search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 216256"

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமிதேவி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வை யாளர் முரளிதரன் அனை வரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் சண்முகராஜா,பவர் நாகேந்திரன்,கலாராணி, கவுன்சிலர்கள் குமார், முருகன், மண்டல தலை வர்கள் வீரபாகு, ஜோதிமுரு கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • ராமநாதபுரத்தில் 26-ந் தேதி மீனவர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
    • கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் கலெக்டரை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வருகிற 26-ந்தேதிமாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம். மேலும் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் பாரதிநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தான தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.நகர செயலாளர் பாலா வரவேற்றார்

    கடந்த வாரம் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்று சிறை சென்றவர் களை விடுவிக்க உறுதுணை யாக இருந்த மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் வினோபா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சிக்கலை தலைமை இடமாக வைத்து புதிய ஒன்றியத்தை உரு வாக்க கோரி சட்டமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைத்த சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அருளுக்கு இக்கூட் டத்தில் நன்றி தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் நன்றி தெரிவித்தார்.மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில், கடலாடி ஒன்றிய செயலா ளர் இருளாண்டி, கீழக்கரை நகரச் செயலாளர் லோக நாதன், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் முனிய சாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் சரீப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா ளர் இப்ராஹிம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம் பா.ம.க. அறிவித்துள்ளது.
    • ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அக்கிம் நிருபரிடம் கூறியதாவது:-

    வருகிற 18,19 ஆகிய தேதிகளில் கவர்னர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த 23 ஆண்டுகால போராட்டமான கடலாடி ஒன்றியத்தை பிரித்து சிக்கலை தலைமையிடமாகக் கொண்ட புதிய யூனியன் அமைத்தல், மக்களுக்கு இடையூறாக இருக்கும் கலெக்டர் அலு வலகம் முன்புள்ள மதுக்கடையை மாற்றுதல், ராமநாதபுரத்தில் புதிய மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும்.

    தற்போதிருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்தை தடை செய்தல், திருவாடானை தாலுகா சிறுகம்பையூர் பகுதி யில் நடத்தப்படும் மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையிலும் ஜனநாயக முறையில் எத்த னையோ போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி னாலும் வேடிக்கைக்காக நடத்துவது போல பார்ப்பதும், எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கா மல் இருப்பதால் கவர்னர் ரவி வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்கள் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருக்கும் தமிழக அரசு மற்றும் தலைமையில் 1000 கருப்பு பலூன்க ளையும் பறக்கவிட்டு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராகிம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் பாலா, மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அ.பள்ளப்பசேரி கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன் ஏர்விடும் மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் சார்பில் சந்தன காப்பு மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக நத்தம் அய்யனார் கோவில் முன்பு பொன் ஏர்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் ஜெய்கணேஷ். செல்லத்துரை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கமுதி டி.எஸ்.பி. நேரடி கண்காணிப்பில் அபிராமம் போலீசார் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.
    • தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை சேர்ந்த மாதவன் தமிழ்நாடு யாதவ மகா சபையின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனமிக்கப் பட்டுள்ளார். அவர் மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இளைஞரணி தலைவராக நியமனம் செய்து சமுதாய பணியாற்ற வாய்ப்பளித்த மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் வேலு மனோகரன், பரிந்துரை செய்த மாவட்ட தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.

    • ராமநாதபுரம், கீழக்கரையில் திடீரென மழை பெய்தது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை சில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது.

    வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடலோர பகுதியில் கருமேகம் சூழ்ந்து இடைவிடாமல் 2மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது. சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடை விடாமலும் பெய்தது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீராதாரத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்றும் மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் குளிர்ந்த நிலை நிலவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கீழக்கரையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் காணப்பட்டது.

    • விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி நடந்தது.
    • தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள உழவர் மையத்தில் விதை உற்பத்தி பயிற்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) முருகேசன் கலந்து கொண்டு வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உபயோகித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்.

    ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி, விதைச்சான்று அலுவலர் சீராளன் ஆகியோர் விதைகள் வாங்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய விபரங்கள், விதைகளின் குணங்கள், விதைகள் தேர்வு விதை தரம் பிரித்தல், விதை உற்பத்தி ஏற்ற ரகங்கள், பருவங்கள், விதை முளைப்புத்திறன், விதை தூய்மை கணக்கிடும் முறைகள், விதைப்பு அறிக்கை பதிவு செய்தல், சான்று கட்டணம், வயலாய்வுக்கட்டணம் மற்றும் கலவன் நீக்குதல், விதைப்பண்ணை அமைக்கும் பொழுது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதைச்சான்று நடைமுறைகள் குறித்தும் பயிற்சியளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். ராமநாதபுரம் உதவி விதை அலுவலர் பாஸ்கரன், உச்சிப்புளி உதவி விதை அலுவலர் ஆனந்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி செய்திருந்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 112 போக்சோ வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் 51 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. 2022-ம் ஆண்டு 33 கொலை வழக்குகள் பதிவானது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவானதாகும். சொத்து வழக்குகளை பொறுத்த மட்டில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சொத்து வழக்குகளின் கண்டுபிடிப்பு 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    கொடுங்குற்ற வழக்கு களில் 2021-ம் ஆண்டு 69 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 வழக்குகள் குறைவானதாகும். கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 2021-ம் ஆண்டு 907 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். 2022-ம் ஆண்டு 112 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றங்கள் தொடர்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏற்பட்ட 1,199 வாகன விபத்துக்களில் 360 பேர் உயிரிழந்துள்ளனர். 1286 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 சதவீதம் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது. விதி மீறிலில் ஈடுபட்ட 3 லட்சத்து 96 ஆயிரத்து 782 இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டதில், புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரை யாகவும் விற்பனை செய்த 602 பேர் மீது 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.34 லட்சத்து 8 ஆயிரத்து 856 மதிப்புள்ள 3ஆயிரத்து 698 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4,451 பேர் மீது 4,402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11284 லிட்டர் மதுபானம் மற்றும் பனங்கள் 3,442 லிட்டர் கைப்பற்றப்பட்டது.

    கஞ்சா விற்ற 192 பேர் மீது 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.29 லட்சத்து 27 ஆயிரத்து 80 மதிப்புள்ள 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 105 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 85 பேர் மீது 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த ஆண்டில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 275 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தவருடம் 1.1.2022-ம் தேதி முதல் இந்நாள் வரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 7 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர், பாலினகுற்ற செயல்களில் ஈடுபட்ட 6 பேர், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட 3 பேர், தேசவிரோத குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பேர் என மொத்தம் 24 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் நடப்பாண்டில் 711 புகார் மனுக்கள் நேரடியாகவும், இணைய தளம் வழியாகவும் பெறப்பட்டு விசாரணைக்குபின் 74 சைபர் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.68லட்சத்து 38 ஆயிரத்து 980 முடக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.13 லட்சத்து84 ஆயிரத்து 25 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 853 புகார்களில் 552 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு புகார்தாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கிவைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்தார்.
    • 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திர கோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கள நாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக இருக்கும். அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களும் 21.1.2023 அன்று வழக்கம்போல் இயங்கும். மேலும் 6.1.2023 வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரம்,சிவகங்கை-விருதுநகர் மாவட்டத்தில் 30 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    ராமநாதபுரம்

    2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வில்லை. அவர்களை சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் ேதர்வு மையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்து தேர்வு கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்லைக்கழ கம், வி.பி.எம். கல்லூரி, விருதுநகர் வித்யா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக், வி.வி.வி. பெண்கள் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரி, காரியாபட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி, செவல்பட்டி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 10 மையங்களில் நடந்தது.

    காலை 9.30 மணி அளவில் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த மையங்களில் 16 ஆயிரத்து 379 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்த பிறகே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, உமையாள்-ராமநாதன் மகளிர் கல்லூரி, மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட 10 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வு மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்க ளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மொத்தம் 8 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 30 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    • ராமநாதபுரம்: சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்று த்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமநாத புரம் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா தலைமை தாங்கி 210 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

    அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா பேசும்போது கூறியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகின்றன. அடையாள அட்டை பெறாதவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு உபகரணங்கள் வேண்டுபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில்வோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்க ளுக்கு தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தகுதியுடைய பயனாளிகள் இதுபோன்ற அரசின் திட்டங்களை விண்ணப்பித்து பெறலாம்.

    இதேபோல் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திற னாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படு கிறது. மேலும் உயர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி, காதொலி கருவி, செயற்கைகால் மற்றும் கடிகாரம் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற சிறப்பு முகாம் மற்றும் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் ஆகியவற்றில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்து கொள்ளுவதுடன் அரசின் திட்டங்களையும் பெற்று பயன்பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், ஆனந்த சொக்கலிங்கம், கார்த்திகேயன், சுபா சங்கரி, முட நீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×