search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
    • கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    நெல்லை:

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    • குழந்தை திருமணத்துக்கு உடன்படும் பெற்றோர்களுக்கு தண்டனை என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்
    • இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் ஆகியவற்றின் சார்பில் கவுல்பாளையம் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் மேகலா ஆகியோர் இணைந்து கவுல்பாளையம் கிராம மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    அப்போது அவர்கள், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண்கள் 181, 112 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா். மேலும் பெற்றோர்கள் அனைவரும் தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமண வயது நிரம்பாமல் திருமண ஏற்பாடு செய்வது குழந்தை திருமணம் என்றும், அத்தகைய செயலுக்கு உடன்படும் பெற்றோர்களும் குற்றம் புரிந்தவராகவே கருதப்பட்டு, அவர்களுக்கும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ெதரிவித்ததோடு, குழந்தை திருமணம் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி குழந்தைகளை தனியாக நீர் நிலைகளில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினா். பின்னர் அவர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

    அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.

    கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை அனுமதிக்க கூடாது என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

    இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இனி ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
    • அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

    இதில் பல டாரஸ் லாரிகள் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கின்றன. இதனால் குமரி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

    குறிப்பாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால், சாலைகள் சேதமடைந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதாக களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    அதிக பாரத்துடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இருப்பினும் அவரது எச்சரிக்கையை மீறி, டாரஸ் லாரிகள் அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்வதாகவும் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அப்போது எதிரே, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரிகள் சென்றதை பார்த்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கோழிவிளை சோதனை சாவடியில் காரை நிறுத்திய அவர், அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், அதிக பாரத்துடன் லாரிகள் செல்கின்றன. நீங்கள் என்ன செய்தீர்கள்? எத்தனை லாரிகள் சென்றன என்பதை பதிவு செய்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். சோதனை சாவடியில் இருந்த போலீசார் விழிப்புடன் பணி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்த அவர், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத்தை, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அதிக பாரத்துடன் சென்ற லாரிகளை உடனே பறிமுதல் செய்யுமாறு அப்போது கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடியாக தனிப்படை அமைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திய லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர். 10 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடி நடவடிக்கையால் நள்ளிரவிலும் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கரூர் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    கரூர்,

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூரில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாரியம்மன் கோவிலுக்கு பூத்தட்டு ஊர்வலமாக சென்ற போது அதில் கலந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஊர்வலத்தின் முன் குடிபோதையில் காவல் துறையினரிடம் தகராறு செய்தும், அந்த வழியாக அரசு வாகனம் மற்றும் வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டும் மேலும் வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    கரூர் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதன் மூலம் கரூர் மாவட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக கரூர் நகரப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள், பெண்கள் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள், கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 9498100780, 04324-296299 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    • விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    அரியலூர்.

    விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் குழு சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 தனியார் உரக்கடைகள் மீது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

    மேலும் விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது, உர விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட பின், இது தொடர்பாக அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரியலூர் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் திருமானூர் வட்டாரத்தில் உள்ள 3 தனியார் உரக்கடைகளுக்கு, ஒவ்வொரு கடைக்கும் அபராதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    தற்போது தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 2 தனியார் உரக்கடைகள் மீது ஜெயங்கொண்டம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் அபராதமாக ரூ.10 ஆயிரம் மற்றும் ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை தடை காலத்தில் உர விற்பனையில் ஈடுபட்ட 6 தனியார் உரக்கடைகள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதில் 5 உரக்கடைகளுக்கு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. செந்துறை குற்றவியல் கோர்ட்டில் மேலும் 1 தனியார் உரக்கடை மீது வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.
    • பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திராவில் இந்த யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.

    ஜோடியாக வந்த காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது.

    யானைகள் நேற்று தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன. அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.

    அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.

    நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.

    கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து வனப் பகுதிகளுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆவேசமாக யானைகள் ஓடியது. பூசாரி ஊர் கிராமத்தை ஒட்டிய நிலத்தில் மாசிலாமணி என்பவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. யானைகள் பசுமாடு மீது மோதியது. நிலைகுலைந்து விழுந்த பசுமாட்டினை யானைகள் காலால் மிதித்தன.

    இதில் உடல் நசுங்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. அங்கிருந்த காட்டு யானைகள் சோமநாயக்கன் பட்டி வழியாக திரியாலம் ஏரிக்குள் சென்றது.

    நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.

    சின்ன கம்மியம்பட்டு கிராமத்திற்குள் சென்றன. அங்கிருந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர்.

    அப்போது யானைகள் அவர்களை நோக்கி திரும்பி வந்து விரட்டியது. அந்த நேரத்தில் லோகேஷ் (வயது 28) என்ற வாலிபர் தவறி கீழே விழுந்தார்.

    அவரை காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசி விட்டு திரும்பி சென்றன.

    இதில் படுகாயம் அடைந்த லோகேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றன.

    இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    யானைகள் ஏலகிரி மலையில் ஏற வாய்ப்பு இல்லை. மலை ஓரமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650)
    • கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தோட்ட நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்கி பணியில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதன்மையான பணியாகும். கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650) என்ற எண்ணை அதிக அளவு பொதுமக்கள் கூடுமிடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் இருப்பின் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான நலவாரியங்களின் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    கூட்டத்தில் தொழிலாளர் உதவி கமிஷனர் அமலாக்கம், சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின், தொழிற்சங்க பிரநிதிகள், அரசு சார்பற்ற உறுப்பினர்கள் (ஆதிதி ராவிடர், பழங்குடியினர் இன உறுப்பினர்கள்) மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் நாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.
    • குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும்.

    கட–லூர்:

    கட–லூ–ரில், வாகன நிறுத்–தம், கழி–வ–றைக்கு கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால் உரி–மம் ரத்து செய்–யப்–படும் என்று மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா எச்–ச–ரிக்கை விடுத்–துள்–ளார்.

    கட–லூர் மாந–க–ராட்–சிக்–குட்–பட்ட பகு–தி–களில் செயல்–படும் கட்–டண கழி–வறை, வாகன நிறுத்–து–மி–டங்–கள், பூங்கா நுழைவு கட்–ட–ணம், வாக–னங்–களில் கொண்டு வந்து பொருட்–களை விற்–பனை செய்–தல், சாலையோரங்–களில் தரைக்–கடை வைத்து விற்–பனை செய்–வ–தற்கு குத்–தகை தொடர்–பான கட்–ட–ணங்–கள் ஏற்–க–னவே நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்ளது. இருப்–பி–னும் இதை மீறி சில இடங்–களில் குத்–த–கை–தாரர்–கள் பொது–மக்–க–ளி–டம் அதிக கட்–ட–ணம் வசூ–லிப்–பதாக பல்–வேறு புகார்–கள் வந்த வண்–ணம் உள்–ளது. இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–தரி ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்–திக்கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    கட–லூர் மாந–க–ராட்சி பகு–தி–யில் கட்–டண கழி–வ–றை–யில் சிறு–நீர் கழிக்க ஒரு நப–ருக்கு 1 தடவை ரூ.2, மல அறையை பயன்–ப–டுத்த ரூ.3, குளி–யல் அறையை உபயோ–கிக்க ரூ.5, கட–லூர் சில்–வர் பீச்–சில் இரு சக்–கர வாக–னத்தை நிறுத்த ரூ.3, ஆட்டோ, கார், ஜீப் போன்ற இலகு ரக வாக–னங்–க–ளுக்கு ரூ.5, வேன், பஸ்–க–ளுக்கு ரூ.10, சுப்–பு–ரா–ய–லு–ந–கர் பூங்கா நுழைவு கட்–ட–ணம் ரூ.5, விளை–யாட்டு உப–க–ரணங்–களை பயன்–ப–டுத்த 7 வயது வரை உள்ள சிறு–வர், சிறு–மி–க–ளுக்கு 15 நிமி–டங்–க–ளுக்கு நபர் ஒரு–வ–ருக்கு ரூ.5 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.

    கட–லூர் மாந–க–ராட்சி எல்லைபகு–திக்–குள் வாக–னங்–கள் மூலம் பொருட்–கள் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு, லாரி மற்–றும் வேன்–களில் கொண்டு வந்து விற்–பனை செய்–வ–தற்கு நாள் 1-க்கு 30, மூன்று சக்–கர ரிக்ஷா, இரு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, நான்கு சக்–கர வாக–னத்–தில் பொருட்–கள் விற்–பனை செய்ய ரூ.10, சைக்–கி–ளில் கொண்டு வந்து விற்–பனைசெய்ய ரூ.10 கட்–ட–ணம் நிர்–ண–யம் செய்–யப்–பட்–டுள்–ளது.

    உரி–மம் ரத்து

    சாலையோரங்–களில் கடை வைத்து தயிர், மோர், கீரை கூடை–களில் வைத்து வியா–பா–ரம் செய்ய கூடை ஒன்–றுக்கு ரூ.5, குறைந்–த–பட்ச இடத்–தில் வைத்து வியா–பா–ரம் செய்யரூ.10, ரூ.15 கட்–ட–ணம் வசூ–லிக்–கப்–ப–டு–கிறது.

    ஆகவே மாந–க–ராட்–சி–யால் நிர்–ண–யிக்–கப்–பட்ட கட்–ட–ணங்–களை செலுத்–து–மாறு பொது–மக்–கள் கேட்–டுக் கொள்–ளப்–படுகிறார்கள். குத்–த–கை–தா–ரர் அதிக கட்–ட–ணம் செலுத்த கேட்–டால், மாந–க–ராட்–சிக்கு உட–ன–டி–யாக புகார் தெரி–விக்–க–லாம். இதை மீறி யாரே–னும் கூடு–தல் கட்–ட–ணம் வசூ–லித்–தால், குத்–தகை உரி–மம் ரத்து செய்–யப்–படும். இவ்–வாறு அவர்– தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து இடையூறாக போர்டு வைக்க கூடாது என அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசியல் கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் அதிக பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய நிகழ்விற்காக வைக்கப்படும் பதாகைகளை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்குள் எடுத்துவிட வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பதாகைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    ×