search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227058"

    • மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார்.
    • மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர் மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோவிற்கு தாலி கட்டினார்.

    மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார். யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது. இதனை மணமகளின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது குறித்து மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது:-

    சீனா மற்றும் பாங்காங்கில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது எனக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தளங்கள் (ஆப்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவர்களது திருமணத்தை தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது. சினிமா படத்தில் காண்பது போல் ஒரே மேடையில் ஒரே நாளில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கடல் கடந்து காதல் மலர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த பெண்ணை கடலூரை சேர்ந்த பாலச்சந்தர் இந்திய கலாச்சார படியும் தமிழ் முறைப்படியும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இப்போது ‘கலர் சைக்காலஜி’, என்பது பிரபலமாக இருந்துகொண்டிருக்கிறது.
    • உங்கள் காதலருக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.

    மனிதர்களின் உணர்வுகளோடு மிகுந்த நெருக்கம்கொண்டவை. அதனால்தான் மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அவர்களது வீடுகளில், எந்தெந்த அறைகளில் எந்தெந்த நிற பெயிண்ட்களை பூசவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்கிறோம். வாங்கும் வாகனங்களில்கூட வண்ணம் எப்படி இருக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கிறோம். இப்போது 'கலர் சைக்காலஜி', என்பது பிரபலமாக இருந்துகொண்டிருக்கிறது. அதனை இளம்பெண்கள் அதிகம் நம்பு கிறார்கள். தனக்கான நண்பனையோ, காதலனையோ தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு தெரியாமலே அவர்களுக்கு பிடித்த கலரை அடையாளங்காணுகிறார்கள். அந்த கலரைவைத்து, அவர் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி காய்நகர்த்துகிறார்கள்.

    உங்கள் காதலருக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அந்த நிறத்திற்கு ஏற்ப அவரது குணாதிசயமும், காதல் உணர்வுகளும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். (காதலிகளுக்கு பிடித்த நிறத்தைவைத்து அவர்களது காதல் உணர்வுகளை காதலர்களும் தெரிந்துகொள்ளலாம்தான்!)

    சிவப்பு: காதல் உணர்வு அதிகம்கொண்டவர்கள் பட்டியலில் இந்த நிறத்தை விரும்புபவர்களை சேர்க்கலாம். அவ்வப்போது காதல் உணர்வில் நீந்தத்தொடங்கிவிடுவார்கள். கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் காதலில் மிதவாதிகளாக இருக்க முயற்சிக்கவேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு நல்லது.

    மஞ்சள்: காதலில் இவர்கள் ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். காதல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை என்று தத்துவமும் பேசுவார்கள். சில நேரங்களில் இவர்களது காதல் ஆசைகள் முரண்பாடுகொண்டதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. 'இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..' என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப்பார்கள். அதனால் இந்த நிற மனிதர் களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்து விட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். காதலில் இவர்கள் காட்டாற்று வெள்ளம். கல்யாணமாகிவிட்டால் சலசலக்கும் அழகான நீரோடை.

    பிங்க்: இவர்கள் கட்டுங்கடங்காத காதல் போராளிகள். எளிதாக திருப்திகொள்ளமாட்டார்கள். புதிதுபுதிதாக இவர்களது விழிகள் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக அடுத்தடுத்து காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக்கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் ரசிக்கவைக்கும் அழகு நிறைந்தது. ஆனால் வாழ்க்கையை ருசிக்கும்போது நெருடல் ஏற்படலாம். அதனால் கவனம்தேவை.

    பர்பிள்: இவர்கள் தனித்துவமிக்கவர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவார்கள். அந்த போராட்டத்திலே சிலர் தங்கள் இளமைக் காலத்தை இழந்துவிடுவார்கள். இவர்களிடம் சுயநல எண்ணம் அதிகம் இருக்கும். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனியாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் 'டன்' கணக்கில் கொட்டு வார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், 'அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது' என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். பர்பிளிடம் நெருங்கும் முன்னால் நேசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும்.

    கறுப்பு: இவர்கள் காதலில் இருந்து சற்று விலகி இருக்க முயற்சிப்பார்கள். வெளிப்பார்வைக்கு இறுக்கமான மனிதர்களாக காட்சியளிப்பார்கள். யாரிடமும் மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது. கறுப்புக்கு காதல் கரும்பல்ல, இரும்பு.

    பச்சை: காதலில் கசிந்துருகுவது பச்சை. இவர்கள் காதல்வசப்பட்டுவிட்டால், 'சோறு தண்ணி எல்லாம் அதுக்கு அப்புறந்தாய்யா' என்று காதலே கதி என்று கிடப்பார்கள். பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். காதலில் பச்சையை மொத்தமாய் நம்பலாம்.

    நீலம்: இவர்கள் காதல் தத்துவஞானிகள். நீல நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிகமிருக்கும். ஆனால் தனக்கும் காதலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார்கள். பெண்கள் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். 'தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். நீலம் காதலைவிட கல்யாணத்திற்கு மிகவும் ஏற்றது.

    வெள்ளை: இவர்கள் மென்மையானவர்கள். காதலை வெளிப்படுத்தக்கூட பயப்படுவார்கள். அதனால் காதலை மறைத்தபடியே காலத்தை கடத்திவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒருதலைக்காதலால் அவஸ்தைப்படுவார்கள். உள்ளே காதலை மூடிவைத்துக்கொண்டு வெளியே, 'காதலாவது கத்தரிக்காயாவது..' என்று காதலுக்கு எதிராக பேசிக்கொண்டிருப்பார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெள்ளை பெரும்பாலும் காதலுக்கு தொல்லை.

    ஆரஞ்ச்: இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இவர்களிடம் வசீகரம் இருக்கும். மற்றவர்கள் இவர்களை காதலுடன் சுற்றிச்சுற்றி வந்தாலும், இவர் களுக்கு காதல் வராது. ஆரஞ்ச் மனிதர்கள் ஆன்மிக ரசிகர்கள். காதலை ரசிக்கத் தெரியாதவர்கள்!

    • காதல் திருமணம் ெசய்தவர்களை இரு தரப்பு பெற்றோர்கள் உதறினர்
    • அறிவுரை சொல்லி அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமாரவேல் (வயது 33). கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வேலை பார்த்தபோது, அருகில் இருந்த பட்டபிரான் தெருவை சேர்ந்த மகிமைதாஸ் மகள் பிரித்தி (வயது 21) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கீரமங்கலம் சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்களது பெற்றோர்களால் ஆபத்து வரும் என்று உணர்ந்த அவர்கள், பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் கா வல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகி, பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு அவர்கள் தேவையில்லை என்று இரு வீட்டாரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் போலீசார் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தனர்.

    • ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசினர்.

    ஆலங்குடி

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சொர்ணக்காடு பணஞ் சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன் மகள் தீபிகா (வயது 22) இவர் கணித பட்டதாரி.அதே பகுதியை சேர்ந்த வளப்பிரமன்காடு மாசிலாமணி மகன் விவேக் (வயது 27). இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம செய்து கொண்டனர். இதையடுத்து இவருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசினர். பின்னர்காதல் ஜோடியிடம் கையெழுத்து பெற்றக் கொண்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.


    • பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் தமிழ் முறைப்படி நடந்தது.
    • அல்பினாலின் தந்தை இறந்து விட்டதால் தாயார், எங்கள் திருமணத்துக்கு சற்று யோசித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 33). டிப்ளமோ யோகா படிப்பு படித்துள்ள பிரபாகரன் கடந்த 10 ஆண்டுகளாக கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரபாகரனிடம் யோகா கற்பதற்காக அந்த நாட்டை சேர்ந்த என்ஜினீயரான அல்பினால்(31) என்பவர் வந்துள்ளார். யோகா கற்க வந்த இடத்தில் அல்பினாலுக்கும், பிரபாகரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    தங்கள் காதல் விவகாரத்தை மணமகள் வீட்டாரிடமும், தனது பெற்றோரிடமும் எடுத்துக்கூறிய பிரபாகரன், அல்பினாலை திருமணம் செய்து கொள்வதற்கு இருவரின் பெற்றோரிடமும் சம்மதம் கேட்டார். அதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் நேற்று தமிழ் முறைப்படி நடந்தது. தமிழில் வேதமந்திரங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர்.

    இது குறித்து பிரபாகரன் கூறுகையில், நான் யோகா ஆசிரியராக கஜகஸ்தானில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய மாணவியாக அல்பினால் யோகா கற்க வந்தார். அவருக்கும் எனக்கும் 2 வயது தான் வித்தியாசம். அவர் என்ஜினீயராக வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது யோகா கற்க வந்தார். இந்த நிலையில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    அல்பினாலின் தந்தை இறந்து விட்டதால் தாயார், எங்கள் திருமணத்துக்கு சற்று யோசித்தார். பின்னர் அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து எனது சொந்த ஊரில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது என்றார்.

    அல்பினால் கூறும்போது, எங்கள் நாட்டு கலாசாரத்தை விட தமிழ் கலாசாரமும், இங்குள்ள மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன் என்றார்.

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    மாணவருக்கு அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகன், மகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல தங்களது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஓட்டம் பிடித்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு சென்ற தங்களது மகன், மகள் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து 2 பேருடைய பெற்றோரும் மாயமான தங்களது மகன், மகள் ஆகியோரை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவருடன் ஓட்டம் பிடித்த 14 வயது சிறுமியை தேடி வருகிறார்கள்.

    • இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

    • திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண்
    • ஆசைக்கு இணங்காததால் தொடர்பை துண்டித்ததாக போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பந்திவெட்டான் பாறவிளை பகுதியைச் சேர்ந்த 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் தக்கலை தாரோடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபின் (27) என்பவருக்கும் சமூக வலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காதலன் சுபின் சரியாக பேச வில்லையாம். பட்டதாரி பெண் போன் செய்தாலும் எடுக்காமல் துண்டித்துள்ளார். இதனால் சுபின் பற்றி விசாரித்த போது அவருக்கு வேறு ஓரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதும், 23-ந் தேதி (இன்று) திரும ணம் நடக்க உள்ளதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டதாரி பெண், நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை சுபின் திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரி வித்தார். இது தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சுபின் வீட்டுக்குச் சென்று விசா ரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரம் உண்மை தான் என தெரிய வந்தது. இதனால் சுபின் திருமணம் தடை பட்டது.

    இது தொடர்பாக பட்டதாரி பெண் போலீசில் கொடுத்த புகாரில், கடந்த 3½ ஆண்டுகளாக நானும் சுபினும் காதலித்து வந்தோம். விடுமுறை கிடைக்கும் போது நேரில் சந்தித்து பேசுவோம். சில மாதங்களுக்கு முன்பு அவர் உல்லாசமாக இருக்க விரும்பினார்.

    ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. அதன் பிறகு சுபின் நடவடிக்கை யில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை தவிர்த்தார். நான் போன் செய்தாலும், இணைப்பை துண்டித்தார். மேலும் சில நாட்களாக அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.

    நண்பர்கள் மூலம் விசாரித்த போது, சுபினுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வேறு வழியின்றி புகார் கொடுக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

    புகார் கூறப்பட்டுள்ள சுபின், தற்போது சென்னையில் பணியில் உள்ளார். திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். திருமணம் தடை ஆனதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடமும் பட்டதாரி பெண்ணிடமும் போலீசார் பேசி வருகின்றனர்.

    • லாலைனுக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்த காதல் ஏற்பட்டது.
    • தமிழக கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்து போனது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மனைவி மெர்சி. இவர்களுடைய மகன் ஜெமி ரென்ஸ்விக் (வயது 25). எம்.பி.ஏ. பட்டதாரி. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா-மெரிட்டா ஜமீலா தம்பதி மகள் லாலைன் (23), பட்டதாரி. லாலைனுக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்த காதல் ஏற்பட்டது. பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கடல் கடந்த காதல் கைகூடியது குறித்து மணமகளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாங்கள் 4 ஆண்டாக காதலித்தோம். தமிழக கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்து போனது. இதனை சுற்றுலாவுக்கு கன்னியாகுமரிக்கு வந்த போது உணர்ந்தேன் என்றார்.

    • குளச்சல் போலீசார் தீவிர விசாரணை
    • மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் ‘தின்னர்’ எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் வடக்கு சரல் காலனியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37), மர வேலை செய்யும் பட்டறையில் தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் பட்டறையில் இருந்து வழக்கம்போல வீட்டுக்கு சாப்பிட சென்று உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வேலைக்கு வர வில்லை.

    இந்தநிலையில் குருந்தன் கோட்டைஅடுத்த ஆலன் விளையில் ஆலய நிர்வா கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் அசோக்குமார் எரிந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.

    குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் இரணியல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் 'தின்னர்' எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர். திருமணமாகாத அசோக்கு மாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அடித்து கொலை செய்யப்ப ட்டு எரிக்கப்பட்டு இருக்க லாமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    உடல் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    • அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரனகுமார்(34) பணிபுரிந்தார்.

    ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரனகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் வீரனகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது குறித்து தாமதமாக தகவல் அறிந்த கார்த்திகா திருமங்கலம் பன்னிகுண்டு வந்து வீரனகுமாரிடம் கேட்கவே, அவரும் தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அவதூறாக பேசி திட்டியுள்ளனர்.

    விரக்தியடைந்த கார்த்திகா இது குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரனகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர்.
    • நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியானது.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் . அவரது மகன் வருண்குமார் இவரும், கீழப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் என்பவரும், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீ யர் படிக்கும் மாணவி ஒருவரை, இருவரும் காதலித்து வந்தனர். . இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதால், 2பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்காக சுதாகரனும், வருண்குமாரும், கல்லூரி பஸ்சுக்காக கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கல்லூரி மாணவியியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சினையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில், 2 மாணவர்களும் மற்றும் அவர்கள் சக கல்லூரி மாணவருடன் ஒன்றிணைந்து, ஒருவரு க்கொருவர் உருட்டு கட்டை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த 6 கல்லூரி மாணவ ர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காவல்துறையினர் இதுபோல் சம்பவத்தில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து, வழக்கு எதுவும் பதியாமல் வீட்டுக்கு, அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியாகி விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×