search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • 75 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • 142 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய 206 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 142 பேரின் வங்கிக் கணக்கு களை போலீசார் முடக்கி உள்ளனர்.கைது செய்யப்பட்ட 142 பேரில் 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்க ளையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள்.இந்த ஆண்டு 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடிதடி வழக்கில் 28 பேரும் பாலியல் வழக்கில் 7 பேரும் திருட்டு வழக்கில் 9 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் என மொத்தம் 75 பேர்குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

    102 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருட்டு வழக்குகளை பொருத்தமட்டில் மாவட்டம் முழுவதும் 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 352 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. 2 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் காணாமல் போன செல் போன்களை கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதான் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டில் 722 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.86 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்கள் மீதும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் 1325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 696 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 17ஆயிரத்து 307 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. 1030 விபத்துக்கள் நடந்ததில் 1462 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 270 பேர் பலியாகி உள்ளனர்.

    • சிறப்பு பிரார்த்தனையில் ஆயர்கள் பங்கேற்பு
    • புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நாகர்கோவில்:

    2023-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்டம் ஆயர் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கிருந்த வர்கள் புத்தாண்டு வாழ்த் துக்களை பரிமாறிக் கொண் டனர்.

    சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையா தலைமையில் மருதூர் குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை நடந்தது.கொற்றிகோடு மீட் நகர் சி.எஸ்.ஐ. ஆலயம், எஸ்.டி. மங்காடுவாவறை சாரோன் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இன்று காலையில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்கள் வீதிகளில் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி யும் புத்தாண்டை வரவேற்ற னர். நண்பர்களும் உறவி னர்களும் ஒருவருக்கொருவர் இரவு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்த நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக இருந்தது. இன்று காலை யில் சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் கடலில் கால் நனைப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கடற்கரை ஓரங்களில் குடும்பத்தோடு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். வீடுகளில் இருந்தபடியும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேச்சு
    • வசதிகளை அதிகரித்தால் கன்னியாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சமர்ப்பித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பி னர் விஜய்வசந்த் பேசிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த தேவை யான நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க குஜ ராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்தது போன்று கன்னி யாகுமரியில் பெருந்தலைவர் காமராஜ ருக்கு சிலை அமைக்க வேண்டும்.

    மேலும் குமரி மாவட்டத் தில் தேவையான ரெயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி கள் இல்லாததால் கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கு வர பிற மாநில மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பணிகள் பயன் பெறும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக கன்னி யாகுமரிக்கு வரும் ரெயில்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தி குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும்.

    ஒரு புறம் கடலாலும் மற்றொரு புறம் மலைகளா லும் சூழப்பட்டு பச்சை பசேல் என இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத் தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரு கின்றனர். ஆனால் வசதி களை அதிகரித்தால் கன்னி யாகுமரி உலகத்தரம் வாய்ந்த ஒரு சுற்றுலா நிலையமாக அமையும். மேலும் மிகப் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலங்களை கொண்டி ருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழி பாட்டுத் தலங்களை மேம்ப டுத்தி ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும்.

    மகா சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் அமைந் துள்ள 12 சிவாலயங்க ளுக்கு இடையே சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் மூலம் இந்த கோவில்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி மக்கள் அதிகமாக இந்த கோவில்களுக்கு சென்று வர கோவில்களின் சுற்று வட்டம் மற்றும் இணைப்பு சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளை சீர மைத்து மேம்படுத்தினால் இந்த கடற்கரைகள் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாறி லட்சக்க ணக்கான சுற்றுலா பயணி களை கவர்ந்து இழுக்க முடியும். மேலும் அழகான மலைத்தொடர்கள், அருவி கள், அணைகள் என சுற்று லாவுக்கு தேவையான அனைத்தையும் வரமாக பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிக கவனம் செலுத்தி சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள மக்களுக்கு அது வேலைவாய்ப்புக்கான வழிவகையை செய்து தரும்.

    குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் பட்டே லுக்கு 600 அடி உயரத்தில் சிலை அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்த்தது போல கன்னியாகுமரியிலும் முன் னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ ருக்கு வானளாவிய சிலை அமைத்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண் டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த் பேசும் போது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் கிராமங்களை மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டிய எம்.பி. விஜய் வசந்த் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படு வதை தடுக்க நிரந்தரமாக கடல் சுவர் எழுப்ப வேண் டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    மேலும் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பத்திரமாக மீட்டு வருவ தற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப் டர் இறங்குதளம் மற்றும் அதிவேக படகுகள் ஆகியவற்றை கொண்ட கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தை அமைத்து குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காதலனை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன
    • விசாரணை அதிகாரி உறுதி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23).

    கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் தனது மகன் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷரோன்ராஜின் தந்தை ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மகனின் காதலியான குமரி மாவட்ட இளம்பெண் வீட்டுக்குச் சென்று வந்தபிறகு தான் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாற சாலை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடு பட்டனர்.

    அப்போது குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷரோன்ராஜ் படித்த போது, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதும், அவரது வீட்டுக்கு சென்று வந்தபிறகு தான் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அக்டோபர் 14-ந் தேதி ஷரோன்ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கிரீஷ்மா கொடுத்த தும் இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷரோன்ராஜ் இறந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, ஷரோன்ராஜூடன் அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசார ணையில், கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து அடிக்கடி ஷரோன் ராஜிக்கு கொடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையில் கொலைக்கான தடயங்களை மறைத்ததாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டை யாரோ உடைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வழக்கில் திடீர் திருப்பமாக, தான் ஷரோன்ராஜை கொலை செய்யவில்லை என்றும், போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக கசாயத்தில் விஷம் கலந்ததாக ஒப்புக் கொண்டேன் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    அவரது வாக்குமூலத்தால் வழக்கு விசாரணை பாதிக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதனை வழக்கின் விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். ஷரோன்ராஜை, கிரீஷ்மா ெகாலை செய்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக சேகரித்துள்ளோம். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம். கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளோம். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறினார்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்சு நிறு வனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜேஸ். இவர் ஒரு தனியார் இன்சூரன்சு நிறுவனத்திடம் 'ஹெல்த் இன்சூரன்சு பாலிசி' எடுத்திருந்தார்.

    அதன் பின்னர் உடல் நிலைக் குறைவால் பாதிக்க ப்பட்ட அருள் ராஜேஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உள்ளார். சிகிச்சைக்காக ரூ. 24,450 செலுத்திய அவர், இந்த பணத்தை இன்சூரன்சு நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் கேட்டார். ஆனால் இன்சூரன்சு நிறு வனம் சரியான காரண ங்களை கூறாமல் சிகிச்சை க்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் ராஜேஸ் வழக்க றிஞர் மூலம் இன்சூரன்சு நிறுவனத்திற்கு நோட்டீசு அனுப்பினார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் இன்சூரன்சு நிறுவனத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சை க்காக ஏற்கனவே செலவ ழித்த ரூ. 24 ஆயிரத்து 785, நஷ்ட ஈடாக ரூ. 20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம், ஆக மொத்தம் ரூ.59ஆயிரத்து 755-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
    • உயர்மட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணி கள் குறித்து, உயர் மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலை மையில் நடைபெற்றது.

    ஆய்வுக்கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட் சிகள் ஊராட்சி கள். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை, போக்குவ ரத்துத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார் பில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும். முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற் ெகாள்ளப்பட்டதோடு, ஒவ்வொரு துறைக்கும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகள் குறித்து கேட்ட றியப்பட்டது.

    பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு, கட்ட டம், கடலரிப்பு தடுப்புக் கோட்டம், நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம்மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி களை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட டது. வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகளில் ஏதேனும் தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்படின் அது குறித்து மாவட்ட நிர் வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த மோகன் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் உட்பட அனைத் துத்துறை சார்ந்த அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டனர்.

    • 745 பேர் மீது வழக்கு
    • கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய 745 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் மப்டி உடையில் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் சோதனை செய்தனர். வருகை பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டும் தங்கி உள்ளார்களா? வேறு நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சென்னை கோவை பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து வந்த ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலை யத்திலிருந்து வெளியூருக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    பிளாட்ஃபாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.கன்னியாகுமரி நாங்குநேரி வள்ளியூர் இரணியல் குழித்துறை ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி களியக்கா விளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    • அருவியில் ஆனந்தமாக நீராடினர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நகர் பகுதிகளில் சாரல் மழையும் புறநகர் பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைப்பகுதி களில் நீடித்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து கணிசமான அளவில் உள்ளது. கொட்டாரத்தில் 2.5 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 1.4 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி, மயிலாடி பகுதிகளில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு 748 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து முறையே 585, 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர் மழை மற்றும் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு போன்றவற்றால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த நீராடி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராள மானோர் திற்பரப்பு வந்திருந்தனர். அவர்கள் அருவியிலும், நீச்சல் குளத்தி லும் குடும்பத்தினருடன் நீராடி மகிழந்தனர்.

    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்
    • இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்

    கன்னியாகுமரி:

    கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. இதை யொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் உள்பட பல கோவில்களில் கார்த்திகை தீபத் திரு விழாவையொட்டி நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இரவு கோவில் அர்ச்சகர் பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனைஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகிவிடும்.

    அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    • வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 12, 13-ந்தேதிகளிலும் 26, 27-ந்தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் 2022 முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த 9-ந்தேதி வெளி யிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டி யலில் 7,73,553 ஆண் வாக் காளர்களும், 7,77,037 பெண் வாக்காளர்களும் 186 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த 12, 13-ந்தேதிகளிலும் 26, 27-ந்தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் நடந்தது.

    மாவட்டம் முழுவதும் 1695 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து விண்ணப்பித்தனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கன்னியா குமரி தொகுதியில் அதிக பட்சமாக 5,833 பேர் விண் ணப்பித்துள்ளனர்.

    நாகர்கோவில் தொகுதி யில் 4142 பேரும் குளச்சல் தொகுதியில் 3810 பேரும் பத்மநாபபுரம் தொகுதியில் 3421 பேரும் விளவங்கோடு தொகுதியில் 3867 பேரும் கிள்ளியூர் தொகுதியில் 4642 பேர் என மொத்தம் 25,715 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய 4456 பேர் விண்ணப்பித்துள்ளனர்.பெயர் திருத்தம், முகவரி திருத்தத்திற்கு 5026 பேரும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் சேர்க்க 2917 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த 9-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 8945 விண்ணப்பங்களும், நாகர்கோவிலில் 6775, குளச்சலில் 6501, பத்ம நாபபுரத்தில் 5538, விளவங் கோட்டில் 4861, கிள்ளியூரில் 5,494 என மொத்தம் 38,114 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    • ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார ரூ.4 கோடியில் திட்டமதிப்பீடு
    • மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் நாட்டு படகுகள், விசைப்படகுகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்பொழுது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் முறையாக நடத்த வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் குளச்சல் பகுதியில் உள்ள மீனவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கோவளம் பகுதியில் தூண்டில் வளைவுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறும்பனை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும்.

    மண்டைக்காடுபுதூர் முதல் குளச்சல் வரை உள்ள ஏ.வி.எம். கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். சைமன் காலனி ஊராட்சி பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்தூர் ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியில் சீசன் தொடங்கி இருப்பதால் நடைபாதையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    மீனவர்கள் தங்களது படகுகளை புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். ஏற்கனவே கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டத்தில் ஒரு மாதமும், கிழக்கு மாவட்டத்தில் ஒரு மாதமும் படகுகளை புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படும்.

    மேற்கு மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி குளச்சலில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். எந்த மாதத்தில் படகு புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கோவளத்தில் தூண்டில் வளைவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பெரியகாட்டில் ரூ.6 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேல்மிடாலம் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய், பாமாயில் இந்த மாதம் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் கிடைக்காதவர்களுக்கு அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் மண்எண்ணெய், பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரும் பணிக்கு ரூ.4 கோடியே 8 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    குமரி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.

    சைமன் காலனி பகுதியில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பஞ்சாயத்து தலைவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தூத்தூர் ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். கன்னியாகுமரியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×