search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223386"

    • தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.
    • ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலைச் சார்ந்த பிரதீப் பால் மற்றும் குமரன் ஆகியோர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வார்ஷா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.

    கல்வி ஆலோசனை நிறுவனம் பணத்தை பெற்றுக் கொண்டு விசா மற்றும் படிப்பதற்கான வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

    ஆனால் இருவருக்கும் வார்சாவில் பயில உரிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆகவே கல்வி நிறுவனத்திடம் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். கல்வி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்தவர்கள் நுகர்வோர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர்கள் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணமான ரூ.47,600, நஷ்ட ஈடு ரூ.55,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.8,000 ஆக மொத்தம் ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும்.
    • படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.

    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.

    நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

    மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும். குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது.

    பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.

    • படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள்.
    • உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம்.

    நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல் புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல. வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும், பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?

    படித்தவற்றைச் சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்குப் பிடித்த பழங்களையோ, கடலைகளையோ, உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.

    படிப்பதைவிட மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள். வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது. படிக்கும்போதும், சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றைத் திரும்ப வாசிப்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும்.

    படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரிலிருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்கு வந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும். கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களிலிருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன்மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம்.

    காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஜாக்கிங்கூடச் செல்லலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    • கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
    • தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

    * தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

    * தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

    * தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.

    * இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.

    * தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.

    * தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.

    * தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.

    * கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    * இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.

    மலர்விழி, பெங்களூரு.

    • குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும்
    • கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்.

    நம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்திவாய்ந்த கருவி கல்வியாகும். கல்வி ஒருவருடைய அறிவையும், ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தை தரும்.கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை.

    கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.

    கல்வி ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், கருத்துப்பரிமாற்றத் திறனையும் கற்றுத்தருகிறது. கற்றவர்களுக்கு நினைத்ததை தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதோடு , மற்றவர்களின் எண்ணங்களையும் பல கோணங்களில் ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறும் வல்லமை பெற்றிருப்பர். இதனால் அவர்களால் எந்த சூழலையும் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது.

    கல்வி ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவை தருவதோடு, அதனால் அவர்களால் எந்த எந்திரத்தையும் எளிதாக உபயோகிக்க முடிகிறது மற்றும் பல துறைகளில் அவர்கள் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு தலைமுறையினரை அடுத்த தலைமுறையினருக்கு முறையாக வழி நடத்த வேண்டும் என்பதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், புதியகண்டுபிடிப்புகளுக்கும் கல்வி உதவி புரிகிறது.

    • இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

    * தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

    * தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

    * தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.

    * இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.

    * தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.

    * தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.

    * தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.

    * கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.

    * இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

    * வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.

    -ர.சவுந்தரபாண்டியன், எம்.எஸ்சி., எம்.எம்.எட்., எம்.பில்.,

    முதுகலை உயிரியல் ஆசிரியர்,

    ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி,

    அயனாவரம், சென்னை.

    • கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
    • அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது.

    உங்களுடைய பகுப்பாய்வு திறன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து ஒரு புதுமையான வணிகத் தீர்வுகளை கொடுப்பதில் உங்களுக்கு ஆர்வமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் ஒரு அருமையான படிப்பு - கணிப்பு அறிவியல் (Actuarial Science). இதனை 'காப்பீட்டு கணிப்பு அறிவியல்' என்றும் குறிப்பிடுவர்.

    கணிப்பு அறிவியல் (Actuarial Science) என்பது ஒரு வணிகத்தொழிலில் உள்ள எதிர்கால மற்றும் நிச்சயமில்லாத நிதி ஆபத்துகளை கணிதம் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும் ஒரு உன்னதமான தொழில் படிப்பு ஆகும். அதிக ஊதியம் கிடைக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறைய தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பல்வேறு நிதி பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கின்றன. இதுபோன்ற எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத நிதி ஆபத்துகளைக் கையாள உலகம் முழுவதும் கணிப்பு அறிவியலுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

    மேலும், கொரோனா பெருந்தொற்றால் நிறைய மக்கள் இறந்ததால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மேல் மக்கள் கவனம் பெருவாரியாக திரும்பியுள்ளது. இதனால், ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களிலும் கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

    கணிப்பு அறிவியலாளர் பணி என்ன?

    கணிப்பு அறிவியலாளர் வெவ்வேறு விதமான தரவு மற்றும் தகவல்களை கணக்கிட்டு, எதிர்பார்க்காத மற்றும் விரும்பத்தகாத தோல்விகளுக்கான சாத்தியக்கூறுகளை தகர்த்தெடுக்க தேவையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை வழங்குவார். நிதி ஆபத்து உள்ள அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், அரசு நிதி துறை.

    நிதி கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் போதுமான நிதி இருக்கிறதா என்பதை கண்காணித்தல்.

    காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை தீர்மானித்தல்.

    இழப்புகளை குறைக்க காப்பீடு அபாயங்களை கண்காணித்தல்.

    பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுவதை கணித்து, காப்பீடு கொள்கைகளை உருவாக்கும்போது இந்த அபாயங்களை இணைத்துக்கொள்ளுதல்.

    நிறுவனத்தின் நிதி திட்டமிடுதலுக்கான அபாயத்தை மதிப்பிடுதல்.

    சேர்க்கை நடைமுறை

    இந்தியாவில் இந்தக் கல்வி கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கணிப்பு அறிவியல் (Actuarial Science) சார்ந்த இளநிலை பட்டப்படிப்பிற்கு இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவாரீஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு மூலம் ACET (Actuarial Common Entrance Test) என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் சிறந்த கல்லூரியில் கணிப்பு அறிவியல் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், Institute of Actuaries (IAI) என்ற ஒருங்கிணைந்த அமைப்பில் உறுப்பினராகவும் இருக்க முடியும்.

    பொது நுழைவுத்தேர்வு

    கணிப்பு அறிவியல் கல்விக்கான பொது நுழைவுத்தேர்வு (ACET) ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்தப்படுகிறது.

    10 மற்றும் 12-ம் வகுப்பில் கணித பாடம் படித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவர்.

    இந்தியாவில் கணிப்பு அறிவியல் கற்பிக்கும் சில கல்லூரிகள்:

    1) இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தா, 2) சேவியர் கல்லூரி, மும்பை, 3) மும்பை பல்கலைக்கழகம், மும்பை, 4) டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி, 5) லயோலா கல்லூரி, சென்னை, 6) மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை, 7) நேஷனல் இன்சூரன்ஸ் அகாடமி, புனே, 8) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி, மும்பை, கான்பூர், சென்னை மற்றும் ரூர்கீ. 9) பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.

    இந்த படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேரும் முன்பு அந்தக்கல்லூரி அரசு அங்கீகாரம் பெற்று இந்த படிப்புகளை வழங்குகிறதா மற்றும் படிப்பதற்கான வசதிகள் போன்றவற்றை மாணவர்கள் விசாரித்து தெரிந்து கொள்வது அவசியம்.

    முக்கிய தேதிகள்

    இந்த ஆண்டு நடைபெறும் கணிப்பு அறிவியல் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான (ACET) முக்கிய தேதிகள் விவரம் வருமாறு:

    விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-2-2023, மாலை 3 மணிக்குள்.

    நுழைவு தேர்வு நாள்: 18-3-2023, (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை)

    தேர்வு முடிவு அறிவிப்பு நாள்: 28-3-2023

    மேலும் கூடுதல் விவரங்களை https://actuariesindia.org என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    இந்தியாவில் கணிப்பு அறிவியல் பின்வரும் துறைகளில் செயல்படுகிறது

    ஆயுள் காப்பீடு

    பொது காப்பீடு

    மருத்துவ காப்பீடு

    மறுகாப்பீட்டு நிறுவனங்கள்

    ஓய்வூதிய நிதி ஆலோசனை அமைப்பு

    முதலீடுகள்

    அரசாங்க நிதி மேலாண்மை

    கல்விக் குழுமங்கள்

    நிறுவன இடர் மேலாண்மை

    செ. மதுக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ராமநாதபுரம்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங் கேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்
    • புதிய வகுப்பறை கட்டிட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கல்வியை பெற முடியும். நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டு க்கும் பெருமை சேர்க்க வேண்டும்

    நாகர்கோவில் :

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், தேரூர் பேரூராட்சி - தேவகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைக் கட்டி டம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங் கேற்று புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளார்கள். மாணவர் களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது கல்வியாகும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்கள் குழந்தைகளை கல்வி பயில செய்வது பெற்றோ ரின் மிக முக்கியமான கடமையாகும்.

    போட்டிகள் நிறைந்த உலகில் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட கல்வியால் மட்டுமே முடியும். கஷ்டப் பட்டு படித்தவர்கள் இன்றைய உலகில் உயர்ந்த நிலையில் உள்ளார்கள்.

    மாணவர்கள் இந்த புதிய வகுப்பறை கட்டிட வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கல்வியை பெற முடியும். நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டு க்கும் பெருமை சேர்க்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலா ளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அழகேசன், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி ஸ்ரீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • மாணவி ஆரோக்கியமேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாட்டை சேர்ந்த ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவரது தந்தை உயிரிழந்து விட்ட தால் மாணவியின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரசூர் பகுதிக்கு வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட உதவிட வேண்டும் மாணவி ஆரோக்கிய மேரி மனு அளித்து வலியுறுத்தினார்.

    அதன்படி ஆரோக்கிய மேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார். எம்.எல்.ஏ., வழங்கிய உதவித்தொகையை அவர் சார்பாக சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி , பூச்சிக்காடு கிராம கமிட்டி தலைவர் பீட்டர் ஆகியோர் மாணவி குடும்பத்திடம் வழங்கினர். அப்போது சாத்தான் குளம் வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் அன்னகணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • உலக பொதுமறைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.
    • ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கிளை தொடக்க விழாவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் என்கின்ற ஆன்மீக கல்வி நிலையம் தொடங்கும் விழா பிறவிமருந்தீசர் கோவில் மங்களநாயகி மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் விமலா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜா, வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், தொழிலதிபர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் கனகராஜன் அறிமுக உரையாற்றினார். குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆனந்த குருகுலம் என்ற அமைப்பினை இந்து சமய அறநிலையத்துறை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது,

    குழந்தைகளுக்கு இளம் பிராயத்திலேயே தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைகளையும் திருக்குறள் போன்ற உலகப் பொதுமறைகளையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. வருங்காலத்தில் நல்ல விளைவுகளை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள் என்பது நிச்சயமான ஒன்று. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேவாரம் பயிற்றுவிக்கும் ஓதுவார்களோடு இணைந்து ஒரு நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கினால் நமது நாடு உலக அரங்கில் இன்னும் மிகச்சிறந்த நாடாக திகழும். வந்திருக்கின்ற அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இது போன்ற ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். பெற்றோர்கள்தான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து முன்னாள் நகர் மன்ற தலைவர் பாண்டியன், ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் சிவக்குமார், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவர் ஸ்ரீதரன் ,நகரமன்ற உறுப்பினர் எழிலரசன், மாடன் நர்சரி பள்ளி நிர்வாகி முருகானந்தம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தணிகாசலம், பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக திருவாரூர் ஆனந்த குருகுல மாணவர்களின் தேவார இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் கிளைச் செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    சேலம்:

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை இப்பணி நடைபெறும்.

    பள்ளி செல்லா குழந்தைகள் 6 முதல் 18 வயது வரையிலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 5 முதல் 18 வயது வரையிலும் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆசிரிய பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கணக்கெடுப்பு பணியை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் வேலன், ஆசிரிய பயிற்றுநர்கள் ஸ்ரீதரன், சுரேஷ், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சிங்காரவடிவேல் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா கூறுகையில்:-

    6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் இக்கணக்கெடுப்பு பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    ×