search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226642"

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

    கொடைரோடு:

    தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சீமான் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு தனியார் பஸ்சில் தூத்துக்குடிக்கு சென்றனர். அவர்கள் இன்று காலை திண்டுக்கல் அடுத்துள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

    அதற்கு எங்கள் கட்சி கொடியை பார்த்ததும் கட்டணம் கேட்பீர்களா என அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். கட்டணம் செலுத்தாமல் செல்ல முடியாது எனக்கூறி அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்தினர். இதனால் அக்கட்சி நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் பணிக்கு செல்லும் ஊழியர்களும், மற்ற வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.

    • சாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சமரச கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூய்மைப் படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வாய்க்காலில் கால்நடைகள் விழுந்து இறந்து பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கால்வாயை சுத்தப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சமரச கூட்டம் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஐயப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். அப்போது வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
    • இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கப்பலூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி கப்பலூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100ரூபாயும், 24மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.3280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.160-ம் 24மணி நேர பயன்பாட்டிற்கு ரூ.240-ம், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.5 ஆயிரத்து 295 ஆகவும், 2 அச்சு கனரக வாகனம், பஸ்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.335, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.500, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.11095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    3 அச்சு கனரக வாகனங்க ளுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.365-ம், 24 மணி நேர பயன்பாட்டு கட்டணம் ரூ.545-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.12,105 ஆகவும், 4 முதல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்கள் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.520-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.785-ம், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.17 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்த ப்பட்டுள்ளது.

    7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.635-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.955-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.21 ஆயிரத்து 180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்களும், வாடகை வாகன ஓட்டிகளும், கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெட்ேரால், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் ேபாக்குவரத்து செலவு கடுமையாக அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும்.
    • பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

    சென்னை:

    சென்னை-புதுச்சேரி நெடுஞ்சாலையில் உத்தண்டி, மாமல்லபுரம், அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்.

    சென்னை-மாமல்லபுரம் இடையே சுற்றுலா போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கடந்த ஆகஸ்டு மாதம் முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களுக்கும் அக்கரை-மாமல்லபுரம் வரையிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    தற்போது இந்த பகுதியில் சுங்க கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும்.

    சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.47, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.70, ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128, மாதாந்திர கட்டணம் ரூ.2,721 ஆகும். இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கட்டணம் ஆகும்.

    பேருந்து, இருசக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.157, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.236 கட்டணம் ஆகும். 3 சக்கர வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.172, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.258 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.247, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள், 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.301, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.451 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆகும். பள்ளிப் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.1900 ஆகும்.

    • தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
    • அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.

    சென்னை :

    இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது.

    சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.

    இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

    இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும், அதேவேளையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சுங்கச்சாவடிகளில் 40 சதவீத கட்டணம் குறைக்கப்படும், 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது வணிகர்கள், வாகன உரிமையாளர்களை மட்டுமல்லாமல் மக்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏப்ரல் 1-ந்தேதி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
    • சுங்கச்சாவடி பகுதிகளில் வசிப்பவர்களின் வணிகம் அல்லாத வாகனங்கள் மட்டும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வழியாக திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி சாலை, மீஞ்சூர் ஆகியவற்றுடன் இணைக்கிறது.

    இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேண்டு கோளுக்கிணங்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முதல் மாநில நெடுஞ்சாலை இதுவாகும்.

    சாலையின் சுங்கக் கட்டணம், செயல்பாடு, நிர்வாகம், பராமரிப்பு ஆகியவை 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தனியாருக்கு விடப்படுகிறது. இதற்கான ஏலம் விரைவில் விடப்படுகிறது. இதன் மூலம் ரூ.1000 கோடி திரட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 4 சுங்கச் சாவடிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, பழவேடு, சின்ன முல்லைவாயல் ஆகிய 4 இடங்களில் இந்த சுங்கச் சாவடி அமைக்கப்படுகிறது. இந்த 4 சுங்கச் சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தினமும் 36 ஆயிரம் வாகனங்களில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந்தேதி சுங்க கட்டணம் திருத்தி அமைக்கப்படும். வரதராஜபுரத்தில் சுங்கச்சாவடி அமைய உள்ள இடம் வழியாக கடந்த ஆண்டு தினமும் 21,390 வாகனங்கள் சென்றன. அது இந்த ஆண்டு 36,760 ஆகவும், 2042-ம் ஆண்டு 58,227 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொளப்பஞ்சேரியில் இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு வாகனங்களின் எண்ணிக்கை 35,760 ஆகவும், பழவேடு பகுதியில் 24,723 ஆகவும், சின்ன முல்லைவாயலில் 12,557 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் எதிர்பார்த்த கட்டண வசூல் கிடைக்கா விட்டால் ஒப்பந்த காலத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி பகுதிகளில் வசிப்பவர்களின் வணிகம் அல்லாத வாகனங்கள் மட்டும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.

    • பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
    • இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வருகை தருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு சுங்ககட்டணம் வசூலிக்கும் நடைமேடைகள் தவிர சென்னை நோக்கி மற்றும் செங்கல்பட்டு நோக்கி என இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்கள் செல்ல சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில்தான் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதற்கிடையே திடீரென இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வேகத்தடைகளை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவர்கள் வேகத்தடையை கடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி கீழே விழுவதும் பதறுவதுமாகவும் இருந்து வருகின்றனர்.

    வேகத்தடை என்ற பெயரில் விபத்துமேடை அமைத்திருப்பதாக அந்த வேகத்தடையை கடக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது. மேலும் அந்த வேகத்தடையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    • அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.

    அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    • சென்னையில் இருந்து கோவை செல்ல 505 கி.மீ ஆகும். இந்த வழியில் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு இதுவரை ரூ.580 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி கோவை செல்ல ரூ.695 கட்டணம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதி, செப்டம்பர் 1-ந்தேதி ஆகிய 2 கட்டங்களாக கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

    விக்கிரவாண்டி, கொடைரோடு, மனவாசி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நத்தக்கரை, பாளையம், வீரசோழபுரம், எலியார்பதி, பொன்னம்பலபட்டி உள்ளிட்ட 20 சுங்கச் சாவடிகளில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வின் படி கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் ரூ.90-ல் இருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பலமுறை சுங்கச்சாவடிகளை கடக்க வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.135-ல் இருந்து ரூ.150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு காரில் செல்பவர்கள் கூடுதலாக ரூ.115 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

    சென்னையில் இருந்து கோவை செல்ல 505 கி.மீ ஆகும். இந்த வழியில் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு இதுவரை ரூ.580 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி கோவை செல்ல ரூ.695 கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ரூ.115 கூடுதலாக செலுத்த வேண்டும். இதேபோல் சென்னை-நாகர்கோவில் இடையே உள்ள தூரம் 705 கி.மீ ஆகும்.

    இந்த வழியில் ஏற்கனவே 13 சுங்கச்சாவடிகள் உள்ளன. நாகர்கோவில் செல்ல இதுவரை ரூ.955 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி சுங்க கட்டணமாக ரூ.1055 செலுத்த வேண்டும்.

    சென்னை-மதுரை இடையிலான தூரம் 462 கி.மீ ஆகும். இந்த வழியில் 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்ல இதுவரை ரூ.585 சுங்ககட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி ரூ.645 செலுத்த வேண்டும்.

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு 346 கி.மீ தூரம் ஆகும். இந்த வழியில் 7 சுங்கச்சாவடிகள் உள்ளன. சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல ஏற்கனவே ரூ.430 சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இனி ரூ.460 கட்டணம் செலுத்த வேண்டும்.

    கல்லக்குடி சுங்கச்சாவடி கடந்த மே மாதமும், மண கெதி சுங்கச்சாவடி கடந்த ஜூன் மாதமும் செயல்பட தொடங்கியது. இந்த சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்க தொடங்கவில்லை. இதே போல் மணவாளநல்லூர் சுங்கச்சாவடியிலும் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

    இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்பதால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்களும், வணிகர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    சென்னை

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 53 இடங்களில் இவை உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1-ந் தேதி முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகள் இந்த பட்டியலில் வருகின்றன.

    விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

    பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    ×