search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223934"

    • சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    முட்டம் பகுதியைச் சேர்ந்த யுஜின் சஜித் என்பவர் நாகர்கோவில் கே.பி ரோட்டிலுள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு வழியாக புனே செல்வதற்கு பணம் செலுத்தியிருந்தார்.

    சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு சென்றடைந்த குழு வினர் நேரமின்மை காரண மாக புனே செல்லும் விமானத்தை பிடிக்க இயல வில்லை. இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிதாக பயணச் சீட்டு பெற்று வேறு ஒரு விமானம் மூலம் புனே சென்றடைந்துள்ளனர்.

    பின்பு சுற்றுலா நிறுவ னத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்ட ணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர்கள் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமானக் கட்டணமான ரூ.60 ஆயிரம், நஷ்டஈடு ரூ.17 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.82 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் உத்தர விட்டனர்.

    • உடையப்பன் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம்.
    • நள்ளிரவில் யாரோ சிலர் அந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியி ருப்பு மணிக்கட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாமக்கண்ணன்(வயது 52).

    இவர் தனது மனைவி அருணா பெயரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக 2 வேன்களும் வைத்துள்ளார். இந்த வேன்களுக்கு சவாரி இல்லாத நேரத்தில், உடையப்பன் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம்.

    நேற்று இரவும் அவர் தனது வேன்களை சாலை யோரம் நிறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ சிலர் அந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து உள்ளனர். இன்று காலை அந்தப் பகுதி வழியாக சென்ற மக்கள் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

    இது குறித்து அவர்கள், திருநாம கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து வேன்களை பார்த்தார். பின்னர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேன் கண்ணாடிகளை உடைத்தது யார்? என்பது குறித்துஅந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி, பிப்.26-

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர். கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவர த்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்.
    • தைவானில் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    தைவான்:

    பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது...

    பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்... ஆனால் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் 60 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க முடிவு செய்துள்ளது.

    அதன்படி, 5 லட்சம் சுற்றுலாப்பயணிக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும், 90 ஆயிரம் சுற்றுலா குழுக்களுக்கு 54 ஆயிரம் ரூபாயும் தைவான் அரசு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளபட்டது
    • இந்த சுற்றுலா வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற 20 இளம் சிறார்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் மைய சிறப்பாசிரியர்களுடன் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார், கீழ்ப்பள்ளம் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் சுற்றுலா வாகனமானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சுற்றுலா வாகனத்தை வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    • சுற்றுலாத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
    • சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அழகு நிரம்பி வழியும் மாவட்டம். கடற்கரை, அருவிகள், அணைக்கட்டு என சுற்றுலாப் பயணி களை கவர்ந்திழுக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம், உல கத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தி யக்கூறு உள்ளன. ஆனால் போதிய அளவு உட்கட்ட மைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறைவாகவே காணப்படுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற் றுலா தலங்களுக்கு எந்த தடையும் இன்றி சென்று வர சாலை வசதிகள் மிக முக்கியமாக தேவைப்படு கிறது. மேலும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங் கள், தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கிய மாகும். தனியார் நிறுவனங் களுடன் இணைந்து கடல் மற்றும் மலை சார்ந்த பிர தேசங்களில் சாகச விளை யாட்டுக்கள் ஏற்படுத்தி சுற் றுலா பயணிகளை கவர இயலும். மேலும் ரெயில் மற்றும் விமான சேவையும் அவசியம் ஆகும். பிற மாநிலங்க ளில் இருந்து கன்னியாகுமரி வந்து செல்வதற்கான ரெயில் வசதிகள் குறைவாகவே உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அது போன்று கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைந்தால் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு உதவும்.

    இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு வகுத்துள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்து சுற்றுலா உட் கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கு தேவையானவற்றை சுற் றுலாத்துறை செய்து தர நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், விமான நிலையம் அமைக்கவும் அந்தந்த துறைகளுக்கு சுற்றுலா துறையின் மூல மாக பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    நாகர்கோவில்:

    உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரு கின்றனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு வழங்க பொருட்களை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாட அங்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், குளச்சல் பீச், வட்டவிளை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாைள கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் காதலர் தின நாளில் சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கொரோனா காலகட்டத்தில் கேரள சுற்றுலாத் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
    • பயணம் சாத்தியமில்லை என்றால், எந்த சுற்றுலாவும் இருக்காது.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும், இது ஒரு வரலாற்று சாதனை என்றும் மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.

    இதுப்பற்றி அவர் கூறுகையில், "2021-ல் பினராயி விஜயன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தொற்றுநோய் கடுமையாக இருந்தது. பயணம் சாத்தியமில்லை என்றால், எந்த சுற்றுலாவும் இருக்காது. இதனால் கொரோனா காலகட்டத்தில் கேரள சுற்றுலாத் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது" என கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், "கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் செயல்படுத்தத் தயாரிக்கப்பட்ட திட்டங்களில் உள்நாட்டு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் அரசாங்கம் அதன் இலக்கை அடைந்தது.

    அதன் பலனாக, கேரளாவின் வரலாற்றில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்ட ஆண்டாக 2022-ம் ஆண்டு மாறியது. அந்த ஆண்டில் மொத்தம் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்" என்றார்.

    • மதுரையில் இருந்து சக்தி பீடங்கள்-ஜோதிர்லிங்கம் கோவில்களுக்கு சுற்றுலா ெரயில்கள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மதுரை

    ஆன்மீக திருத்தலங்க ளுக்கு அனைவரும் செல்லும் வகையில் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சக்தி பீட சுற்றுலா ெரயில் மதுரையில் 2இருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி 9-ந்தேதி இந்த ரெயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.

    12-ந்தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயா வில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள பவுரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம்.

    ஒடிசா கொனார்க் சூரிய கோவில், பூரி ஜெகநாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து சுற்றுலா ரெயில் 21-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.

    நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.21 ஆயிரத்து 500 ஆகும். இந்த சுற்றுலா ெரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண் மூலமும் செய்து கொள்ளலாம்.

    இதேபோல் மாசி மகத்தை முன்னிட்டு ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ெரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து மார்ச் 3-ந்தேதி புறப்படும் சுற்றுலா ரெயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக 5-ந்தேதி உஜ்ஜைனி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு. பின்பு 6-ந்தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், 7-ந்தேதி சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், 9-ந்தேதி நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, 10-ந்தேதி பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், 11-ந் தேதி அவுரங்காபாத் குருஸ் ணேஸ்வரர் தரிசனம், 12-ந்தேதி அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், 13-ந்தேதி பார்லி வைத்தியநாதர் தரிசனம், 14-ந்தேதி ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் செய்து விட்டு சுற்றுலா ெரயில் 15-ந்தேதி மதுரை வந்து சேருகிறது.ெரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் பஸ் கட்டணம் உள்பட நபர் ஒருவருக்கு ரூ.23 ஆயிரத்து 400 கட்டணம் ஆகும்.

    இந்த கட்டணத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு கூடுதலாக கட்டணம் ரூ,7 ஆயிரத்து 100 செலுத்த வேண்டும்.

    இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
    • இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார்.

    விழாவில் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அவரது மனைவி , மகள்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கோலாட்டம், கபடி, கயிறு இழுத்தல் போட்டி, இளவட்டக் கல் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், இன்டாக் கவுரவ தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா சென்றனர்.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழியனுப்பி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு நாள் சுற்றுலாவாக திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக அவர்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழியனுப்பி வைத்தார்.


    ×