search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும் அவர் தற்போது பச்சாம்பாளையத்தில் தங்கி தேவம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • எடை 2,599 கிலோ. கிலோ ரூ. 22.20 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது.
    • மொத்தம் 69 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5 டன் தேங்காய், கொப்பரை ஆகியவற்றின் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.ஏலத்துக்கு, 6,875 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 2,599 கிலோ. கிலோ ரூ. 22.20 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 26.15.86 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,523 கிலோ. கிலோ ரூ. 60.15 முதல் ரூ. 80.85 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 78.80.

    மொத்தம் 69 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.59 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது.
    • விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி ரூ.40 கோடி மதிப்பில் பீர் மற்றும் பிராந்தி வகைகள் விற்பனையாகி வருகிறது.

    வெயில் தாக்கம் அதிகரிப்பு

    இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக பிராந்தி வகை–களை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளை விட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.

    விற்பனை அதிகரிப்பு

    அதன்படி தற்போது ேகாடை காலத்தை முன்னிட்டு வெயில் அதிகரித்து இருப்பதால், மது பிரியர்கள், பீர் வகைகளுக்கு மாறி விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது என டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கி யுள்ளது. அதன்படி சின்ன சேலம் அருகே உள்ள வி. அலம்பலம், பாக்கம்பாடி, தோட்டப்பாடி, கள்ளா நத்தம், தகரை, நாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கப்படுறது.தமிழக அரசு பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறகக தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் பதநீர் இறக்க தடையில்லை. அனுமதி ஏதும் பெறத் தேவையில்லை. ஏனெனில் பதநீர் என்பது போதையற்ற ஆரோக்கிய பானமாகும்.இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் பனை மரத்தில் இருந்து பதநீரை இறக்கி, போதை தரும் பவுடர்களை கலந்து விற்பனை செய்கின்றனர். மேலும், தென்னை மரங்களில் பல்லாக்களை கட்டி நேரடியாகவே கள் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

    இதனை அருந்தும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒருசில மாணவர்கள் போதையிலேயே இருந்து வருகிறைனர் ஏற்கனலே, சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும் சின்னசேலம் பகுதியில் படு ஜோராக நடக்கிறது.போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், இது குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தமிழக போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் நடக்கிறது.மேலும். ஒரு சில வாரங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளன. வீட்டில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலையிலேயே பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் கள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க போலீஸ் துறை தனிப்படை அமைத்து சின்னசேலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    • மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அருண்குமார் மதுவை பதுக்கி வைத்து விற்றது விசாரணையில் தெரியவந்தது.

    சிவகிரி:

    சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையில் போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காளியம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் அருண்குமார்(வயது 25) என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

    • ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 22), குமார் (35) என்பதும், சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • 1 கிலோ மீன்கள் ரூ.600 வரை விற்பனையாகிறது.
    • வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், மாயாகுளம், முத்துப் பேட்டை, மற்றும் திருப்பா லைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங் காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட 20–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன்மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து. மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் 1 கிலோ ரூ.500–க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடற்கரைப் பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது. இதனால் மீன் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக பிப்ரவரியில் கணவாய், நண்டு அதிகமாக வலையில் சிக்கும். தற்போது வாடைக்காற்று இல்லாத நிலையிலும் மீன்கள் அதிகமாக கிடைக்காததால் நாள்தோறும் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகின்றனர். இதனால் நஷ்டமடைந்துள்ள மீனவர்கள் தங்கள் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல் உட்பட படகில் வரும் சக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • பனி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் செடியி லேயே கருகுகிறது.
    • தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூ வகைகளை விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.

    பூக்கள் பறிக்கப்பட்டு சத்தியமங்கலம் விவசாயி களால் நடத்த ப்படும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் பூக்களை வாங்கி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில ங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பு கின்றனர்.

    இங்கு பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். பூக்கள் வரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் விசேஷ நாட்களின்போது பூக்களுக்கு கிராக்கி அதிகம். தற்போது பனி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் செடியி லேயே கருகுகிறது. இதனால் விளைச்சல் குறைந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    மேலும் தமிழ்நாடு, கேரளாவில் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

    சத்தி பூ மார்க்கெட்டில் இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.1,300-க்கு விற்ற மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.3 ஆயிரத்திற்கும், ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.2,900-க்கு விற்பனையானது. சம்பங்கி பூ ரூ.120-க்கு விலை உயர்ந்து விற்பனையானது.

    இதோபோல் கனகாம்பரம் ரூ.500, காக்கடா பூ ரூ.600-1175, செண்டுமல்லி ரூ.18-54, கோழிக்கொண்டைப்பூ ரூ.10-110, அரளி ரூ.100, ஜாதி முல்லை ரூ.750-1000, துளசி ரூ.40, செவ்வந்திப்பூ ரூ.100-க்கு விற்பனை யானது.

    • கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.

    மேலும் வீராணம் ஏரியில்

    தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான

    பகுதியில் கிடந்தது. இதை

    யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை.
    • சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், குமாரபுரம், பழவூர், ராதாபுரம், காவல்கிணறு, வடக்கன்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூவும் விற்பனைக்காக வருகிறது.

    மேலும் சேலத்தில் இருந்து சிவப்பு அரளியும், வெள்ளை அரளி பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்தும், மஞ்சள் கேந்தி மற்றும் பட்டர்ரோஸ் தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதியிலிருந்தும், குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள குளங்களின் மூலம் தாமரை பூவும், தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பங்கி, கோழி கொண்டை, அருகம்புல், மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு பூக்கள் தோவாளை சந்தைக்கு வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும், கேரளாவுக்கும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி இல்லை. இதனால் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. ஆனால் சுப காரியங்களும், திருமண நிகழ்ச்சிகளும் அதிகமாக இருப்பதால் பூக்களுடைய தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை. இதனால் அதன் விலை உயர்ந்து ஒரு பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கிலோ ஒன்றிற்கு பூக்களின் விலை வருமாறு:-

    மல்லிகை ரூ.1500, பிச்சி ரூ.1,550, சம்பங்கி ரூ.80, மஞ்சள் கேந்தி ரூ.65, சிவப்பு கேந்தி ரூ.65, பட்டர் ரோஸ் ரூ.130, பன்னீர் ரோஸ் ரூ.90, கோழிப்பூ ரூ.50, வாடாமல்லி ரூ. 60, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.30.

    • தேங்காய் சிரட்டை கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தேங்காய் சிரட்டைகள் மூலம் பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    கரூர்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.8-க்கு விற்பனையானது. இந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • போலீசாரின் அதிரடி சோதனையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்
    • கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு குறைந்து உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோட்டார் பகுதியில் போன் மூலமாக கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இன்று காலை கஞ்சா வியாபாரி ஒருவரை பிடித்தனர்.

    அவரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிடிபட்ட கஞ்சா வியா பாரி உதவியு டன் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா வியாபாரியை மற்ற வியாபாரிகளுடன் போனில் பேச வைத்து பொறிவைத்து போலீசார் அவர்களையும் மடக்கி பிடித்தனர். இன்று காலை முதல் மதியம் வரை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கி உள்ளனர்.

    அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை யடுத்து அவர்களை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கோட்டார் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×