search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • திருமானூரில் தற்காலிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது
    • சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்டது

    அரியலூர்:

    திருமானூரில் கடந்த சுமார் 5வருட காலமாக திருமானூர் பஸ் நிலையத்தில் அமைந்திருந்த பயணியர் நிழல்குடை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக இடிக்கப்பட்டது.மேலும் அரசு ஆரம்பசுதாரநிலையத்தின் அருகில் இருந்த பயணியர் நிழல்குடை தேசியநேடுஞ்சாலை விரிவுபடுத்தும் போது இடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில நிர்வாகத்திற்கும் ஊராட்சி மற்றும் கிராம நிர்வாகத்திற்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.இதனால் பொது மக்களின் நலன் கருதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு சுகாதார நிலையம் அருகில் தற்காலிக நிழல் கூடை சமூக ஆர்வலர்களால் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன், ராமலிங்கம், பார்த்திபன், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் பாலை திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.8 கோடியில் 2 புதிய மின்மாற்றிகள் திறக்கப்பட்டது
    • அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நிறுவப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலை துணை மின் நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ. 8 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் 26 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டு மின்மாற்றிகள் பொருத்தும் பணி சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார், அதனை தொடர்ந்து அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு மின்மாற்றிகளை துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் ஆனந்த், அய்யர்மலை உதவி செயற்பொறியாளர் சிராஜுதீன், குளித்தலை உதவி செயற்பொறியாளர் பாலகுமார், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ரமேஷ் மற்றும் நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், மின்வாரிய பணியாளர்கள் பொதுமக்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு
    • எம்.எம்.அப்துல்லா எம்.பி. திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், டி.டி.பிளான்சாலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் திட்ட நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மற்றும் மாவட்ட கலெக்டரி ன் சிறப்பு நிதி ரூ.24 இலட்சம் என மொத்தம் ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர மாலைநேர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை எம்பி, எம்.எம்.அப்துல்லா பூங்காவை திறந்து வைத்தார். இவ்விழாவில் புதுக்கோ ட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் (பொ) எஸ்.டி.பாலாஜி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, காதர்கனி, ஜெயலட்சுமி, குமாரவேலு, க.லதா, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரிஸ்டோ தொங்கு பாலம் திறப்பு எப்போது?
    • மேலும் காலம் தாழ்த்துவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

    திருச்சி,

    தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. எங்கு பார்த்தாலும் நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் மற்றும் மத்திய பஸ் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான போக்குவரத்து இடையூறுகளை தவிர்ப்பதற்காக ஆக்டோபஸ் எனும் அரிஸ்டோ மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.இந்தப் பணிகள் 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ஆரம்பத்தில் ரூ.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2 கட்டங்களாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி கையில் எடுக்கப்பட்டது.இதில் சென்னை, மதுரை சாலையை இணைக்கும் மேம்பால பணி ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தப்பட்டு அது தொங்கு பாலமாக மாறியது. சொற்ப ராணுவ நிலத்தை கையகப்படுத்த நீண்ட, நெடிய போராட்டம் நடத்த வேண்டி வந்தது. இதன் காரணமாக இந்த பாலம் முழுமை அடையாமல் 8 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.இதற்கிடையே முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை 2018-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் சாலை, கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். பின்னர் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப்பணிகளுக்கான இடத்தினை வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.அதன்படி கடந்த ஆண்டு தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணிகள் ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டன. பின்பு ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பட்டது.

    தற்போது ஒரு வழியாக பாலத்தை கட்டி முடித்து விட்டனர். இருப்பினும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் வாகன போக்குவரத்துகள் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை எதற்காக திறந்து விடாமல் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடையாமல் உள்ளது. மின் விளக்குகள் பொருத்தும் பணிக்கான டெண்டர் விடும் பணி தொடங்க உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அந்த பணிகளை முடித்து விடுவோம் என்றனர்.ஏற்கனவே தொங்கு பாலத்தை சீரமைக்க ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். இனிமேல் மின்விளக்கு பொருத்தும் பணியை யாவது திட்டமிட்ட காலத்துக்குள் முடித்து விரைவாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது பயன்பாட்டுக்கு வந்த பின்னர் தான் நூறாண்டுகள் கடந்த குறுகிய ஜங்ஷன் ரெயில்வே பாலத்திற்கு விடிவு பிறக்கும். இந்தப் பாலம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆகவே மேலும் தாமதம் செய்யாமல் தொங்கு பாலத்தை திறந்து வைத்து ரெயில்வே பாலப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
    • இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் மட்கும் குப்பையை உரமாக்க, கோட்டக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

    இதன் திறப்பு விழா நகராட்சி ஆணையர் தாமரை தலைமையில் நேற்று நடந்தது. சேர்மன் செல்வராஜ் நுண் உர மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

    • ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் ரூ.1.32 கோடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    இந்த விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின்னர் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி விடுதியை பார்வையிட்டார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி னார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். பின்னர் அைமச்சர் பேசியதாவது:-

    கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருத ப்படும் என்ற அடிப்படையில் அனைவரும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, வருகிறார்.

    இதுபோன்று, மாணவர்க ளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்கள் தரமான கல்வியை பெற்று, வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, தரமான கல்வியை பெறுவதற்கு அடிப்படையாக விளங்கி வரும் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத் துரை, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பாஸ்கரன், மானா மதுரை வட்டாட்சியர் (பொறுப்பு) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சங்கர பரமேசுவரி, தீத்தான்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜலட்சுமி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி திறக்கப்பட்டது
    • ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது

    கரூர்,

    கரூர் தாந்தோணிமலை ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதி கட்டிடம் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு விடுதியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். இந்த விடுதியில், 7 மாணவர்கள் அறை, ஒரு காப்பாளர் அறை, ஒரு உணவருந்தும் அறை, ஒரு பொருள் வைக்கும் அறை, ஒரு எரிபொருள் அறை, ஒரு சமையலறை, 12 குளியலறை, 24 கழிவறை வசதி உள்ளது. இதேபோல் கடவூரில் ரூ.2 கோடியே 44 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தாஜூதீன், திருச்சி கோட்ட தாட்கோ உதவி செயற்பொறியாளர் அருண்குமார், தனி தாசில்தார் மைதிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவிகளுக்கான விடுதி பயன்பாட்டிற்கு வந்தது
    • காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவிகள் விடுதி பாபு ஜெகஜீவன்ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 50 கல்லூரி மாணவிகள் தங்கும் வகையில் 5 தங்கும் அறைகளும், காப்பாளினி அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிவறை உள்ளிட்டவைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதேபோல முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு நிதியுதவியுடன் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தப்படி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். மருதன்கோன்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், கல்லூரி முதல்வர் சந்திரவதனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் காணொலியில் திறந்து வைத்த புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

    • 2015ம் ஆண்டு திருப்பணிக்காக மூடப்பட்டது
    • கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் தற்போது திறப்பு

    மண்ணச்சநல்லூர்,

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்கிறது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளி, நோய்கள் தீர்க்கு அம்மனாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான மண்டபம் ரூ.13 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலமாக மண்டபத்தை திறந்து வைத்தார்.இதற்கிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு கோவிலின் ராஜகோபுரம் திருப்பணிக்காக மூடப்பட்டது. மேலும் ராஜகோபுரத்தின் திருப்பணி நிறைவடைந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம் வாயில் திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் செல்ல கோவிலின் இணை ஆணையர் கல்யாணி உத்தரவிட்டார். அதன்படி பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சென்று அம்மனை தரிசித்து விட்டு ராஜகோபுரத்தின் வழியாக வெளியே செல்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறி கோவில் ஆணையரிடம் நன்றி தெரிவித்தனர்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கட்டப்பட்டது
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற முதன்மை திருக்கோயிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கோவில் நிதியிலிருந்து பல்வேறு வசதிகளுடன் கூடிய பக்தர்கள் இருக்கையில் காத்திருந்து வரிசையில் தரிசனம் செய்ய வரிசை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், லால்குடி கோட்டாச்சியர் வைத்தியநாதன், துணை ஆட்சியர் ஐஸ்வர்யா (பெறுப்பு), வட்டாட்சியர் அருள் ஜோதி, மண்டல இணை ஆணையர் எஸ்.செல்வராஜ் ,கோவில் இணை ஆணையர் கல்யாணி, செயற்பொறியாளர் பி பெரியசாமி, சா.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் ஜி.பி.சரவணன், மற்றும் மணியக்காரர் பழனிவேல், கண்காணிப்பாளர் ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த வரிசை வளாகமானது வாகன நிறுத்துமிடம் உட்பட சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வரிசை வளாகத்தில் கட்டண வரிசை மற்றும் பொது தரிசனத்திற்கு தனித்தனி நுழைவு மண்டபங்கள் 4, காத்திருப்பு கூடம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், திருக்கோயில் பயன்பாட்டிற்கான 8 கடைகள் தேங்காய் பழ கடை, வெள்ளி உருவார விற்பனை நிலையம், குங்கும்ம் விற்பனை நிலையம், பிரசாத விற்பனை நிலையம்,கட்டண சீட்டு விற்பனை மையம், புத்தக விற்பனை நிலையம், எஸ்.எஸ்.தடுப்புகள், கண்கவர் மின் விளக்குகள், மின் விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 12 கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் வைப்பு அறை, நான்கு அவசர கால வழிகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.வரிசை வளாகத்திற்கு வெளியே பொருட்கள் பாதுகாப்பு அறை ஓட்டுநர் ஓய்வு அறைகள், பாதுகாவலர் கண்காணிப்பு அறை உணவகம், காலணிகள் பாதுகாப்பு மையம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம் பூஜை பொருட்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு பயன்படக்கூடிய பொருட்கள் விற்பனை செய்ய 16 கடைகள் கட்டப்பட்டுள்ளது.இந்த வரிசை வளாகம் திறப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • மன நல காப்பக, சமூக பராமரிப்பு மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
    • மனநல ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற பாலிசியை முதல்வர் உருவாக்குவதாக தகவல்

    டால்மியாபுரம் ,

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பேனியன் அகாடமியின் மன நல காப்பகம் மற்றும் பராமரிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அதன் இயக்குனர் கிஷோர் குமார் வரவேற்றார். மீண்டும் இல்லம் என்ற தலைப்பில் ஜாக்லின் கலந்துகொண்டு பேசினார். மீண்டும் இல்லம் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய மற்றும் மனநலம் என்ற தலைப்பில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையர் தரேஷ் அகமதுவும், மனநல ஆரோக்கியத்திற்கான சூழல் நிறைந்து திருச்சி என்ற தலைப்பில் கலெக்டர் பிரதீப்குமாரும் பேசினர்.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மனநல காப்பக மற்றும் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-மன நிலை பாதிப்புக்கு எந்த வரையறைகளும் கிடையாது. யார் எந்த இடத்தில் பாதிக்கப்படுவார்கள், எங்கே பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியாது. இன்றைக்கு மன நலம் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் , அரசாங்கமும் முக்கியமாக எடுத்து கையாள வேண்டி உள்ளது. அதற்கு முக்கியம் அளித்து ஒரு பாலிசியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்காக மனநல ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற பாலிசியை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அதற்காக ஒரு திட்டத்தை வகுத்து செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் அடிக்கடி கூறுவது திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையானது.நம்முடைய ஆட்சியில் யாருமே விடுபடாமல் எல்லோருக்கும் காக்க கூடிய கரங்கள் நீளும் என்ற அந்த நம்பிக்கையை தரக்கூடிய ஒன்றாக மாற வேண்டும், மனநலம் பாதித்தவர்கள் சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து தன்னிச்சையோடு வாழக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் அதற்கு நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் உறுதுணையாக இருப்பார் என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி , ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் ஆலிஸ் செல்வராணி, கல்லக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் துரை, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி கருணாநிதி, ஆதி நாயகி ரவி, ஒன்றிய செயலாளர்கள் புள்ளம்பாடி தெற்கு இளங்கோவன், வடக்குசெல்வராசா லால்குடி சண்முகநாதன், சக்திவேல், நெடுஞ்செழியன், நகர செயலாளர் முத்துக்குமார், கோவண்டாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி, பேரூராட்சி துணைத் தலைவர் இந்திராகாந்தி மற்றும் பேனியல் நிர்வாகத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
    • முடிவில் ஊராட்சி செயலர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    அரசு தலைமை கொறடா கோவி.செழியன், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினைரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிரெத்தினம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஒன்றிய பெருந்தலைவர் வைஜெயந்தி மாலா உட்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

    ×