளில் அலை மோதி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி ஆண்டு தோறும், பண்டிகைக்கு முந்தைய 2 ஞாயிற்றுக் கிழமைகளிலும் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நாளை வடசேரி, அப்டா மார்க்கெட், மீனாட்சிபுரம், செட்டிகுளம்,கோட்டார் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சென்று பொரு ட்களை வாங்குவார்கள்.

    இது போன்று அடுத்தடுத்து வரும் 2 ஞாயிற்றுக்கிழமை களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.இதனால் அடுத்து வரும் நாட்களில் அனைத்து வணிக பகுதிகளிலும் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்கி செல்வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் என 4 சப்-டிவிஷன்களிலும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் காலை, இரவு என 2 சிப்டுகள் அமைத்து பாதுகாப்பு பணி செய்கின்றர்.

    முக்கிய தெருக்களில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படும். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்க ளின் உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழு வீச்சில் மேற்கொள்ள இருக்கி றார்கள். இப்போதே கண் காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டங்களில் ஊருடுருவி கண்காணிப்ப தற்கு வசதியாக டிரோன் களை பறக்க விடவும் திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா தலங்க ளான மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகளின் புகைப் படங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்களாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் குற்றவாளிகள் புகுந்தால் காட்டி கொடுக் கும் வசதி கொண்ட தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த தீபாவளிக்கும் அந்த நடைமுறையை பின்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடு படுவோரை பிடிக்க மாறு வேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடை யில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழு வதும் தேவையான அனைத்து முன் ஏற்பாடு களையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
    • பள்ளி, கல்லூரிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிகமானோர் கேரளாவில் இருந்து குட்கா மற்றும் கஞ்சாவை வாங்கி வருவதாக தெரிவித்தனர்.

    இதை யடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். எல்லை பகுதியிலுள்ள ஊரம்பு, களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போதை பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதி யாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பி ரண்டு ஷில்பா தியா வையா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோக்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.கொரியர் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    வெளியூர்களிலிருந்து இரண்டு கிலோவுக்கு மேல் வரும் பார்சல்களை ஒப்படைக்கும் போது அதை திறந்து பார்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால்

    7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத் தரவுப்படி தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். இதன் அடுத்த கட்ட மாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளோம்.

    குமரி மாவட்டம் கேரளா அருகில் உள்ள தால், தற்போது கேரள போலீசாருடன் இணைந்து போதை பொருட்கள் விற்ப னையை தடுத்தல் மற்றும் இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய் தல் நடவடிக்கைகளை பரி மாற்றம் செய்து கொள் ளுதல் போன்றவை மேற் கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக தற்போது திரு வனந்தபுரம் மாவட்ட எஸ். பி.யுடன் இணைந்து முதற் கட்டமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளோம். தக வல்களை பரிமாற்றம் செய் யும்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்யமுடி யும். கொரியர் சர்வீஸ் சென் டர்களையும் கண்காணித்து வருகிறோம்.

    பெரும்பாலும் தற்போது கொரியர் மூலம் கஞ்சா பார்சல்கள் வருவது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சா, போதை பொருட் கள் விற்பனை மட்டுமின்றி செயின் பறிப்பு குற்றவா ளிகளையும் கைது செய்ய இரு மாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வார் கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா கூறு கையில், கேரள முதலமைச் சர் உத்தரவின்படி போதை பொருள் விற்பனையை தடுக்கவும், இதில் பாதிக் கப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூ ரிகளில் இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தி உள்ளோம். போதை பழக்கத்துக்கு அடிமை யானவர்களை கண்டறிந்து அவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள், வியா பாரிகள் ஒத்துழைப்பு அவசியம், கேரள எல் லையில் உள்ள அமா விளை சோதனை சாவ டியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இருமாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள் ளும் போது குற்றவாளி களை எளிதில் கைது செய்ய முடியும் என்றார்.

    • குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வரு கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நேற்று மாலை குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.பின்னர் போலீசார் 'டாக்டர்களின் மருந்து சீட்டுக்கு மட்டும்தான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்'என அறிவுறுத்தி சென்றனர்.இது போல் திங்கள்நகர், பேயன்குழி பகுதியில் உள்ள மருந்து கடைகளிலும் அவர் சோதனை செய்தார்.இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • நாமக்கல் மாவட்டத்தில் 26 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
    • இதில் 200 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 26 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் 3 வருடத்திற்கு ஒருமுறை அரசு உத்தரவு படி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 200- க்கும் மேற்பட்ட போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து பணிமாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்லாமல் பெரும்பாலான போலீசார் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பணிமாற்றத்தை எதிர்பார்த்த போலீசார் தவித்து வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னாநல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • காரைக்கால் பகுதியிலிருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் திருமருகல் அருகே கீழசன்னா நல்லூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கீழசன்னா நல்லூர் அருகே திருட்டுத னமாக மதுபானம் விற்ற கீழசன்னாநல்லூர் ஜீவா நகரை சேர்ந்த நாடிமுத்து (வயது 43) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 110 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர்.

    • சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 34 வயது பெண்ணை பார்க்க மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.

    இதனை அடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த அந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.இதையடுத்து பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி மோட்டார் சைக்கிளில் இருந்தது தங்க நகைகளா அல்லது கவரிங் நகையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற வாலிபர் யார்? எதற்காக மோட்டார் சைக்கிளில் விட்டுவிட்டு அவர் தப்பி சென்றார்? அந்த வாலிபர் பார்க்க வந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    கோவை மதுரை சேலம் பகுதிகளில் பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகி றார்கள்.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். ஆரல்வா ய்மொழி களியக்காவிளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோல் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. போலீசார் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர கிரா மங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி வெள்ளாடிச்சி விளையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த இருவர் சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே கங்களாஞ்சேரி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமாளம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 20), சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரும் சாராயம் விற்று கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    இதனை பார்த்த ராஜீவ்காந்தி தப்பி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் மற்றொரு வழக்கில் சாராயம் விற்ற கேதாரிமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தை (40) கைது செய்தனர்.

    • பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி
    • பஸ், ரெயில் நிலையங்களிலும் சோதனை

    நாகர்கோவில்:

    கோவை, சேலம், மதுரையை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், தலைவர்கள் சிலைகள், பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று இரவு விடிய விடிய போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி நடந்தது.நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இன்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயிலில் வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ெரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, வள்ளி யூர், இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலை யத்திலும் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில், மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அரசு அலுவலகங்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொது மக்கள் அனைவரும் பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பொதுமக்கள் கொண்டு வந்த பேக்குகள் முழுமை யாக சோதனை செய்யப்பட் டது.

    ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களிலும் போலீசார் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1200 போலீ சார் ஈடுபட்டுள்ளனர்

    பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் பலப்படுத்தப்பட் டுள்ள நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×