search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.

    அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு
    • பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பொழியும் தொடர்மழை யால் ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு அடைந்துள்ளதால் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிக் கின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதா ரமாக விளங்குவது ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழிலாகும். இந்த மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தோட்டங்கள் ஆரல் வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, பாலமோர், அருமநல்லூர், சுரு ளோடு, சித்திரங்கோடு, பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, கோதையார், வேளிமலை பகுதிகள், முட்டைக்காடு, அருமனை, மருந்துகோட்டை, குமாரகோயில், வட்டம், கல்குறிச்சி, இரணியல், புதுக்கடை, பாலமோர், காஞ்சாம் புரம் மற்றும் பல ஊர் பகுதிகளிலும் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தோட்டங்களில் பல நிலைகளில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை காக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் ரப்பர் பால் வெட்டி வடிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல நிலைகளில் தோட்டங்களில் பணி புரிந்த தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கின்றனர்.

    • 23-ந்தேதி முதல் நடக்கிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டேப்செட்கோ ) மூலம் தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டங்களை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.

    அதன்படி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 24-ந் தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 25-ந் தேதியும் , கல் குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந் தேதியும் , தோவாளை தாலுகா அலுவலகத்தில் 29- ந் தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 30-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் . இந்த சிறப்பு முகாம்களில் சிறுபான்மையினர் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    தனிநபர் கடனுக்கு விண் ணப்பிக்கும்போது சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப் பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடியில் 52.4 மி.மீ. பதிவு
    • ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தென்கி ழக்கு அரபிக்கடல் பகுதி யில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது.அதிகாலை 5.30 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமு மாக காணப்பட்டது.அவ்வப் போது மழை பெய்தது.

    இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மயிலாடி, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று அதிகா லையில் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிக பட்சமாக 52.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கோழிப்போர் விளை, அடையாமடை, குருந்தன் கோடு, முள்ளங்கி னாவிளை, ஆணைக்கிடங்கு, இரணியல், குளச்சல், தக்கலை, சுருளோடு பகுதி களிலும் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவ தால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். கோதையாறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.87 அடியாக உள்ளது. அணைக்கு 1003 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 233 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.79 அடியாக உள்ளது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 14.84 அடியாக உள்ளது. அணைக்கு 239 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 733 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.அணையின் நீர்மட்டம் இன்று காலை 17.30 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழு வதும் இதுவரை 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தொழிலா ளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-23.6, பெருஞ்சாணி-14.8, சிற்றாறு-1-19.4, சிற்றார்-2-33.6, பூதப்பாண்டி-15.2, களியல்-14.8, கன்னிமார்- 12.4, கொட்டாரம்-48.4, குழித்துறை-7, மயிலாடி-52.4, நாகர்கோவில்-40.4, புத்தன் அணை-13.2, சுருளோடு-15.2, தக்கலை- 13.3, குளச்சல்-12.8, இரணியல்-22.4, பால மோர்-22.4, மாம்பழத்து றையாறு-25, திற்பரப்பு- 15.2, ஆரல்வாய்மொழி- 9.2, கோழிபோர்விளை- 17.4, அடையாமடை-27, குருந்தன்கோடு-10, முள்ளங்கினாவிளை- 12.6, ஆணைக்கிடங்கு-23, முக்கடல்-11.

    • பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நமது மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடியும்.
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கூட்டுற வுத்துறையின் சார்பில், 69-வது கூட்டுறவு வார விழா மார்த்தாண்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலை மையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் மற்றும் பயனானிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    கன்னியாகுமரி மண்ட லத்தில் 202 கூட்டுறவு சங் கங்களின் வாயிலாகபொது மக்களுக்கு தேவையான கடனுதவிகள் உட்பட பல் வேறு சேவைகள் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு தேவை யான பயிர்கடன்கள் விதை, உரங்கள். இடு பொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகியகால மற்றும் மத்தியகால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்தியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள்தோறும் தங்க ளது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது.

    கடந்த ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலை யில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்ட மாக மாற்றுவ தற்கு பல்வேறு முன்னெ டுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு வழங்கி னால் மட்டுமே நமது மாவட் டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடி யும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளப்படி ஆட்சிப்பொறுப் பேற்ற சில மாதங்களிலே தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து கூட்டுறவுத் துறையின் கீழ் 5 சவரனுக்கு (40 கிராமிற்குட்பட்ட) உட்பட்ட நகைக்கடன் வைத்திருந்த நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்திற்குட் பட்ட 24,321 நபர்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை யில் 9-வது கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், பிரின்ஸ் எம.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர் கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் ஏற்று கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி (நாகர்கோ வில் கிளை) மேலாண்மை இயக்குநர் குருசாமி, மத்திய கூட்டுறவு வங்கி (தக்கலை சரகம்) துணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகே சன், துணைப்பதிவாளர்கள் செந்தில் ஆறுமுகம், குருசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலை வர்கள் பூதலிங்கம் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு
    • இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுவும் புறநகர் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் 2 நாட்கள் குறைந்து காணப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் நேற்று மாலை மீண்டும் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிப்போர்வி ளையில் 55.2 மில்லி மீட்டரும் இரணியலில் 42 மில்லி மீட்டரும் குருந்தன்கோட்டில் 36.2 மில்லிமீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 41.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 69.68 அடியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. இந்த நிலையில் காலை 9.30 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில், சாமிதோப்பு, கொட்டாரம் என பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலக பணிக்குச் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    • குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இதன் மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

    இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் 'சிப்பி'மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர்.

    குமரி மாவட்டத்தில் குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நவம்பர் மாதம் தொடங்கியும், குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கவில்லை.

    இதனால் இப்பகுதியில் சிப்பி மீன் எடுக்கும் மீனவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக குளச்சல் அருகே கோடிமுனை கிராமத்தில் ஒரு சில மீனவர்கள் சிப்பி மீன் எடுத்து வருகின்றனர்.

    இவர்களுக்கு சிப்பி மீன் குறைவாகவே கிடைத்தது.நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட சிப்பி மீன்களை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். 100 சிப்பி மீன் ரூ.1000-க்கு விலை போனது. கடந்த 3 வருடமாக சிப்பி மீன் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    இந்த வருடமும் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.தற்போது கோடிமுனை, இனயம் கிராமங்களில் மட்டும் சிப்பி எடுக்கும் தொழில் நடக்கிறது. பிற கிராமங்களில் சிப்பி எடுக்கும் தொழிலை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத்தில் சிப்பி எடுக்கும் தொழில் மந்தமாக உள்ளது. இந்த சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இந்த வருடம் சிப்பி மீன் எடுக்கும் தொழில் மந்தமாகி உள்ளதால் கேரள வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. சிப்பி எடுக்கும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் கிரீஷ்மா இன்று ஆஜர்
    • கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டனர்

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள முன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23).

    இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மாவட்ட எல்லையில் உள்ள பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், உடல் நலக்குறைவால் ஷாரோன் ராஜ் பாதிக்கப்பட்டார். பாறசாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவரது சாவுக்கு காதலி கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோன்ராஜின் தந்தை புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரீஷ்மாவை கைது செய்து விசாரித்த போது, அவர் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்ய கடந்த 3 மாதங்களாகவே கிரீஷ்மா திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கி யிருப்பது தெரிய வந்தது. கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திரு மணம் நிச்சயமானதும், ஜாதகப்படி அவரது முதல் கணவர் இறந்து விடுவார் எனக் கூறப்பட்டதாலும் இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டதாக விசாரணை யில் தகவல் கிடைத்தது.

    போலீஸ் விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொ லைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கிரீஷ்மாவின் வீடு, இருவரும் திருமணம் செய்ததாக கூறப்பட்ட வெட்டுக்காடு தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக கிரீஷ்மா அழைத்துச் செல்லப்பட்டார்.

    நேற்று 2-வது கட்டமாக கிரீஷ்மா, குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டார். ஷாரோன்ராஜ் படித்த கல்லூரி, அவர்கள் ஜோடி யாக சுற்றித்திரிந்த சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர். அப்போது கிரீஷ்மா எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் போலீசாரிடம் பேசி உள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கொலை சதியை அரங்கேற்றிய கிரீஷ்மா, டோலோ மாத்திரையை பொடி செய்து அதனை காதலன் ஷாரோன்ராஜிக்கு கொடுத்துள்ளார். அதனை ஒரே மடக்காக குடிக்க வேண்டும் என 'ஜூஸ் சேலஞ்சு'ம் நடத்தி உள்ளார்.அதன்படி குளிர்பானத்தை குடித்த ஷாரோன்ராஜ், கசப்பாக இருந்ததால் அதனை துப்பிவிட்டாராம். இதனால் அவர் தப்பி விட்டதாக போலீஸ் விசாரணையின் போது கிரீஷ்மா தெரிவித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளிர்பானம் கசப்பாக இருப்பது பற்றி ஷாரோன்ராஜ் கேட்ட போது, அது காலாவதியானதாக இருக்கலாம் எனக் கூறி சமாளித்து விட்டதாகவும் கிரீஷ்மா கூறியுள்ளார்.

    காதலன் ஷாரோன்ராஜுடன் திற்பரப்பு விடுதியில் 2 முறை அறை எடுத்து தங்கியதாக கிரீஷ்மா விசாரணையின் போது கூறியிருந்ததால், அவரை நேற்று போலீசார் அங்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடுதி அறையில் அவர்கள் தங்கி இருந்ததற்கான பதிவேடுகளையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதன்பிறகு மாலையில் போலீசார், கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்றனர். அவரது காவல் முடிவடைந்துவிட்டதால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட னர். இன்னும் விசாரணை பாக்கி இருந்தால், கிரீஷ்மாவை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

    இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் விசாரணைக்கு பின்னர், போலீஸ் காவல் முடிவடைந்த தால், ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்ட னர் என்பது குறிப்பிடத்த க்கது.

    • தடயங்களை அழிக்க முயற்சியா?
    • கிரீஷ்மா வீட்டில் போலீஸ் வைத்த சீலை உடைத்தது யார்?

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா (வயது 22).

    இவருக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கேரள மாநிலம் முறியன் கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காதலி கிரீஷ்மா தான், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதன் அடிப்படையில் கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தடயங்களை அழித்ததாக சிந்து மற்றும் நிர்மல்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    போலீ சாரின் விசாரணை யில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தி ருப்பதும், ஜாதகப்படி கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என்பதால், காதலனை அழைத்து அவரை ஏமாற்றி கணவர் எனக் கூறி கிரீஷ்மா விஷம் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பான விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றதால், அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை ராமவர்மன் சிறையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது விஷ பாட்டிலை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அந்த வீட்டுக்கு சீல் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கிரீஷ்மாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னர்.

    தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அழைத்துச் சென்ற போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்தது எப்படி? என விசாரணை நடத்த போலீசார் திட்ட மிட்டிருந்தனர்.

    இந்த சூழலில் நேற்று யாரோ, கிரீஷ்மா வீட்டில் போலீசார் வைத்திருந்த சீலை உடைத்துள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், பளுகல் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தட யங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையில் கேரள குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடம் வந்து பார்வை யிட்டனர்.

    கிரீஷ்மாவை விசாரணைக்கு வீட்டுக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டிருந்த சூழலில், வீட்டில் போலீசார் வைத்த சீல் உடைக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்குள் புகுந்து தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருக்கலாமா? அவர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது.

    சம்பவம் தொடர்பாக இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலர் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கிரீஷ்மா வீட்டுக்கு வைத்த சீலை உடைத்தவர்கள் குறித்து பதிவு ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • வண்டலூர் பூங்கா கொண்டு செல்லப்பட்டது
    • ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரிமாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வந்த ஓகி புயலின் போது காற்றின் திசையால் அடித்து வரப்பட்ட சினேரியஸ் இனத்தை சேர்ந்த அரிய வகை கழுகு ஆசாரிபள்ளம் அருகில் விழுந்து கிடந்துள்ளது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் உடலில் காயத்துடன் பறக்க முடியாத நிலையில் இருந்த இரண்டு வயதான கழுகை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து குணமானதும் அதனை தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பல்லுயிரன பூங்காவில் விசாலமான இரும்பு வலை பின்னிய கூண்டில் விட்டனர். 2 நாள்களுக்கு ஒரு முறை மாமிச இறச்சியும், தண்ணீரும் கொடுத்து 5 வருடமாக பாதுகாத்து வந்தனர்.

    கூட்டமாக வானில் சுதந்திரமாக பறந்து திரியும் கழுகை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் அதை கழுகுகள் வாழும் பகுதியில் கொண்டு விட மாவட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டு வந்தது.ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் இருக்கும் கழுகுகள் சரணாலயத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    பின்பு அதை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை பெற்று அதன் படி திட்டமிடப்பட்டது.சாலை அல்லது ரயில் மூலம் கொண்டு சென்றால் பயண நேரம் அதிகமாகும் இதனால் கழுகின் உயிர் ஆபத்து வந்து விட கூடாது என முடிவு செய்து விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் நாய் பூனை தவிர மற்ற விலங்குகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் தமிழக வனத்துறை மூலம் மத்திய விமான துறை அமைச்சகம் மூலம் பேசி அனுமதி பெறப்பட்டது.

    இதனையடுத்து கழுகை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பிரத்தியேக பைபரில் ஆன கூண்டு தயார் செய்து அதில் வைத்து கொண்டு செல்ல நடவடிக்கைகள் நேற்று உதயகிரி கோட்டையில் வைத்து நடைபெற்றது.மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் கழுகை கொண்டு செல்ல அது 5 வருடமாக வாழ்ந்து வந்த இடத்தில் உள்ள மண் புளி இலை தரையில் உள்ள புல் ஆகியவற்றை கூண்டுக்குள் வைத்தனர்.பின்னர் கழுகிற்காக அமைக்கபட்ட தண்ணீர் தொட்டி அதனுள் வைக்க பட்டது. கழுகை பராமரித்து வந்த ஊழியர் ராஜா பைபர் கூண்டுக்குள் கொண்டு விட்டார்.

    கோட்டைக்கு வெளியே தயாராக நின்ற ஏசி காரில் பத்திரமாக புறப்பட்டு சென்றது.உதயகிரி கோட்டையில் இருந்து சென்ற கழுகு இன்று மதியம் வண்டலூர் பூங்காவிற்கு சென்று அங்கு 3 நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு நவம்பர் 3-ம் தேதி சென்னை ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் உள்ள கழுகுகள் சரணாலயத்தில் ஒப்படைக்க படுகிறது.

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-வது நாளையொட்டி இன்று மாலை நடக்கிறது
    • முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்ட லில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 37-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.இதை யொட்டி முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

    6-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலசபூஜை போன்றவை நடக்கிறது. 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு சூரன் பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் ஒற்றைப்புளிசந்திப்பு, சுவாமிநாதபுரம் வழியாக விவேகானந்தபுரம் சக்கர தீர்த்தகுளம் சந்திப்பு வரை சென்று திரும்பி கோவில் வழியாக பழத்தோட்டம் முருகன்குன்றம் அடிவா ரத்தை சென்றுஅடைகிறது. அங்கு மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக் கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி தேரிவிளை குண்டல் ஸ்ரீமுருகன்கோவில் அறங்காவலர்கள் குழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    இதேபோல நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்ரமணியசாமி கோவில், தோவாளை திருமலை முருகன் கோவில், சொக்கர் கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    • மாம்பழத்துறையில் 19.6 மி.மீ. பதிவு
    • பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருகை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட் களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பேச்சிபாறை அணை பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை, சிற்றார், கன்னிமார், மாம்பழத்து றையாறு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாம்பழத்து றையாறில் அதிகபட்சமாக 19.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவைவிட கூடுதலாக உள்ளதையடுத்து பரளி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சிற்றார் -1, சிற்றார் -2 அணைகளின் நீர்மட்டமும் 12 அடியை கடந்துள்ளதையடுத்து வெள்ள அபாய எச்ச ரிக்கை தொடர்ந்து விடப் பட்டு வருகிறது.ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள்.

    பேச்சிப்பாறை அணை யில் இருந்து நேற்று முதல் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இன்று காலையிலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, குழித்துறை ஆறு,கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.14 அடியாக உள்ளது. அணைக்கு 924 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 327 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1073 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.19 அடியாக உள்ளது. அணைக்கு 639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.23 அடியாக வும், சிற்றார்- 2 அணை நீர்மட்டம் 12.33 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    ×