search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220390"

    • புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா, ஏழுமலை, சென்னை இளைய நம்பி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையில் சென்னையை சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை அதிபரான இளைய நம்பி, தொழிற்சாலை மூடப்பட்டதால் அவரிடம் தேங்கி இருந்த மெத்தனால் என்ற விஷத் தன்மை வாய்ந்த வேதிப் பொருளை புதுச்சேரியை சேர்ந்த சாராய வியாபாரியான ஏழுமலையிடம் விற்பனைக்கு அனுப்பி உள்ளார்.

    6 பேரல் மெத்தனாலை வாங்கிய ஏழுமலை புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா மூலம் மரக்காணம் சாராய வியாபாரிகளான அமரன், முத்து உள்ளிட்டோருக்கு குறைந்த விலைக்கு 200 லிட்டர் விற்றுள்ளார். வழக்கமாக புதுச்சேரி சாராயத்தை வாங்கி பாக்கெட் செய்து விற்று வரும் மரக்காணம் சாராய வியாபாரிகள் போட்டி காரணமாக அதிக போதை தரும் என்பதால், சாராயத்துடன் மெத்தனால் சேர்த்து, கடந்த 13-ந் தேதி மாலை விற்பனை செய்துள்ளனர். இதனால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 4 பேரல் மெத்தனாலை மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12-வது நபரான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது.
    • ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் சாராய வியாபாரிகள் 11 பேரிடமும் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

    மெத்தனால் எங்கிருந்து வந்தது. எந்தெந்த சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான சென்னை திருவேற்காட்டை சேர்ந்த இளைய நம்பிக்கு சொந்தமான கெமிக்கல் ஆலை வானரகத்தில் செயல்பட்டு வந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கிய ஆலை மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து தான் 1,250 லிட்டர் மெத்தனாலை புதுச்சேரியை சேர்ந்த இளைய நம்பி நண்பர் ஏழுமலைக்கு ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.

    ஏழுமலை அங்கிருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இன்று மாலையுடன் 11 பேரின் காவலும் முடிவடைகிறது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    • விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.
    • விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்ததில் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா உள்பட 8 பேர் பலியானார்கள். மேலும் சின்னதம்பியின் மனைவி அஞ்சலை உள்ளிட்ட பலர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விஷ சாராய வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. நேற்று இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில விஷ சாராயம் தொடர்பாக விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலையிடம் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரித்தார். இதைத்தொடர்ந்து பெருங்கரணை கிராமத்தில் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலைகடத்தி வந்த வேலுர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்ட 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாார்.

    இதனை தொடர்ந்து 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 11 பேரையும் தனித்தனி அறையில்அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

    விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர், வருவாய்துறையினர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என் தகவல் வெளியாகி உள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிர் இழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்..பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்குமாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். இதற்காக நேற்று விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 6 பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்த கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர், மெத்தனாலை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2பேர் மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த டிரைவர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஆவணங்களை மரக்காணம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான குழுவினர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்றனர். அங்கு சாராயத்தை குடித்துவிட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்கும் மாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். 12 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிர் பிழைத்த 65 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வழக்கு உள்ளூர் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கின் கோப்புகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் இருக்கக்கூடிய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளையும் விசாரணை குழுவில் அதிகாரிகள் சேர்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி. சசிதர் மற்றும் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்த விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று சென்றுள்ளனர்.

    • மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது.
    • கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மரக்காணம் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், மரக்காணம் மது விலக்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு மெத்தனால் அளித்த தொழிற்சாலை உரிமையாளர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம் மது விலக்கு போலீஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மரக்காணத்தில் இயங்கி வந்தது. அதே போல கீழ்புத்துப்பட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு புதுவையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படும்.

    இந்நிலையில் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட மரியே சோபி மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற உடனேயே மரக்காணத்தில் இயங்கி வந்த மது விலக்கு போலீஸ் நிலையம் கோட்டக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது.

    கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடியும் சரிவர இயங்கவில்லை. இதனால் மரக்காணம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் இருந்து கடத்தி வரப்படும் சாராய விற்பனை படுஜோராக நடந்தது. இதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் மது விலக்கு போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முடியாத வியாபாரிகள், மெத்தனாலை வாங்கி அதில் டிகிரி பார்த்து நீர் ஊற்றி, புதுவை சாராயம் போலவே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

    மரக்காணம் பகுதியில் உள்ள மது பிரியர்கள், இது புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் என்று நினைத்து வாங்கி குடித்தனர். இதில் மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதுவரை எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மது விலக்கு இன்ஸ்பெக்டர் மரியே சோபி மஞ்சுளாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வாய் திறந்தால் மட்டுமே நடந்தது என்ன? இதில் யார்? யார்? தொடர்பில் இருக்கிறார்கள்? என்பன போன்ற பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரியவருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
    • விற்பனை செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முண்டியம்பாக்கம்:

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்.

    * கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். விற்பனை செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து 2 கட்டங்களாக தனது விசாரணையை நடத்தினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அளித்தவர்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்களிடம் அதிகாரி அமுதா விசாரித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட பாளை கே.டி.சி.நகரை சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வி.கே.புரம் அருகே அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு, வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகசேன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே மற்றொரு விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் பாதிக்கப்பட்ட வேதநாராயணன், சூர்யா ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவரது உறவினர்கள், சாட்சியங்கள் ஆஜராக சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தபட்ட சரகத்தில் பணியாற்றும் சில போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் ஜீப் டிரைவர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சம்மன் அனுப்பினர். அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், முதல் மற்றும் 2-ம் நிலை காவலர்கள் என மொத்தம் 24 போலீசாரை மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், ஆபிரகாம் ஜோசப், சக்தி நடராஜன், பாலசுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஸ்வரன், ரவி, பத்மநாபன், மகாராஜன் மற்றும் காவலர்கள் கணேசன், சேர்மன் துரை, வசந்த், கலைவாணி, பார்வதி, சுடலை, ஜெயராமன், அபிராமவள்ளி, ஆரோக்கிய ஜேம்ஸ், ஸ்டீபன், சதாம் உசேன், போக பூமன், விக்னேஷ், மணிகண்டன், சந்தாணகுமார், ராஜ்குமார் ஆகிய 24 போலீசார் நெல்லை மாவட்டத்தில் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது.
    • வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இசக்கிமுத்து, சதாம் உஷேன் மற்றும் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார் நேற்று நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் இன்று நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    ×