search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223300"

    • 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது.
    • பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை சார்பில் இன்று நெகிழி தடுப்பு குறித்து வணிகர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தியது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். ஆணையர் சரவண–குமார் வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது :-

    நெகிழி இல்லாத மாவட்டமாக தஞ்சாவூர் மாற வேண்டும். அதற்கு வணிகர்கள் பொதுமக்கள், அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஒரு தடிமனான பிளாஸ்டிக் மக்குவதற்கு 1000 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிளா–ஸ்டிக்கை பயன்படுத்தும் போது அதில் மண்ணில் மக்காமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. மண் வளத்தை பாதிக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைவாகத்தான் இருந்தது. தற்போது பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த சவாலாக உள்ளது. இருந்தாலும் அனைவரும் மனது வைத்தால் நிச்சயமாக கட்டுப்படுத்தி விடலாம். கடைகளுக்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது துணிப்பை அல்லது மஞ்ச பைகளை கொண்டு செல்லுங்கள். வியாபாரிகளும் பொதுமக்களுக்கு பொருட்கள் கொடுக்கும் போது பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் மாற வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பது எங்களது நோக்கமல்ல. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். இதற்கு வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    செந்தமிழ் வட்டாரத்தில் இருந்து மணிமண்டபம் வட்டார வரை ஆறு வழிச்சாலை வரப்போகிறது. தஞ்சை மாவட்டம் சுற்றுலா நிறைந்த மாவட்டமாகும். அதன்படி வளர்ச்சியை நோக்கியே பயணம் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து ஆணையர் சரவணகுமார் பேசும்போது,

    கலெக்டர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அவருக்கு படைத்தளபதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் முற்றிலும் தடுக்க வேண்டும். விபத்தில்லா தஞ்சாவூர் மாநகரை உருவாக்க சாலைகள் அகலப்படுத்தபட்டு வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மறுமுறை ஹெல்மெட் அணிந்து செல்வதற்காக தான். அனைவரும் போக்கு வரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திருச்சி பிஷப் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ், கவின்மிகு தஞ்சை இயக்கம் செயலாளர் பர்வீன் ஆகியோர் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தனர். பிளாஸ்டிக் மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி பட்டறையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகளை நன்றாக வளர்க்க வேண்டும்.
    • பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவில் நந்தவனத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்று வரும் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி நேரில் பார்வையிட்டு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை மரக்கன்றுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது: முதல்-அமைச்சர் உங்களை போன்ற பள்ளிக் குழந்தைகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பள்ளி குழந்தையாகிய நீங்கள் இன்று வாங்கிச் செல்லும் மரக்கன்றை நன்றாக வளர்க்க வேண்டும். பூமித்தாயை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பைகளுக்கு மாற வேண்டும். உலக வெப்பமயமாதலில் நம்மை பாதுகாத்து கொள்ள மரங்கள் நடுவது ஒன்றே சிறந்த வழியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தல்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு சிறப்பொழிவு நடந்தது.

    இளநிலை வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவரும், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் தலைவருமான கைலாஷ் ராஜ் அறிமுக உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகராட்சியின் தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் சூர்யாகுமார் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடு, சுற்றுசுழல் மாசுபாடு. கடல்வாழ் மற்றும் நிலவாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றியும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் மனித உடலில் ஏற்படும் புதிய நோய்கள் பற்றியும் எடுத்து ரைத்தார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
    • கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு தோறும் துணிப்பைகள் வழங்கும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.

    இதன்படி முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், கரைப்புதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளுக்கு துணி பைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கரைப்புதூர் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  

    • நான்கு சாலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
    • வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2920 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: திலகர் திடலில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எந்தவித ரசீதும் கொடுக்காமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்கு முறையாக ரசீது கொடுத்து கட்டணம் வாங்க வேண்டும்.

    மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

    மஞ்சப்பை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ராஜக்கோரி இடுகாட்டு வளாகத்தில் தமிழீழ விடுதலை புலிகள் போராளி போசன் கல்லறை இடிக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் கோபால் : மேலவீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும் வாரத்தில் சில நாட்கள் குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    அதனை முறைப்படுத்தி சரியான அளவில் குடிநீர் விநியோகிக்க வேண்டும். நான்கு சாலையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். பணிகள் அனைத்தையும் துரிதமாக முடிக்க வேண்டும்.

    யு.என்.கேசவன் : நவ்ரங் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். ராமநாதன் ரவுண்டானா பகுதியில் 5 சாலைகள் செல்கிறது. அதில் ஒரு இடத்தில் தான் வேகத்தடை உள்ளது. மீதமுள்ள 4 இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

    கண்ணுக்கினியாள் : எனது வார்டில் பூச்சந்தை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்.

    சரவணன் : சீனிவாசபுரத்தில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

    காந்திமதி : மீன் மார்க்கெட்டை சரி செய்ய வேண்டும். வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரப்பை அகற்றுவதாக இருந்தால் முன் அறிவிப்பு செய்ய வேண்டும்.

    இதேப்போல் கவுன்சிலர்கள் ஜெய்சதீஷ் உள்பட பல்வேறு கவுன்சிலர்களும் தங்களது வார்டு சம்பந்தபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசும்போது:-

    கரந்தை பகுதியில் நீர்தேக்க தொட்டியை தரமான முறையில் சுத்தம் செய்த ஒப்பந்தகாரர் ரவியை மாநகராட்சி பாராட்டுகிறது.

    ராஜகோரி மயானத்தில் போராளி போசன் கல்லறை இடிந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி சார்பில் உடனடியாக சென்று கல்லறை சீரமைக்கப்பட்டது.

    சாலையோரம் வியாபாரம் செய்ய அனுமதிக்கபட்ட பகுதி, அனுமதிக்கப்படாத பகுதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர் சண்.ராமநாதன் பதில் அளித்து பேசியதாவது ;-

    தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்றது. இங்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது இங்கு வாகன பார்க்கிங் பிரச்சினை உள்ளது.

    சிறிய இடமாக உள்ளதால் பலரால் வாகனங்களை நிறுாத்தி வைக்க முடியவில்லை. எனவே இனி பெரிய கோவில் பகுதியில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. திலகர் திடலில் உரிய முறையில் ரசீது கொடுத்து தான் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வருகிற 1-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்படும்.

    அதற்கு அடுத்தும் மாடுகளை சுற்றி திரிய விட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

    மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2920 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    போசன், பட்டுக்கோட்டை அழகிரி கல்லறைகள் பேணி பாதுகாக்கப்படும்.

    கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 25-வது வார்டுயில் உள்ள பெண்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தது.
    • கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது.

    இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர்.

    சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

    • பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.

    நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.

    நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.

    பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கல்.
    • சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ராவுக்கு வந்த புகாரின் பேரில் அவர் தலைமையில் அலுவலர்கள் சசிகுமார், பாலகுரு, சுப்பிரமணி, ரெங்கராஜன் ஆகியோர் போலீசார் உதவியுடன் திருவையாறு அந்தணர்குறிச்சியில் உள்ள ரெங்கராஜ் மகன் மகேஷ்வரன் (வயது 35) என்பவரது குடோனில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும். உடனே புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற கல்வி நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் மஞ்சப்பை பிரசா ரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞசப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத்தில் தனிநபர், நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் (2 எண்ணிக்கைகள்) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற மே மாதம் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2022-23-ம் நிதியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெ டுத்துச் செல்லும் வகையில்,

    2022-23-ம்நி தியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன பைகள், உரைகள் ஆகிய

    சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.

    மாநில அளவில் ஒரு முறை பயன்படுத்தும் நெகி ழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, நெகிழி இல்லாத வளாகத்தை உரு வாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும்

    3 சிறந்த வணிக நிறுவனங்க ளுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

    இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை சேலம் மாவட்ட இணையதள

    மானல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவ ணங்களில் தனிநபர், துறைத்தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென் நகல்களை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சிவா டவர்ஸ், 2-ம் தளம், எண்.1/276எ, மெய்யனூர் மெயின் ரோடு,

    சேலம் -636004 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 1.5.2023 ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது.
    • கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் மாநில பொருளாளர் கரு. தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்த உபகரணங்கள் தரமற்றதாகவும் மாணவர்கள் பயிற்சி செய்ய பயனற்றதாகவும் உள்ளன.

    நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது. கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    இதை மாணவர்கள் பயிற்சி செய்யவும் பயன்படுத்தவும் முடியாது.

    பல பொருட்கள் உடைந்து உள்ளன.

    அவையாவும் பயன்படுத்த முடியாது. எனவே அனைத்து பொருட்களும் திரும்ப பெற்று தரமான இரும்பினால் ஆன பொருட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கப், தட்டு, ஸ்ட்ரா, போர்க், ஸ்பூன் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

    அதே நேரத்தில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக மத்திய பிளாஸ்டிக் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.

    மாநில அரசின் இந்த முடிவு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணமாக இருக்கும் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை செயலாளர் சதீஷ் தாரடே தெரிவித்தாா்.

    ×