search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர்.
    • கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் கரும்பு, நெல், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். தொடர்ந்து பயிர்களுக்கு உரமிட்டும், கலை பறித்தும், கூத்தக்குடி ஏரி பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.   இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல் அறுவடை செய்யாமலே நெல்மணிகள் விவசாய நிலங்களில் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.     இதுகுறித்து அந்தப் பகுதி யைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கருப்பகவுண்டர் கூறியதாவது:-

    கூத்தக்குடியில் ஒரு சில விவசாயிகள் சொந்த நிலங்களிலும் பல விவசாயி கள் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் குத்தகைக்கு பயிர் செய்வது வழக்கம். அதன்படி நடவு செய்தது முதல் இதுவரை ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பயிரை பராமரித்து வந்தோம். இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடிவில்லை. மேலும் நெல் மணிகளும் முளைத்து விட்டது. இனி அறுவடை செய்தால் அறுவடை கூலிக்குகூட பணம் கிடைக்காது. மேலும் குத்தகைக்கு பயிர் செய்தவர்கள் நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை வழங்கும் நிலை உள்ளது. எனவே தொடர் மழையால் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும்   இது குறித்து தியாகதுருகம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு கூறியதாவது:-  மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத் தலின்படி வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நெற்பயிர் சேதமடைந்த விவசாயிகளின் விவரங்க ளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தொடர் மழையால் நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலத்தில் விவசாயிகள் நின்ற வாறு ஒரு புகைப்படம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் நகல் ஆகியவற்றுடன் விவசாயிகள் நிவாரண மனுவை இணைத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும் என விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலரும் தங்களது நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களை அந்தந்த பருவங்களில் பயிர் காப்பீடு செய்து வருகின்ற னர். இந்நிலையில் அந்த பகுதியில் ஒவ்வொரு பயி ருக்கும் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படை யில் பயிர்களுக்கு ஏற்ற வாறும், பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இதில் அந்த குறிப்பிட்ட பகுதியில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயி கள் மற்றும் பயிர் பாதிப்பு இல்லாத விவசாயிகளுக்கும் சில சமயங்களில் பயிர் சாகுபடி செய்யாத விவசாயி களுக்கும் இழப்பீடு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே வரும் காலங்களில் இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் விதத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என விவசாயிகள் பலரும் கூறு கின்றனர்.

    • 2 ஆயிரம் ஏக்கர் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி சாகுபடியை பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், மன்னார்குடி, வலங்கைமான், கோட்டூர், குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தி பஞ்சு அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டினார். அதனால் கடந்த ஆண்டைவிட 2000 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது இந்த பருத்தி செடிகள் பூ பூத்தும், காய்கள் விட்டும் நன்கு வளர்ந்துள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் கோடை மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பருத்தி சாகுபடி பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக் கூடாது. அதனால் தான் காவிரி டெல்டா பகுதிகளில் கோடையில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைய மழையால் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க சிரமமான சூழல் நிலவுகிறது.

    வடிகால் வசதிகள் முறையாக தூர்வாரப்படாததால் பருத்தி வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருத்தி சாகுபடிக்கு ரூ 25 ஆயிரம் வரையசெலவு செய்வதுண்டு. இதுவரை ரூபாய் 15 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 20 ஆயிரம் வரை சாகுபடி செலவு செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரடாச்சேரி, குடவாசல், வடபாதிமங்கலம், கோட்டூர், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி செடிகள் தண்ணீரில் தேங்கி உள்ளன. இது பருத்தி சாகுபடிகள் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

    எனவே உடனடியாக தண்ணீரை வடிவமைப்பதற்கான உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மகசூல் இழப்பு ஏற்படும் பருத்திப் பயிர்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்படைந்து உள்ளது.

    இதுபற்றி அபிராமம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் கோடை காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி விவசாயத்தை செய்து வந்த நிலையில், இந்தப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொருளதார நஷ்டம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனர்.

    • ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
    • கஜா புயலால் மாமரங்கள் முற்றிலும் சாய்ந்து பேரிழப்பை ஏற்படுத்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். புதுப்பள்ளி, தெற்குபொய்கை நல்லூர், பூவைத்தேடி காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதான தொழிலாக மா சாகுபடி செய்து வருகின்றனர்

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் கொடூர தாக்குதலால் லட்சக்கணக்கான மா மரங்கள் சாய்ந்து மரங்கள் முரிந்தும் பேரிழப்பை ஏற்படுத்தியதுகஜா புயலால் சாய்ந்த மரங்கள் 5 பிறகு மீண்டும் துளிர்விட்டும்,புதிய மரங்கள் நடப்பட்டு காய்க்க தொடங்கி உள்ள இப்பகுதிகளில் குறிப்பாக பங்கனப்பள்ளி,ஒட்டு மாங்காய் ,ருமேனியா செந்தூரா, நீளம், காலபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய் காய்த்து விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் இங்கு காய்க்கும் மாங்கனிகளை அதிக சுவை இருப்பதால் இம் மாங்காய்களை கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் குளிர்பான நிறுவனங்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் மாம்பழத்தை கொள்முதல் செய்யாததால் கடந்த ஆண்டு 35 ரூபாய் விலை போன ருமேனியா கிலோ 7 ரூபாய்க்கும் 50 ரூபாய் விற்ற பங்கனப்பள்ளி 20 ரூபாய்க்கும் 40, 50 ரூபாய் விலை போன ஒட்டு மாங்காய் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாங்கனிகள் மரத்திலிருந்து வீணாவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் இப்பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து மாங்காய்களை அரசே கொள்முதல் செய்து உரிய விலையை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.
    • மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், மயிலா டுதுறை மாவ ட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தர்பூசணி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய பகுதிகளில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் (உணவு மற்றும் விவசாய அமைப்பு) சாஜன் கொரியன், தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யா சாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வை யிட்டனர்.

    ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, சீர்காழி தோட்டக்கலை அலுவலர் பார்கவி, உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
    • தண்ணீர் செல்வது தடைபட்டு மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பூதலூர் தாலுகா சொரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எங்கள் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.

    வெண்டையம்பட்டி வருவாய் கிராமத்தில் ஊமத்தன் ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் வடிகால் வாரியானது தூர்ந்து போய் புதர் மண்டி உள்ளது.

    இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.

    மழை காலங்களில் பயிர்கள் மூழ்கி விடுகின்றன.

    எனவே வடிகால் வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.
    • இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை சம்பா தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெறவேண்டும்.

    வல்லம்:

    தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல்' என்று பெயர்.

    அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வீரமரசன்பேட்டையில் பொன்னேர் பூட்டும் திருவிழாவுக்காக விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தங்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்தனர்.

    பின்னர் அங்கு பூஜைகள் செய்துவிட்டு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக பூதலூர்- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் வீரமரச ன்பேட்டை நான்குவழி சந்திப்பு பகுதியில் உள்ள வயலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தினர்.

    பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர்.இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும்.

    மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். பின்னர் தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.

    அதே போல் சித்திரை பிறந்ததையொட்டி செல்லப்பன் பேட்டையில் விவசாயிகள் நல்லேறு பூட்டி இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை தொடங்கினர்.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் எல்லாம் சிறந்த தொழிலாக வேளாண்தொழில் விளங்குகிறது.

    தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் தங்க ஏர் பூட்டி உழுது விவசாய பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட ங்களில் ஆண்டுதோறும் சித்திரை தொடக்கத்தில் நல்லேறு பூட்டி விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம் தற்போது சித்திரை பிறந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான விவசாய பணிகளை விவசாயிகள் நல்லேறு பூட்டி உழுது தொடங்கி உள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் செல்லப்பன் பேட்டையில் முன்னைய ம்பட்டி, ஆவாரம்பட்டி, புதுப்பட்டி, மனையடிப்பட்டி, செங்கிப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை பொன்னேர் பூட்டி கோவிலில் இருந்து பேரணியாக வந்து பொது நிலத்தில் ஒரே நாளில் கிராம மக்கள் ஒன்று திரண்டு தங்கள் கிராமங்களில் வயல்களில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடுகள் செய்து மாடுகளை ஏர்பூட்டி வயலில் உழுதனர்.

    பெண்கள் நெல்மணிகளை தூவினர்.

    இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை சம்பா தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெறவேண்டும்.

    இதேபோல் கரும்பு எள் வாழை பருத்தி கடலை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    • உரம் மற்றும் பூச்சி மருந்துகளை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
    • பருத்தி சாகுபடி பயிர்கள் 20 முதல் 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் வருடம் தோறும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பருத்தி பஞ்சு கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16,261 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

    பருத்தி சாகுபடிக்கு சாதகமான சீதோசன நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது.

    அதற்கு ஏற்ற வகையில் பருத்தி பஞ்சின் கொள்முதல் விளையும் அதிகரித்தது.

    இதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 16,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் 500 ஹெக்டேர் வரை பருத்தி சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பருத்தி சாகுபடியினை பெரும்பாலும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தடையின்றி சொட்டு நீர் பாசனம் நடைபெறும் வகையில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடி பயிர்கள் 20 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது. இப்பயிர் நன்கு வளர உரம் தேவைப்படுகிறது.

    பருத்தி செடிகளில் மாவு பூச்சி, அந்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் பூச்சிகளிடமிருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அல்லது வேளாண் அலுவலகங்கள் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திலிருந்து முகவர்களை, மாவட்டங்களுக்கு நேரடியாக வரவழைத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டெல்டாவில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
    • நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொடுத்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், உறுதுணையாக இருந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திற்கும் தமிழ்நாடு விவசாய தமிழர் விழிப்புணர்வு நல சங்கம் சார்பில் தஞ்சையில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டு அரசிதழில் வெளியிட்டது பா.ஜ.க. அரசு தான்.

    விவசாயிகளுக்கு பிரச்சினை வருகிறது என்பதற்காக நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை பிரதமரும், மத்திய மந்திரியும் ஒரே முடிவாக எடுத்து 48 மணி நேரத்தில் ரத்து செய்துள்ளனர்.

    விவசாயிகள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கடிதம் எழுதாமல் என்னை தொலைபேசி மூலம் உரிமையாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    1960-ம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023-ம் ஆண்டில் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு 9 லட்சம் எக்டேரில் இருந்து 6 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. அதேபோல் நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் எக்டேரில் இருந்து 3.69 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. 1970-ம் ஆண்டில் 61 லட்சம் எக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் எக்டேராக மாறி, 16 லட்சம் எக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா?

    அதேபோல் இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி மாத வருமானம் குறைவாகவே உள்ளது. இதை உயர்த்த இந்த திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை.தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். விவசாயிகள் மாற்றி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும்.

    டெல்டாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக பாடுபட்டு வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும். விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசவும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவும் பா.ஜ.க. எம்.பி.க்கள் வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    விவசாயிகளை காப்பதற்காக பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், உரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அண்ணாமலைக்கும், கருப்பு முருகானந்தத்துக்கும் மலர் கிரீடம், மாலை அணிவித்து விவசாய தமிழர் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டினர்.

    இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட ஓ.பி.சி. செயலாளர் முத்துராமலிங்கம், ஐ.டி. மற்றும் எஸ்.எம். பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, பட்டுக்கோட்டை மணிகண்டன், பொன்னவ ராயன்கோட்டை செல்வமணி, சங்க செயலாளர் சுரேஷ்குமார், காவிரிடெல்டா விவசாயிகள் குழும பொதுச் செயலாளர் சத்யநாராயணன், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாக்கியராஜ், பெரியண்ணன், புலிவலம் வரதராஜன், சங்கர், முருகையன், சேதுராமன், ரமேஷ், ஊடக பிரிவு சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி இருளப்பன் நன்றி கூறினார்.

    • கோடை உழவு செய்வது மண்வளத்தை அதிகரிக்கும்.
    • நாற்றங்கால் விட்டு விவசாயிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும்.

    ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.

    பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர்.

    குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப் பணிகள் முடிந்து விட்டது.

    கோடை உழவுக்காக விவசாயிகள் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்று பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும்.

    மற்றவர்கள் நிலத்தைத் தரிசாக விடுவர்.

    சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரிப் பயிர்கள் இடுவர். எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவை கோடை விவசா யத்தில் பயிரிடப்படுகின்றன.

    கோடை உழவு செய்வது மண்வளத்தை அதிகரிக்கும். அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும்.

    பூச்சித் தொல்லையைக் குறைக்கும். கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரயமாகும்.

    கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள், மற்றும் பூஞ்சானங்கள் கட்டுப்படுகிறது.

    கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது.

    ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

    தற்போது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை உழவு செய்யப்பட்டு வருகிறது. நாற்றங்கால் விட்டு விவசாயிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, மேல உளூர், மடக்கை உட்பட பல இடங்களில் விவசாயிகள் கோடை சாகுபடி உழவை மேற்கொண்டுள்ளனர்.

    • கைக்கு லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை.
    • ஒரு‌ கிலோ ரூ.50 முதல் 60 என்ற நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

    நாகப்பட்டினம்:

    வெயில் காலத்தில் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதில் வெள்ளரி பிஞ்சு முக்கிய பங்கு வகிக்கிறது.கோடை காலம் துவங்கியவுடன்,வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகமாக இருக்கும்.

    அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளான பூவைத் தேடி,விழுந்தமாவடி,புதுப்பள்ளி,வேட்டைகாரணிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் பயிர் செய்த வெள்ளரிச்செடிகள், தற்போது பூ விட்டு வளர்ந்து வருகின்றன. இருப்பினும் பல்வேறு இடங்களில் வெள்ளரி செடியை ஒருவித வைரஸ் நோய் தாக்குவதால் வெள்ளரி பிஞ்சுகள் போதிய வளர்ச்சியின்றி உள்ளது.

    குறிப்பாக நோய் தாக்குதல் காரணமாக பெரும்பாலான வெள்ளரி செடிகள் காய்க்கும் பருவத்திலேயே இலைகள் கருகியும் பூக்கள் கொட்டி விடுவதால் போதிய விளைச்சல் இல்லாமல் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மோட்டார் மூலம் நீர் பாச்சி சாகுபடி செய்து, கைக்கு லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ ரூபாய் 30 முதல் 40 வரை மட்டுமே விற்பனையானது.ஆனால் இந்தாண்டு ஒரு கிலோ ரூ. 50 முதல் 60 என்ற நல்ல விலைக்கு விற்பனையாகிறது.இந்தநிலையில்உரிய விலை கிடைத்தும் போதிய விளைச்சல் இல்லை என்கின்றனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில் சாகுபடி பணி தொடங்கப்பட்டது
    • எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தென் மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு தகுந்தார்போல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட விவசாயிகள் மானாவரி விவசாய நிலங்களில் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளன. குறிப்பாக அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் முருங்கை சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதுதவிர, எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் தென் மேற்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்ய வேண்டும் என வருண பகவானின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    ×