search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
    • வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு முத்தையா பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார் காத்த பெருமாள் மனைவி சொர்ணத்தம்மாள். இவரின் வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு சுமார் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

    • சமையல் அறையில் பாம்பு மறைந்திருப்பதை கண்டவுடன் அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
    • சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பெட்டியில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் பிரபு. நேற்று இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்துக்கு பிரபு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பாம்பு இருக்கும் இடத்தை தேடினார்கள்.

    சமையல் அறையில் பாம்பு மறைந்திருப்பதை கண்டவுடன் அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பெட்டியில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    • பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் பூங்கா உள்ளது.
    • பழைய மீன் வலையில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு சிக்கி உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தவித்த நிலையில் கிடந்தது.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் பூங்கா உள்ளது. இங்கு கிடந்த பழைய மீன் வலையில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு சிக்கி உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தவித்த நிலையில் கிடந்தது.

    இந்த பூங்காவிற்கு விளையாட சென்ற சிறுவர்கள் இதை பார்த்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மற்றும் தீயணைப்புத் துறையினர் வலையில் சிக்கி தவித்த பாம்பை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

    • முத்தையா மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளம் பஜாருக்கு வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் பாம்பு ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கியது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. அப்போது கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா (வயது35) என்பவர் மோட்டார் சைக்கிளில் பஜாருக்கு வந்தார்.

    மழை வேகமாக பெய்ததால் இட்டமொழி சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்றுள்ளார்.

    அப்போது கழிவு நீரோடையில் வந்த பாம்பு ஒன்று மோட்டார் சைக்கிளில் ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கியது. அருகில் நின்றவர்கள் பதறிபோய் பாம்பை விரட்ட முய ன்றனர். அது மோட்டார் சைக்கிளை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சாத்தான்குளம் தீயணைப்புத் துறை யின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை பிடி த்து பத்திரமாக வனப் பகுதியில் விட்டனர்.

    • மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.
    • பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

    8 நாட்கள் கடந்தும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.

    சீர்காழி, தொடுவாய், வைத்தீஸ்வரன் கோவில், திருநகரி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், தோட்டங்களில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த கொடிய விஷம் கொண்ட நாகம், கோதுமை நாகம், கருநாகம் உள்ளிட்ட 8 பாம்புகளை பாம்பு பிடிக்கும் வீரரான சீர்காழி பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.விஷம் கொண்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    • நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள்.
    • மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

    பல்லடம் :

    பாம்பு வகைகளில் மண்ணுளி பாம்பும் ஒன்று. நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

    இதனால் மண் உள்ளே இருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளிப் பாம்பு என மருவி அழைக்கப்படுகிறது. இவை விவசாய நிலங்களில் உள்ள எலிகள், பூச்சிகள் போன்றவற்றை பிடித்து உண்ணும், விவசாயிகளின் நண்பனான இந்த மண்ணுளிப் பாம்புக்கு விஷம் கிடையாது. எனினும் மனிதர்களை இந்தப் பாம்பு நாக்கு மூலம் தீண்டினால் அலர்ஜி ஏற்படும். இந்த நிலையில், பல்லடம் மங்கலம் ரோடு செந்தோட்டம் பகுதியில் வசிக்கும் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சபீனா வீட்டில் புகுந்த மண்ணுளிப் பாம்பு அங்கிருந்த பூச்செடிக்குள் புகுந்து கொண்டது. இதனைப் பார்த்த சபீனா குடும்பத்தினர். அதனை சாக்கு பைக்குள் வைத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் பல்லடம் வந்தார். அவரிடம் சுமார் 4 அடி நீளம் உள்ள மண்ணுளிப் பாம்பு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    • பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பயத்தில் சத்தம் போட்டார்.
    • வீட்டில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும், அதற்கு பால் வைக்கும்படியும் கூறினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 50). இவரது மனைவி லட்சுமி. நேற்று காலை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுக்க சென்றார். அப்போது பிரிட்ஜ் அருகே 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது.

    பாம்பை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லட்சுமி பயத்தில் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் பாம்பு படம் எடுத்து ஆடுவதை பார்த்த சிலர், கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து ஆடுவது நல்லது என்றும், வீட்டில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும், அதற்கு பால் வைக்கும்படியும் கூறினர். இதையடுத்து ஆபத்தை உணராத லட்சுமி ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அந்த பாம்பு முன் வைத்தார்.

    ஆனால் பாம்பு, பாலை குடிக்காமல் தொடர்ந்து படம் எடுத்து ஆடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மேலும் சிலர் லட்சுமி வீட்டிற்கு வந்து அந்த பாம்பை பிடித்து காட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர்.

    பின்னர் லட்சுமியிடம், பாம்பு வீட்டிற்கு வந்தால் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு அல்லது பாம்புபிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை செய்ய கூடாது என அறிவுரை வழங்கினர்.

    • பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது.
    • பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேந்தவர் சிவா. இவரது நண்பர் ரகு. இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று இரவு எஸ் ஆர் கேட் பகுதிக்கு வீட்டு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற முயன்றனர். அப்போது பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து சென்றது. இதனை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.

    பைக்கை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது. அதற்குள் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது.

    கம்பு மற்றும் சில பொருட்களைக் கொண்டு பைக்கை சுற்றி தேடிப் பார்த்தனர்.

    பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர். ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியது.

    பின்னர் முன் பகுதியில் உள்ள கைப்பிடி நடுவில் உள்ள மேல் பாகத்தை கழட்டியபோது 2 அடி நீளமுள்ள பாம்பு அங்கு பதுங்கி இருந்தது. அதனை பிடித்து வெளியில் எடுத்தனர்.

    இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா் .
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே சாலைப்பா ளையம் அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்குள்ள சத்துணவுக் கூடத்துக்குள் திங்கள்கிழமை மதியம் திடீரென 3 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது.

    இதைப் பாா்த்த சத்துணவுப் பணியாளா்கள், சமூக ஆா்வலரும், பாம்பு பிடிப்பதில் பழக்கப்ப ட்டவருமான விஜய்க்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த விஜய் பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா்.

    • கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.
    • கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை.

    இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

    கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

    இதன்காரணமாக அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.

    சைவ உணவை சாப்பிடுவதால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் ஆடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் வளர்ப்பதில்லை.

    இதுபற்றி அக்கிராம மக்கள் கூறும்போது, எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இங்குள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என்றனர்.

    • தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    • சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிகாபுரத்தைச் சேர்ந்தவர் விவேக் (வயது 25). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இன்று தேவாரம் அருகே உள்ள திருக்கோட்டை பகுதியில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அங்குள்ள சிமெண்ட் கற்களை அகற்றிக்கொண்டு இருந்தபோது உள்ளே பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு சீறிப்பாய்ந்து அவரது வலது கையில் கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த விவேக்கை அருகில் இருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர்.

    உடனடியாக அவரை கடித்த பாம்பையும் உயிருடன் பிடித்தனர். தன்னை கடித்த பாம்புடன் விவேக் போடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்ததால் விவேக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், தன்னை கடித்த பாம்பு எந்த வகை என டாக்டரிடம் தெரிவிக்கவே அதை கையில் பிடித்து வந்தேன். வலியால் நான் துடித்தபோது பாம்பை அருகில் இருந்தவர்கள் உயிருடன் பிடித்தனர் என்றார். இச்சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
    • பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

    கவுகாத்தி:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர். 


    மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

    ×