search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்புகள்"

    • கடைகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
    • அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கிரிவலப்பாதையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப்பாதையை சுற்றி தடுப்புகள் அமைத்து வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

    கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனிடையே 74 கடைகளை காலி செய்யுமாறு பழனி தேவஸ்தானம் அளித்த நோட்டீசை எதிர்த்து 2015-ம் ஆண்டு வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்த வழக்கில் மேல் முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கில் பழனி தேவஸ்தானத்துக்கு சொந்தமான குடமுழுக்கு நினைவரங்க பகுதியில் உள்ள 36 கடைகள், தண்டபாணி நிலைய வளாக கடைகள் 11, மங்கலம்மாள் மண்டப கடைகள் 7 உள்பட மொத்தம் 74 கடைகளை ஜூலை 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி தேவஸ்தானம் சார்பில் அங்கிருந்த கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து கால அவகாசம் முடிந்த நிலையில் நேற்றே பல வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்தனர். மீதி இருந்த கடைகளை அகற்றும் பணிக்காக கோவில் செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர்.

    அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் இது பட்டா இடத்தில் உள்ளது என்றும் காலி செய்ய தேவையில்லை எனவும் அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டு உத்தரவை காட்டி அதன்படி செயல்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனி அடிவாரத்தில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    • விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
    • நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.

    இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

    கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது.
    • வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது.

    சென்னை:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னை நகரம் வெள்ளக்காடானது. சென்னையில் பெரும்பாலான இடங்கள் சுமார் ஒரு வாரம் வரை வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.

    இதேபோல் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போதும், சென்னையில் வெள்ள பாதிப்பு தவிர்க்க முடியாததாக தொடர்ந்து வருகிறது. எனவே சென்னையில், தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களை தூர்வாருவதற்கு சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி உள்ளது. இதற்காக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குடிசைகள் மட்டுமின்றி பெரிய அளவிலான கட்டிடங்களும் உள்ளன. வீடுகள், சிறு தொழிற்சாலைகள், உணவு விடுதிகள ஆகியவை ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் உள்ளன. சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்க இதுபோன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாகும். ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளம் வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    இதற்கிடையே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

    சென்னையில், பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய நிலையில், அங்கு செல்வதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

    மேலும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் திரும்ப பெறப்பட்டதும் ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கும். அதற்கு முன்பாக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.
    • காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணைத் தலைவா் மு.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக காங்கயம் பேருந்து நிலையம் அருகில், திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

    எனவே, திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
    • நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கோவில் நகரமான சிதம்பரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாமேனன் தலைமையில் வர்த்தக சங்கத்தினர், சிதம்பரம் நகராட்சியினர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நெடுஞ்சாலை த்துறை உதவி பொறி யாளர் விஜய ராகவன் தலைமை யிலான ஊழியர்கள் ஜே.சி.பி. பொக்லைன் எந்திரங்க ளின் உதவியுடன் சிதம்ப ரம் ரத வீதிகளில் உள்ள சாலைகளில் ஆக்கிரமி ப்புகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால், நெடு ஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுப்பணி நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருந்தது.
    • தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி நகரில் பிரதான கால்வாயாக உள்ள ராஜ வாய்க்கால் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பிரிந்து தேனி பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை செல்கிறது.

    பொதுப்பணி நீர்வள த்துறைக்கு சொந்தமான இந்த கால்வாய் பகுதி 30 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளாக பகுதி என ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிர மிப்புகளால் ராஜவாய்க்கால் அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே போய் சாக்கடை போல் மாறி விட்டது. அதன்காரணமாக கால்வாயில் நீர் செல்வது அரிதாகி விட்டது. மேலும் சாக்கடை போல் மாறிய கால்வாய் பகுதியில் ஆக்கிர மிப்பு மற்றும் கழிவுகள் அடைக்கப்பட்டிருப்பதால் மழை பெய்யும் நாட்களில் தேனி நகரில் வழிந்தோடும் நீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கும் அவலநிலை ஏற்பட்டு வந்தது.

    இதனால் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ராஜ வாய்க்கால் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நட வடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

    இந்நிலையில் தேனியை சேர்ந்த தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேனியில் உள்ள பிரதான ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடக்கப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, பொதுப்பணி நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தேனி கொட்டக்குடி ஆற்றில் இருந்து தாமரைக் குளம் கண்மாய் பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு வருகின்றன.

    இவற்றில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகள் கட்டிடங்களுக்கு பின்புறமே எடுக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசவோ, பரபரப்போ ஏற்படுத்த வில்லை. ஆனால் ராஜவாய்க்கால் பகுதி தேனி பழைய பஸ் நிலையத்தின் வழியாக அடியில் செல்வ தால் பழைய பஸ் நிலை யத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள், மாடியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட், தரை வாடகை கடைகள் போன்றவை அகற்றப்பட்டது. அதனால் தேனி பழைய பஸ் நிலை யத்தின் வழியாக பஸ்கள் வந்து செல்ல அனுமதிக்க ப்படாமல் தற்காலிகமாக பஸ்நிலையம் மூடப்பட்டது.

    இதனால் தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் பஸ்கள் சாலை பகுதியிலே பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதற்கிடையே பழைய பஸ் நிலையத்திற்கு வெளியே தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் தூர் வாரும் பணியும் நடந்தது. இதன்கார ணமாக பொதுமக்கள் மத்தியில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து காட்டு தீ போல் பரவி பரபரப்பை ஏற்படு த்தியது.

    தேனி ராஜவா ய்க்கால் ஆக்கிரமிப்புகளை மீட்க பழைய பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிக்கப்பட்டதை பொதுமக்கள் ஆர்வத்துட னும், ஆச்சரியத்துடன் பார்த்து, பரபரப்பாக பேசிவிட்டு சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேனி-மதுரை சாலையில் ராஜவாய்க்கால் செல்லும் தாமரைக்குளம் வரை பாரபட்சமின்றி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன
    • தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும்

    காங்கயம்,அக்.2-

    காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நேரடி ஆய்வின்போது, கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் தங்களது கடைகளுக்கு முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாவே அகற்றி கொள்ள வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • தருமபுரி நகர பஸ் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி நகராட்சிக்குட்பட்ட டவுன் பஸ் நிலையத்தை பூ வியாபாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆக்கிரமிப்பால் பஸ்சுக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வெட்ட வெளியில் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    தருமபுரி நகராட்சி உட்பட்ட பகுதியில் புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையம் என்று தனித்தனியாக இயங்கி வருகிறது. இதில் நகர பஸ்நிலையம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பரப்பரப்பாக காணப்படும்.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், காரிமங்கலம், தொப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தருமபுரி நகரப் பகுதிக்கு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூருக்கு பயணம் செல்லும் பயணிகள் என்று பல்வேறு தரப்பினர் டவுன் பஸ்சில் பயணம் செய்து நகர பஸ் நிலையத்தை வந்து அடைகின்றனர்.

    பின்னர் டவுன் பஸ் நிலையத்திலிருந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில் பயிற்சி கல்லூரி, செட்டிகரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்கின்றனர்.

    இவ்வாறு இருக்கையில் தருமபுரி மாவட்டத்தில் கிராமம் பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை டவுன் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இதன்காரணமாக பூவியாபாரிகள் டவுன் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்காக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் மற்றும் பஸ் நிறுத்துமிடம் என பகுதிகளை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நிற்பதற்கு கூட இடமின்றி வெட்ட வெளியில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக மழையோ, வெயிலோ அதிகமாக இருக்கும் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் கூறும் போது:-

    தருமபுரி நகர பஸ் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தருமபுரி மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து வரும் டவுன் பஸ்கள் உள் நுழைவதற்கே இடம் இன்றி ஊர்ந்து செல்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

    மேலும் நகர பஸ்நிலையத்திலிருந்து பள்ளி, கல்லூரி செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருக்கும் போது மாணவ, மாணவிகள் நிற்பதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    டவுன் பஸ் நிலையத்ைத ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூ வியாபாரம் செய்வதற்கு பூ வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் ன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Removal of encroachments on houses built encroaching on streets in Veypur
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் கிராம தெரு என்பது கடந்த காலங்களில் மிகவும் அகலமானதாக இருந்துள்ளது. நாளைடைவில் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை தங்களது பட்டா இடத்தை தாண்டி தெருக்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர்.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் தேங்கி நின்றது. அப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை . இக்குறைகளை போக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வேப்பூர் கிராம தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன.இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.

    • பெரம்பலூரில் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
    • பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் நேற்று அகற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடந்தது. பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார். இதன்படி நகராட்சி ஆணையர் (பொ) ராதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் உழவர் சந்தை அருகில் ஆக்கி ரமித்து கட்டப்ப ட்டிருந்த தரைக்கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியபாரிகள் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல்
    • 2 மணி நேர ஆய்வுக்கு பின் மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கழிவ றையை பார்வையிட்டார். கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். கடைகளில் ஆக்கிரமித்து கட்டி இருந்ததை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

    மதுபோதையில் சிலர் அங்கேயே படுத்திருந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சுமார் 2 மணி நேரம் பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயணி கள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையம் தற்பொழுது ரூ.2.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு வடசேரியில் ஒருங்கி ணைந்த பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்து வதற்கு தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட் டுள்ளது. அந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்திற்குள் நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்தில் பில்லிங் மெஷின் செயல்படாமல் உள்ளதாக தெரிவித்தனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குருஞ்சி பஜார் மற்றும் பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இரவு நேரங்களில் பயணிகளுக்கு குடிபோதையில் சிலர் இடையூறு செய்வதாக புகார் வந்துள்ளது. சிலர் குடிபோதையில் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கி விடுகிறார்கள்.

    குடிபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றி திரிபவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து கழிவுநீர்களை இரவு நேரத்தில் பஸ் நிலை யத்திற்குள் கொட்டுவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாகவும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்பிரமணியன், கவுன்சிலர் கலாராணி மற்றும் நிர்வாகி கள் உடன் இருந்தனர்.

    • கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர்.
    • நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தியாகும்.

    கடலூர் :

    வடலூர் நகரில் சமீப காலமாக வாகன போக்கு வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடலூர் பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் பெரும்பாலும் மாற்று இடங்களில் செயல்பட துவங்கி உள்ளன. இந்த கடைகள் பண்ருட்டி சாலையில் அதிக அளவில் செயல்படுகின்றன. ஓட்டல்கள், டீக்கடைகள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கடைகள் இந்தப் பகுதியில் செயல்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இது போன்ற சூழலில் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வருவோர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக ெரயில்வே கேட் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் 2 பேரும், நேற்று மாலை நடந்த விபத்தில் மேலும் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் என்பது சோகமான செய்தி யாகும். குறிப்பாக ெரயில்வே கேட் அருகே உள்ள அசைவ ஓட்டலுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையி லேயே நிறுத்தி விட்டு செல்வது பெரும் இடையூறாக உள்ளது. இதே போல புதிதாக துவக்க ப்பட்ட பல டீக்கடைகள் முன்பு நிறுத்த ப்படும் வாகனங்க ளாலும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை கவனத்தில் கொண்டு போலீ சார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    எனவே, வடலூர் 4 முனை சந்திப்பிலிருந்து பண்ருட்டி சாலையில் நெய்சர் பஸ் நிறுத்தம் வரை சாலை ஓரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைகள் முன் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மாற்று இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெய்வேலி இந்திரா நகர் முதல் மறுவாய் வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. 60 அடி சாலையின் நடுவில் 30 அடி மட்டுமே புது சாலை போடப்பட்டதால் 2 புறமும் பழைய சாலைகள் அப்படியே உள்ளன. இதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் பிற வாகனங்களுக்கு வழி விடும்போது 2 சாலைகளுக்கும் நடுவே உள்ள உயர வித்தியாசத்தால் சறுக்கி கீழே விழும் நிலை உள்ளது. அப்போது வரும் கனரக வாகனத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே இந்த சாலைகளை பழைய நிலையிலையே அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

    ×