search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர், தனது தலையில் ஏதே கடிப்பதை உணர்ந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக் கோடு கோழியாண்டி நடுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(வயது30). தனியார் நிறுவன ஊழிரான இவர், சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.

    மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர், தனது தலையில் ஏதே கடிப்பதை உணர்ந்தார். கடும் வலி ஏற்பட்டதையடுத்து ரோட்டின் ஓரமாக நிறுத்தி தலைக்கவசத்தை கழற்றினார். அப்போது தலை கவசத்துக்குள் இருந்து பாம்பு ஒன்று கீழே விழுந்து ஓடியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் வலி தாங்க முடியாமல் நிலைகுலைந்து நின்றார். தன்னை பாம்பு கடித்தது பற்றி அவர், அந்த வழியாக வந்தவர்களி டம் தெரிவித்து தன்னை மருத்துவமனையில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் கோவிலாண்டி பகுதியில் உள்ள தாலுகா மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பு கடித்ததும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராகுல் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.

    • நிருபர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
    • அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை பூபேஷ்பாகல் தடுத்தார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ்பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது.

    சத்தீஷ்கர் முதல் மந்திரி பூபேஷ்பாகல் இன்று காலை நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தின் நடுவே பாம்பு புகுந்தது. இதனால் நிருபர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த பாம்பை அடிக்க முயன்ற அதிகாரிகளை பூபேஷ்பாகல் தடுத்தார். அது விஷ பாம்பு அல்ல. ஒன்றும் செய்யாது விட்டு விடுங்கள் என்று கூறினார். அந்த பாம்பை வேறு பகுதிக்கு எடுத்து சென்று விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். பாம்புகளை கொல்ல வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

    நிருபர்கள் கூட்டத்தில் பாம்பு புகுந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியானது.

    • அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
    • பாம்பு அங்கு எப்படி வந்தது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளில் ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராட்சத பாம்புகளை வனப்பகுதிகள், பூங்காக்களில் தவிர்த்து பொது இடங்கள் அல்லது வீடுகளில் கண்டால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

    அங்குள்ள சியோக்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது ஷாப்பிங் செய்வதற்காக கூடையை எடுத்தபோது அதில் சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு கிடந்துள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சத்தம் போட்டார். உடனே அங்கு வந்த ஊழியர்கள் வனத்துறை மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராட்சத பாம்பை மீட்டு கொண்டு சென்றனர். அந்த பாம்பு அங்கு எப்படி வந்தது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளில் ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூா், வெள்ளிரவெளி கரையாம்புதூரைச் சோ்ந்தவா் அய்யாதுரை மனைவி செல்வராணி (வயது 50). இவா் தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது.

    இதையடுத்து அவா் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

    • 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
    • இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கண்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது.

    அதை தொடர்ந்து ஆடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் கண்டி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் யாழ்ப்பாணம் சேசிங் செய்த போது கண்டி அணியை சேர்ந்த நட்சத்திர பவுலர் இசுறு உடானா ஃபீல்டிங் செய்வதற்காக தனது அணி கேப்டன் சொன்ன இடத்தை நோக்கி திரும்பி பார்க்காமல் பின்வாக்கில் நடந்த சென்றார். அப்போது திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு அவரது அருகே சென்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் பின்னோக்கி நடந்து சென்ற அவர் திடீரென்று கிழே பார்க்கும் போது சில அடி தூரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து ஷாக் ஆனார். உறைந்து போய் தலையில் கை வைத்து பின்னர் வாயில் கை வைத்து அப்படியே மைதானத்தில் அமர்ந்தார்.


    இருப்பினும் தாமதிக்காமல் உடனடியாக அங்கிருந்து எழுந்த அவர் பாம்பு அதனுடைய ரூட்டில் விட்டு எந்த தொந்தரவும் செய்யாமல் மீண்டும் பின்னோக்கி நடந்து ஃபீல்டிங் செய்வதற்காக சென்றார். அதைத்தொடர்ந்து மெதுவாக அங்கிருந்து சென்ற பாம்பு மைதானத்திற்கு வெளியே சென்றதால் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாம்பை பிடுங்குவதற்காக பெக்கியின் கையை கழுகு கடுமையாக தாக்கியது
    • இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்

    வெட்ட வெளியில் நடந்து செல்லும் போது வானிலிருந்து காகிதங்கள், கற்கள் மற்றும் இலைகள் போன்றவை ஒருவர் மேல் விழுவது சகஜம். ஒரு சிலரை மின்னல் தாக்கியதை கேள்விபட்டிருக்கிறோம்.

    ஆனால் அபூர்வமான தாக்குதலுக்கு உள்ளானார் அமெரிக்காவில் ஒரு பெண்.

    அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி. தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு சொந்தமான பட்டறையில் சில வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது பெக்கி திறந்த வெளியில் நடந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெக்கியின் மீது வானத்திலிருந்து திடீரென ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்த போதுதான் அது ஒரு பாம்பு என அவர் உணர்ந்தார்.

    உடனே பயத்தில், "கடவுளே காப்பாற்று" என அலறியவாறே அவர் அதனை உதறி தள்ள முயற்சித்தார். ஆனால் பாம்பு பெக்கியின் வலது கையை சுற்றி கொண்டு அழுத்தியது. பெக்கி கத்திக் கொண்டே கைகளை காற்றில் உயர தூக்கி உதறிக் கொண்டேயிருந்தார்.

    ஆனால் பாம்பு அவரை விட்டு விலகாமல் அவர் முகத்தை தாக்கியது. அவர் அணிந்திருந்த கண்ணாடியையும் தாக்கியது.

    சிறிது நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு பழுப்பு-வெள்ளை நிற கழுகு, பெக்கியின் கையை தாக்கியது.

    இரு வழியிலும் தாக்குதலுக்கு உள்ளானார் பெக்கி. அவர் கணவர் செய்வதறியாது திகைத்தார்.

    தான் கவ்விக் கொண்டு போன பாம்பை தவற விட்டதால் அந்த பாம்பு பெக்கி மேல் விழுந்திருக்கிறது.

    பெக்கியின் கையிலிருந்த தனது உணவான அந்த பாம்பை பிடுங்குவதற்காக கழுகு அவர் கையை, தனது கால் நகங்களால் பிராண்டி, குத்தி காயங்களை ஏற்படுத்தியது.

    ஒரு வழியாக அந்த கழுகு கடைசியில் அவர் கையிலிருந்து அதன் இரையை மீட்டு கொண்டு பறந்தது.

    உடனடியாக அவர் கணவர், பெக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கழுகின் கால் நகங்களாலும் அலகாலும் ஏற்பட்ட காயங்களுக்கு பெக்கி அங்கு சிகிச்சை பெற்றார். பாம்பு தாக்கியதால் அவர் அணிந்திருந்த கண்ணாடி மிகவும் சேதமடைந்திருந்தது.

    இச்சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    "இது மிகவும் மோசமான தாக்குதல். நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். இச்சம்பவம் நடந்ததிலிருந்து எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. பாம்பை கழுகு கவ்வி கொண்டு செல்வதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் இச்சம்பவம் எனக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் ஒரு புதிய அனுபவம் ஆகும்."

    இவ்வாறு பெக்கி தெரிவித்தார்.

    பாம்பு, கழுகு என இரு வகை உயிரினங்களால் ஒரே நேரத்தில் பெக்கி தாக்கப்பட்டதும் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறித்து பலரும் வியந்து வருகின்றனர்.

    • வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
    • இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.

    இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.

    அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.


    இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார். 

    • கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதே போல் அந்த நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமான பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் அரியவை உயிரினங்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 30) என்ற பயணி சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது 47 அரியவகை பாம்பு மற்றும் 2 பல்லி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். 

    • வனத்துறை ஊழியர்கள் பிடித்து சென்றனர்
    • ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே முளகு மூடு பகுதியில் காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் முளகுமூடு ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். இந்நிலை யில் திடீரென 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ரேஷன் கடைக்குள் புகுந்தது. இதனை கண்ட ஊழியர் உள்பட பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.

    இதுதொடர்பாக கவுன்சி லர் பிரேமசுதா தீய ணைப்புதுறைக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். குலசேகரம் வன அலுவலர் ராஜா மற்றும் வன துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.
    • பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சீனிவாசன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கோழிப்பண்ணையில் ஒவ்வொரு நாளும் கோழி குஞ்சுகள், முட்டைகள் காணாமல் போய் கொண்டிருந்திருக்கிறது. அவரும் அதை கவனிக்கவில்லை. கீரி அல்லது நாய்கள் எடுத்திருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது பாம்பு சட்டை உரித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார். யுவராஜ் உடனடியாக விரைந்து சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது விறகு அடியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று சீறிக்கொண்டு வெளியே வந்தது. அதனை லாபகரமாக மீட்ட யுவராஜ் இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று கூறினார். மேலும் அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது.

    தற்போது குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

    • நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பல வகை பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் பாம்புகள் நநுழைந்தால் உடனடியாக தீயணைப்புத்துறை, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நகரப்பகுதி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் பாம்புகள் ஏராளமாக உள்ளன. சாரை பாம்பு துவங்கி, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன.

    இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.தகவலறியும் தீயணைப்புத்துறை, வனத்துறையில் பயிற்சி பெற்ற வீரர்கள், பாம்புகளை பிடித்து செல்கின்றனர். அதேபோல் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலரும், பாம்புகளை பிடித்து, வனத்துறையினரின் ஒப்புதலுடன் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ்கிருஷ்ணன் கூறியதாவது:-

    சாரை பாம்பு துவங்கி கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த, விஷமில்லாத பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.

    தற்போது மழைக்காலம் என்பதால், பாம்புகள் அதிக அளவில் தென்படும். பாம்புகளை மனிதர்கள் சீண்டாத வரை பாம்பு மனிதர்களை எதுவும் செய்யாது. இருப்பினும், கண்ணில் தென்படும் பாம்பு, விஷத்தன்மை உள்ளதா, விஷத்தன்மை இல்லாததா என்ற அடிப்படை புரிதலை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    உதாரணமாக கண்ணாடி விரியன் பாம்பு மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அந்த பாம்பு சீண்டினால், உடனடியாக மரணம் நிகழும் அளவுக்கு அதன் விஷம் வேகமாக உடலில் பரவும். கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.

    இதுபோல் கண்ணில் தென்படும் பாம்புகளை அடையாளம் கண்டு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிக்கு பாம்புகள் நுழையும் போது, அதுகுறித்த தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். விஷத்தன்மை நிறைந்த பாம்பு எனில் சற்று தொலைவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளை சுற்றி புதர்செடிகள் அதிகம் வளரும். அங்கு பாம்புகள் தங்குவதற்கு வாய்ப்புண்டு. எனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற சில இளைஞர்களும், ஆங்காகே பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு செல்லும் பாம்புகளை பிடிக்கின்றனர். அந்த தகவலை வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாம்பு கடித்து மாற்றுத்திறனாளி இறந்தார்.
    • பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் கொண்டுரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(வயது37), மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தபோது ஒரு பாம்பு கடித்தது. உடனடியாக காலில் கட்டு போட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பேரையூர் போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×