search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாருக்கான்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட் படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
    • தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். தளபதி 69 படத்தை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார். தற்போது நடிகர் ஷாரூக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
    • மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.

    இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அப்பது ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று வாடியா தெளிவுபடுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஷாருக்கை தெரியும்.

    அவருடைய குடும்பத்தை நான் அறிவேன். அவர் மீதும் குடும்பத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

    கூட்டத்தில் பேசியது குறித்து நான் அதைச் சொல்லப் போவதில்லை. எல்லோரும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். நான் சொன்னது போல், நீங்கள் அனைத்து பங்குதாரர்களையும் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல அமர்வு.

    ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதுவே எங்கள் நோக்கம். அதனால்தான் நாங்கள் இங்கே இருந்தோம்.

    இம்பாக்ட் பிளேயர், கேப்டு, அன் கேப்ட் பிளேயர் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசனை
    • ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

    அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொன்றனர்.

    மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு உடல்நிலை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இதன் சிகிச்சையிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

    நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்சா என செல்லமாக அழைக்கப்படுவர், அவர் கடைசியாக நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபில் கிரிக்கெட் அணிக்கு உரிமையாளரும் ஆவார்.

    கடந்த மே மாதம் 21 ஆம் தேதி கொல்கத்தா அணி போட்டியை பார்த்து விட்டு ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக அஹமதாபாத்தில் உள்ள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அடுத்த நாளே குணமாகி வீடு திரும்பினார்.

    தற்பொழுது ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு உடல்நிலை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஷாருக்கான் தற்பொழுது கண் சிகிச்சைக்காக நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சென்றுள்ளார். அவர்கள் நினைத்து போல் சிகிச்சை நடக்காவிட்டதால், ஷாருக்கான் இன்று அல்லது நாளை இதன் சிகிச்சையிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

    ஷாருக்கான் மற்றும் அவரது மகளான சுஹானா கான் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்கும் கிங் படத்தில் நடித்துள்ளார். பதான் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.
    • இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.

    பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன

    இந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.

    இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
    • திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

    நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.

    திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    திருமண நிகழ்வில் நீட்டா அம்பானியுடன் இணைந்து ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
    • 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    58 வயதாகும் ஷாருக்கான் இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாசிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. தி பாந்தன், டான் 2. ஓம் சாந்தி ஓம் படங்களின் வெற்றியால் அவரது ரசிகர்கள் 'கிங் கான்' என்று அழைத்தனர்.

    2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் பெரிய வெற்றி பெற்றன. இரண்டு திரைப்படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
    • இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.

    இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

    இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.
    • டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

    இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.

    இதுதொடர்பான டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது.

    அப்போது, ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தபோது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்ததை நினைவுக்கூர்ந்த கமல்ஹாசன் நன்றிகளையும் தெரிவித்தார்.

    "ஹே ராம்" திரைப்படம் கமல் எழுதி, இயக்கி, தயாரித்து கடந்த 2000ம் ஆண்டில் தமிழ், இந்தி என இருமொழி படமாக வெளியானது. இதில் கமல்ஹாசனும் ஷாருக்கானும் நண்பர்களான சாகேத் ராம் மற்றும் அம்ஜத் அலி கானாக நடித்தனர்.

    டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-

    ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தபோது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்தார்.

    நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் போது, நாம் அனைவரும் வெறும் மனிதர்கள். நான் ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்க்கவில்லை. அவர் ஒரு சூப்பர் இயக்குநரைப் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள், ஷாருக் சாஹிப் அந்தப் படத்தை இலவசமாகத் தயாரித்தார். அதை எந்த சூப்பர் ஸ்டாராலும் செய்ய முடியாது.

    அது ஒரு ரசிகரால் மட்டுமே முடியும். கலையின் ஆர்வலர் மற்றும் நல்ல நடிகர். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி.
    • ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் அட்லி. அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார். நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 வெற்றி படங்களை இயக்கினார்.

    பின் சிறு இடைவேளைக்கு பின் கடந்த ஆண்டு பாலிவுட்டில் அட்லி களம் இறங்கினார் . ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது ஜவான் திரைப்படம், இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் உச்சத்தை தொட்டது. இதுவரை ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் கவனம்  அட்லியின் மீது திரும்பியுள்ளது. அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில்  தற்பொழுது மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

    நமக்கு மாபெரும் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என பலரின் ஆசையாக இருக்கும், பாலிவுட்டை எடுத்துக் கொண்டால் ஷாருக்கான், சல்மான் கான் என்ற போட்டி எப்பொழுதும் இருக்கும், கோலிவுட்டை எடுத்துக் கொண்டால் ரஜின் ,கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் இடையே இருக்கும்.

    ஆனால் இயக்குனர் அட்லி புதுவிதமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானையும் , கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தையும் ஒன்றாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு ட்யுவல் ஹீரோ கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சந்திப்புகள் அடுத்த மாதம் நடக்கும் எனவும், இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் மட்டும் சாத்தியாக நடைப்பெற்றால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்கள் சிதறடிக்கப்படும், இச்செய்தி ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
    • பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் டாலராகும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் விளம்பரம், கிரிக்கெட் வருமானம் மூலம் அதிக அகளவில் சம்பாதிக்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு எப்போதுதும் உயர்ந்ததாகவே இருந்து வருகிறது.

    தற்போது மிகவும் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரன்வீர்சிங், ஷாருக்கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    இந்த வருடம் அவருடைய பிராண்ட் மதிப்பு 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது முக்கிய காரணம் ஆகும்.

    க்ரோல் (Kroll) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2023-ம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் அமெரிக்க டாலராகும். 2020-ல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 237.7 மில்லியான இருந்தது.

    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் டாலராகும். ஷாருக்கானின் பிராண்ட் மதிப்பு 120.7 மில்லியன் டாலராகும்.

    இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ். டோனியும் இடம் பிடித்துள்ளனர். எம்.எஸ்.டோனியின் பிராண்ட் மதிப்பு 95.8 மில்லியன் ஆகும். சச்சின் தெண்டுல்கரின் பிராண்ட் மதிப்பு 91.3 மில்லியன் ஆகும்.

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    ×